Translate this blog to any language

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

கேரள வெள்ளம் உணர்த்தும் வாழ்க்கைப் பாடம் !

“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும். 
முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”



இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு இருந்தனர்! 

இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.

முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக் கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள். 

பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன!


பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்

அழகு சாதனப்பொருள்கள்

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

இட ஒதுக்கீடு என்பது நீதியா அநீதியா? பொருளாதார அளவுகோல் சரியா?

💛💚❤💚💛💜❤💚💙

உலகில் வேறெங்கும் காணப்படாத ஒரு மாபெரும் அநீதி இந்தியாவில் இன்றும் உண்டு! அது என்னவென்றால் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தில் பிறப்பதனால் குத்தப்படும் "பிறப்பின் அடிப்படையிலான சாதி முத்திரையே ஆகும்!"



இந்த நாட்டில் மட்டுமே ஒருவனின் கல்விப் பெருமையினாலோ அல்லது அவனது நன்னடைத்தை பற்றியோ அன்றி, இன்ன சாதித் தந்தைக்கு பிறப்பதினாலேயே ஒரு குழந்தை பிறப்பிலேயே உயர்ந்த சாதிக் குழந்தையாக மதிக்கப்படுவது, அல்லது பிறப்பின் அடிப்படையிலேயே "தீண்டத்தகாத சாதி குழந்தையாக ஒதுக்கப்படுவது", எனும் அவலம் ஆயிரம் ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது! 

அப்படி குழந்தை பருவத்திலேயே முக்கியமாக பள்ளிப் பருவத்தில், பிற மாணவர்களால் ஆசிரியர்களால், சாதி அடிப்படையில் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்டவரே டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஆவர்!


ஆதி தமிழர்களுக்கு பிறவியின் அடிப்படையிலான சாதிமுறை இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் இல்லை! தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழைய இலக்கிய நூல்கள் வழியாகவும் திராவிட சிந்து சமவெளி நாகரிகம், தமிழக கீழடி நாகரிகம் போன்ற புதைபொருள் ஆராய்ச்சியின் வழியாகவும் ஆய்வு செய்தபோது தமிழர்களின் சாதியற்ற சமுதாயம் தெரியவந்தது!

சனி, 3 ஆகஸ்ட், 2019

டெங்கு: தோலுரிக்கும் கட்டுரை !

இது வாட்சப்பில் வந்தது! மிக அருமையான பதிவு, அதை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் அப்படியே இங்கு படியெடுத்து ஒட்டி உள்ளேன்! இதை எழுதிய ஹீலர்.இரா.மதிவாணன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பலவும்!
-yozenbalki 
-----------------------------------------------------------


இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செறிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்ச்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.

இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.

எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.

சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.

தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.

உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை  நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.

நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.

ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.

வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.