Translate this blog to any language

திங்கள், 25 மே, 2009

இட்லர்-ராஜ-பக்ஷி ஒரு போர்க் குற்றவாளி!

இலங்கைப் பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் சபை தனது கைகளில் எடுத்து வைத்துக்கொண்டுள்ளது.
இது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு சற்று ஆறுதல் தரும் நிகழ்வாகும். 17 நாடுகளின் ஆதரவுடன் நாளை அதாவது 26.5.2009 அன்று இன்றைய இட்லர் 'ராசபக்ஷி' (Raja'butcher) இன் கொடுங்கோல் செயல்களை இனப் படுகொலைகளை வன்மையாக கண்டனம் செய்து 'போர்-குற்றவாளியாக' அவனை அறிவிக்க தீர்மானம் செய்து இருக்கிறார்கள்.
ஆனால், அந்தக் கொடியவனுக்கு ஆதரவாக களமிறங்கி ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்யப் போவது யார் தெரியுமா? கம்யூனிசம் பேசும் சீனா, ரஷ்யா ...அப்புறம் என்ன "சோனியாவின்- ஹிந்தியா" இவர்களுக்கு ஜால்ரா போடும் வேறு சில சில்லறை நாடுகள்.
தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம் இந்த ஹிந்தியர்களுக்கு?
வெள்ளைக்காரன் நல்லவன் ஆகிவிட்டான்.
பிரிட்டன் தனது வரலாற்றுக் கரையை துடைத்துக்கொள்ள தயார் ஆகிவிட்டது. மேற்கு உலக நாடுகள் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து சிங்களர்களால் நசுக்கப் படுவதை அறிந்து கொண்டு விட்டன. தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கையின் ஆளும் வர்க்கம் எந்த நாளிலும் மதித்து நடந்தது கிடையாது. இனியும் அது தமிழர்களை மதிக்கப் போவதில்லை.
இனிமேல் அங்கு
என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க-அய்ரோப்ப்பியா நாடுகளின் தலையீட்டில் ஐ-நா மூலம் அங்கு ஒரு
சுதந்திர தனி நாடு அல்லது சம-உரிமை படைத்த சுயநிர்ணய தனி-மாநிலம் ஒரு சில மாதங்களில் அமைத்து தரப் படும்.
உலகத்தமிழர்களை நெகிழ்ச்சி கொள்ளத் தக்க அந்த நிகழ்வு மேற்கு நாட்டு மக்களுக்கும் அங்கு வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமான பாசப் பிணைப்பை மேலும் அதிகரிக்கும். மேலும் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் உட்பட உலகில் வாழும் பத்து கோடி தமிழர்களுக்கும் ஒரு பெரும் உள்ளக் கிளர்ச்சியை அது ஏற்படுத்தும்.
தமிழர்களின் நியாயமான அந்த உரிமைகளை பெற்றுத் தந்த நாடுகளின் மீது அன்பும், அதற்க்கு எதிராக செயல் பட்ட நாடுகள் மீது வெறுப்பும், குறிப்பாக "ஹிந்தியா" மீது....வெறுப்பும் கோபமும் ஏற்படப் போவது காலத்தின் கட்டாயம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: