Translate this blog to any language

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

சூழ்ச்சி வாழ்க்கையில் அவசியமா?

கேள்வி: வாழ்க்கையில் வெற்றி பெற சூழ்ச்சி மிக முக்கியமா.. சூழ்ச்சியில்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதா.. நான் நல்லவன், தர்மம் தலை காக்கும் என்றிருந்தால் அது இழிவான விஷயமா..??


பாலகுமாரன் : இது முழுக்க முழுக்க ஒவ்வொரு தனி மனிதனின் ஆற்றலைப் பொறுத்த விஷயம். வலி தாங்கும் திறன், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று
கொக்கரிக்கும் திறன் போன்ற பல திமிர்களை உள்ளடக்கியது. 

சூழ்ச்சி இருந்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பது இன்று நேற்றல்ல.. சகுனியின் காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் வாக்கியம். இல்லை என்று சகுனியின் காலத்திலேயே தரும புத்திரரால் மறுக்கப்பட்டும் வந்தது. “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்” என்பது பாரதியின் வரிகள். அதாவது சூது, சூழ்ச்சி என்பவை தற்காலிகமாக ஒரு வெற்றியின் தோற்றத்தை தரக்கூடியவை என்பது தான் இதற்குப் பொருள். புளகாங்கிதம் அடைந்து சூழ்ச்சியினால் ஜெயித்து விடலாம் என்று சிலர் மார் தட்டலாம். அடி வாங்கி உருளும் போது அவர் வார்த்தைகள் வேறு விதமாகவும் இருக்கலாம். அல்லது நான் மறுபடியும் சூழ்ச்சி செய்து வெற்றி பெறுவேன் என்று பாதிக்கப்பட்டவரே மார் தட்டவும் செய்யலாம். அதனால் தான் சொல்கிறேன். இது தனிப்பட்ட மனிதனுடைய உரம் பொறுத்த விஷயம்.

அவமானம் தாங்கும் சக்தியைப் பொறுத்த விஷயம். அவமானத்திற்கு துடித்துப் போகிறவர்கள் சூழ்ச்சியில் இறங்க முடியாது, அவமானத்திற்கு துடிப்பதும், துடிக்காததும் இளம் வயதில் நீங்கள் வளர்க்கப்படுவதைப் பொறுத்தது. இளம் வயதிலேயே மானப்பிரச்சனைகள் ஏற்பட்டு அடிதடிக்கு அஞ்சாமல் இறங்கி அங்கேயே உரம் பெற்றால் தான் சூழ்ச்சி செய்கின்ற அல்லது சூழ்ச்சியை தேடிக் கண்டு பிடிக்கின்ற ஒரு மனோபாவம் வரும். சிறு வயதில் பொத்தி வளர்க்கப்பட்டு கிடைக்க வேண்டியவை கிடைத்து வெகுளியாக வளர்ந்தவருக்கு சூழ்ச்சி செய்ய முடியாது. சூழ்ச்சியை எதிர் கொள்ளவும் முடியாது.

இதற்கு அடுத்தபடியாக இடம் பெறுவது ஆசை. ஆசை என்பது பேராசையாகி விஸ்வருபம் எடுத்து உங்களைக் காட்டிலும் பிரம்மாண்டமாக வளர்ந்து, என்ன செய்தாவது வெற்றி அடைந்தாக வேண்டுமென்ற வெறி ஏற்படும். அது
சூழ்ச்சி செய்யும். சூழ்ச்சிகளை முறியடிக்கும். கத்திக்கு கத்தி, வெட்டுக்கு வெட்டு, களவுக்கு களவு என்று களமிறங்கும். ஆசை எப்போது பேராசையாகும், சிறுசிறு வெற்றிகள் கிடைப்பதின் மூலம் ஆரம்ப நாட்களில் கிடைக்கும் விருதுகளின் மூலம் மிகப்பெரிய ஆசை வளரும். அது மட்டுமல்லாது சுற்றியுள்ள ஒரு தோழர் வட்டம் உங்களை உசுப்பேற்றி உலுக்கி உயரக்கொண்டு போய் வைத்துவிடும்.

நீங்கள் கார் விட்டு கீழே இறங்குகிற போது, ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று உங்கள் காரைச் சுற்றிக் கொண்டு நூறு பேர் உரக்கக் கத்தினால் கிறுகிறுப்பு வரத்தான் செய்யும். மண்டையிலுள்ள கர்வச் செதில்கள் வளர்ந்து விஸ்வரூபமாகும். கொம்புகள் முளைக்கும், சந்தேகமின்றி ‘நான் வருங்கால தமிழக முதல்வர் தான்’ என்று உங்களுக்கேத் தோன்றும்.

வருங்கால முதல்வர் என்று யாரைச் சொல்வார்கள். கொஞ்சம் காசு இருக்கிறவரை, கொஞ்சம் கூட்டம் சுற்றுகிறவரை ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று கூட்டம் கூடி சொல்வார்கள். அப்படி யாரையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள், சினிமா டைரக்டரை, நடிகரை, கவிஞரை, ஒரு ஜோசியரைக் கூட ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

யார் சொல்கிறார்கள், இதே போல சூழ்ச்சித்திறன் பெற்றவர்கள் தான் சொல்கிறார்கள்.“அண்ணா,நீங்க முதல்வர்னா பொதுப்பணித்துறையை எங்ககிட்ட விட்ருங்கண்ணா”. “ஏண்டா...ஏன் பொதுப்பணித்துறையை கேட்கற..”. “அதுலதாண்ணா சம்பாதிக்கலாம். உங்களுக்காக நான் நிறைய செலவு பண்ணிட்டேண்ணா. அதை எடுக்க வேணாமாண்ணா” தம்பி சிரித்துச் சொல்ல, அண்ணனும் உரத்துச் சிரிக்க, அந்தச் சபையில் ஆனந்தப் பரவசம் கூத்தாடும். ஒருவர் தோளை ஒருவர் பற்றிக் கொண்டு மேலே
வந்துவிடலாம் என்ற பேராவல் எழும்பும்.

“அவன் நமக்கு வேணும்ப்பா, கட் பண்ற நேரத்துல கட் பண்ணி விட்டுவிடலாம். நீ கவலைப்படாதே...” என்று ஒருவனை மற்றவனுக்கு எதிரியாக நியமித்து இடையறாது.. இடையறாது தந்திரம் செய்வார்கள்.
அவர் தேவரு.. இவர் வன்னியரு.. அந்த ஏரியாவோ தேவரு ஏரியா, நான் யாரை பிரசிடெண்ட் ஆக்குவேன். உங்களுக்குத் தெரியாதா, இல்லைன்னா இவராண்ட துட்டு இருக்கு, துட்டு என்னப்பா துட்டு, துட்டு எப்போ வேணாலும் சம்பாதிச்சுக்கலாம், ஆளுங்க சம்பாதிக்கறது தான் கஷ்டம். இப்போதைக்கு நமக்குத் தேவை ஆள் படை, படைபலம். படைபலம் இருந்து பதவி கிடைச்சிடிச்சுன்னா துட்டை காலுக்குக் கீழ் கொட்டுவாங்க. அப்படியே மணல் ஒதுக்கறா மாதிரி காலாலயே துட்டு ஒதுக்கி எடுத்துட்டுப் போயிடலாம்”

கலையிலிருந்து அரசியலா அல்லது அரசியலே கலையா. இடையறாது நிமிடத்திற்கு நிமிடம் குணம் மாறும். சூழ்ச்சி வெற்றியை நோக்கி விறையும். அந்த சமுத்திரத்தில் இறங்கி நீந்தி நெஞ்சாழம் போய்விட்டால் போதும், பிறகு கரைக்கு மீளுவது கடினம். உங்களைத் தாண்டிப்போன அலைகள் திரும்ப வந்து உங்களை உள்ளுக்குள் தள்ளிக் கொண்டிருக்குமே தவிர, வெளியே சேர்க்காது.

சமுத்திரம் உங்களை எப்போது கரை சேர்க்கும் தெரியுமா, நீங்கள் செத்த பிறகு. செத்து மிதந்த பிறகு தான் உங்களை கரையில் ஓதுக்கும். அதனோடு இருந்து கைகால் அசைக்க அசைக்க நடு சமுத்திரத்திற்கு இழுத்துப் போகப்படுவீர்கள். சூழ்ச்சி வெகு நிச்சயம் வெற்றி தரும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எதற்காக சூழ்ச்சி? வெற்றி பெற, எதற்காக வெற்றி. அதுவொரு சந்தோஷம். ஆனால், வெற்றி பெற்ற பிறகு சந்தோஷமாய் இருக்க இயலுமா, நிம்மதியாய் சாப்பிட முடியுமா, அமைதியாய் தூங்க முடியுமா, நலமாய் புணர முடியுமா, யாரைக் கண்டாலும் கனிந்து கைகூப்ப முடியுமா, முடியாது. பெற்ற தாய் மீது சந்தேகம் வரும், மனைவியை வெறுக்கத் தோன்றும். மகனை ஆள் விட்டு கண்காணிக்கத் தோன்றும், பெண்களை விலைக்கு வாங்கத் தோன்றும். சூழ்ச்சி என்று ஆரம்பித்துவிட்டால் எல்லைகள் உண்டா, எல்லா நாகரிகமும் உடைத்து நாசமாக்கி, சூழ்ச்சி மட்டுமே சூழ்ந்து நிற்கும்.

பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே சாவான் என்பது வேதவாக்கு. சூழ்ச்சியை எடுத்தவன் சூழ்ச்சியாலேயே மரணமடைவான் என்பதைத் தான் அந்த வாக்கியம் சொல்கிறது. இதில்மோசமானது என்ன தெரியுமா, சூழ்ச்சியில் ஜெயித்து வெற்றிக் கொடி நாட்டி ஊர் வலம் வந்து பிறகு சூழ்ச்சியால் தாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு அடிபட்டு துவண்டு கீழே சரிந்து விழுந்த பிறகு ஊரும், உற்றாரும் பழிக்க வெற்றி பெற்ற நாட்களில் எப்படியெல்லாம் சிலிர்த்துக்கொண்டோம் என்று நினைத்து நினைத்து வெட்கப்பட்டு குலைந்து இறுதி நேரத்திற்காக காத்திருக்கிற நிலைதான்
கொடுமையானது. அப்போதும் சூழ்ச்சி எண்ணம் தோன்றும், அது இன்னமும்
கொடுமையானது.

சூழ்ச்சி ஓரு போதையான விஷயம். ஒருமுறை செய்து பழக்கப்பட்டு விட்டால் பிறகு திரும்ப திரும்ப செய்யத்தான் தோன்றும். சூழ்ச்சி வேண்டாம். தர்மம் தலைகாக்கும் என்று பலநூறு கதைகள் நம்மிடையே புழங்கி வருகின்றது. ஆனாலும் சூழ்ச்சி தான் உத்தமம் என்று சொல்லி வருபவர்கள் இன்னும் இருக்கத் தான் செய்வார்கள்.

- எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

புதன், 12 ஆகஸ்ட், 2026

The Ego Talks - இது ஞான சம்பாஷனை அல்ல!


இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக அது "ஞான சம்பாஷனை", ஆகிவிடாது. சில நேரங்களில் நாம் கேட்பது அறிவின் குரல் அல்ல; அகங்காரத்தின் குரல்!

தன்னை நிரூபிக்க வேண்டும், தன் கருத்துதான் சரி என்று காட்ட வேண்டும், மற்றவரை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்போது, உரையாடல் மெதுவாக “The Ego Talks” ஆக மாறிவிடுகிறது.

உண்மையான அறிவு, நாம் எவ்வளவு தெரிந்திருக்கிறோம் என்பதை காட்டுவதில் இல்லை; எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதை அறிதலில்தான் இருக்கிறது.

இருவர் பேசிக்கொள்வது எல்லாமே அறிவார்ந்த உரையாடல் அல்ல. சில நேரங்களில், நாம் பேசுவது உண்மையில் நம் அறிவு அல்ல — நம் Ego!

நம்முடைய கருத்தை நிரூபிக்க வேண்டும், மற்றவரை விட நாம் சரி என்பதை காட்ட வேண்டும், நம்முடைய எண்ணத்தையே ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற மனநிலை உருவாகும்போது, ஒரு சாதாரண உரையாடல் கூட Ego-வின் போராட்டமாக மாறிவிடுகிறது.

உண்மையான ஞானம் என்பது அதிகமாக பேசுவதில் இல்லை. நாம் பேசுவது ஏன் என்பதை நமக்குள் கவனிப்பதில்தான் இருக்கிறது.

-Yozen Balki

இந்திய சிற்பக் கலையின் கணித மூளை - தமிழ்நாட்டின் "தாள-மானம்"!

உலகில் எத்தனையோ கலைகள் தோன்றி மறைந்தாலும், பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியாமல் கம்பீரமாக நிற்பது தமிழ்நாட்டின் கருங்கல் சிற்பக் கலை மட்டுமே. 

மிகக் கடினமான இரும்பு போன்ற கருங்கற்களில் தமிழர்கள் வடித்த சிற்பங்கள் வெறும் அழகுக்காக மட்டும் செதுக்கப்பட்டவை அல்ல.


அவற்றின் பின்னால் மிகத் துல்லியமான உலகத்தரம் வாய்ந்த கணிதமும், அறிவியல் பூர்வமான அளவீட்டு முறைகளும் ஒளிந்துள்ளன. அந்த உன்னதமான அளவீட்டு முறைக்குத்தான் ‘தாள மானம்’ (Tala System) என்று பெயர்.

இன்று இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் பேசப்படும் சிற்பக் கலைக்கு இந்தத் தாள மான முறையே ஆணிவேராகத் திகழ்கிறது.

தாள மானம் என்றால் என்ன?

பண்டைய தமிழ் சிற்ப சாஸ்திரங்களின்படி, ஒரு சிற்பத்தின் அளவைக் கணக்கிட ‘தாளம்’ என்பது அடிப்படை அலகாகப் பயன்படுத்தப்படுகிறது. 

