Translate this blog to any language

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

"நாங்கள் இந்தியர்களில்லை"- மனுஷ்யபுத்திரன் கவிதை


எங்களுக்கு இந்தி தெரியாது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் வடக்கத்தி தெய்வங்களை
வணங்குவதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்களது குழந்தைகள்
காய்ந்த சப்பாத்தியை
உப்பைத்தொட்டுக்கொண்டு
பள்ளியில் சத்துணவு சாப்பிடுவதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் கிராமங்களுக்கு
எப்போதோ மின்சாரம் வந்துவிட்டது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

மாட்டு மாமிசம் உண்பவர்களை
இங்கே யாரும் அடித்துக்கொல்ல முடியாது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் காந்தியை 
கொலை செய்யவில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் மதக்கலவரங்களில்
கர்ப்பிணிகளின் வயிற்றிலிருந்த சிசுவை
கீறி எடுத்ததில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் பெண்கள் அனைவரும் படிக்கிறார்கள்
எங்கள் ஆண்கள் அனைவரும் படிக்கிறார்கள்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்களிடம் தொழிற்சாலைகள் இருக்கின்றன
எங்கள் நிலங்கள் தரிசாகக் கிடப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் ஊர்கள் அனைத்தும் 
சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன
பேருந்துகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

இறந்த உடலை சுமந்துகொண்டு
இங்கே யாரும் முப்பது மைல்
நடக்க வேண்டியதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் பெயர்களுக்குப்பின்னே
சாதிப்பெயர்கள் இல்லை
சாதிப்பெயரைச் சொல்லி 
யாரும்அழைத்தால் 
நாங்கள் செருப்பால் அடிப்போம்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

வேலையே இல்லாவிட்டாலும்
நாங்கள் பட்டினியாக இருக்கவேண்டியதில்லை
ரேஷன் அரிசியை சமைத்துத்தின்றுவிட்டு
தன்மானத்துடன் அரசியல் பேசிக்கொண்டிருப்போம்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் மருத்துவம் படிக்கிறோம்
கணிப்பொறி படிக்கிறோம்
ஆங்கிலம் படிக்கிறோம்
பல்லாயிரம் மைல் கடந்து
உலகெங்கும் திரவியம் தேடிச் செல்கிறோம்
எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு
வடக்கு நோக்கி கூலித்தொழிலாளிகளாய்
எங்கள் இளைஞர்கள் செல்வதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் குழந்தைகள் 
ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறப்பதில்லை
எங்கள் பெண்கள் பிரசவத்தில் இறப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் தெய்வ நம்பிக்கைகள் தனி
எங்கள் சித்தாந்தங்கள் தனி
இரண்டையும் நாங்கள் ஒருபோதும் கலப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

வடக்கே ஒரு இந்தியா இருக்கிறது
அது இருண்ட இந்தியா
அதில் நாங்கள் ஒருபோதும்
குடிமக்களாக இருந்ததில்லை

தெற்கே ஒரு இந்தியா இருக்கிறது
அது இரவிலும் சூரியன் உதிக்கும் இந்தியா
அதை அவர்களால்
ஒரு போதும் புரிந்துகொள்ளவியலாது

11.8.2020
காலை 9.54
மனுஷ்ய புத்திரன்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை NEP ஒரு குலக்கல்வித் திட்டமே!

*📌 5+3+3+4*


*📌 இது ஏதோ கூட்டல் கணக்கு அல்ல நம் எதிர்கால ஏழை சந்ததிகளின் கல்வியை பறிக்கும் குலக்கல்வி கணக்கு.*


*📍 புதிய கல்விக் கொள்கை 2020.*📍


*Pre kg*
*LKG*
*UKG*
*1st*
*2nd*


*📌 மொத்தம் 5 வருட தொடக்கக் கல்வி.*


*3rd*
*4th*
*5th*


*📌 பிறகு நாடு முழுவதும் 5 -ம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு.*


*6th*
*7th*
*8th*


*📌 பிறகு நாடு முழுவதும் 8 -ம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு.*


