Translate this blog to any language

திங்கள், 25 ஜனவரி, 2021

எதற்கு கால் பாதத்தில் தேங்காய் எண்ணெய் மசாஜ்?

உங்கள் பாதங்களின் உட்புறம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்:

   1. என் தாத்தா தனது 87 வயதில் காலமாகும் வரை அவருக்கு ஒரு முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை என்று ஒரு ஷெட்டி பெண் எழுதினார். ஒருமுறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு வயதானவரை அறிந்திருப்பதாகக் கூறினார். நான் தூங்கும்போது என் கால்களில் எண்ணெயை இடுகிறேன் என்று அறிவுறுத்தியிருந்தேன். இது சிகிச்சை மற்றும் உடற்தகுதிக்கான எனது ஒரே ஆதாரமாகும்.

   2. மணிப்பாலைச் சேர்ந்த ஒரு மாணவர், என் பாதங்களில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த என் அம்மா வற்புறுத்தியதாகக் கூறினார். ஒரு குழந்தையாக இருந்தபோது, ​​அவரது பார்வை பலவீனமடைந்தது என்று அவர் கூறினார். அவள் இந்த செயல்முறையைத் தொடர்ந்தபோது, ​​என் கண் ஒளி படிப்படியாக முழுமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆனது.

   3. ஒரு தொழிலதிபரான உடுப்பியைச் சேர்ந்த திரு காமத் என்ற ஒரு மனிதர் நான் விடுமுறைக்காக கேரளா சென்றேன் என்று எழுதினார். நான் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தூங்கினேன். என்னால் தூங்க முடியவில்லை. நான் வெளியே நடக்க ஆரம்பித்தேன். இரவில் வெளியே உட்கார்ந்திருந்த பழைய காவலாளி என்னிடம், "என்ன விஷயம்?" நான் தூங்க முடியாது என்று சொன்னேன்! அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் தேங்காய் எண்ணெய் ஏதேனும் இருக்கிறதா?" நான் இல்லை என்று சொன்னேன், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை சில நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்" என்றார். பின்னர் குறட்டை போட ஆரம்பித்தார். இப்போது நான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளேன்.

   4. இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய முயற்சித்தேன். இது எனக்கு நன்றாக தூங்கவும் சோர்வு நீக்கவும் செய்கிறது.

   5. எனக்கு வயிற்று பிரச்சினை இருந்தது. என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் மசாஜ் செய்த பிறகு, எனது வயிற்று பிரச்சினை 2 நாட்களில் குணமாகியது.

   6. உண்மையில்! இந்த செயல்முறை ஒரு மந்திர விளைவைக் கொண்டுள்ளது. இரவில் தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயால் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்தேன். இந்த செயல்முறை எனக்கு மிகவும் நிம்மதியான தூக்கத்தை அளித்தது.

   7. நான் கடந்த 15 ஆண்டுகளாக இந்த தந்திரத்தை செய்து வருகிறேன். இது எனக்கு மிகவும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது. என் இளம் குழந்தைகளின் கால்களை தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்கிறேன், இது அவர்களை மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.

   8. என் கால்கள் வலிக்கிறது. இரவில் தூங்குவதற்கு முன் தினமும் 2 நிமிடங்கள் தேங்காய் எண்ணெயுடன் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். இந்த செயல்முறை என் கால்களில் ஏற்பட்ட வலியிலிருந்து நிவாரணம் அளித்தது.

   9. என் கால்கள் எப்போதும் வீங்கியிருந்தன, நான் நடக்கும்போது சோர்வாக இருந்தேன். தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்யும் இந்த செயல்முறையை நான் இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தொடங்கினேன். வெறும் 2 நாட்களில், என் கால்களின் வீக்கம் மறைந்தது.

   10. இரவில், படுக்கைக்குச் செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெய் மசாஜ் ஒரு முனறயை என் கால்களில் பயன்படுத்தினேன். இது என்னை மிகவும் நிம்மதியாக தூங்கச் செய்தது.

   11. இது ஒரு அற்புதமான விஷயம். நிதானமான தூக்கத்திற்கான தூக்க மாத்திரைகளை விட இந்த முனற சிறந்தது. இப்போது நான் ஒவ்வொரு இரவும் என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் தூங்குகிறேன்.

   12. என் தாத்தாவின் காலில் எரியும் உணர்வும் தலைவலியும் இருந்தது. அவர் தனது கால்களில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்கினார், வலி ​​நீங்கியது.

   13. எனக்கு தைராய்டு நோய் இருந்தது. என் கால் எல்லா நேரத்திலும் வலித்தது. கடந்த ஆண்டு யாரோ ஒருவர் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் காலில் தேங்காய் எண்ணெயை மசாஜ் செய்ய பரிந்துரைத்தார். நான் அதை நிரந்தரமாக செய்கிறேன். இப்போது தான் அமைதியாக இருக்கிறேன்.

