Translate this blog to any language

புதன், 4 ஏப்ரல், 2012

Get a Patent & Fool those Ducks: அப்படி சொறியாதே...நான் காப்புரிமை வாங்கி இருக்கிறேன்!

       

(தாத்தா அங்கு தெருவோர திண்ணையில் அமர்ந்து வெற்றிலை குதப்பியபடி இருக்கிறார்..குண்டூஸ் அப்போது விளையாடிவிட்டு அங்கு வருகிறான்)

குண்டூஸ்: தாத்தா! நான் ஒன்னு கேப்பேன் பதில் சொல்றீங்களா?

தாத்தா: கேளு கண்ணா! ஆனா குண்டக்க மண்டக்க கேக்கக் கூடாது...ஜென்யுனான கேள்வியா இருந்தா பதில் சொல்வேன்.

குண்டூஸ்: இது நான் ரொம்ப நாளா கேட்கனும்னு இருந்தேன் தாத்தா; கிண்டல் கேள்வி எல்லாம் இல்ல!

தாத்தா: அப்பன்னா கேளு!

குண்டூஸ்: இந்த (patent right) 'பேடன்ட் ரைட்'-ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்ன தாத்தா?

தாத்தா: அதுவா..? அதாவது நான் ஒரு புதுமையான கருவியை ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சி மார்கட்டுல விற்பனைக்கு அனுப்புறேன். ஒருத்தன் அதே மாதிரி ஒன்னை காப்பி அடிச்சி என்னை விட குறைச்ச விலைக்கு வித்தா எனக்கு நஷ்டம் தானே? அப்போ, அதை தடுக்க நான் என் கருவிக்கு 'காப்புரிமை' வாங்கி வச்சிக்குவேன். அதுதான் 'பேடன்ட் ரைட்' கண்ணா!

குண்டூஸ்: அதாவது நீங்க கண்டுபிடிச்ச கருவியை நீங்க யானை விலை குதிரை விலை வச்சி விப்பீங்க! வேற எவனும் அதே மாதிரி கருவியை குறைஞ்ச விலைக்கு கூட விக்கக் கூடாது! அதை தடுக்க ஒரு குறுக்கு வழிதான் இந்த பேடன்ட் ரைட்...அப்படிதானே தாத்தா?

தாத்தா: டேய்! நீ ஏன்டா எப்பவும் தப்பு தப்பாவே யோசிக்கிற? நீயே நாளைக்கு தண்ணிய பெட்ரோலா மாத்துற மாதிரி ஒரு கருவி கண்டு பிடிச்சி அதுக்கு ஒரு பேடன்ட் ரைட் வாங்கி வச்சிட்டா உலகம் முழுசும் இருந்து உனக்கு கோடி கோடியா.....(Contd..)

வெள்ளி, 30 மார்ச், 2012

100 Ways to Raise Intelligent, Kind Children: உங்கள் குழந்தைகள் மேன்மையாய் வளர 100 வழிகள்!!



குண்டூஸ்: அங்கிள்! உங்க வீட்டு பின் பக்கம் இருக்கிற தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு. நான் உள்ள வந்து கொஞ்சம் சுத்திப் பாக்கலாமா?

பத்ரி: டேய் குண்டூஸ்! என்ன இளக்காரமா? என் வீட்டுப் பின்னாடி ஒரு ரெண்டடி இடம் இருக்கு. அதுல ஏதோ கொஞ்சம் செடி கொடி வளக்கிறோம். அது போயி உனக்குத் தோட்டமா? கொழுப்புதானே?

குண்டூஸ்: சாரி அங்கிள்! நெஜமாவே அது தோட்டம் மாதிரியே இருக்கு. அதுவும் அந்த பட்டு-ரோஸ்...வந்து....!

பத்ரி: சரி சரி! நீ எங்க வர்றேன்னு எனக்குத் தெரியுது! உனக்கு மறுபடியும் ஒரு பட்டு-ரோஸ் செடி வேணும்..அதக் கொண்டுபோய் உங்க வீட்டுத் தொட்டியிலே நட்டுவச்சிட்டு நாலு நாலு கழிச்சி காய்ஞ்சி போச்சின்னுட்டு திரும்ப வந்து...உங்க தோட்டம் நல்லா இருக்குன்னு எனக்கு ஐஸ் வைப்பே! உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?

குண்டூஸ்: அப்படி இல்லை அங்கிள்... நானும் என்னென்னமோ பண்ணி பாக்கிறேன்...எனக்கு மட்டும் வளர மாட்டேங்குது அங்கிள்! செம்மண்ணு, உரம், காத்து, தண்ணி, சூரிய வெளிச்சம் இப்படி எல்லாமே கவனமா பாத்தும் ஏன் வளர மாட்டேங்குதுன்னு தெரியல்ல. நான் நினைக்கிறேன்...தொட்டியில வளராதுன்னு...உங்கள மாதிரி பூமியில வளர வைக்கவும் இடம் இல்லியே..?

பத்ரி: அடேய்...குரங்கு குண்டூஸ்! ஏதோ நட்டோமா...அதுக்கு எல்லாம் தந்தோமா பாதுகாப்பு பன்னோமான்னுட்டு இல்லாம நீதான் அது பக்கத்துலேயே இருவத்து நாலு மணி நேரமும் நின்னுகிட்டு "வேவு" பாத்தபடியே இருக்கியே...அப்புறம் எப்படி செடி வளந்து பூ பூக்கும்? அதுல வேற ஒரு நாள் நீ பொறுமை இல்லாம செடி வேர் பிடிச்சி இருக்கான்னு மண்ணை தோண்டி பாத்தியாமே! எனக்கு தகவல் வந்துது. போடா முட்டாள்!

குண்டூஸ்: திட்டாதீங்க மாமா! நீங்கதானே எனக்கு மானசீக குரு...உங்க கிட்டத்தானே அத எல்லாமே கத்துக்கிட்டேன்!

பத்ரி: டேய் என்ன உளர்ற?

குண்டூஸ்: ஆமா மாமா! உங்க ரெண்டு குழந்தைகளையும் நீங்க அப்படித்தானே.....(Contd..)