சிற்பத்தின் உள்ளங்கை நீளம் அல்லது நெற்றி முதல் நாடி வரையிலான முகத்தின் நீளமே ஒரு தாளம் எனப்படும். இந்த ஒரு தாளம் என்பது 12 அங்குலங்களாகப் பிரிக்கப்படும். மேலும் துல்லியமான வேலைப்பாடுகளுக்கு, ஒரு அங்குலம் என்பது 8 ‘யவை’ (நெல் தானியம்) என்று கணக்கிடப்படுகிறது. சிற்பிகள் எந்தவொரு நவீன அளவுகோலும் (Scale) இல்லாமல், இந்த விரற்கணக்கின் (விரல் கணக்கு) மூலமே பிரம்மாண்டமான சிலைகளை இன்றும் செதுக்குகிறார்கள்.


தெய்வங்களுக்கான விகிதாச்சாரக் கணக்குகள்:

சிற்பத்தின் தன்மையைப் பொறுத்து அதன் உயரமும் உடல் விகிதாச்சாரமும் இந்தத் தாளக் கணக்கின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:

   1. தச தாளம் (10 Tala): சிற்பத்தின் மொத்த உயரம் அதன் முகத்தின் நீளத்தைப் போல 10 மடங்கு இருக்கும். இது சிவன், விஷ்ணு போன்ற முதன்மைக் கடவுள்களைச் செதுக்கப் பயன்படுகிறது.

   2. அஷ்ட தாளம் (8 Tala): சிற்பத்தின் உயரம் முகத்தைப் போல 8 மடங்கு இருக்கும். இது மனிதர்கள் மற்றும் சிறு தெய்வங்களைச் செதுக்கப் பயன்படுகிறது.

   3. பஞ்ச தாளம் (5 Tala): சிற்பத்தின் உயரம் முகத்தைப் போல 5 மடங்கு இருக்கும். இது பிள்ளையார் மற்றும் குள்ள பூதங்களைச் செதுக்கப் பயன்படுகிறது.


பாரதம் முழுவதும் பரவிய தமிழ் சிற்பக் கணிதம்:

தமிழ்நாட்டின் மாமுனி மயன் போன்ற ஸ்தபதிகளால் எழுதப்பட்ட ‘மயமதம்’ மற்றும் ‘மானசாரம்’ போன்ற சிற்ப சாஸ்திர நூல்களே ஒட்டுமொத்த இந்தியக் கோயில் கட்டிடக்கலைக்கும் அடித்தளமாக அமைந்தன. பல்லவ மற்றும் சாளுக்கியப் போர்களின் போது, தமிழ்நாட்டுச் சிற்பக் குடும்பங்கள் பிற மாநிலங்களுக்குச் சென்றபோது இந்தத் "தாள மான" முறையையும் அங்கு கொண்டு சேர்த்தனர். 


கர்நாடகாவின் பாதாமி, ஹலேபீடு மற்றும் மகாராஷ்டிராவின் உலகப் புகழ்பெற்ற எல்லோரா குகைக் கோயில்களில் உள்ள சிற்பங்களை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அவை அனைத்தும் தமிழ்நாட்டின் ‘உத்தம தச தாள’ கணக்கீட்டின்படியே துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளதை நிரூபித்துள்ளனர்.

ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் காலப்போக்கில் பளிங்குக்கல் மற்றும் மணற்கல் சிற்ப முறைகள் பிரபலமடைந்தாலும், அவற்றுக்கான அடிப்படை விகிதாச்சாரக் கணிதம் தமிழர்கள் வடித்த தாள மான முறையே ஆகும். இதனால்தான், இன்றும் உலக அரங்கில் கருங்கல்லில் சிற்பம் செதுக்கத் தமிழ்நாட்டுச் சிற்பிகள் மட்டுமே முதன்மையாகத் திகழ்கிறார்கள்.

இந்தியாவின் எந்தப் பகுதியில், எந்தப் பாறையில் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னால் இருக்கும் கணித மூளை தமிழர்களுடையதே என்பது நாம் பெருமைகொள்ள வேண்டிய வரலாற்று உண்மை!

-Yozen Balki 💢 💢 

குறிப்பு: என்னுடைய கட்டுரையின் முக்கிய குறிக்கோள் என்பது இந்தியா முழுவதும் இருந்த கோயில்களை தமிழர்கள்தான் இங்கிருந்து அங்கு சென்று சிற்பம் வடிவமைத்து தந்திருக்கிறார்கள் என்பது ஆகும்.

அதற்கு ஆதாரம் என்னவென்றால் தமிழர்கள் சிற்பக் கலையில் பயன்படுத்திய அளவுகளை தான் இந்தியா முழுவதும் பிற இனத்தவர் இன்றும் பயன்படுத்துகிறார்கள்!

💢💢

#TamilHistory #DravidianArchitecture #TalaSystem #ElloraCaves #KailashTemple #GraniteSculpturing #AncientIndianMathematics #TamilHeritage #PallavaArt #IndianSculptureHistory




ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

When Business Chooses Humanity: A Lesson from Tata ❤️

When a Company Takes Responsibility Beyond Employment...


A friend sent me a WhatsApp message this morning that genuinely surprised me.

It was about an employee of Tata Steel who had passed away unexpectedly. The message said that the company had made significant financial provisions for his family and would continue to support them until the age at which he would have retired.

At first, I thought it might simply be one of those WhatsApp messages that gets forwarded without verification.

So I did something I always prefer to do.

I checked.

And what I found surprised me even more.

Tata Steel has, under certain employee-benefit schemes, provided financial protection to the families of employees who die while in service. Historical Tata Steel records describe a provision under which the nominee could receive a monthly amount linked to the employee's last drawn salary until the employee reached the normal retirement age.

That made me stop and think.

We normally look at a company as an organisation that pays an employee for the work he or she performs.

The employee works.

The company pays a salary.

One day, employment ends.

But what happens when an employee dies unexpectedly, leaving behind a spouse, children and a family that depended upon that income?

Most companies may provide insurance, gratuity, provident-fund benefits or some form of death compensation.

Those are valuable.

But there is something profoundly different about a company saying, in effect:

“The employee may no longer be with us, but his family should not suddenly lose the financial security that his employment provided.”

That is not merely a financial benefit.

It is a philosophy.

It reflects an understanding that an employee is not just an employee number on a payroll.

There is a family behind that employee.

There are children whose education may depend on that salary.

There may be a spouse who has built an entire life around that income.

And when that income disappears overnight because of an unexpected death, the emotional loss is already enormous. If the financial security disappears at the same moment, the family suffers twice.

This is why I find the philosophy behind such a policy so admirable.

And it also makes me think of Ratan Tata, whose leadership came to represent a very different idea of corporate success.

Ratan Tata reminded the corporate world that true leadership is not only about creating wealth, but also about caring for the people who helped create it.

Behind such a humane corporate philosophy, one cannot help but admire a leadership vision that recognises that a company can be measured not only by the wealth it creates, but also by the lives it cares for.

I am not writing this as an advertisement for Tata.

I am writing this because good things deserve to be recognised.

In a world where companies are often judged by revenue, profit, market capitalisation and shareholder returns, I believe we should also ask another question:

How does a company treat its people when they are at their most vulnerable?

That may tell us something far more important about the character of an organisation.

As far as my knowledge goes, I have not come across another private company anywhere in the world with a clearly documented policy quite like Tata Steel's approach of protecting a deceased employee's family through retirement age based on the employee's last drawn salary.

But I would genuinely be happy to be proved wrong.

If you know of another private company anywhere in the world that has a comparable policy, I would love to know about it.

Because this is not a competition between companies.

It is an appreciation of humanity in business.

Good companies should be recognised.

Good policies should be known.

And when a corporation chooses to protect the family of a person who can no longer contribute to the organisation, perhaps we should pause for a moment and say:

“That is what responsible business can look like.”

-Yozen Balki

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

தமிழும் அறநெறியும்: உலக இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழியின் தனித்துவப் பெருமை!

உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் தோன்றி, வளர்ந்து, மறைந்திருக்கின்றன. 

பெரும்பாலான பண்டைய மொழிகள் தங்களின் இலக்கியப் பயணத்தை அரசர்களின் போர்களைப் பாடுவதிலோ, கற்பனைக் கதைகளை உருவாக்குவதிலோ அல்லது ஏதோ ஒரு மதக் கோட்பாட்டைப் பரப்புவதிலோதான் தொடங்கின.



ஆனால், நம் "தமிழ் மொழி" மட்டும்தான் "மனித ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் அறம்" என்ற ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு, உலகிலேயே மிக அதிகமான தூய அறநூல்களையும், வாழ்வியல் சொலவடைகளையும் தந்த பெருமைக்குரியது!

உலக மொழிகளிலிருந்து தமிழ் அறநெறி எவ்வாறு வேறுபடுகிறது?

உலகப் புகழ்பெற்ற சமஸ்கிருதம், சீனம், அரபு, எபிரேயம் மற்றும் கிரேக்க மொழிகளிலும் நீதிப் போதனைகள் உள்ளன. ஆனால், அவற்றை உற்று நோக்கினால் இரண்டு முக்கியக் குறைபாடுகள் தெரியும்:

   1. அவை ராமாயணம், மகாபாரதம் அல்லது ஓடிசி போன்ற பெரும் காப்பியங்களுக்குள் ஒரு சிறிய பகுதியாக, கதைகளுக்கு நடுவே புதைந்து கிடக்கும்.

   2. அல்லது, ஏதோ ஒரு குறிப்பிட்ட கடவுள், மதம் சார்ந்த கட்டளைகளாக, "இதைச் செய்யாவிட்டால் நரகம் கிடைக்கும்" என்ற பயத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

ஆனால், தமிழ் அறநூல்களின் சிறப்பம்சமே, அவை கற்பனைக் கதைகளோ, மதச் சார்போ அற்ற தூய வாழ்வியல் வழிகாட்டிகள் ஆகும்! மனிதநேயத்தை மட்டுமே போதிக்கும் நம் தமிழ் நீதி நூல்கள், மனிதனை மனிதனாக வாழ வைக்கும் அற்புதக் கருவூலங்கள்.

தமிழின் எழுதப்பட்ட அறநூல் கருவூலங்கள் (The Written Treatises)
தமிழில் அறநூல்களுக்கென்றே "பதினெண்கீழ்க்கணக்கு" என்ற தனித்துவமான ஒரு இலக்கியப் பிரிவே உருவாக்கப்பட்டது. 

உலக இலக்கியங்களில் அறத்திற்காக மட்டுமே என்று பிரத்யேகமாக ஒரு பெரும் தொகுப்பு உருவாக்கப்பட்டது தமிழ் மொழியில் மட்டும்தான்.

உலகப் பொதுமறை திருக்குறள்:

 எந்தவொரு சாதி, மத, நாட்டு அடையாளமும் இன்றி, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நெறியை உரைத்ததால் இது 'உலகப் பொதுமறை' என்று அழைக்கப்படுகிறது.

நாலடியார் & நான்மணிக்கடிகை:

வாழ்க்கையின் நிலையாமை, கல்வியின் சிறப்பு, மற்றும் நற்பண்புகளை மிக எளிய உவமைகளால் விளக்குபவை.

மருத்துவ அறங்கள் (திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி): 

சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் மூலிகை வேர்கள் எப்படி உடற்பிணியைப் போக்குமோ, அதுபோல இப்பாடல்களின் கருத்துகள் மனிதனின் மனப்பிணியை (அறியாமையை) நீக்கும் என்ற மருத்துவ அடிப்படையில் எழுதப்பட்ட விசித்திரமான அற நூல்கள் இவை!

ஔவையாரின் அமுது

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நூல்கள், ஒரு குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை மிக எளிய தமிழில் அள்ளித் தருகின்றன.

இவை தவிர, உலகநீதி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், வெற்றிவேற்கை, நீதிவெண்பா எனப் பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல்களையும் சேர்த்தால், தமிழில் உள்ள தூய அறநூல்களின் எண்ணிக்கை 40-ஐத் தாண்டும்!

இந்த அளவுக்கு அதிகமான நீதி நூல்கள் உலகின் வேறு எந்த மொழியிலும் கிடையாது என்பதை தமிழர்கள் அழுத்தம் திருத்தமாக பெருமையுடன் கூற முடியும்!

நூல்களில் எழுதப்படாத பழமொழித் தமிழ்: 

கிராமத்து நாக்குகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான பழமொழிகள் (The Oral Tradition)
தமிழின் அறம் என்பது ஏட்டுக்கல்வியோடு மட்டும் நின்றுவிடவில்லை. படிக்காத பாமர மக்களும், கிராமத்துத் தாய்மார்களும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் "வாய்மொழிப் பழமொழிகள் மற்றும் சொலவடைகள்" தமிழின் ஆகச்சிறந்த அறப் பிரகடனங்கள் ஆகும்!

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வட்டார வழக்கிலும் (கொங்கு, நெல்லை, செட்டிநாடு, நாஞ்சில் தமிழ்) பல்லாயிரக்கணக்கான பழமொழிகள் காது வழியாகவே தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருகின்றன.

நம் கிராமத்துப் பழமொழிகளின் 3 தனித்துவச் சிறப்புகள்:

  1. அசாத்தியமான வாழ்வியல் தத்துவம்: 

"ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்" என்ற எளிமையான வரியில் மரணத்தின் தத்துவத்தையும், மனித மதிப்பின் உண்மையையும் பாமர மக்கள் கடத்திவிடுகிறார்கள்.

   2. எதுகை-மோனை நயம்: 

தமிழ்நாட்டுப் பழமொழிகள் சாதாரணமாகப் பேசும் போதே கவிதை நயத்துடன் (Rhyming) வரும். (உதாரணமாக: "ஆழ உழுதால் அதிக விளைச்சல்", "களவும் கற்று மற"). இதனால் படிப்பறிவில்லாத பாமர மக்களும் இதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது.

   3. பகுத்தறிவும் சுயமரியாதையும்:

 போலியான சடங்குகளையும், மனிதப் பேராசைகளையும் சாட்டையடி கொடுத்து உடைக்கும் பகுத்தறிவுப் பழமொழிகள் தமிழகக் கிராமங்களில் மிக அதிகம்.

