வானத்தில் இருப்பதாக
கருதப் படுகிற
தேவர்களைப் பற்றி
பேசுவதைக் காட்டிலும்
நான்
பூமியில் வாழ்கிற
மனிதர்களைப் பற்றி பேசுவதையே
பெரிதும் விரும்புகிறேன்!
ஏன் என்றால்
நான்
பூமியில் பிறந்த
மனிதன்!
- மோகன் பால்கி
இது உளஇயல் கலைஞன் யோஜென் பால்கியின் வலைப் பூந்தோட்டம்: A Chennai Psychologist
Translate this blog to any language
ஞாயிறு, 12 அக்டோபர், 2008
Me - A son of this Soil ! நான் பூமியில் பிறந்த மனிதன்!

வெள்ளி, 10 அக்டோபர், 2008
Time - Shore "காலக் கடற்கரை"

கிளிஞ்சல்கள் திரட்டி
மணல் வீடு கட்டி
வண்ணப் பட்டம்
பறக்க விடுகின்ற
அறியாச் சிறுசுகள்!
கிளிஞ்சல்கள் பொறுக்கி
கைப்பொருள் செய்யவும்
'சிறுவீடு ' கட்டி
'பட்டங்கள்' தரவும்
முனைந்து நிற்கும்
மெய்ஞான பெருசுகள்!
வாழ்வின் அடிநாதம்
வார்த்தைகளில் இல்லை!
வண்ண - வடிவ
அரு - உருவில் இல்லை!
வாழ்க்கை என்பது
வாழ்ந்தவன் அனுபவம்!
விரி பிரபஞ்சம்
விளக்கமானது - விளக்கமற்றது!
காலநதியின்
கணக்கறு மணலாய்
கோடி சூரியன்
மின்னி மறைந்தன!
எண்ணறு புத்தர்கள்
இனியும் வருவர்!
விளக்க முடியாததை....
விளக்க முற்படும்....
விளங்காச் சிறுவராய் !!
- மோகன் பால்கி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)