*9th*
*10th*
*11th*
*12th*


*📌 இவற்றில் 10, 11,12 ஆண்டுதோறும் ஒரு பொதுத்தேர்வு.*


*📌 இத்தனை பொதுத்தேர்வுகளையும் தாண்டினால்தான் கல்லூரிக்குள் நுழைய முடியும்.*


*📌 கல்லூரிக்குள் நுழையவே ஒரு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்..*


*📌 18 வயதுவரை உள்ள அனைவரும் குழந்தைகள்தான்.*


*📌 12-ம் வகுப்பு மாணவன் 17 வயதுக்குள் இத்தனை தேர்வுகளை எழுதிதான் கல்லூரிக்குள் நுழைய முடியுமா?..வேண்டுமா???...*


*📌 நம் நாடு ஏழைகளை மட்டுமே கொண்ட ஒரு நாடு.*


*📌 இங்கே மூன்று வேளையில் ஒரு வேளை உணவு சாப்பிடாமல் தூங்கும் குடும்பங்கள்தான் அதிகம்.*


*📌 அவர்களின் குழந்தைகளை படிக்க பள்ளிக்கு அனுப்புவதே தங்கள் குழந்தைக்கு மதிய உணவு கிடைக்கும் என்றுதான்.*


*📌 அப்படிப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து ஊக்கப்படுத்த இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகம், இலவச லேப்டாப், இலவச சைக்கிள், இலவச செருப்பு,இலவச பஸ்பாஸ் என்று ஏறாலமாக கொடுத்ததுதான் நம் திராவிடம் கடந்த 50 வருடங்களாக கல்விக் கொள்கையில் சாதனைகள் செய்து வருகின்றன.*


*📌 அதைத்தான் தற்போது மாற்ற முயற்சிக்கின்றார்கள்.*


*📌 தங்கள் குழந்தைகள் தங்களை போன்றுஅல்லாமல்...*


*📌 படித்து பெரிய டாக்டராகவோ, கலெக்டராகவோ, வக்கீலாகவோ ஆக வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவு.*


*📌 நிற்க!!.*


*📌 8-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடையும் ஒரு ஏழை மாணவன் தன் சக நண்பர்களால் கேலி செய்யப்பட்டால் அவன் மீண்டும் பள்ளிக்கு வராமல் போகலாம்.*


*📌 இருமுறைக்கு மேல் தோல்வியடைந்தால் பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல் தாங்கள் என்ன தொழில் செய்கின்றனரோ அதே வேளையை பார்க்க அழைத்துச் செல்வார்கள்.*


*📌 உதாரணமாக முடி வெட்டுபவரின் மகன் சலூன் கடைக்கு சென்று முடிவெட்ட கற்றுக் கொள்வான். பிறகு அந்த வயதில் கொஞ்சம் காசு பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.*


*📍 அதன் பிறகு அந்த குழந்தை படிப்பதை நிறுத்திவிடும். இதற்கு பெயர்தான் குலக்கல்வி என்று பெயர்.*📍


*📌 நம் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகள் சூத்திர பஞ்சமர்களே!!*


*📌 அவர்களின் குழந்தையின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டால்...*


*📌 பிறகு கல்லூரிக்குச் செல்ல ஆள் இருக்க மாட்டார்கள்...*


*📌 அல்லது போட்டியாளர்கள் குறைக்கப்படுவார்கள்.*


*📌 இதன் மூலம் பணக்கார வர்க்கத்தின் உயர்சாதியினர் மட்டுமே படிக்க வாய்ப்புக் கிடைக்கும்.*




*📌 ஏற்கனவே கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் ஏழைகள் இனி கல்வி கற்கவே முடியாத நிலை ஏற்படும்.*


*📌 தரத்தை கூட்டுகின்றேன் என்று போட்டியாளர்களை குறைப்பதே அவர்களின் நோக்கம்..*


*📌 கற்கை நன்றே!..*
*கற்கை நன்றே!!..*
*பிச்சை புகினும் கற்கை நன்றே!!..*
*என்ற வார்த்தைகள் இனிவரும் காலங்களில் காணாமல் போகலாம்.*


*📌 ஏனெனில் இனிமேல் பிச்சையெடுத்தெல்லாம் கல்வி கட்டணம் நம் நாட்டில் செலுத்த முடியாது..*


