Translate this blog to any language

புதன், 1 மார்ச், 2023

திமுகவின் போக்கு புரியவில்லை!

எந்த பெரிய அவசியமும் இல்லாத ஒரு சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஓடோடிச் சென்று மோடியைச் சந்தித்து பேசி இருக்கிறார்; ஏதோ வேறு மூத்த அமைச்சர்கள் இல்லாதது போல! 

வரலாற்றில் மிக மிக முக்கியமான திராவிட-ஆரியப் போர் என்ற சூழலில் நாம் நிற்கிறோம்!

இந்திய ஒன்றிய முழுவதும் பார்ப்பனர்கள் தங்கள் பழங்காலத்து சனாதன அதர்ம திட்டங்களை வேகமாக விதைத்து வருகிறார்கள்!

பார்ப்பன துரோணாச்சாரியார்கள், சூத்திர ஏகலைவன்களின் கட்டைவிரலை காணிக்கை கேட்க காத்திருக்கிறார்கள்!

கல்வி வேலை வாய்ப்புகளில் இனி ஒடுக்கப்பட்ட தமிழினம், மற்ற மொழி பேசும் ஒடுக்கப்பட்ட இனங்கள் மேலே வருவதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் பற்பல கொடிய சட்டத்திட்டங்களை, சதிவேலைகளை 
சங்பரிவார பாஜக சத்தம் இல்லாமல் செய்து வருகிறது!

இது போன்ற சூழலில் ஒரு வேளை திமுகவுக்கு பாஜக பாமகவுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் தோன்றியிருக்கிறதா என்று அய்யம் எழாமல் இல்லை!

ஆனால் இந்த முறை திமுக பாஜகவுடன் கூட்டு வைத்தால் அது திமுகவின், தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த அழிவாக இருக்கும்!

எந்த ஒரு பெரிய காரணமும் இல்லாத சூழ்நிலையில் உதயநிதி சென்று மோடியை சந்தித்தது எரிச்சல் ஊட்டும் நிகழ்வாக தமிழ் பற்றாளர்கள் உணர்கிறார்கள்!

நேற்று எழுச்சித் தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து முற்போக்கு இயக்கத் தலைவர்களை அழைத்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில்...

கடைசியில் பேசிய வரிகள் மிகவும் முக்கியமானவை!

"இந்தத் திருமாவளவன் எந்தக் காலத்திலும் பாஜக மற்றும் பாமக இருக்கிற கூட்டணியில் ஒருபோதும் கலந்து கொள்ள மாட்டான்! அதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த காலத்திலும் சமரசம் ஆகாது; விலை போகாது!"

இந்த ஒரு "குறியீடு" அவருக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று கூட எடுத்துக் கொள்ளலாம்!

இந்தியா முழுவதும் தன்னுடைய மதவாதத்தை, பார்ப்பனியத்தை, சனாதன அதர்மத்தை விதைத்து வரும் சங்பரிவார்கள் தமிழ்நாட்டிலும் கால் ஊன்ற பாஜகவை எந்தக் கட்சி ஆதரித்தாலும் அந்தக் கட்சி தமிழ் இனத்துக்கு துரோகம் செய்கின்ற தமிழ் இனத்தால் வெறுத்து ஒதுக்கப் படவேண்டிய கட்சி என்றே நான் கூறுவேன்!

சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை, துப்பாக்கி எடுங்கள் சுடுங்கள், போய்க் கொண்டே இருங்கள், மோடி பார்த்துக் கொள்வார்... என்று ராணுவத்தினர் மத்தியில் பேசிய பேச்சு வன்முறையைத் தூண்டும் உச்சபட்ச பேச்சாக அமைந்திருந்தது! 
அதற்கு திமுக இன்னும் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை! அண்ணாமலையை பிடித்து சிறையில் அடைக்க வில்லை!

ஒரு விதமான Soft Hindutva பாணியில் திமுக செல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது!

மாநிலத்துக்கு ஒரு கூட்டு, மத்திய அமைச்சர்களாகி பொருளீட்ட இன்னொரு கூட்டு என்று கதை பேசுவது திமுகவின் பழைய வழக்கம்!

அந்த சந்தர்ப்பவாத வழக்கம் இது போன்ற மோசமான தருணத்தில் மீண்டும் நிகழ்ந்தால் திமுக என்ற கட்சியில் வெறும் பதவிக்கு அலைபவர்கள் மட்டுமே இருப்பார்கள்; அடிப்படைத் தொண்டர்களும் பெரியார் அண்ணா மீது பற்று கொண்டவர்களும் திமுகவில் இருந்து இந்த முறை சத்தியமாக காணாமல் போய்விடுவார்கள்! நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!

திராவிட இயக்க கொள்கைகள் மீது சமரசம் செய்து கொள்வது, சங்பரிவார்களின் தமிழக ஊடுருவல்களை கண்டும் காணாமல் இருப்பது, இது போன்ற காலகட்டங்களில் மிக மிக ஆபத்தானது ஆகும்! தமிழ் இனத்தை அது ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும்!