உலக அரங்கில் தமிழின் உச்சம் (Conclusion):

ஆப்பிரிக்காவின் 'இக்போ' பழங்குடி மரபிலும், சீனாவின் கிராமப்புறங்களிலும் வாய்மொழிப் பழமொழிகள் அதிகம் உண்டு. ஆனால், எழுத்து வடிவம் பெற்ற 40-க்கும் மேற்பட்ட தூய அறநூல்களையும், அதே சமயம் கிராமங்களில் அழியாமல் வாழும் பல்லாயிரக்கணக்கான வாய்மொழிப் பழமொழிகளையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்ட ஒரே மொழி நம் தமிழ் மொழி மட்டும்தான்!

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உலகப் பொதுவுடைமையை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே பிரகடனப்படுத்திய மண் இது.

எனவே, 'அறம்' என்று வந்துவிட்டால் உலக மொழிகளின் வரிசையில் தமிழ் எப்போதும் தலைநிமிர்ந்து முதலிடத்தில் நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

எனது வேண்டுகோள்: ஒரு மனித இனம் சிறப்புற வாழ்வதற்கு வெறும் சோறு சம்பாதிக்கும் தொழிற்கல்வி (Career-Oriented Education) மட்டுமே போதாது.

மாந்த இனம் கைக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை என்று சுட்டிக்காட்டி, சிறுவயது முதற்கொண்டே குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாக உருவாக்கும் இது போன்ற நீதிநெறி மற்றும் அறம் சார்ந்த கல்வி முறை (Value-Based Education) உலக நாடுகள் அனைத்திலும் 50:50 என்ற சம விகிதத்தில் பாடத்திட்டங்களாகப் பின்பற்றப்பட வேண்டும்.

நமது அன்னைத் தமிழில் உள்ள அறநூல்கள் பிற மொழிகளில், முழுவதும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

அதுமட்டுமே இந்த உலக மக்களின் உண்மையான அமைதிக்கும் நிம்மதிக்கும் வழிவகுக்கும்!

-Yozen Balki 💢

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு யாருக்கு அதிகம்? அம்மாவா? அப்பாவா? 🤔

குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பின் விகிதம் என்ன? 

இயற்கையும் மனிதர்களும்:

நாம் வாழும் இந்த உலகத்தில் ஒரு உயிரைப் பெற்றெடுப்பதை விட, அதை வளர்த்து ஆளாக்குவதுதான் மிகப் பெரிய சவால். 


இயற்கையில் உள்ள பல்வேறு உயிரினங்கள் தங்களின் குட்டிகளை எப்படி வளர்க்கின்றன, அதில் ஆண்-பெண் பங்களிப்பு என்ன, மற்றும் மனிதர்களாகிய நம்மிடம் இந்த விகிதம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு சுவாரசியமான பார்வை இதோ!

1. விலங்குலகில் தாய்மையின் ஆதிக்கம் (90% - 100%)

பாலூட்டி இனங்களில் பெரும்பாலானவற்றில் குட்டிகளை வளர்க்கும் முழுப் பொறுப்பும் தாய்க்கே உரியது.

சிங்கம், யானை, கங்காரு: பெண் சிங்கங்கள் குட்டிகளுக்கு வேட்டையாடக் கற்றுக்கொடுத்து, பாதுகாத்து வளர்க்கின்றன. யானைக் கூட்டங்களில் அம்மா யானைகளே குட்டிகளை முழுமையாகப் பராமரிக்கின்றன.

இங்கெல்லாம் தந்தையின் பங்களிப்பு வெறும் 0% முதல் 10% வரை மட்டுமே இருக்கிறது.

 2. பறவைகளின் சமமான கூட்டுப்பொறுப்பு (50 : 50)

பறவையினங்கள் மனிதர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி. சுமார் 90% பறவைகளில் ஆணும் பெண்ணும் இணைந்தே வாழ்கின்றன.

காகங்கள், குருவிகள், பென்குயின்கள்: கூடு கட்டுவது, முட்டைகளை மாறி மாறி அடைகாப்பது, குஞ்சுகளுக்குத் தேடிச் சென்று உணவூட்டுவது என இருவருமே 50:50 என்ற விகிதத்தில் சமமாகப் பொறுப்பேற்கின்றன.

3. தந்தை மட்டுமே காக்கும் விசித்திரம் 
(0 : 100)

இயற்கை எப்போதும் ஆச்சரியங்கள் நிறைந்தது. சில உயிரினங்களில் அம்மாக்கள் முட்டையிட்டவுடன் சென்றுவிட, அப்பாக்களே முழுப் பொறுப்பையும் ஏற்கிறார்கள்.

கடல்குதிரை, எமு பறவை: ஆண் கடல்குதிரை தன் வயிற்றில் குட்டிகளைச் சுமந்து பிரசவிக்கிறது. ஆண் எமு பறவை பல வாரங்கள் பட்டினியாக இருந்து முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகளை வளர்க்கிறது.

 4. மனிதர்களின் நிலை என்ன? (மாறும் விகிதங்கள் - Variable %)

விலங்குகளைப் போல மனிதர்களுக்கு என்று நிலையான ஒரு விகிதம் இயற்கையாக அமையவில்லை. அது முழுக்க முழுக்க கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் தம்பதியரின் பரஸ்பர புரிதலைப் பொறுத்தே மாறுகிறது.


கடந்த காலம் (80 : 20): முந்தைய தலைமுறைகளில் 'ஆண் பொருள் ஈட்ட வேண்டும், பெண் குழந்தைகளையும் வீட்டையும் கவனிக்க வேண்டும்' என்ற கட்டமைப்பு இருந்தது. இதனால் தாயின் பங்களிப்பு 80% ஆகவும், தந்தையின் பங்களிப்பு 20% ஆகவும் இருந்தது.

நவீன காலம் (50 : 50 - சமப்பங்கு):

இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார் செய்வது, பாடம் சொல்லித்தருவது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என அனைத்திலும் 50:50 என்ற சமமான பங்களிப்பை நோக்கி நாடுகள் நகர்ந்து வருகின்றன.

ஆக, விலங்குலகில் உடல் அமைப்பும் இயற்கையும் பொறுப்பைத் தீர்மானிக்கிறது. ஆனால், மனித உலகில் அன்பும் பரஸ்பர புரிதலும் மட்டுமே பொறுப்பைத் தீர்மானிக்கிறது. 

ஒரு குழந்தைக்கு அம்மாவின் அரவணைப்பும் பாசமும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அப்பாவின் வழிகாட்டுதலும் பாதுகாப்பும் முக்கியம். எனவே, மனிதர்களில் இந்த விகிதம் எண்களைத் தாண்டி, இருமனங்களின் கூட்டு முயற்சியாக இருக்கும்போதே அந்தப் பிள்ளை மிகச்சிறந்த மனிதனாக வளரமுடியும்!

-Yozen Balki 💢 


புதன், 5 ஆகஸ்ட், 2026

நான் இன்னும் சிப்பிகள் பொறுக்கும் அதே குழந்தைதான்! 💖

நான் இன்னும் அதே குழந்தைதான்…

இந்தப் பிரபஞ்சம்
எனக்கு என்றுமே தீராத ஓர் ஆச்சரியம்.


அதன் கரையில்
சிப்பிகள் பொறுக்கும் குழந்தையைப் போல
வாழ்க்கையின் ஓரங்களில்
அலைந்து கொண்டிருக்கிறேன்.

எப்போதாவது ஒரு சிந்தனை கிடைக்கிறது
அது எனக்கொரு வண்ணச் சிப்பி.
எப்போதாவது ஒரு புரிதல் பிறக்கிறது,
அது என் கைகளில் எழுந்த
ஒரு சிறிய மணல் வீடு.

கிடைத்ததும் ஓடிவந்து காட்டுகிறேன்…
“இதோ பாருங்கள்…
எவ்வளவு அழகாக இருக்கிறது!”
அது அறிவைப் பறைசாற்றும் அகங்காரம் அல்ல;
அறிந்துவிட்டதாகச் சொல்லும் திமிரும் அல்ல.
கடலைக் கண்டுவிட்டதாக நான் சொல்லவில்லை;
கரையில் ஒரு சிப்பியைத்தான் கண்டெடுத்தேன்.

பிரபஞ்சத்தைப் புரிந்துகொண்டதாகச் சொல்லவில்லை;
அது எனக்குத் தந்த ஆச்சரியத்தைத்தான் பகிர்கிறேன்.
நாளை இன்னொரு அலை வரலாம்…
என் மணல் வீட்டைக் கலைத்துவிடலாம்.
இன்னொரு சிப்பி கிடைக்கலாம்…
இன்றைய சிப்பியைவிட அது அழகாக இருக்கலாம்.

அதையும் எடுத்துக்கொண்டு
மீண்டும் உங்களிடம் ஓடிவருவேன் —
“இதையும் பாருங்கள்…!” என்று.
ஏனெனில் எனக்குள் இருப்பது
அறிவாளியின் கர்வமல்ல…

கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை
எல்லோருக்கும் காட்டிவிடத் துடிக்கும்
ஒரு குழந்தையின் தீராத ஆச்சரியம்.

நான் இன்னும் அதே குழந்தைதான்.

-Yozen Balki 💞

Is There Such a Thing as an Ultimate Truth?


Truth is a word we use with remarkable certainty.

We say, “This is true,” or “That is false,” often without pausing to ask whether everything we call truth belongs to the same realm.
Some truths belong to the physical world, a world of things that can be observed, measured, tested, and verified.


An object has a form.
A distance can be measured.
A weight can be determined.
In such matters, people can often arrive at a common conclusion regardless of their personal beliefs.

But beyond this measurable world lies another realm 
the world of ideas.

It is the world of philosophy, beliefs, values, meanings, convictions, and interpretations.
Here, truth is no longer something we can simply place before us, measure with an instrument, or establish through physical evidence.

And it is in this world of ideas that the notion of “ultimate truth” becomes fascinating.

What one person sincerely believes to be true may be rejected as false by another.
And what the second person holds as truth may appear equally false to the first.
Their beliefs may arise from different experiences, different cultures, different knowledge, different reasoning, and different ways of understanding existence.
Think of a coin with two sides.

One person may stand firmly on one side of an idea, while another stands just as firmly on the other.
Each may call his own position truth and the other falsehood.
But perhaps what separates them is not truth and falsehood at all.

Perhaps they are simply two beliefs looking at the same question from different perspectives.
That is why I do not believe that, in the conceptual world, there can ever be one final truth that must be accepted by every human being, in every place and in every age.

And I am not saying that such an ultimate truth is merely difficult to find.
I am saying something more fundamental:
There is no ultimate truth in the world of ideas.

What we often call a conceptual truth may ultimately be a belief — a belief held so deeply, and with such conviction, that over time we begin to give it the name of truth.
In that sense,
Every conceptual truth may simply be a belief wearing the name of truth.
But there is something important I must acknowledge.

I do not claim that what I am saying here is the truth either.
This is only my present understanding.
Tomorrow, my knowledge may expand.
My experiences may change.
My reasoning may deepen.
My perspective may shift.

And when they do, this very belief of mine may change with them, or even disappear altogether.
After all, how small is a human being in this vast and immeasurable universe?
And I am smaller still 
a tiny firefly in an infinite expanse.

How then can I assume that my beliefs — shaped by my limited knowledge, experience, and understanding — represent an ultimate truth?
I cannot.

They are simply my beliefs, my present understanding of questions that may never submit themselves to physical proof or measurement.

So I choose to stand in a simpler and humbler place:
I do not possess the ultimate truth.
I possess only my present perspective.
Tomorrow’s knowledge may challenge it.
Tomorrow’s experience may reshape it.
A deeper understanding may overturn it entirely.

And I would always prefer to leave that door open.
Because the moment a belief declares itself to be the final truth, it closes the door to questioning, exploration, and further understanding.

So, after all these words, I return to where I began:

"There is no ultimate truth in the world of ideas —
not even this belief of mine."

-Yozen Balki 💞

"இறுதி உண்மை" என்று ஒன்று இருக்கிறதா?


உண்மை! 
இது மிகுந்த உறுதியுடன் நாம் பயன்படுத்தும் ஒரு சொல்.

“இது உண்மை”, “அது பொய்” என்று மிக எளிதாகச் சொல்லிவிடுகிறோம்.
ஆனால் நாம் உண்மை என்று அழைக்கும் அனைத்தும் ஒரே உலகத்தைச் சேர்ந்தவையா என்று பெரும்பாலும் நின்று யோசிப்பதில்லை.


சில உண்மைகள் பொருள் சார்ந்த உலகத்தைச் சேர்ந்தவை.
அவற்றைப் பார்க்கலாம்.
அளக்கலாம்.
சோதிக்கலாம்.
நிரூபிக்கலாம்.
ஒரு பொருளுக்கு ஒரு வடிவம் இருக்கிறது.
ஒரு தூரத்தை அளக்க முடியும்.
ஒரு பொருளின் எடையைத் தீர்மானிக்க முடியும்.
இத்தகைய விஷயங்களில், தனிப்பட்ட நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தாலும்கூட, மனிதர்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான முடிவுக்கு வர முடியும்.

ஆனால் இந்த அளவிடக்கூடிய உலகத்திற்கு அப்பால் இன்னொரு உலகம் இருக்கிறது, அது
கருத்துகளின் உலகம்.
அது தத்துவங்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள், அர்த்தங்கள், உறுதியான எண்ணங்கள், விளக்கங்கள் ஆகியவற்றால் ஆன உலகம்.
இங்கே உண்மை என்பது நம் முன்னால் எடுத்து வைத்து, ஓர் அளவுகோலால் அளந்து, பொருள் சார்ந்த ஆதாரங்களால் நிரூபித்துவிடக்கூடிய ஒன்றல்ல.

இந்தக் கருத்தியல் உலகிற்குள் நுழையும்போதுதான் “இறுதி உண்மை” என்ற எண்ணமே மிகவும் சுவாரசியமாகிறது.
ஒருவர் மனப்பூர்வமாக உண்மை என்று நம்புவதை இன்னொருவர் பொய் என்று நிராகரிக்கலாம்.
இரண்டாவது மனிதர் உண்மை என்று உறுதியாக நம்புவது, முதல் மனிதருக்குப் பொய்யாகத் தோன்றலாம்.
அவர்களுடைய நம்பிக்கைகள் வெவ்வேறு அனுபவங்களிலிருந்து வந்திருக்கலாம்.
வெவ்வேறு கலாசாரங்களிலிருந்து வந்திருக்கலாம்.
வெவ்வேறு அறிவு, சிந்தனை, தர்க்கம், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் விதம் ஆகியவற்றிலிருந்தும் உருவாகியிருக்கலாம்.

ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல.
ஒருவர் ஒரு கருத்தின் ஒரு பக்கத்தில் உறுதியாக நிற்கலாம். இன்னொருவர் அதன் மறுபக்கத்தில் அதே அளவு உறுதியாக நிற்கலாம்.
ஒவ்வொருவரும் தன்னுடைய நிலைப்பாட்டை “உண்மை” என்றும், மற்றவருடையதை “பொய்” என்றும் அழைக்கலாம்.
ஆனால் அவர்களைப் பிரிப்பது உண்மையும் பொய்யும்தானா?

ஒருவேளை அவை,
ஒரே கேள்வியை வெவ்வேறு பார்வைகளிலிருந்து அணுகும் இரண்டு நம்பிக்கைகள் மட்டுமே இருக்கலாம்.
அதனால்தான் கருத்தியல் உலகில், எல்லா மனிதர்களாலும், எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரே ஓர் இறுதியான உண்மை இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை.

அப்படிப்பட்ட ஓர் இறுதி உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம் என்று நான் சொல்லவில்லை.
அதைவிட அடிப்படையான ஒன்றைச் சொல்கிறேன்:

கருத்தியல் உலகில் இறுதி உண்மை என்று ஒன்று கிடையாது.

நாம் பல நேரங்களில் “கருத்தியல் உண்மை” என்று அழைப்பது, இறுதியில் ஒரு நம்பிக்கையாகவே இருக்கலாம்.
மிக ஆழமாகவும் மிகுந்த உறுதியுடனும் நாம் ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்போது, காலப்போக்கில் அந்த நம்பிக்கைக்கே “உண்மை” என்ற பெயரைச் சூட்டிவிடுகிறோம்.

அந்த வகையில் பார்த்தால்,
ஒவ்வொரு கருத்தியல் உண்மையும்,
“உண்மை” என்ற பெயரை அணிந்துகொண்ட ஒரு நம்பிக்கையாக இருக்கலாம்.
ஆனால் இங்கே நான் ஒப்புக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று இருக்கிறது.
நான் இங்கே சொல்வதுதான் உண்மை என்று நானும் கூறவில்லை.

இது இன்றைய என்னுடைய புரிதல் மட்டுமே.
நாளை என் அறிவு விரிவடையலாம்.
என் அனுபவங்கள் மாறலாம்.
என் சிந்தனை இன்னும் ஆழமடையலாம்.
என் பார்வையே மாறிவிடலாம்.
அப்படி மாறும்போது, இன்று நான் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கையும் மாறலாம்,
அல்லது முற்றிலுமாக மறைந்தே போகலாம்.

இந்த அளவிட முடியாத அகண்ட பெருவெளியில் மனிதன் எவ்வளவு சிறியவன்!
அதில் நானோ இன்னும் சிறியவன் —
இந்த அகண்ட பெருவெளியில் ஒரு சிறிய மின்மினிப்பூச்சி.

என்னுடைய வரையறுக்கப்பட்ட அறிவு, அனுபவம், புரிதல் ஆகியவற்றால் உருவான என் நம்பிக்கைகளையே “இறுதி உண்மை” என்று நான் எப்படி கருத முடியும்?
என்னால் முடியாது.
அவை என்னுடைய நம்பிக்கைகள் மட்டுமே.
பொருள் சார்ந்த ஆதாரங்களுக்கோ, அளவீடுகளுக்கோ ஒருபோதும் முழுமையாக உட்படாமல் போகக்கூடிய சில கேள்விகளைப் பற்றிய இன்றைய என்னுடைய புரிதல் மட்டுமே.

அதனால் நான் நிற்க விரும்பும் இடம் மிகவும் எளிமையானது; தாழ்மையானது:
என்னிடம் இறுதி உண்மை இல்லை.
என்னிடம் இருப்பது இன்றைய என் பார்வை மட்டுமே.
நாளைய அறிவு அதைச் சவாலுக்கு உட்படுத்தலாம்.
நாளைய அனுபவம் அதை மாற்றியமைக்கலாம்.
இன்னும் ஆழமான ஒரு புரிதல் அதை முற்றிலுமாகத் தகர்த்துவிடலாம்.
அந்தக் கதவை நான் எப்போதும் திறந்தே வைத்திருக்க விரும்புகிறேன்.


ஏனெனில் ஒரு நம்பிக்கை தன்னையே “இதுதான் இறுதி உண்மை” என்று அறிவித்துக்கொள்ளும் அந்த நொடியில்,
அது கேள்விகளுக்கான கதவை மூடுகிறது.
தேடலுக்கான கதவை மூடுகிறது.
மேலும் புரிந்துகொள்வதற்கான கதவையும் மூடுகிறது.

எனவே இவ்வளவும் சொல்லிவிட்டு, நான் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வருகிறேன்:

"கருத்தியல் உலகில் இறுதி உண்மை என்று ஒன்று கிடையாது 
என்னுடைய இந்த நம்பிக்கை உட்பட!"

-Yozen Balki 



சனி, 1 ஆகஸ்ட், 2026

கொடுப்பவர்கள் மற்றும் அனுபவிப்பவர்கள்: ஒரே வாழ்க்கையின் இரு அழகிய பாதைகள்

மனிதகுலத்தை இரண்டு தனித்துவமான ஆன்மாக்களாக அழகுற பிரிக்கலாம்.


ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான பார்வையின் மூலம் இந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதில் எந்தப் பாதையும் உயர்ந்ததும் அல்ல, தாழ்ந்ததும் அல்ல; எதையும் நாம் குறை சொல்ல முடியாது. இவை இரண்டுமே நமக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கான இரண்டு வெவ்வேறு வழிகள், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அவ்வளவே.

அமைதியான கொடுக்கும் குணம்
முதல் வகை மனிதர்கள்:

 "கொடுப்பதில்" தங்களின் வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண்கிறார்கள். இவர்கள்தான் படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் மற்றும் வழிகாட்டிகள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டின் வசதியைத் தேர்ந்தெடுத்து, புத்தகங்கள் எழுதுவதிலும், ஆன்லைன் மூலம் அறிவைப் பகிர்வதிலும், மற்றவர்களுக்காகப் பேசுவதிலும் தங்கள் நாட்களைக் கழிக்கிறார்கள். தாங்கள் வாழும் இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் சிறந்த இடமாக மாற்றுவதில்தான் அவர்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.

ஜானின் கதை:
ஜான் ஒரு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். அவர் தனது சிறிய சொந்த ஊரை விட்டு அரிதாகவே வெளியே சென்றவர். புத்தகங்கள் நிறைந்த ஒரு சிறிய அறையில் அமர்ந்து, உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்காக இலவச ஆன்லைன் தளம் ஒன்றை நடத்தி வந்தார். தினமும் மாணவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தார், மனநலம் குறித்த கட்டுரைகளை எழுதினார், இளம் எழுத்தாளர்களுக்கு உதவினார். 

ஜான் எந்த வெளிநாட்டு உணவுகளையும் சுவைத்ததில்லை, அவரிடம் பாஸ்போர்ட்டும் இல்லை. ஆனாலும், இந்தியாவில் உள்ள ஒரு சிறுமி தனது குறிப்புகளால் தேர்வில் தேர்ச்சி பெற்றாள் என்பதும், பிரேசிலில் உள்ள ஒரு சிறுவன் தன் வார்த்தைகளால் நம்பிக்கை பெற்றான் என்பதும் அவருக்குத் தெரியும். அந்த திருப்தியோடு ஒவ்வொரு இரவும் நிம்மதியாக உறங்கினார். அவரது அறை சிறியது, ஆனால் அவரது தாக்கம் உலகளாவியது.

உலகை உள்வாங்கும் அனுபவிக்கும் குணம்:

இரண்டாவது வகை மனிதர்கள் வாழ்க்கையை "அனுபவிப்பதிலும் உள்வாங்குவதிலும்" தங்களின் நோக்கத்தைக் காண்கிறார்கள். இவர்கள்தான் உலகை வலம் வரும் தேடலாளர்கள் மற்றும் பயணிகள். இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாகசமாகும். புதிய நாடுகளுக்குப் பயணம் செய்வது, விதவிதமான உணவுகளைச் சுவைப்பது, வெவ்வேறு கலாச்சாரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது இவர்களின் வழக்கம். அவர்கள் சுயநலத்திற்காக நினைவுகளைச் சேகரிப்பதில்லை; மாறாக, இந்த உலகத்தின் அழகின் மீதுள்ள பேரன்பினால் அதைச் செய்கிறார்கள்.

மாயாவின் கதை:

மாயா ஒரு பிரீலான்ஸ் புகைப்படக் கலைஞர். ஒரு சிறிய பையைத் தூக்கிக்கொண்டு உலகைச் சுற்றுபவர். டோக்கியோவின் பரபரப்பான வீதிகள் முதல் பாரிஸின் அமைதியான கஃபேக்கள் வரை அவர் பயணம் செய்துள்ளார். உள்ளூர் உணவுகளைச் சுவைக்கவும், தொலைதூரக் கிராமங்களில் உள்ள அந்நியர்களுடன் அமர்ந்து அவர்களின் வாழ்க்கை முறையைக் கற்றுக்கொள்ளவும் அவர் பணத்தைச் சேமித்தார். 

மாயா புத்தகங்கள் எழுதவில்லை, தொண்டு நிறுவனங்களையும் நடத்தவில்லை. ஆனால் தனது பயணங்களின் மூலம், அவர் மனிதர்களுக்கு இடையேயான எல்லைகளை உடைத்தார், மொழி தெரியாத அந்நியர்களைப் பார்த்துப் புன்னகைத்தார், மனித வாழ்க்கையின் பன்முகத்தன்மையைக் கொண்டாடினார். "உலகம் ஒரு புத்தகம், பயணம் செய்யாதவர்கள் அதில் ஒரே ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்" என்பதற்கு மாயாவின் வாழ்க்கையே சாட்சி.

முடிவுரை: இரு உலகங்களின் சமநிலை
இந்த இரண்டு வாழ்வியல் முறைகளையும் நாம் குறை சொல்லவோ, ஒப்பிடவோ முடியாது. 

ஏனெனில், இரண்டுமே மிக அழகிய நோக்கத்தைக் கொண்டவை. ஒன்று உலகிற்கு அறிவையும் ஆதரவையும் வழங்குகிறது; மற்றொன்று வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொண்டாட நமக்கு நினைவூட்டுகிறது. வழிகாட்டு நெறிகள் எழுதவும், ஆன்லைனில் உதவிக்கரம் நீட்டவும் நமக்கு 'ஜான்கள்' தேவை. 

அதே நேரத்தில், இயற்கையின் பிரம்மாண்டத்தை ரசிக்கவும், புதிய உலகைக் கண்டறிந்து கதைகளைக் கொண்டு வரவும் நமக்கு 'மாயாக்கள்' தேவை.

ஒருவர் தனது அமைதியான அறையிலிருந்தே உலகை வளம் கொழிக்கச் செய்கிறார்; மற்றொருவர் உலகைச் சுற்றி வந்து அதன் அழகை வாழ்கிறார். இரண்டுமே 'வாழ்க்கை' என்ற ஒரே நாணயத்தின் இரு அழகிய பக்கங்கள் தாம். இதில் உயர்வு தாழ்வு எதுவும் கிடையாது!

-Yozen Balki 

வெள்ளி, 31 ஜூலை, 2026

உளவியல் மாணவர்கள் நேரடியாக சிகிச்சை அமர்வுகளைப் பார்ப்பது சரியா?


மறுபரிசீலனை செய்ய வேண்டிய ஒரு கேள்வி இது!



கடந்த பல ஆண்டுகளாக, B.Sc. மற்றும் M.Sc. உளவியல் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் Internship-க்காக என்னை அணுகி வருகிறார்கள். அவர்களுடைய ஆர்வமும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாகமும் என்னை எப்போதும் மகிழ்ச்சியடையச் செய்கிறது.

ஆனால், அவர்கள் அடிக்கடி முன்வைக்கும் ஒரு கோரிக்கை உண்டு.

"சார், நீங்கள் உண்மையான உளவியல் கேஸ்களை எப்படி கையாளுகிறீர்கள் என்பதை நேரில் பார்க்க வேண்டும். கவுன்சிலிங் மற்றும் ஆழ்மன சிகிச்சையை நேரடியாகக் கவனிக்க வேண்டும்."

நான் அது சாத்தியமில்லை என்று கூறினால், பெரும்பாலும் அவர்கள் சொல்லும் பதில்:

"சார், எங்கள் கல்லூரியில் அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள்."

அவர்களுடைய நோக்கம் எனக்குப் புரிகிறது. புத்தகத்தில் படித்த அறிவுக்கும், நடைமுறை அனுபவத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப வேண்டும் என்பதே அவர்களுடைய ஆசை. அந்த ஆர்வம் மிகவும் அவசியமானது.

ஆனால், இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது.

அப்போது நான் அவர்களிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்பேன்.

"நீங்களே ஒரு கிளையண்ட் என்று நினைத்துப் பாருங்கள்."

கவலை, மனச்சோர்வு, குழந்தைப் பருவ மனக்காயம், உறவு சிக்கல்கள், பயம் அல்லது வேறு ஏதாவது ஆழமான உளவியல் பிரச்சனையால் நீண்ட நாட்கள் தவித்த பிறகு, ஒரு உளவியல் நிபுணரை நம்பி நீங்கள் சிகிச்சைக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த அறைக்குள் நுழைந்தவுடன், அங்கே ஒரு குழு உளவியல் மாணவர்கள் உங்களுடைய சிகிச்சையைப் பார்ப்பதற்காக அமர்ந்திருக்கிறார்கள்.

அப்போது...

உங்கள் மனத்தின் ஆழத்தில் இருக்கும் உண்மைகளை நீங்கள் சுதந்திரமாகச் சொல்வீர்களா?

யாரிடமும் இதுவரை பகிராத அனுபவங்களைப் பகிர்வீர்களா?

உணர்ச்சிவசப்பட்டு அழுவீர்களா?

