Translate this blog to any language

திங்கள், 27 அக்டோபர், 2008

எது பேராண்மை?



சுதந்திரம் - இறைவன்
இவற்றில்
இரண்டில் ஒன்றைத்
தேர்ந்தெடுக்கும்படி
என்னிடம் சொன்னால்
நான் முதலில்
சுதந்திரத்தையே தேர்ந்தெடுப்பேன்!

ஏனெனில்
சுதந்திர உணர்வற்ற
குறுகிய மனம்
எவ்வாறு
எல்லைகளற்று விரிந்த
இறைவனை அறியும்?

சுதந்திரம் என்பது
நடு-நிலைப் பார்வை!

அனைத்து வித
சித்தாந்த
கூடாரங்களில் இருந்தும்
வெளியேறி

வெட்டவெளியில்
தனியனாய் நின்று
உண்மையை தரிசிக்கும் பேறு!

பொய்மைக் கோட்டைகளைப்
பொடிப்பொடியாக்கும்
பேராண்மை!

-மோகன் பால்கி

அழிவற்ற பிரம்மம்!


உதிப்பது மறைவது போல
நம் விழிகளுக்கு
தோன்றினாலும்
நமது உயிர்-சூரியனோ
ஒரு நாளும் மறைந்ததில்லை !

"நீ - நான்" கூட அவ்வாறே!

இருப்பது அழிவ துண்டா?


-மோகன் பால்கி

ஐயனே ஒளியே - ஓமெனும் நாதமே !

ன்னமும் டையும் ல்லமும் ந்துயிர்
காற்றினை தினை ந்தையே ழையென்
யனேளியே மெனும்நாதமே ஒளவியம் தீர்த்தாட்
கொண்டனை அக துன் அருளே !

*******

முத்தொழில் மூலவர் அத்தொழில் முதல்வ
எத்தொழில் ஏவிட 'இத்தைப்" படைத்தையோ
அத்தொழில் மேவிட வித்தகம் செய்திட
சத்தெனக் கருள்க ஆள்க !

*******

கருவாய் துவங்கி எருவாய் வரையும்
உருவாய் அருவாய் திருமால் மறையே
தருவாய் திருவாய் தருவன வெல்லாம்
நிறைவாய் எம்பணி செய்திடு மாறே !

********

சுடலையின் நடனம் இடுகிற சங்கர
உடலையின் உள்ளொளி சிவசிவ சங்கர
கடலுறை விடமும் பகையும் அங்கற
பிறவாத் தவநிலை சிவசிவ நமசிவ!

********

அன்புரு அன்னைஎந்தை ஆடலின் கூடலண்டம்
பின்புருக்கொண்டும் விண்டும் அகண்டிடுமின்னு மண்டம்
இன்மையில் இருப்பும்தன்மைக் காற்றினில்நெருப்பும் வைத்த
வன்மைஅவ் இறைவ வாழி!

-மோகன் பால்கி

ஞாயிறு, 26 அக்டோபர், 2008

Universe - My Master ! இயற்கை - சத்குரு !

பொய்யை விரும்புவது போல
உண்மையை யாருமே
விரும்புவது இல்லை!

உண்மையைக் கண்டு நாம்
அஞ்சி நடுநடுங்குகின்றோம் !

ஏனென்றால்
உண்மை பாரபட்சம் அற்றது-

வேண்டியவர் - வேண்டாதவர்
இருவரையுமே அது
ஒரே தராசில் வைத்து
நிறுத்திப் பார்க்கிறது;
தீர்ப்பு சொல்கிறது!

பின் எப்படி நாம்
உண்மையை உண்மையாகவே
விரும்ப இயலும்?

பஞ்சபூத இயற்கையும்
பாரபட்சம் அற்றதே!
ஓரம் சாராததே!

தீயை தொட்டால்
புத்தர்களையும் அது சுடுகிறது!
பனிக்கட்டியோ
எவருக்குமே குளிர்கிறது!

ஆக,
உண்மையின் இன்னொரு பெயர்
"இயற்கை"!

அது சரி!
இயற்கைக்கு மற்றுமொரு
பெயரும் உண்டு!
அது என்ன தெரியுமா?

அதுதான் "சத்-குரு"!


- மோகன் பால்கி

எல்லையற்று விரிதலே - ஞானம்!


எல்லையற்று விரிதலே
ஞானமடைதல் ஆகும்-
சுருங்கி அடைபடுதல் அன்று!

காற்று அடைபட்டு நிற்பதில்லை-
அது
நிலங்களின் பெயர்களை
பொருட் படுத்துவதும் இல்லை!
ஐம்பூதங்களும் அவ்வாறே!

தத்துவ ஞான வார்த்தைகளில்
சிறை படாமல்
வாழ்வை
நடுவில் நின்று பார்த்தலே
தவம் எனப்படும்!

அப்படிப்பட்ட தவத்தின் பயனே
"ஞானம்" ஆகும்!

ஞானம் பிரிவுகள் அற்றது!

விழிப்பு, கனவு, உறக்கம் என்னும்
மூன்று நிலைகளிலும்
அதில்
ஒட்டியும் ஒட்டாமலும் செல்லும்
"துரியம்" என்னும்
நிலையே அக் தாகும்!

அதனையே "துரிய மெய்ஞானம்"
என்று ஆன்றோர்கள்
குறிப்பால் உணர்த்துவர்!

-மோகன் பால்கி

புதன், 22 அக்டோபர், 2008

"கருத்துப் - பிழை"


என் நண்பனே !

எனது வலிகளை நீ
அறிந்திருக்க நியாயம் இல்லை தான்!

அம்மா கூட
ஆற்றுப் படுத்தலாம்
அவ்வளவே தவிர
உள்ளே கிடக்கும் இரணங்களை
உள்-நுழைந்து பார்க்க
யாரால்தான் இயலும்!

ஒருவர் வலியை
இன்னொருவர் அறிய
இங்கு
வழியே இல்லை!

காக்கையின்-பசி-வலியும்
எருதின்-புண்-வலியும் போல...!

எந்த வலி பெரிது
எது அதிக நியாயம் என்று
எந்த புத்தர் வந்து
உன்னிடம் விளக்கி
புரிய வைக்கப்போகிறார்!

இருப்பினும்,
நான்
இப்போது உணர்கிறேன்..

நீயும் நானும் ஒன்றே என்ற
சிறியதொரு
"கருத்துப் பிழையில்" தான்
வெடிக்கிறது என்
விவஸ்தையற்ற பெரும் கோபம்!

-மோகன் பால்கி

Riches - The Risker ! பணக்காரன்-ஒரு "பணயக்காரன்"!


பணக்காரன்
என்பவன்
ஒரு மிகச் சிறந்த
"பணயக்காரன்"!

அவன் தனது உயிரை
அதைவிட
தன்
மானத்தை...
"தன்-மானத்தை"
ஒரு மிகப் பெரும்
இலட்சியத்துக்காக
பணயம் வைக்கத் துணிகிறான்!

எதையும் இழக்காமல்
இங்கு
எதுவுமே கிடைப்பதில்லை!

ஆம்
பணக்காரன்
ஒரு
மிகச் சிறந்த
"பணயக்காரன்"!

-மோகன் பால்கி