வாழ்வு ஒரு ஞானாசிரியன்!
அது
நூலகங்களில்
அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற
ஏராளமான புத்தகங்கள்
கற்றுத் தருவதைக் காட்டிலும்
அதிகமானதை
நமக்குக் கற்றுத் தருகிறது!
ஆயினும்
வாழ்வின் படிப்பினைகளை
நாம் நம்பத் தயாரில்லை!
மேலும்
உண்மைகளை விட
நாம் பொய்களையே
அதிகம் நேசிக்கிறோம் !
ஏனெனில்
பொய்மை எப்போதுமே
அழகு மிக்கது போன்றும்
நம்பிக்கையூட்டுவது போன்றும்
தோற்றம் அளிக்கிறது !
- மோகன் பால்கி
Translate this blog to any language
செவ்வாய், 14 அக்டோபர், 2008
Life - The Great Master ! வாழ்வு ஒரு ஞானாசிரியன் !
இடுகையிட்டது
Yozen Balki - (Mohan Balakrishna), YoZen Mind Counseling Psychologist, VIP Mentor, T. Nagar, Chennai, India.
கருத்துகள் இல்லை:


ஞாயிறு, 12 அக்டோபர், 2008
முதலில் சரியான வாழ்வு!
என்னைக் கேட்டால்
கடவுள் தியானம் வாழ்வு
என்கிற வரிசையில்
நான்
வாழ்வுக்கே முன்னுரிமை தருவேன்!
ஏன் எனில்
சரியான வாழ்வு
வாழ்ந்தவொரு மனிதனுக்கே
சரியான தியானம் கை கூடுகிறது!
சரியான தியானம் கை கூடிய பின்னர்
அவனே 'சத்-சித்-ஆனந்த' இறைவனை
சதா சர்வ காலமும்
உணர்கிறான்!
ஆக
முதலில் சரியான வாழ்வு
இரண்டாவதாக சரியான தியானம்
மூன்றாவதாகவே
'கடவுளை உணர்தல்'
நிகழ்கிறது!
- மோகன் பால்கி
கடவுள் தியானம் வாழ்வு
என்கிற வரிசையில்
நான்
வாழ்வுக்கே முன்னுரிமை தருவேன்!
ஏன் எனில்
சரியான வாழ்வு
வாழ்ந்தவொரு மனிதனுக்கே
சரியான தியானம் கை கூடுகிறது!
சரியான தியானம் கை கூடிய பின்னர்
அவனே 'சத்-சித்-ஆனந்த' இறைவனை
சதா சர்வ காலமும்
உணர்கிறான்!
ஆக
முதலில் சரியான வாழ்வு
இரண்டாவதாக சரியான தியானம்
மூன்றாவதாகவே
'கடவுளை உணர்தல்'
நிகழ்கிறது!
- மோகன் பால்கி
இடுகையிட்டது
Yozen Balki - (Mohan Balakrishna), YoZen Mind Counseling Psychologist, VIP Mentor, T. Nagar, Chennai, India.
கருத்துகள் இல்லை:


இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)