பெரும்பாலானவர்களின் பதில் ஒன்றுதான்.

"இல்லை."

ஏனெனில், உளவியல் சிகிச்சை என்பது ஒரு வகுப்பறை செய்முறை அல்ல.

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் நடத்தும் மிக ரகசியமான உரையாடல்களில் அதுவும் ஒன்று.

நம்பிக்கையும், ரகசியத்தன்மையும் வெறும் தொழில்முறை நெறிமுறைகள் அல்ல; அவைதான் சிகிச்சையின் அடித்தளம்.

இந்த இடத்தில், உளவியல் கற்பிக்கும் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் நான் ஒரு பணிவான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.

உங்கள் Internship நடைமுறையில், மாணவர்கள் உண்மையான கிளையண்ட்களின் சிகிச்சை அமர்வுகளை நேரடியாகக் கவனிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், தயவுசெய்து அதை மறுபரிசீலனை செய்யுங்கள்.

அது நடைமுறையிலும் சாத்தியமில்லை.

அதைவிட முக்கியமாக, அது முழுமையாக நெறிமுறைகளுக்கும் பொருந்தாது.

சிகிச்சையின் நோக்கம் ஒரு மனிதரின் மனக் காயத்தை ஆற்றுவது; மாணவர்களுக்குக் காட்சி அளிப்பது அல்ல.

அதற்காக மாணவர்களுக்கு நடைமுறை அனுபவம் கிடைக்கக்கூடாது என்று நான் கூறவில்லை.

மாறாக, நான் கற்பிப்பதில் எப்போதும் மகிழ்ச்சியே அடைகிறேன்.

என்னிடம் வரும் மாணவர்களுடன் சிகிச்சை முறைகளைப் பற்றி விவாதிப்பேன். அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பேன். அடையாளம் தெரியாத வகையில் மாற்றப்பட்ட Case Histories-ஐ எடுத்துக்கூறுவேன். கவுன்சிலிங் அணுகுமுறைகளையும் விளக்குவேன்.

சில நேரங்களில், மாணவர்களின் சம்மதத்துடன், அவர்களிலேயே ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஒரு Demonstration Counselling Session நடத்தி காட்டியிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் ஆழ்மன சிகிச்சை முறைகளையும் விளக்கியிருக்கிறேன்.

ஆனால், அந்த Demonstration-களே எனக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுத்தன.

சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது, சில மாணவர்கள் தங்களை அறியாமலேயே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறார்கள்.

தங்கள் நண்பர்களிடமும் இதுவரை பகிராத தனிப்பட்ட அனுபவங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அமர்வு முடிந்த பிறகுதான், "என்னுடைய நண்பர்களுக்கே என் வாழ்க்கையின் பல ரகசியங்கள் தெரிந்துவிட்டதே!" என்று வருந்திய சம்பவங்களும் உண்டு.

அந்த அனுபவங்களே ஒரு பெரிய பாடமாக அமைந்தன.

மனித மனம் எவ்வளவு மென்மையானது, எவ்வளவு பாதுகாப்பு தேவைப்படுவது என்பதை அவை நமக்குக் கற்றுத் தருகின்றன.

நடைமுறைப் பயிற்சி அளிக்க பல நெறிமுறை சார்ந்த வழிகள் இருக்கின்றன.

அடையாளம் மறைக்கப்பட்ட Case Histories-ஐ விவாதிக்கலாம்.

சிகிச்சை முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை ஆராயலாம்.

Role Play, Simulation, Demonstration போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம்.

முழுமையான தகவலறிந்த சம்மதத்துடன் (Informed Consent), கல்வி நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்ட சில Audio அல்லது Video-களையும், ரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் வகையில் பயன்படுத்தலாம்.

இவை அனைத்தும் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்கும்.

அதே நேரத்தில், கிளையண்டின் தனியுரிமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும்.

மனித உடலும், மனித மனமும் ஒன்றல்ல.

ஒரு அறுவை சிகிச்சையின் போது பல மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் இருப்பார்கள். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு மருத்துவப் பொறுப்பு இருக்கிறது.

ஆனால், மனத்தின் ஆழத்தில் நடக்கும் சிகிச்சை முற்றிலும் வேறுபட்டது.

அங்கே ஒரு மனிதர் தனது வாழ்க்கையின் மிக ஆழமான உண்மைகளைத் திறந்து வைக்கிறார்.

பல அனுபவமிக்க உளவியல் நிபுணர்கள் அறிந்த ஒரு உண்மை என்னவென்றால், சில குழந்தைகளும், பதின்ம வயதினரும், தங்களுடைய பெற்றோர் அறையில் இருக்கும் வரை மனம் திறந்து பேசவே மாட்டார்கள். பெற்றோர் வெளியே சென்ற பிறகுதான் அவர்கள் உண்மையாகப் பேசத் தொடங்குவார்கள்.

அப்படிப்பட்ட புனிதமான இடம்தான் ஒரு Therapy Room.

அது வெறும் ஆலோசனை அறை அல்ல.

ஒரு மனிதனின் நம்பிக்கையால் கட்டப்பட்ட மன ஆலயம்.

ஒரு உளவியல் நிபுணராக, நமது முதல் பொறுப்பு மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது அல்ல.

தன்னுடைய வாழ்க்கையின் மிகவும் பலவீனமான தருணத்தில் நம்மை நம்பி வந்திருக்கும் அந்த மனிதரின் நம்பிக்கையைப் பாதுகாப்பதுதான்.

உளவியல் கல்வி மேலும் மேலும் வளர வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்.

ஆனால், அந்த வளர்ச்சி இரண்டு அடிப்படை மதிப்புகளை எப்போதும் இணைத்தே இருக்க வேண்டும்.

சிறந்த நடைமுறைப் பயிற்சி.

அசைக்க முடியாத கிளையண்ட் ரகசியத்தன்மை.

ஏனெனில், இறுதியில்...

"உண்மையான உளவியல் கல்வி, சிகிச்சையைப் பார்ப்பதில் தொடங்குவதில்லை; ஒரு கிளையண்டின் நம்பிக்கையைப் பாதுகாப்பதில்தான் தொடங்குகிறது."

-Yozen Balki 💢 


புதன், 29 ஜூலை, 2026

டிஜிட்டல் மூலம் திகில் வாழ்க்கை !!


டிஜிட்டல் யுகத்தில் மன அமைதிக்கான எளிய வழிகாட்டல்:

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நமது நிம்மதியை நாமே தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறோம். நம் கையில் இருக்கும் செல்ஃபோன் வழியாகத் திடீரென்று யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் நம் மனதைச் சங்கடப்படுத்தி விடுகிறார்கள். 


இத்தகைய டிஜிட்டல் இரைச்சல்களிலிருந்து தப்பித்து, நம் 'மனம்' என்கிற மாளிகையை எப்படிப் பூஞ்சோலையாக மாற்றுவது? 

இதோ நான் தொகுத்த சில எளிய, நடைமுறை வழிகள்:

1. டிஜிட்டல் நச்சு நீக்கம் (Digital Detox)
உடனுக்குடன் பார்க்காதீர்கள்: 

வரும் ஒவ்வொரு நோட்டிபிகேஷனையும், போனையும் உடனுக்குடன் பார்க்க வேண்டிய அவசியம் நமக்குக் கிடையாது. உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை மொபைல் ஃபோன்கள் திருட அனுமதிக்காதீர்கள்.

 காலை நேர அமைதி: காலையில் கண்விழித்த முதல் ஒரு மணி நேரம் மொபைல் திரையைப் பார்க்கவே கூடாது. அன்றைய நாளின் மகிழ்ச்சியை அந்த முதல் மணி நேரமே தீர்மானிக்கிறது. அதைத் தேவையற்ற வாட்ஸ்அப் செய்திகளால் நிரப்பக் கூடாது.

 அரசியல் மற்றும் வெறுப்புப் பேச்சுகள்: தேவையில்லாத அரசியல் கருத்துக்களைப் பார்ப்பதோ, பேசுவதோ நம் மனதை வெறுப்பு, கோபம் மற்றும் தேவையற்ற கவலையாக மாற்றிவிடும். சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறை விவாதங்களிலிருந்து விலகியிருங்கள்.

 எதிர் கருத்து பேசாதீர்கள்: எந்தவொரு சிறிய விஷயத்திற்கும் மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு மாற்றுக்கருத்து பேசி, வாதாடி நம்முடைய 'டென்ஷனை' நாமே ஏற்றிக் கொள்ளக் கூடாது. சில நேரங்களில் மௌனமே மன அமைதிக்கான சிறந்த மருந்து.

 கருத்துக்களைப் போட்டு அடைக்காதீர்கள்: நீண்ட நேரம் மொபைல் அல்லது டிவி போன்ற திரைகளைப் பார்ப்பதால், தேவையற்ற கருத்துக்கள் நம் மனமாளிகையை நிரப்பி விடுகின்றன. அங்கே நல்ல எண்ணங்கள் சுதந்திரமாகச் சுவாசிப்பதற்குக் கூட இடமில்லாமல் போய்விடுகிறது.

2. நிதானமும் நம்பிக்கையும் வளர்த்தல்
 வேகத்தைக் குறைப்போம்: இந்த உலகம் ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதற்காக நாமும் பதற்றத்துடன் ஓட வேண்டியதில்லை. நிதானமாக இயங்குவதும், நம்பிக்கையோடு வாழ்வதுமே வாழ்க்கையை அழகாக்கும்.

 பிடித்தவர்களுடன் சிரித்துப் பேசுங்கள்: உங்களுக்குப் பிடித்தமான மனிதர்களோடு மனமாறச் சிரித்துப் பேசுங்கள். நல்ல புத்தகங்களைப் படிப்பது மற்றும் மெல்லிய, இனிமையான பாடல்களைக் கேட்பது ஆன்மாவிற்குப் புத்துணர்ச்சி தரும்.

 நன்றியுணர்வுப் பயிற்சி: இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவதை விட்டுவிட்டு, நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு (உடல் ஆரோக்கியம், குடும்பம், உணவு) தினமும் இரவில் தூங்கும் முன் மனதார நன்றி கூறும் பழக்கம் எதிர்மறை எண்ணங்களை அழிக்கும்.

3. இயற்கையோடும் குடும்பத்தோடும் இணைவோம்

 வெறும் கால் நடைப்பயிற்சி: மாலை நேரங்களில் மொபைலை வீட்டில் வைத்துவிட்டு, அருகிலுள்ள பூங்கா அல்லது மொட்டை மாடியில் வெறும் கால்களுடன் நிதானமாக உலா வாருங்கள். அது உடலையும் மனதையும் பூமியோடு இணைக்கும் (Grounding).

 குடும்பத்தோடு ஒரு டின்னர்: இரவு நேர உணவின் போதாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தமர்ந்து, போன்களைத் தள்ளி வைத்துவிட்டு, அன்றைய நாளைப் பற்றிப் பேசி, சிரித்து மகிழுங்கள். இது உறவை பலப்படுத்தும்.

4. பயனுள்ள வாழ்க்கை வாழ்தல்
 இயற்கையோடு தொண்டு: நம் வீட்டில் செடி, கொடிகளை வளர்ப்பதோ அல்லது வாரத்தில் ஒரு மணி நேரமாவது பிறருக்கு/சமூகத்திற்குத் தொண்டு செய்வதோ நம் மனதில் எல்லையற்ற நிம்மதியை உருவாக்கும்.

 உலகிற்குப் பயனாகுங்கள்: நாம் வாழ்கிற இந்தச் சமூகத்திற்கும், இந்த உலகத்திற்கும் நம்மால் இயன்ற ஏதோ ஒரு வகையில் பயனுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதே மனிதப் பிறவியின் ஆகச்சிறந்த அர்த்தமாகும்.


முடிவுரை:
நம் மனமாளிகையைத் தேவையில்லாத குப்பைகளால் நிரப்பாமல், கொஞ்சம் காற்றோட்டமாக வைத்திருப்போம்.

நிம்மதி தானாகத் தேடி வரும்!

-Yozen Balki 💢

60+ உங்கள் பாதம் வலிக்கிறதா?

60+ மனிதர்கள் தங்கள் பாத வலிகளை குறைத்து 30+ போல இருக்க வழிகள் யாவை? 
அது போல கால்களை இளமையாக வைத்திருக்கும் மனிதர்கள் அல்லது சமூகங்கள் உலகில் உண்டா? அவர்கள் அதற்கு கையாளும் முறைகள் யாவை? 

60+ வயதினருக்கான பாத உடற்பயிற்சிகள்

பதில் 1:

60 வயதைக் கடந்தவர்களும் 30 வயது இளைஞர்களைப் போல துடிப்பான, ஆரோக்கியமான பாதங்களைப் பெற தினசரி முறையான உடற்பயிற்சி, சரியான காலணி தேர்வு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பழக்கவழக்கங்கள் அவசியம்.

வயதாகும்போது பாதங்களில் உள்ள கொழுப்புப் படலங்கள் தேய்மானம் அடைவது (Fat pad atrophy), வறட்சி மற்றும் இரத்த ஓட்டக் குறைபாடு ஆகியவற்றால் பாத வலி ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபடவும், உலகில் சில தனித்துவமான சமூகங்கள் தங்கள் கால்களை இளமையாக வைத்திருக்கப் பயன்படுத்தும் ரகசியங்களையும் கீழே காண்போம்.

60+ மனிதர்கள் பாத வலியைத் தடுத்து இளமையாக இருக்க வழிகள்:

• கணுக்கால் மற்றும் விரல் பயிற்சிகள்: நாற்காலியில் அமர்ந்து கொண்டு பாதங்களை வட்ட வடிவில் சுற்றுவது (Ankle rotations) மற்றும் கால் விரல்களால் தரையில் இருக்கும் துண்டை சுருட்டி எடுக்கும் பயிற்சிகள் (Toe curls) தசை வலிமையை அதிகரிக்கும்.

• முறையான மசாஜ் மற்றும் ஈரப்பதம்: குளித்த பிறகு பாதங்களில் மாய்ஸ்சரைசர் (Moisturizer) அல்லது விளக்கெண்ணெய்/தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலம் வறட்சி மற்றும் பித்தவெடிப்புகள் நீங்கும்.

