Translate this blog to any language

செவ்வாய், 23 ஜூன், 2020

ஆற்றோடு கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போனால்...!!


சென்னை என்றாலே இப்பொழுது பிற மாவட்டத்தை/மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பயப்படுகிறார்கள்; சென்னையை தூற்றி வேறு பேசுகிறார்கள்!

காரணம்... சென்னையில்தான் அதிக தொற்று என்று புள்ளிவிவரங்கள் காட்டப்படுகின்றன!

சென்னையை விட பலவகையிலும் நகர கட்டமைப்பு, மருத்துவ கட்டமைப்பு, கல்வி வேலைவாய்ப்பு வசதிகள், மற்றும் நாகரீகம் குறைந்த வடநாட்டு நகரங்களை விட சென்னையில் அதிக நோய்த்தொற்று இருக்கிறது என்கிறார்கள், இதை நம்ப முடிகிறதா? 

சரி அது அப்படியே இருப்பதாக நம்புவோம்! 
இங்கு இருப்பவர்கள் நூற்றுக்கு 80%-90% தமிழகத்தின் பிற  மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்! அப்புறம் எப்படி சென்னை மக்கள் மீது பழி போடுகிறீர்கள்?
சென்னை மக்கள் வானத்தில் இருந்தா குதித்தார்கள்?

சரி! அப்படிப்பட்ட சென்னையில் இன்று வசிப்பவர்களில் சென்னையைப் பூர்வீகமாக கொண்டவர்கள் எத்தனை சதவீதம்! 
இங்கு பத்தில் எட்டு பேர் முதல் ஒன்பது பேர் வரை பிற மாவட்டங்களிலிருந்து பிற மாநிலங்களிலிருந்து வந்து சேர்ந்தவர்கள்; சென்னையை பிறப்பிடமாகக் கொள்ளாதவர்கள்!
எல்லோரையும் வரவழைத்து வாழ்வு தந்தது, நாளைக்கும் வாழ்வு தர இருப்பது சென்னை எனும் அன்னை தான்! 

நீங்கள் மிகப்பெரிய அரசியல் தலைவராக இருக்கலாம்! நீங்கள் மிகப் பெரிய சினிமா நடிகராக இருக்கலாம்! வந்து சேர்ந்த உங்களில் 99% பேருக்கு சோறு போட்டது சென்னை!

அதை மறந்து விடாமல் சென்னை மீது ஒரு நன்றி உணர்ச்சியோடு பேசுங்கள்! 

வள்ளுவர் எழுதிய செய்நன்றி அறிதல் எனும் அதிகாரத்தை ஒருமுறையாவது படிக்கவும்!

நீங்கள் சென்னைக்கு வராவிட்டால்...
Ha! Ha! Ha!
"ஆற்றோடு கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போனால்..."
யாருக்கு நட்டம் ஆகி விடும்?

உண்மையில், நீங்கள் நகர்ந்து நின்றால் கொஞ்சம் காற்று வரும்!

டாட்!!

YozenBalki
Senior Psychologist
😍😍🙏🙏

ஞாயிறு, 21 ஜூன், 2020

ஒரே காற்றில் மனித மீன்கள்!

சிரிப்பாய் இருக்கிறது
ரொம்பவே சிரிப்பாய்
இருக்கிறது!

தெருவில் வீட்டில் 
வசிக்கும் பூனைகள் 
நாய்கள் பறவைகள் 
நான்கு, மூன்று 
ஈரறி(வு) உயிர்கள் 
முகமூடி அணியாமல் 
நம்முன் வாழ்கையில் 
அவைமுன் னுயர்ந்த
மானுடம் கூனி
முடங்கிக் கிடைக்கையில்
சிரிப்பாய் இருக்குது!

















"ஒரே காற்றில் 
ஒரே கடலில் 
வாழும் மீன்களில் 
மனித மீன்கள்" 
மட்டுமே பாவம் 
இத்தனை மெலிவாய்
பூமியில் கிடந்து 
அல்லல் உறுவதை 
காண்கையில் எனக்கு 
வகை வகையாக 
சிரிப்பே வருகுது!

இராக்கெட் என்ன?
ஏவுகணை எ(ன்)ன?
கப்பல் விமானம் 
அறிவியல் என்ன?
எல்லாம் இருந்தும் 
இல்லா திருக்கும் 
நிம்மதி என்ன?
ஆறறிவு என்ன?

நாமே வளர்க்கும் 
நாய்களும் பழிக்கும் 
மூடிய கவசம்
முடியா முடக்கம் 
நீண்டிடும் பூமியில்
காதுகள் வழியாய்
நுழையா தொற்றை!!
நம்பிடும் பதர்களாய்
அரசர் அறிஞர்கள்
சாமிகள் சாமியார்
அனைவரை மிரட்டும்
ஓரணு உயிரியை
சிந்துபாத் கதையை
பார்க்கையில் எனக்கு
கழுதை சிரிப்பாய் 
சிரிப்பு வருகுது!

-பால்கி