   14. என் கால்களில் கொப்புளங்கள் இருந்தன. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் நான்கு நாட்கள் தேங்காய் எண்ணெயுடன் என் பாதங்களை மசாஜ் செய்கிறேன். ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

   15. எனக்கு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூல நோய் இருந்தது. என் நண்பர் என்னை 90 வயதான ஒரு முனிவரிடம் அழைத்துச் சென்றார். தேங்காய் எண்ணெயை கைகளின் உள்ளங்கைகளிலும், விரல்களுக்கிடையில், விரல் நகங்களுக்கு இடையிலும், நகங்களிலும் தேய்க்க அவர் பரிந்துரைத்தார்: நான்கு முதல் ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயை தொப்புளில் சேர்த்து தூங்கச் செல்லுங்கள். நான் ஆலோசனையைப் பின்பற்றத் தொடங்கினேன். நான் மிகவும் நிம்மதியடைந்தேன். இந்த உதவிக்குறிப்பு எனது மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்த்தது. என் உடல் சோர்வு நீங்கி, நான் நிம்மதியாக உணர்கிறேன். குறட்டையை தடுக்கிறது.

   16. என் கால்களிலும் முழங்கால்களிலும் வலி ஏற்பட்டது. என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜின் முறையை படித்ததிலிருந்து, இப்போது நான் தினமும் செய்கிறேன், அது எனக்கு தூக்கத்தைத் தருகிறது.

   17. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜின் இந்த மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, என் முதுகுவலி குறைந்துவிட்டது, நான் நன்றாக தூங்கினேன்.

   எல்லா இடங்களிலும் அனைவருக்கும் மிகவும் எளிதானது. "நீங்கள் Coconut Oil மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை, எந்தவொரு எண்ணெய், கடுகு, ஆலிவ் போன்றவற்றை கால்களிலும் முழு பாதங்களிலும் தடவலாம், குறிப்பாக மூன்று நிமிடங்கள் இடது கால், மூன்று நிமிடங்கள் வலது காலின் பாதங்களிலும் மசாஜ் செய்யவும். அதே வழியில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யுங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் இதை ஒரு வழக்கமாக ஆக்குங்கள். பின்னர் இயற்கையின் அற்புதத்தை பாருங்கள், 

பண்டைய சீன மருத்துவத்தின் படி, கால்களுக்கு அடியில் சுமார் 100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன.
 மனித உறுப்புகளை அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் குணமாகும்.
   "ஃபுட் ரிஃப்ளெக்சாலஜி" (Foot Reflexology) என்று இது கூறப்படுகிறது. இந்த கால் மசாஜ் சிகிச்சை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.

 தயவுசெய்து இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள்!

From
WhatsApp University!
😇😇🙏🙏

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

போனசாக ஒரு அம்மா!

ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து...
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.

நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது.

திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை,

இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும்.

சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க.

இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில் முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள். எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்.

அவனுக்கு காபி strong கா இருந்தாதாம்மா புடிக்கும் !நான் போட்டு தர்றேன் கொண்டுபோய் கொடு!

மருமகள் காபியை கொண்டுசென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்!

பின் கணவனுக்கு பறிமாறல்,
கை கழுவ தண்ணீர் தருதல்,
அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு,
எப்போதும் மகனுடனே இருப்பது,
மகனும் அவளுடனே இருப்பது
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்.

இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து
காப்பி கொடுப்பதுசாப்பாடு பரிமாறுவது,
துணி துவைப்பது, காத்திருப்பது,
கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??

அவன் என் மகன்,
முதல் உரிமை எனக்குதான்,
என்று நினைக்கத் துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?

என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான "பொஸஸிவ்நஸ்ஸை" புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமைச் சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் ஏதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடி முதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத் தொடங்கிவிடும்.

அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது
இதை எப்படி சரிசெய்வது?

இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது!

திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்.

அப்படி விதைத்தால், அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!

ஆனால் அப்படி எந்த மருமகளும் செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது.

இதனால் 25 வருடமாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது.

Possessivenessம் அடிப்படையில் அளவுக்கதிகமான அன்புதான்.

அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்.

பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்!

அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்!

அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன்
அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்!

உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை.
உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்.