*📍 ஏழையா பொறந்த உனக்கெதுக்குடா படிப்பு என்று அரசே கேள்வி கேட்பதுபோல் உள்ளது.!!*📍


*📌 எனக்கு ஐந்தாம் வகுப்புவரை ABCDEF யை தவிர ஆங்கிலத்தில் எதுவும் படிக்க தெரியாது.*


*📌 ஆனால்..*


*📌 பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.*


*📌 இன்று போல் ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதியிருந்தால்??....*


*📌 அன்றே என் பள்ளிப்படிப்பு முடிந்திருந்தாலும் முடிந்திருக்கலாம்.*


*📌 இதை ஏன் கூறுகின்றேன் என்றால் ஒரு குழந்தை 5 ம் வகுப்பில் படிக்காதது 8 ம் வகுப்பிலிருந்து நன்றாக படிக்கும் 8 ம் வகுப்பில் படிக்காத குழந்தை பத்தாம் வகுப்பில் நன்றாக படிக்கும்....*


*📌 எனவே...*


*📌 அவர்களை பிஞ்சிலேயே கல்வி கொள்கை( கொள்ளை ) என்ற பெயரில் கசக்கி பிழிவது சரியல்ல!!..*


*📌 அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே உள்ளது போல் 10,12 ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தினால் போதும்.*

எவரோ ஒரு நண்பர் வாட்ஸ் அப்பில் அருமையாக எழுதி இருந்தார்! அது இதுதான்!

YozenBalki

செவ்வாய், 23 ஜூன், 2020

ஆற்றோடு கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போனால்...!!


சென்னை என்றாலே இப்பொழுது பிற மாவட்டத்தை/மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பயப்படுகிறார்கள்; சென்னையை தூற்றி வேறு பேசுகிறார்கள்!

காரணம்... சென்னையில்தான் அதிக தொற்று என்று புள்ளிவிவரங்கள் காட்டப்படுகின்றன!

சென்னையை விட பலவகையிலும் நகர கட்டமைப்பு, மருத்துவ கட்டமைப்பு, கல்வி வேலைவாய்ப்பு வசதிகள், மற்றும் நாகரீகம் குறைந்த வடநாட்டு நகரங்களை விட சென்னையில் அதிக நோய்த்தொற்று இருக்கிறது என்கிறார்கள், இதை நம்ப முடிகிறதா? 

சரி அது அப்படியே இருப்பதாக நம்புவோம்! 
இங்கு இருப்பவர்கள் நூற்றுக்கு 80%-90% தமிழகத்தின் பிற  மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்! அப்புறம் எப்படி சென்னை மக்கள் மீது பழி போடுகிறீர்கள்?
சென்னை மக்கள் வானத்தில் இருந்தா குதித்தார்கள்?

சரி! அப்படிப்பட்ட சென்னையில் இன்று வசிப்பவர்களில் சென்னையைப் பூர்வீகமாக கொண்டவர்கள் எத்தனை சதவீதம்! 
இங்கு பத்தில் எட்டு பேர் முதல் ஒன்பது பேர் வரை பிற மாவட்டங்களிலிருந்து பிற மாநிலங்களிலிருந்து வந்து சேர்ந்தவர்கள்; சென்னையை பிறப்பிடமாகக் கொள்ளாதவர்கள்!
எல்லோரையும் வரவழைத்து வாழ்வு தந்தது, நாளைக்கும் வாழ்வு தர இருப்பது சென்னை எனும் அன்னை தான்! 

நீங்கள் மிகப்பெரிய அரசியல் தலைவராக இருக்கலாம்! நீங்கள் மிகப் பெரிய சினிமா நடிகராக இருக்கலாம்! வந்து சேர்ந்த உங்களில் 99% பேருக்கு சோறு போட்டது சென்னை!

அதை மறந்து விடாமல் சென்னை மீது ஒரு நன்றி உணர்ச்சியோடு பேசுங்கள்! 

வள்ளுவர் எழுதிய செய்நன்றி அறிதல் எனும் அதிகாரத்தை ஒருமுறையாவது படிக்கவும்!