• சுடுநீர் ஒத்தடம்: வாரத்திற்கு இருமுறை கல் உப்பு அல்லது எப்சம் உப்பு (Epsom salt) கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்தால் தசைப்பிடிப்புகள் மற்றும் வலிகள் உடனடியாகக் குறையும்.

• சரியான காலணிகள்: இறுக்கமான காலணிகளைத் தவிர்த்து, விரல்கள் தாராளமாக அசையும் படியான அகலமான (Wide-toe box), மென்மையான குஷனிங் கொண்ட செருப்புகளை அணிய வேண்டும்.

• இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்: அமர்ந்திருக்கும் போது கால்களை நீட்டி, விரல்களை அடிக்கடி அசைத்துக் கொடுக்க வேண்டும். கால்களைக் குறுக்காகப் போட்டு (Leg crossing) நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.
கால்களை இளமையாக வைத்திருக்கும் உலகளாவிய சமூகங்கள்:

சமூகம் / பகுதி அவர்கள் கையாளும் முக்கிய முறைகள் பாதங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
சர்தீனியா ஆயர்கள் (இத்தாலி Blue Zone) தினமும் செங்குத்தான மலைப்பகுதிகளில் 5 மைல்களுக்கு மேல் இயற்கையாக நடக்கிறார்கள். எலும்பு மற்றும் தசை நார்கள் பலமடைந்து மூட்டு வலி வராமல் தடுக்கிறது.

இண்டோனேசியாவின் 'படுய்' (Baduy Tribe) பழங்குடிகள் வாழ்நாள் முழுவதும் கடினமான பாறைகளிலும் வெறும் கால்களுடன் (Barefoot) வாழ்கிறார்கள். பாதத்தின் வளைவு (Arch) பலமாகி, தட்டையான பாதம் (Flat feet) உருவாவது தடுக்கப்படுகிறது.

இந்தியாவின் 'வெள்ளாகவி' கிராம மக்கள் தமிழ்நாட்டின் கொடைக்கானல் அருகே உள்ள இக்கிராம மக்கள் வழிபாட்டு முறைக்காகச் செருப்பு அணியாமல் வாழ்கிறார்கள். கரடுமுரடான பாதைகளில் வெறும் காலோடு நடப்பதால் பாதத்தின் நரம்புகள் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் சீராகிறது.

தரகுமாரா மனிதர்கள் (மெக்சிகோ) இவர்கள் மிக மெல்லிய செருப்புகளை (Minimalist sandals) அணிந்து கொண்டு நூற்றுக்கணக்கான மைல்கள் ஓடும் திறன் கொண்டவர்கள். குதிகால் வாதம் (Plantar Fasciitis) போன்ற நவீன காலணி பிரச்சனைகள் இவர்களுக்கு ஏற்படுவதில்லை.

அவர்கள் முறையிலிருந்து நாம் கற்க வேண்டியவை (Earthing / Grounding):
நவீன காலணிகள் பாதத்தின் இயற்கையான அமைப்பை மாற்றிவிடுகின்றன. 

இந்தச் சமூகங்களைப் போல, நாமும் தினமும் காலை அல்லது மாலை வேளையில் புற்கள், மணல் அல்லது மொட்டை மாடி தரையில் 15-20 நிமிடங்கள் வெறும் கால்களுடன் நடக்கலாம் (Barefoot walking). இது பாதத்தில் உள்ள 2,00,000-க்கும் மேற்பட்ட நரம்பு முனைகளைத் தூண்டி, உடலின் அழுத்தத்தைக் குறைத்து, தூக்கத்தை மேம்படுத்துவதோடு பாதங்களை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும்!


கேள்வி 2:
அப்படியானால் செருப்பு அணியும் நவீன முறைகள் மற்றும் கால்களுக்கு தரவேண்டிய இயக்கக் குறைபாடு இவையே 60+ மனிதர்களின் பாத வலிக்கு அதிகம் காரணம் என்று கொள்ளலாமா?

பதில் 2:
ஆம், நீங்கள் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நவீன காலணிகளின் தவறான வடிவமைப்பு மற்றும் போதிய இயக்கமின்மையே (Lack of movement) 60+ வயதினரின் பாத வலிக்கு மிக முக்கியமான இரண்டு காரணிகளாகும்.

நவீன வாழ்க்கை முறை மற்றும் காலணிகள் எவ்வாறு நம் பாதங்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன என்பதை விரிவாகவும் எளிமையாகவும் கீழே காண்போம்.

1. நவீன காலணிகளால் ஏற்படும் பாதிப்புகள் (The Shoe Trap)

• அகலம் குறைவான முன் பகுதி (Narrow Toe Box): பெரும்பாலான நவீன காலணிகளின் முன் பகுதி குறுகலாக இருக்கும். இது விரல்களை ஒன்ற ஒன்று நெருக்கும்படி செய்வதால், கட்டை விரல் வளைந்து வலிக்கும் பன்யன்ஸ் (Bunions) மற்றும் விரல் எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன.

• அதிகப்படியான குஷனிங் (Excessive Cushioning): செருப்புகளில் அதிக மெத்தை போன்ற அமைப்பு இருக்கும்போது, பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தசைநாண்கள் (Muscles and Tendons) வேலை செய்யாமல் சோம்பேறித்தனமாக மாறிவிடுகின்றன. இதனால் இயற்கையான வில் போன்ற அமைப்பு (Arch) பலவீனமடைகிறது.

• குதிகால் உயர்வு (Heel Drop): சாதாரண செருப்புகளில் கூட குதிகால் பகுதி சற்றே உயரமாக இருக்கும். இது உடலின் எடையை முன்னோக்கித் தள்ளி, கணுக்கால் மற்றும் முழங்கால்களில் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது.

2. இயக்கக் குறைபாடு மற்றும் நவீன தரை அமைப்புகள் (Movement Deficiency)

• தட்டையான தரைகள் (Flat Surfaces): நாம் எப்போதும் தட்டையான சிமெண்ட் அல்லது டைல்ஸ் தரையிலேயே நடக்கிறோம். இது பாதத்தில் உள்ள தசைகளுக்கு எவ்வித சவாலையும் தருவதில்லை. கரடுமுரடான இயற்கை தரையில் நடக்கும்போது மட்டுமே பாதத்தின் அனைத்து 26 எலும்புகளும், 30-க்கும் மேற்பட்ட மூட்டுகளும் முழுமையாக இயங்குகின்றன.

• தசைகளின் சுருக்கம் (Muscle Atrophy): வயதாகும்போது இயல்பாகவே தசைகளின் நிறை குறையும் (Sarcopenia). அதோடு கால்களுக்குப் போதிய வேலை தராமல் அமர்ந்தே இருக்கும்போது, பாதத்தை கணுக்காலோடு இணைக்கும் அகில்லெஸ் தசைநார் (Achilles Tendon) இறுக்கமடைந்து, காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் கடுமையான குதிகால் வலியை (Plantar Fasciitis) ஏற்படுத்துகிறது.

3. வயோதிகத்தின் இயற்கை மாற்றங்கள் (Biological Factors)
இயற்கை மாற்றம் அதனால் ஏற்படும் பாதிப்பு
கொழுப்புப் படலம் தேய்மானம் (Fat Pad Atrophy) பாதத்தின் அடியில் இயற்கையாக இருக்கும் கொழுப்பு மெத்தை தேய்வதால், எலும்புகள் நேரடியாகத் தரையில் மோதுவது போன்ற வலி ஏற்படும்.
வறண்ட தோல் (Dry Skin) ஈரப்பதம் குறைந்து தோல் தடிமனாவதால் பிത്തவெடிப்புகள் மற்றும் புண்கள் எளிதில் ஏற்படும்.

இதை சரிசெய்ய 60+ வயதினர் என்ன செய்ய வேண்டும்?

• அகலமான காலணிகள்: விரல்கள் தாராளமாக அசையக்கூடிய, தட்டையான (Zero-drop) மற்றும் முன்பகுதி அகலமான காலணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

• வீட்டுக்குள் வெறும் கால்: பாதுகாப்பான தரை அமைப்பைக் கொண்ட வீட்டுக்குள் செருப்பு அணியாமல் நடப்பது பாத தசைகளை மீண்டும் பலப்படுத்தும்.

• செயற்கை தடையற்ற இயக்கம்: நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஒரு டென்னிஸ் பந்து அல்லது சிறிய உருளைக் கட்டையின் மீது பாதங்களை வைத்து முன்னும் பின்னும் உருட்டி மசாஜ் செய்வது இயக்கக் குறைபாட்டை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

💢💢💢
 "புற்களில் வெறும் காலோடு நடப்பதால் பாதங்களின் நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன"
💢💢💢

தொகுப்பு:

Yozen Balki 

ஞாயிறு, 26 ஜூலை, 2026

கல்வெட்டுகளில் வாழும் வெண்காலூர்: பெங்களூரின் தமிழ் வேர்கள்!!




இன்று 'இந்தியாவின் சிலிக்கான் வேலி' என்றும், உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்தின் (IT) மையமாகவும் பிரகாசிக்கும் ஒரு உலகளாவிய நகரம் பெங்களூரு. ஐடி புரட்சிக்கு முன்பு, இது இதமான காலநிலையைக் கொண்ட 'ஓய்வு பெற்றவர்களின் சொர்க்கம்' (Pensioner's Paradise) என்றும், பசுமை சூழ்ந்த 'பூங்கா நகரம்' (Garden City) என்றும் அன்போடு அழைக்கப்பட்டது. 

ஆனால், இந்த நவீன மற்றும் பசுமையான முகங்களுக்குப் பின்னால், 800 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு ஆழமான தமிழ் வரலாற்றுப் பின்னணி இந்நகரத்திற்கு உண்டு என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை.

கல்வெட்டு ஆதாரங்களின்படி, இன்றைய பெங்களூரு அன்றைய காலத்தில் "வெங்காலூர்" அல்லது "வெண்காலூர்" என்ற தூய தமிழ்ப் பெயருடன் விளங்கியுள்ளது.

வரலாற்று மற்றும் மொழியியல் ரீதியாகப் பார்க்கும்போது, பெங்களூரு என்ற பெயரின் தோற்றம் இந்த நிலப்பரப்பில் செழித்து வளர்ந்த தாவரங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதே உண்மை. தமிழ் சொற்பிறப்பியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இப்பகுதியில் பழங்காலத்தில் 'வெண்காழ்' அல்லது 'வெண்காலி' மரம் (Button Tree - Anogeissus latifolia) எனப்படும் உள்பகுதி திண்ணிய வெண்மையான மரங்கள் மிக அதிகமாக வளர்ந்திருந்தன. இதனால் இப்பகுதி 'வெண்காலூர்' என்று அழைக்கப்பட்டது.

கருங்காலி மர வகை தான் இந்த வெங்காலி ஆகும். அக்கால மன்னர்களின் அரியாசனம் இந்த உறுதியான மரத்தால் உருவாக்கப்படும் வழமை இருந்ததாம்.

மற்றொரு கோட்பாட்டின்படி, இப்பகுதியில் செழித்து வளர்ந்த 'வேங்கை' மரங்கள் (Benga Tree) காரணமாக, தமிழ் உச்சரிப்பில் 'வெங்காலூர்' என்றும், அதுவே கன்னடத்தில் மருவி 'பெங்களூரு' (Benga-ooru) என்றும் மாறியிருக்கலாம் என அறியப்படுகிறது.

மடிவாலா கல்வெட்டு: அழியாத வரலாற்று சாட்சி:

பெங்களூருக்கு 'வெங்காலூர்' என்ற தமிழ் பெயர் இருந்தது என்பதற்கான மிக முக்கிய வரலாற்று ஆவணம், பெங்களூரின் மடிவாலா (Madiwala / BTM Layout அருகில்) பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பிரசன்ன பார்வதி சமேத ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவிலில் இன்றும் அழியாமல் அப்படியே உள்ளது.




நகரமயமாக்கலில் பெங்களூரின் பல நடுகற்களும் கல்வெட்டுகளும் கட்டிடங்களாக மாறி அழிந்துவிட்ட சூழலில், இக்கல்வெட்டு சோமேஸ்வரர் கோவில் வெளிப்புறச் சுவரின் (அதிட்டானம் எனப்படும் அடித்தளக் கற்களில்) செதுக்கப்பட்டிருந்ததால் பல நூற்றாண்டுகளாகப் பத்திரமாகத் தப்பியுள்ளது.

கி.பி 1247-ஆம் ஆண்டு ஹொய்சாள மன்னர் வீர ராமநாதன் ஆட்சிக் காலத்தில் செதுக்கப்பட்ட இக்கல்வெட்டில், இந்த ஊரின் பெயர் "வெங்காலூர்" (Vengalur) என்று மிகத் தெளிவாக, பழங்காலத் தமிழ் எழுத்து வடிவத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

 'தாமரைக்கீரை' (இன்றைய தாவரேகெரே) என்ற ஊரைச் சேர்ந்த கொடையாளி ஒருவர், இந்த ஈஸ்வரன் கோவிலில் வேதங்கள் ஓதுவதற்காக 'வெங்காலூர்' ஏரிப் பாசன நிலங்களைத் தானமாக வழங்கிய செய்தி இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு தற்போது வரலாற்று ஆர்வலர்களால் 3D டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

"செம்பராசுரம் உடைய நாயனார்" என்ற தூய தமிழ்ப் பெயரில் இருந்த ஈசன் இன்று சமஸ்கிருதமயமாக்கப்பட்டு 'சோமேஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படும் மடிவாலா கோவில், 
13-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில் "செம்பராசுரம் உடைய நாயனார்" என்ற தூய தமிழ்ப் பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளது. 

Wikipedia:
https://en.wikipedia.org/wiki/Old_Madiwala_Someshwara_Temple,_Bengaluru

சோழர் மற்றும் ஹொய்சாள காலத்தில் சிவபெருமானை 'நாயனார்' அல்லது 'உடையார்' என்று அழைக்கும் மரபு இருந்தது. (உதாரணமாக, தஞ்சைப் பெரிய கோவில் சிவபெருமானை அன்றைய கல்வெட்டுகளில் "ராஜராஜேச்சரம் உடையார்" என்றே குறிப்பிட்டனர்). 