ஆபத்து ஆபத்து ஆபத்து!

YozenBalki

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

NEET நுழைவுத் தேர்வு என்னும் சனாதன அநீதி!

நீட்டுக்குப் பின்னால் உள்ள சமூக அநீதிகள் துக்ளக்குக்கும் தினமலருக்கும் இன்று மட்டுமல்ல என்றைக்குமே புரியாது...

ஏன் என்றால் அவர்கள்தான் சமூக நீதியின் முதல் எதிரிகள்.

தமிழகத்தில் உள்ள 27 அரசு மெடிக்கல் கல்லூரிகளும் தமிழக மக்களின் வரியால் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளின் வெவ்வேறு ஆட்சிக் காலத்தில் முழுக்க முழுக்க தமிழகத்தின் வரி வருவாயைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது தான்.

மோடி, அமித்ஷா போன்றோரின் அப்பன் வீட்டு பணத்தில் உருவானதல்ல!

தமிழகம் முழுதும் 
பரவலாக  உள்ள அத்தனை கல்லூரிகளுமே முழுக்க முழுக்க கடைக்கோடி கிராமத்து மாணவனும் மருத்துவர் ஆகவேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் தான் கட்டப்பட்டது.

(இங்கு ராமர் கோயில் கட்டியோ அனுமர் சிலையை நட்டோ மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர திராவிடம் ஒருநாளிலாகிலும் கனவு கூட கண்டதில்லை)

இதில் நீட்டை கொண்டுவந்து நுழைப்பதன் நோக்கமே வசதி படைத்தவர்கள், குறிப்பாக வட இந்தியர்களை நம் வரிக் காசில், நம் மாணவர்களுக்காக கட்டப்பட்ட காலேஜில் வட இந்தியனைக் குடியேற்றத் தான்...

ஏன் என்றால், அங்கு ராமர் கோயில் கட்டவும் அனுமார் சிலையை நடவுமே அவர்களுக்கு நேரம் பத்தல.
ஆதலால் அவனால்  தமிழ் நாட்டில் உள்ளது போன்ற கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த கட்டமைப்புகளை அங்கே உருவாக்கவும் முடியவில்லை.  

ஆனால் நாம் உருவாக்கிய கட்டமைப்பில் அவனை ஓசியில் நுழைப்பதற்கு, நரித்தனமாக கொண்டு வந்ததே இந்த நீட் முறை!

இப்ப இந்த நீட் ஐ எதிர்ப்பவர்கள் தமிழர்களின் எதிரியா இல்லை வட இந்தியனுக்கு நண்பனா?
சிந்தியுங்கள்...

Also, the report said the percentage of rural students came down from 65.17% in 2016-17 in the pre-NEET year, to 49.91% 

(நோக்கம்:கிராமத்தில் இருப்பவனின் டாக்டராகும் கனவை சிதைக்க வேண்டும்)

In 2020-21. The number of Tamil medium students allotted the MBBS seats also came down from 14.88% in 2016-17 to a mere 1.99%

(நோக்கம்:தமிழ் படித்தவனின் டாக்டராகும் கனவை சிதைக்க வேண்டும்) in 2020-21. 

Likewise, the percentage of state board students getting MBBS seats also plummeted from 65.66% in 2016-17 to 48.22%

(நோக்கம்: இங்கு பொருளாதாரத்தில் நலிந்தவனின் டாக்டராகும் கனவை சிதைக்க வேண்டும்) 

In 2017-18 while the percentage of CBSE students has increased from 0.39% to 24.91% 

(ஆக, எல்லோர் கனவையும் சிதைத்து, வட இந்தியனை இங்கே நுழைய விட்டாச்சு) 

Just one year after the 
introduction of NEET. 

The number of government school students getting MBBS admissions also decreased from 34 students to just 3 only

(நோக்கம்: அரசுப்பள்ளியில் படித்தால் டாக்டராகும் நினைப்பு கனவில் கூட வரக்கூடாது என்று ஏழையின் மகனின் கனவுகளைச் சிதைக்கும் ஃபாசிசக் கொள்கை) 

Students after NEET, is no student from government schools 
Got admitted to government medical colleges in 2017-18. 

(இப்ப, அரசுப்பள்ளியில் படித்தவனின் கனவை சிதைத்தே விட்டார்கள்)


இதுதான் உண்மை. 

இப்ப சொல்லுங்க 
பாசிசங்கள் தமிழகத்தின் எதிரிகள் தானே....???

🙃🙃🙃

இது Whatsapp செய்தி இன்று...!!

உள்ளடக்கம் உண்மை! ஆண்டுகள் மற்றும் எண்ணிக்கை சற்று மாறலாம்! அதிலுள்ள நியாயம் மாறாது! தமிழினம் ஏமாறுவது என்னமோ தொடர்கிறது!