நீங்கள் சென்னைக்கு வராவிட்டால்...
Ha! Ha! Ha!
"ஆற்றோடு கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போனால்..."
யாருக்கு நட்டம் ஆகி விடும்?

உண்மையில், நீங்கள் நகர்ந்து நின்றால் கொஞ்சம் காற்று வரும்!

டாட்!!

YozenBalki
Senior Psychologist
😍😍🙏🙏

ஞாயிறு, 21 ஜூன், 2020

ஒரே காற்றில் மனித மீன்கள்!

சிரிப்பாய் இருக்கிறது
ரொம்பவே சிரிப்பாய்
இருக்கிறது!

தெருவில் வீட்டில் 
வசிக்கும் பூனைகள் 
நாய்கள் பறவைகள் 
நான்கு, மூன்று 
ஈரறி(வு) உயிர்கள் 
முகமூடி அணியாமல் 
நம்முன் வாழ்கையில் 
அவைமுன் னுயர்ந்த
மானுடம் கூனி
முடங்கிக் கிடைக்கையில்
சிரிப்பாய் இருக்குது!

















"ஒரே காற்றில் 
ஒரே கடலில் 
வாழும் மீன்களில் 
மனித மீன்கள்" 
மட்டுமே பாவம் 
இத்தனை மெலிவாய்
பூமியில் கிடந்து 
அல்லல் உறுவதை 
காண்கையில் எனக்கு 
வகை வகையாக 
சிரிப்பே வருகுது!

இராக்கெட் என்ன?
ஏவுகணை எ(ன்)ன?
கப்பல் விமானம் 
அறிவியல் என்ன?
எல்லாம் இருந்தும் 
இல்லா திருக்கும் 
நிம்மதி என்ன?
ஆறறிவு என்ன?

நாமே வளர்க்கும் 
நாய்களும் பழிக்கும் 
மூடிய கவசம்
முடியா முடக்கம் 
நீண்டிடும் பூமியில்
காதுகள் வழியாய்
நுழையா தொற்றை!!
நம்பிடும் பதர்களாய்
அரசர் அறிஞர்கள்
சாமிகள் சாமியார்
அனைவரை மிரட்டும்
ஓரணு உயிரியை
சிந்துபாத் கதையை
பார்க்கையில் எனக்கு
கழுதை சிரிப்பாய் 
சிரிப்பு வருகுது!

-பால்கி

ஞாயிறு, 10 மே, 2020

தமிழ் படிக்க ஒரு பிறவி போதாது!


தமிழ்த் தாயே! 
உன்னைப் படிக்க ஒரு பிறவி போதாது! 
🍀🌸 🌈🌈 🍀🌸
1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர்அனுபூதி
10. கந்தபுராணம்
11.பெரியபுராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!


1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

சனி, 28 மார்ச், 2020

Virus: அச்ச நெருப்பை அச்சில் ஏற்றும் பேராசை!

எதை வேண்டுமானாலும் 
விற்று பணமாக்கிவிட 
முடிகிறது அவர்களால்!
அதுபோன்றே
தெளிந்த உண்மைகளைத்
தெளித்து விடவும்
முடிவதில்லை நம்மால்!

ஒருதுளி நெருப்பை 
கோடை காலத்து 
இலையுதிர் காட்டில் 
வைத்தால் போதும்! 
என்ன நடக்கிறது 
என அறியும் முன்னே 
எரிந்து போகிறது காடு! 
நாடும் அங்ஙனமே!

அச்ச நெருப்பை 
அச்சில் ஏற்றி விதவிதமாகப் பரப்பினால் போதாதா,
விற்க முடியாதவை எல்லாம் 
விற்றுப் போய்விடுமே!


இனி விற்பனையில் வரும் 
உலக சந்தைக்கு ஒன்று!

நோயில் நொந்து 
"அவ்விடம்" போனவன், 
சீரிய அறிவினன் 
கொடுத்து வைத்தவன்! 

இருப்பவர் கோடிதான் 
இல்லாமலாகி 
இருந்த மதிப்பும் கெட்ட புழுக்களாய் பூமியின் மீதில் 
அகதிகளாகியே 
அல்லல் படுகிறார்!