'செம்பராசுரம்' என்பது அப்பகுதியின் பழமையான பெயராக இருக்கலாம் என்றும், அந்த நிலப்பரப்பிற்கு அதிபதியான இறைவன் என்பதால் 'செம்பராசுரம் உடைய நாயனார்' என்று பெயர் பெற்றார் என்றும் கல்வெட்டு வரிகள் உணர்த்துகின்றன.

மருவிப் போன தமிழ் ஊர்ப்பெயர்கள்:

மடிவாலா மட்டுமல்லாது, இன்று பெங்களூரின் மிக முக்கியப் பகுதிகளாக விளங்கும் பல இடங்கள், சோழர் காலத்துத் தமிழ் கல்வெட்டுகளில் தூய தமிழ்ப் பெயர்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. காலப்போக்கில் அவை கன்னட மொழி வடிவத்திற்கு மருவியுள்ளன:

   1. தொம்பலூர் (இன்றைய டொம்லூர் - Domlur): இங்குள்ள சொக்கநாதசுவாமி கோவில் கல்வெட்டுகளில் இப்பெயர் உள்ளது. 'தொம்பை' என்பது சிவ வழிபாட்டிற்குரிய ஒரு மலராகும். மலர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் பெற்றது. 

   2. தாமரைக்கீரை (இன்றைய தாவரேகெரே - Tavarekere): 'கீரை' அல்லது 'கெரே' என்பது ஏரியைக் குறிக்கும். தாமரை மலர்கள் நிறைந்த ஏரிப் பகுதி என்பதால் தூய தமிழில் தாமரைக்கீரை என அழைக்கப்பட்டது.

   3. இலைப்பாக்கம் (இன்றைய எலகங்கா - Yelahanka): கி.பி 1046-ஆம் ஆண்டு முதலாம் ராஜாதிராஜ சோழன் காலத்துத் தமிழ் கல்வெட்டில், இப்பகுதி 'இலைப்பாக்கம்' (நீர்நிலை சார்ந்த சிற்றூர்) என்று குறிக்கப்பட்டுள்ளது.

   4. நெற்குந்தி (இன்றைய தொட்டநெக்குந்தி - Doddanekundi): மாரத்தஹள்ளிக்கு அருகில் உள்ள இப்பகுதியில் கி.பி 1304-ஆம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு உள்ளது. நெல் விளைச்சல் மிகுந்த பகுதி என்பதால் 'நெற்குந்தி' எனப்பட்டு, இன்று தொட்டநெக்குந்தி ஆகியுள்ளது.

   5. வெப்பூர் (இன்றைய பேகூர் - Begur): வேப்ப மரங்கள் நிறைந்த ஊர் என்பதால் 'வெப்பூர்' என்று தமிழில் அழைக்கப்பட்டு, பின்னாளில் கன்னட உச்சரிப்பில் 'பேகூர்' என்று மாறியது.

   6. அலசூர் (இன்றைய ஹலசூரு / உல்சூர் - Halasuru / Ulsoor): பலாப்பழங்கள் (அலசு) அதிகம் விளைந்த பகுதி என்பதால் தமிழில் அலசூர் என அழைக்கப்பட்டது.

நவீன பெங்களூரின் பன்முகத்தன்மை (1950 - 1960)
பெங்களூரின் இந்தத் தமிழ் வரலாற்றுத் தொடர்பு இடைக்காலத்தோடு நின்றுவிடவில்லை. நவீன இந்தியாவின் உருவாக்கத்திலும் இது தொடர்ந்தது. குறிப்பாக, 1950 மற்றும் 1960-களின் காலகட்டத்தில், இந்திய மத்திய அரசு HAL, BEL, ITI போன்ற பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனங்களை (PSUs) பெங்களூரில் அமைத்தபோது, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகத் தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு குடிபெயர்ந்தனர்.

அதற்கும் முன்பே பிரிட்டிஷ் காலத்து 'கண்டோன்மென்ட்' (Cantonment) பகுதியிலும் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்ந்தனர். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு பெங்களூரு புதிய மைசூர் மாநிலத்தின் (பின்னாளில் கர்நாககா) தலைநகராக மாறுவதற்கு முன்பே, இது தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழி பேசும் தென்னிந்திய மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒரு பன்முகத்தன்மை (Cosmopolitan) கொண்ட நகரமாகவே பரிணமித்தது.

பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 1500 வரலாற்றுச் சாசனக் கல்வெட்டுகளில், மூன்றில் ஒரு பங்கு (500-க்கும் மேற்பட்டவை) தமிழ் மொழியிலும் தமிழ்ப் பெயர்களிலுமே அமைந்துள்ளன என்பது வியப்பிற்குரிய வரலாற்றுச் சான்றாகும். 

இன்று வானளாவிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்களின் நடுவே, அதிநவீன மெட்ரோ ரயில்களின் சத்தத்திற்கு இடையே பரபரப்பாக இயங்கும் பெங்களூரின் ஒவ்வொரு மண்ணின் அடிநாதத்திலும், "வெண்காலூர்" மற்றும் "செம்பராசுரம் உடைய நாயனார்" போன்ற தூய தமிழ்ப் பெயர்களும், நம் முன்னோர்களின் வரலாற்றுச் சுவடுகளும் ஆழப் புதைந்துள்ளன. 

மொழி எல்லைகளைக் கடந்து, பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் இந்த வரலாற்றுப் பிணைப்பை உணர்ந்து போற்றுவது இன்றைய தலைமுறையின் கடமையாகும்.

Yozen Balki
.....

வெங்காலூர் கல்வெட்டை நீங்கள் நேரில் பார்க்க வேண்டுமா?

பெங்களூரின் இந்த 800 முதல் 900 ஆண்டுக்கால தமிழ் வரலாற்றுச் சாட்சியை நீங்களும் நேரில் சென்று பார்க்க விரும்பினால், அதற்கான எளிய வழிகாட்டுதல் இதோ:

அமைவிடம்: பெங்களூரின் மடிவாலா (Old Madiwala / BTM Layout 1st Stage அருகில்) பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பிரசன்ன பார்வதி சமேத ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில் அதாவது அந்த காலத்தில் அது "செம்பராசுரம் உடைய நாயனார் திருக்கோவில்" ஆகும்.

செல்லும் வழி: மடிவாலா சந்தைக்கு (Madiwala Market) மிக அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.

 கூகுள் மேப்ஸில் (Google Maps) "Old Madiwala Someshwara Temple" என்று தேடினால் எளிதாகச் சென்றடையலாம்.

துல்லியமான இடம்: கோவில் கருவறையைச் சுற்றி வரும் வெளிப்புறப் பிரகாரத்தில் (Pradakshina Path), சுவரின் அடிப்பகுதியில் (அதிட்டானக் கற்களில்) இந்தத் தமிழ் வரிகள் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளன.

பார்க்க வேண்டிய நேரம்: காலை அல்லது மாலை வேளையில் சென்றால் சூரிய ஒளி சாய்வாக விழுந்து, கல்வெட்டு எழுத்துக்களின் பள்ளங்கள் மிகத் தெளிவாகக் கண்ணுக்குத் தெரியும்.

உதவிக்கு: கோவிலில் இருக்கும் அர்ச்சகர்கள் அல்லது உள்ளூர் வரலாற்று ஆர்வலர்களிடம் "தமிழ் கல்வெட்டு" (Tamil Inscription) என்று கேட்டால், அவர்கள் அந்த இடத்தை உங்களுக்குத் துல்லியமாகக் காண்பிப்பார்கள்.

-Yozen Balki 

வெள்ளி, 24 ஜூலை, 2026

சாதித்துக் காட்டிய நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள்: மீஷோவின் (Meesho) நெகிழ்ச்சியான கதை!


இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் மலிவான விலையில் பொருட்களைக் கொண்டு சேர்க்கும்
ஒரு ஆப் தான் இந்த 'மீஷோ' (Meesho).



பெரிய பிராண்டுகள் மற்றும் கோடீஸ்வரர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்த இ-காமர்ஸ் சந்தையில்,
ஏழை எளிய சிறு வியாபாரிகளுக்காக
ஒரு பெரிய புரட்சியையே இது செய்துள்ளது.

இதற்குப் பின்னால் இருக்கும் இரண்டு
இளைஞர்களின் உழைப்பு நம்மை நெகிழ வைக்கிறது.

யார் இந்த இளைஞர்கள்?

விதித் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பர்ன்வால்
(Vidit Aatrey, Sanjeev Barnwal)
ஆகிய இருவர்தான் இந்த மீஷோவின் நிறுவனர்கள்.

இவர்கள் இருவரும் ஒன்றும் பரம்பரை கோடீஸ்வரர்களோ,
பெரிய தொழிலதிபர்களின் பிள்ளைகளோ அல்லர்.

நம்மைக் போன்ற மிகச் சாதாரண நடுத்தரக் குடும்பப் பிள்ளைகள்!
விதித் ஆத்ரேவின் தந்தை டெல்லியில் உள்ள குடிநீர் வாரியத்தில் (Delhi Jal Board) பணிபுரிந்த ஒரு சாதாரண அரசு ஊழியர் ஆவார்.
டெல்லியில் ஒரு சிறிய 2-BHK அரசு குடியிருப்பில்தான் விதித் தனது சிறுவயதைக் கழித்தார்.
மற்றொரு நிறுவனரான சஞ்சீவ் பர்ன்வால், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரைச் சேர்ந்த மிகவும் எளிய பின்னணியைக் கொண்டவர்.

ஏழைகளுக்கான ஒரு உன்னத லட்சியம்
தங்கள் கடின உழைப்பால் படித்து, இந்தியாவின் மிக உயரிய ஐஐடி டெல்லியில் (IIT Delhi)
இடம்பிடித்த போதுதான் இருவரும் நண்பர்களாயினர்.

படிப்பு முடிந்ததும் வெளிநாட்டு நிறுவனங்களில்
லட்சக்கணக்கில் சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், இந்தியாவின் ஏழை எளிய மனிதர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தனர்.
இந்தியாவில் உள்ள சிறு குறு தொழிலாளர்களும்,
இல்லத்தரசிகளும் முதலீடே இல்லாமல்
எப்படிச் சம்பாதிக்கலாம் என்று யோசித்தனர்.

விளைவு, 2015-ல் உருவானதுதான் 'மீஷோ'.

0% கமிஷன் - வியாபாரிகளின் தோழன்:

பெரிய அமேசான், ஃபிளப்கார்ட் நிறுவனங்கள்
விற்பனையாளர்களிடம் பெரும் கமிஷன் வாங்கியபோது, மீஷோ "0% கமிஷன்" என்ற கொள்கையை அறிவித்தது.

"பொருட்கள் தயாரிக்கும் ஏழை எளிய தொழிலாளர்களிடம் இருந்து ஒரு பைசா கூட கமிஷன் வாங்கக் கூடாது"
என்பதில் இவர்கள் இன்றுவரை உறுதியாக இருக்கிறார்கள்.

ஒரு எளிய நெசவாளர் அல்லது தையல் கலைஞர் தங்கள் பொருளை விற்க மீஷோ ஒரு பைசா கூட கமிஷனாகப் பறிப்பதில்லை.


சொந்த வாழ்க்கையில் நடுத்தரக் குடும்பத்தின் பொருளாதாரச் சவால்களைப் பார்த்ததால்தான்,
அவர்களால் இந்த எளிய மனிதர்களுக்கான
வணிக மாதிரியை உருவாக்க முடிந்தது.
இன்று இந்தியாவின் நம்பர்-2 ஷாப்பிங் ஆப்பாக மீஷோ வளர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு இந்த இரு இளைஞர்களின் உன்னத லட்சியமே காரணம். 

வறுமையும், எளிய பின்னணியும் ஒருபோதும் சாதனைக்குத் தடையல்ல என்பதற்கு இந்த இரு இந்திய இளைஞர்களே ஆகச்சிறந்த உதாரணம்!

-Yozen Balki 

🐕 Some Friends Are Like Dogs... Some Are Like Cats.

Not all friendships are the same.

Some people stay with you because they genuinely care.
Others stay only while it benefits them.
A loyal friend stands beside you during difficult times.




















Sometimes, they even sacrifice their own comfort to help you.
That is true loyalty.

On the other hand, some friendships are built on convenience.
They smile when life is easy.
They disappear when life becomes difficult.
The difference is not always obvious.

It takes time...
Experience...
And wisdom.

Life teaches us that loyalty is much rarer than companionship.
Many people may walk beside you.
Only a few will stand behind you.
Value those who remain when you have nothing to offer.

Never take genuine loyalty for granted.
At the same time, don't be angry with those who leave.
They simply reveal who they are.
The greatest wisdom in life...
...is knowing the difference.

- Yozen Balki

🌿 This article uses the dog and cat as a symbolic metaphor to illustrate different styles of friendship, not as a judgment about either animal.

நிஹாங் சீக்கிய போர் வீரர்கள்!!

தற்போது நடந்து வரும் டெல்லி நீட் எதிர்ப்பு மாணவர்கள் போராட்டத்தில் நாம் காண்கிற நீல நிற உடை அணிந்த சீக்கிய சிப்பாய்கள் பற்றி ஒரு செய்தி:

அவர்கள் "நிஹாங் சீக்கிய போர் வீரர்கள்" என்று சொல்லப்படுகிறார்கள். இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் குரு கோவிந்த சிங் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு படைப்பிரிவினர் ஆவர். 


இப்போதும் அவர்கள் தினசரி உடற்பயிற்சி சண்டை பயிற்சி வாள் பயிற்சி குதிரை ஏற்றம் மல்யுத்தம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்களது பாரம்பரிய உடைகள் மற்றும் ஆயுதங்களுடன் நடமாட சட்டப்படி உரிமை பெற்றவர்கள்.

கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு ஒரு பெரிய சுத்தியல் கொண்டு துல்லியமாக தேங்காய்களை உடைத்தல் இவர்களது சிறப்பு. 
ஆனால் அத்தகைய தேங்காய்கள் படுத்திருக்கும் சில சீக்கிய வீரர்களை சுற்றி, அவர்களது உடலுக்கு அருகில் வைத்திருப்பார்கள். அந்த மிகப்பெரிய சுத்தியல் அவர்கள் உடல் மீது விழுந்தால் அவர்கள் அந்த இடத்திலேயே மரணிப்பது நிச்சயம்!! பார்ப்போர்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் இந்த கலை மிகவும் அபாயமானது. 

