
குரு:: இருந்தது இல்லை...
இருப்பது இல்லாமை!
கொடுப்பதற்கு எதுவும்
இவ்விடம் இல்லை!
சீடன்: இல்லாமையை தாருங்கள்
என் அன்பு குருவே !
குரு: இல்லாமை சூன்யம்-
சூன்யம் வெறுமை!
தரப்பட முடியாதது....
உணரப்படக் கூடியது மட்டுமே!
-மோகன் பால்கி
இது உளஇயல் கலைஞன் யோஜென் பால்கியின் வலைப் பூந்தோட்டம்: A Chennai Psychologist
அன்பை அன்பே அறியும் !அன்பை ஆணவம்ஒருபோதும் அறிவதில்லை!நீரை நீர் அறிந்துகலக்கும் எளிதாக !நீருக்குள் பாறையுகம் யுகமாய் இருந்தாலும்பாறை கரைவதில்லை;கரைந்து கலப்பதில்லை!அம்மட்டோ ?பாறையுடன் பாறையேசேர்வதில்லை!ஆணவமும் ஆணவமும்அப்படித்தான்!அன்புபெரும் சக்தி-ஒருசக்தி !ஆணவம்தனி இயக்கம்பிண முயக்கம்!எளிய ஆணவமும்புத்தப் பேரன்பைஒருக்காலும் அறியாது!அன்பைஅன்பே அறியும்-அன்பைஆணவம்ஒருபோதும் அறிவதில்லை!🌿🌿"இந்தக் கணத்தில்" ....1997மணிமேகலைப் பிரசுரம்-மோகன் பால்கி