உங்களுக்கு கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!
🌸🌸🌀🌀

From
WhatsApp University
😇😇🙏🙏

சனி, 9 ஜனவரி, 2021

தமிழ்: "சும்மா" என்பதில் 15 அர்த்தங்கள்

*சும்மா* இதை படியுங்கள் 
நிச்சயம் நீங்கள் *அசந்து போவீர்கள்* – 
இது தான் தமிழ் மொழியின் சிறப்பு:-

உலகில் 6800 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப்படுகின்றது.*
இவை அனைத்தையும் விட *தமிழ் மொழி சிறப்பு மிக்கது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

உலகின் மூத்த குடியெனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. 
*மொழியால் இனம் பெருமை பெற்றது எனில் அது தமிழினமாகத் தான் இருக்க வேண்டும்.

உலகில் தோன்றி பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போக, தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த பீடிகை தொடர்ந்து படியுங்கள் புரியும்,

**சும்மா**... சொல்லுவோம் தமிழின் சிறப்பை,

 
அது சரி *சும்மா* என்றால் என்ன? 


அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த *சும்மா*. 


பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள *ஒரு வார்த்தை இது.*


*சும்மா* என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள் உண்டு* வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, 

நாம் அடிக்கடி கூறும் இந்த *சும்மா* எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.

1, அமைதியாக - *சும்மா* (அமைதியாக) இருங்கள் – *Quiet*

2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் *சும்மா* இருக்கின்றேன் - *Leisurely*

3. உண்மையில் - *சும்மா* சொல்லக்கூடாது அருமை - *in fact*

4. *சும்மா* ( இலவசமாக) கிடைக்காது - *Free of cost*

5. பொய் - *சும்மா* கதை அளக்காதே - *Lie*

6. உபயோகமற்று - *சும்மா* தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - *Without use*

7. அடிக்கடி - *சும்மா* *சும்மா* சீண்டுகின்றான் இவன் - *Very often*

8. எப்போதும் - இவன் இப்படித்தான் *சும்மா* சொல்லுவான் - *Always*

9. தற்செயலாக - ஒன்றுமில்லை *சும்மா* சொல்கின்றேன் - *Just*

10. காலி - இந்த பெட்டி *சும்மா* தான் இருக்கின்றது - *Empty*

11. மறுபடியும் - சொன்னதையே *சும்மா* சொல்லாதே - *Repeat*

12. ஒன்றுமில்லாமல் - *சும்மா* ( வெறும்கையோடு) போகக் கூடாது - *Bare*

13. சோம்பேறித்தனமாக - *சும்மா* தான் இருக்கின்றோம் - *Lazily*

14. நான் வெட்டியாக (*சும்மா*) ஏதாவது உளறுவேன் - *idle*

15. விளையாட்டிற்கு - எல்லாமே *சும்மா* தான் சொன்னேன் - *Just for fun*

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *சும்மா* என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்படியும்.. பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது *சும்மா* இல்லை

*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றமை, 

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

இந்த *சும்மா* என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு *சும்மா* பிடித்து இருந்தால் *சும்மா* ஒரு Forward பண்ணுங்கள்..
 
*சும்மா* பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ள..

..,*❤🙏❤
Source from
What's up University
With all gratitude to the unknown writer.

திங்கள், 4 ஜனவரி, 2021

என்னைத் தாயாக்கி எனக்கருளி நின்றவளே! (கவிதை)



சின்னதோர் தேவதையே 
சிறுமுகிலே ஓவியமே!

எனக்கென்றே இறைவனவன்
எடுத்துவைத்த பேரழகே!

வண்ணப் பைங்கிளியே
வாசமிகு ரோசாவே!

உன்னை நினைத்திருக்க
உசிரெல்லாம் இனிக்குதடி!

என்னப் பெருந்தவமோ
எப்படிநீ கிடைத்தாயோ!

எண்ணியெண்ணி மருகுகிறேன் 
உள்ளமெலாம் உருகுகிறேன்!

என்னைத் தாயாக்கி 
எனக்கருளி நின்றவளே!

உன்னைப் பெற்றதனால் 
எல்லாமும் பெற்றேன்யான்!

எப்படி உனை சீராட்ட
ஒருமடிதான் உள்ளதடி! 

பெருமையடி உன்னாலே
கண்படுமோ அதனாலே! 

உன்னை எனக்களித்த 
இறைமை நினைந்திருப்பேன்!  

காலமுள நாள்வரையும்
உன்விழிகள் பார்த்திருப்பேன்! 

-YozenBalki
(ட்விட்டரில் ஒரு போட்டி! அதற்கு நேற்று எழுதி அனுப்பினேன் தோழரே! 🌸🌸🙏🙏)



வீட்டுக்கு ஒரு சிறு நூலகம் தேவை!

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது. "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி!

பெண்களிடம் இருந்து கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகத்தைக் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்!

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு.

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் "இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம்", பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா!

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்!!

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்!

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்!

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்!

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்!

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
🌸🌸
(-வாட்ஸ் அப் பல்கலைக் கழகத்தில் இருந்து கிடைத்தது!! MBK 🙏🙏)