ஆண்டு கணக்கில் பயிற்சிகள் செய்து கை கொள்ளப்படும் இத்தகு திறமைகள் நம் இந்தியாவின் தவிர அநேகமாக வேறு நாடுகளில் கிடையாது.

இவ்வாறு கண்களைக் கட்டிக் கொண்டு தேங்காய்களை உடைப்பது முற்றிலும் தீவிரமான தற்காப்புக் கலைப் பயிற்சி (Muscle Memory) மற்றும் துல்லியமான கணக்கீடுகளின் மூலமே சாத்தியமாகிறது. இதில் ஏமாற்று வேலைகளோ அல்லது மாயாஜால 'ட்ரிக்ஸ்'களோ எதுவும் இல்லை. 

சீக்கியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான கட்கா (Gatka) மற்றும் சாஸ்திர வித்தைகளில் (Shastar Vidiya) தேர்ச்சி பெற்ற

 [Baba Jujhar Singh Gatka Group]

(https://www.youtube.com/watch?v=OEaxQfT9qgQ) 

போன்ற நிஹாங் சீக்கிய வீரர்கள் இத்தகைய ஆபத்தான சாகசங்களைச் செய்கின்றனர். இது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதற்கான பின்னணி இதோ: 

1. தசை நினைவாற்றல் (Muscle Memory) மற்றும் தூரக் கணக்கீடு

தரையில் படுத்திருக்கும் நபரின் உடலமைப்பு மற்றும் தேங்காய்கள் வைக்கப்பட்டுள்ள தூரத்தை, கண்களைக் கட்டுவதற்கு முன்பே அடிக்கும் வீரர் துல்லியமாகக் கணித்து மனதில் பதித்துக் கொள்வார்.

பல வருடங்களாகத் தொடர்ந்து ஒரே மாதிரியான சுத்தியல் அல்லது ஆயுதங்களை ஏந்திப் பயிற்சி செய்வதால், கையை எவ்வளவு தூரம் உயர்த்த வேண்டும், எந்தக் கோணத்தில் இறக்க வேண்டும் என்பது அவர்களின் தசை நினைவாற்றலில் (Muscle Memory) தானாகவே பதிந்துவிடுகிறது. 

2. ஒலி மற்றும் இடஞ்சார்ந்த விழிப்புணர்வு (Spatial Awareness)

கண்களைக் கட்டியிருந்தாலும், காதுகளின் வழியே சுற்றியுள்ள ஒலிகளையும், தங்களுக்கு முன்னால் உள்ள இடைவெளியையும் (Spatial awareness) அவர்கள் துல்லியமாக உணர்கிறார்கள்.

சுத்தியலைத் தரையில் தட்டிப் பார்ப்பதன் மூலமும் அல்லது அருகில் உள்ளவர்களின் அசைவுகளைக் கொண்டும் தங்களின் நிலையை உறுதி செய்து கொள்கிறார்கள். [6] 

3. அசைவற்ற நிலை மற்றும் அசாத்தியமான நம்பிக்கை

தரையில் படுத்திருக்கும் நபர்கள் சற்றும் அசையாமல், சிலையைப் போலக் கிடக்க வேண்டும். அவர்கள் லேசாக அசைந்தாலும் பெரும் விபத்து நேரிடலாம்.

சுத்தியலால் அடிக்கும் வீரரின் திறமை மீது படுத்திருப்பவருக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் (Trust), இருவருக்குள்ளும் இருக்கும் மிகச்சரியான ஒருங்கிணைப்பும் (Coordination) இந்த சாகசத்திற்கு மிக முக்கியம். 

4. துணிச்சலும் மன ஒருமைப்பாடும் (Meditation & Focus)

கட்கா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது ஆன்மீகம் மற்றும் மன ஒருமைப்பாடு (Focus) சார்ந்த ஒரு கலை வடிவமாகும்.

நிஹாங் சீக்கியர்கள் தங்களின் தியானம் மற்றும் தீவிர மனக் கட்டுப்பாட்டின் மூலமாக அச்சத்தை வென்று, முழு கவனத்துடன் இலக்கைத் தாக்குகிறார்கள்.

கண்களைக் கட்டியபடி தேங்காய் உடைப்பது, வாள் மூலம் பழங்களை வெட்டுவது போன்ற சாகசங்கள் பல ஆண்டுகால கடுமையான, ஆபத்தான பயிற்சிகளுக்குப் பின்னரே மேடைகளில் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. முறையான தற்காப்புக் கலைப் பயிற்சி இல்லாமல் இவற்றை எக்காரணம் கொண்டும் வீட்டில் எவரும் முயற்சிக்கக் கூடாது.

💢💢💢💢

வியாழன், 16 ஜூலை, 2026

உங்க ஊர் கோயில் சொத்துக்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

சில நாட்களுக்கு முன்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு ஒரு பக்தர் 1888 ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்த (கோயிலுக்கு அருகில் உள்ள) சுமார் 1.40 ஏக்கர் பரப்பளவு உள்ள கோயிலுக்கு சொந்தமாக்கி விட்ட நிலத்தை சில பேர் போலி பத்திரம் தயாரித்து விற்பது, வாங்குவது போல ஒரு போலி ரெஜிஸ்ட்ரேஷன் நடந்து விட்டது. 


அதுவும் வெறும் 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது போல அதற்குரிய பத்திரங்கள் வாங்கி அந்த பழனி ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிசுக்கு ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக ரெஜிஸ்டரார் வந்து கையெழுத்து போடுகிறான். அவன் பெயர் ஜஸ்டிஸ் மணிகண்டன் என்கிறார்கள். ஏற்கனவே அங்க ரிஜிஸ்டரார் ஆக பணியில் இருக்கிறவர் மிரட்டப்பட்டோ அல்லது தந்திரமாகவோ லீவு எடுத்துகிட்டு போயிடுறாரு. 

இந்த ரிஜிஸ்டார்களுக்கெல்லாம் ஒரு தலைமையாக சசிகலா என்ற ஒரு பெண்மணி இதுக்கு கையெழுத்து போடுகிறார். 

எனக்கு என்ன கேள்வி என்றால் பக்தர்கள் நம்பிக்கையோடு தமிழ்நாடு முழுவதும் உள்ள பற்பல கோயில்களுக்கு எழுதிக் கொடுக்கிற நிலங்களை, நகைகளை, பணத்தை பாதுகாக்க வேண்டிய கோயில் நிர்வாகங்கள், பதிவுத்துறை, மற்றும் நீதிமன்றங்கள் எப்படி இதுபோல ஆளாளுக்கு பொறுப்பில்லாமல் இருக்கின்றன? 

அதுவுமில்லாமல் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கீழே மட்டும் கிட்டத்தட்ட 44,000 கோயில்கள் இருக்கின்றன. அந்த கோயில்களுக்கு பக்தர்கள் எந்தெந்த ஊர்களில் என்னென்ன நிலங்களை எழுதிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை! 

சென்னையைச் சேர்ந்த ஒருவர் கும்பகோணம் கோயிலில் ஏதோ ஒன்று வேண்டிக் கொண்டு அது நடந்து விட்டால் சென்னையில் இருக்கிற ஒரு வீட்டை அந்த கோயில் மீது எழுதி விடுவார். இப்போது கும்பகோணம் ஊரு பேரு தெரியாத ஒரு சிறிய கோயிலுக்கு சென்னையில் ஒரு சொத்து இருக்கிறது. இதுபோல நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒருவர் வேலூரில் ஒரு சிறிய கோயிலில் வேண்டிக்கொள்கிறார். ஏதோ நல்ல விஷயம் நடக்கிறது. அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர். அந்த கோயிலுக்கு அவர் கள்ளக்குறிச்சியில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை எழுதி வைக்கிறார். 
இப்போது, வேலூர் கோவிலுக்கு கள்ளக்குறிச்சியில் இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. 

இப்படி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போ இந்த 44 ஆயிரம் கோயில்களுக்கு வெவ்வேறு ஊர்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருக்கும்! இது இல்லாமல் அறநிலையத்துறை கீழே வராத இன்னும் பல்லாயிரம் சின்ன சின்ன கோயில்கள் உள்ளன.
அந்த சொத்துக்கள் கதி எல்லாம் யாருக்கு தெரியும்?

ஆக, சாதாரண மக்கள் பக்தி சிரத்தையோடு கொடுத்த சிறிய கோவில் சொத்துகள் நில மாஃபியாக்களின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதில் பொதுமக்கள் நாம் தான் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். ஒரு விழிப்புணர்வுள்ள குடிமகனாக, உங்கள் பகுதியில் உள்ள சிறிய கோவில் சொத்துகளைப் பாதுகாக்கப் பொதுமக்கள் தரப்பில் எடுக்க வேண்டிய மிக முக்கியமான 5 வித சட்டப்பூர்வ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ:

 1. கோவில் நிலத்தின் 22-A தடைப் பட்டியலைச் சரிபார்த்தல் (Online Check)
தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnreginet.gov.in) பிரிவு 22-A (Prohibited Properties) என்ற தடை செய்யப்பட்ட சொத்துகளின் பட்டியல் உள்ளது.

* பொதுமக்கள் அனைவரும் இணைந்து, உங்கள் பகுதி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தின் சர்வே எண்கள் (Survey Numbers) இந்தத் தடைப் பட்டியலில் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும்.

* இதில் ஏறிவிட்டால், எந்தவொரு சார்-பதிவாளரும் அந்த நிலத்தைத் தனியாருக்குப் பதிவு செய்ய முடியாது. ஒருவேளை விடுபட்டிருந்தால், உடனடியாகக் கோவில் நிர்வாகம் மூலம் மனு அளிக்க வேண்டும்.

2. 'தர்ம சாசன' ஆவணங்களைப் புதுப்பித்து டிஜிட்டல் மயமாக்கல்
அந்தக் காலத்தில் தாத்தாக்கள் எழுதி வைத்த தர்ம சாசனம், பட்டா அல்லது உயில் நகல்கள் கிராமத்துப் பெரியவர்களிடம் அல்லது பூசாரிகளிடம் சாதாரண காகித வடிவில் இருக்கும்.

* அவற்றை உடனடியாகத் தகுந்த சட்ட வல்லுநர்கள் மூலம் சரிபார்த்து, நகல் எடுத்து, டிஜிட்டல் மயமாக்கி (Scan செய்து Computer-ல் சேமித்தல்) பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

* ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய உள்ளூர் வட்டாட்சியர் (Tahsildar) அலுவலகத்தில் அதன் தற்போதைய நிலவரப்படி 'சிட்டா மற்றும் அடங்கல்' நகல்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3. 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' (RTI) மூலம் சொத்து விவரங்களைக் கேளுங்கள்!

கோவில் நிலம் யார் ஆக்கிரமிப்பில் இருக்கிறது அல்லது அதன் தற்போதைய சட்டப்பூர்வ நிலை என்ன என்பது உள்ளூர் மக்களுக்குத் தெரியாமல் இருந்தால்...

* பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் RTI (Right to Information Act) மூலம் இந்து சமய அறநிலையத்துறை அல்லது உள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்து, "இந்தக் குறிப்பிட்ட கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் எத்தனை ஏக்கர்? அதன் சர்வே எண்கள் என்ன? அது தற்போது யார் வசம் உள்ளது?" என்ற அதிகாரப்பூர்வமான சான்றளிக்கப்பட்ட விவரங்களைக் கேட்டுப் பெறலாம். இதுவே நில மாஃபியாக்களுக்கு ஒரு பெரிய பயத்தை ஏற்படுத்தும்.

4. நிலத்தைச் சுற்றி எல்லைக் கற்கள் மற்றும் 'கோவில் சொத்து' போர்டு நடுதல்
சட்டம் ஒருபுறம் இருந்தாலும், நிலத்தின் மீது எதார்த்தமான உரிமை (Physical Possession) நம்மிடம் இருக்க வேண்டும்.

கிராம மக்கள் அல்லது கோவில் வழிபாட்டுக் குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, கோவில் நிலத்தைச் சுற்றி முறைப்படி எல்லைக் கற்கள் (Boundary Stones) நட வேண்டும்.

"இந்த நிலம் இன்னாருக்குச் சொந்தமான திருக்கோவிலுக்குப் பாத்தியப்பட்டது. இதில் அத்துமீறி நுழைபவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பெரிய அறிவிப்புப் பலகையை (Board) நிலத்தின் மையப்பகுதியில் நட்டு வைக்க வேண்டும்.

5. உள்ளூர் 'ஆக்கிரமிப்பு தடுப்புக் குழு' (Vigilance Committee) அமைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை இணைத்து ஒரு சிறிய வாட்ஸ்அப் குழு அல்லது "கோவில் சொத்து பாதுகாப்புக் குழு" அமைக்கலாமே!

இந்த நிலத்தின் மீது ஏதேனும் மர்ம நபர்கள் வந்து சர்வே செய்கிறார்களா, அல்லது வேலி அமைக்க முயல்கிறார்களா என்பதை வாரம் ஒருமுறை கண்காணித்து வரவேண்டும்.

ஏதேனும் அத்துமீறல் தெரிந்தால், உடனடியாக உள்ளூர் காவல் நிலையம் மற்றும் அறநிலையத்துறைக்குக் கூட்டுப் புகார் (Joint Petition) அனுப்ப வேண்டும்.

பொதுமக்களாகிய நாம் கொடுக்கும் இந்த தொடர் அழுத்தமும், விழிப்புணர்வும் தான் நம் முன்னோர்கள் இறைவனுக்காகக் கொடுத்த சொத்துகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் உண்மையான அரணாக இருக்கும்.

Yozen Balki 🌿

16 July 2026
------------------------------
நேற்று நடந்த பழனி கோவில் நில மோசடி விவகாரத்திற்கு வருவோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நாளை (ஜூலை 17, 2026) காலையுடன் முடிகிறது.

நாளை காலை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள், சிபிசிஐடி-யின் ஆதாரங்கள் மற்றும் புதிய கைது நடவடிக்கைகள் குறித்து நானும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
........