உறிஞ்சும் அட்டைக்கு 
செந்நீரோ கண்ணீரோ 
எல்லாம் ஒன்றுதான்!
பணத்தை நோக்கியே ஓடும் முதலைக்கு பற்கள் பெரிதன்றோ?

தேவையோ இல்லையோ 
தேவைக்கு மீறியே ஏழைகளை 
அடித்து உலையில் போடுகிறது உலகப் பேராசை!

பெரிய நாடகம் இறைவன் போட
"அதுகளே" போட்ட நாடகம் என்று கரிய பாம்புகள் கருதுகின்றன பாவம்!


குண்டு போடும் விமானங்களுக்கும் மேலாய் 
விசும்பில் சிரித்தபடி
குறி பார்த்து நிற்கும் கூற்றுவன்
நீ அறிகிலாய்!

நீ போடும் கணக்கெல்லாம் உனக்கே பிணக்காய் உடனே திரும்பும் பார்! 
உன் வரவுப் புத்தகத்தில் செலவின் பக்கத்தில் இதை அழுத்தி எழுதிக் கொள்ளேன்!

"நல்ல நாடகமே எனினும் 
கொள்ளை முடிந்து பங்கு பிரிக்கும் நேரம் நெருங்குகையில் இலாபக் கணக்குகளைச் எழுத முடியாதபடி உங்கள் உட்பிரிவில் உயிர்-மை தீர்ந்திருக்கும்!"

ஆனாலும் எப்பொழுதும் போலவே பசுமை போர்த்திய இந்த பூமியில் அருவிகளின் இசையையும், பறவைகளின் பாடல்களையும் 
கேட்ட வண்ணம் நடக்கும்
அந்தக் கள்ளம் கபடறியா ஏழைகளின் ஓய்வறியாப் பாதங்களை 
இறைவன் தொழுதிருக்க 

நெடும் பயணமது 
நில்லாமல் தொடரும்!

-யோஜென் பால்கி

திங்கள், 23 மார்ச், 2020

பயத்தை விரட்டாமல் நோயை விரட்ட முடியாது!


நண்பர்களே!

அரசும், மருத்துவர்களும் சொல்கிற பாதுகாப்பு முறைகளை தவறாமல் கடை பிடியுங்கள்! 

கீழே மருத்துவர்களால் சொல்லப்பட்ட சில எளிய உணவு முறைகளைப் பின்பற்றுங்கள்!


அதே சமயம் நீங்கள்,

1. எப்பொழுதும் அந்த 'கர்ண-பரம்பரைக்' கதைகளை கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்! 

2. அந்தக் கதைகளை கொஞ்சமாவது தொடர்ந்து கேட்பதைப் பார்ப்பதைத் புறந்தள்ளுங்கள்! 

3. மற்றவர்களுக்கு உதவி செய்வது விளையாடுவது, மனம் விட்டு சிரிப்பது இவைதான் உங்கள் உள்ளத்தை உடலை,  ஆரோக்கியமாகவும் எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும்! 

4. எதிர்மறை செய்திகளை தொடர்ந்து கேட்டு உங்கள் மன உறுதியைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்! 
அது உங்கள் நனவிலி மனத்தில் (Subconscious Mind) தேவையற்ற, நீண்டகால அடிப்படையிலான தீய தாக்கத்தை ஏற்படுத்தும்!

5. நகைச்சுவை காட்சிகளை அதிகம் பாருங்கள், வாய்விட்டு சிரியுங்கள்!

6. தன்னம்பிக்கை தரும், மகிழ்ச்சி தரும் புத்தகங்களை படியுங்கள், உங்கள் குடும்பத்தினருக்கும் படித்துக் காட்டுங்கள்!

7. எப்பொழுதும் உங்கள் கவனத்தை மூக்கு மற்றும் தொண்டையின் மீது வைத்துக் கொண்டு, இல்லாத நோயை இருப்பது போல கற்பனை செய்து கொண்டு கலங்காதீர்கள்!

8. "பயம் என்ற ஓட்டை வழியாகத்தான் நோய் என்ற ஒன்று வந்து நுழைகிறது"!

9. உங்களுக்கு நம்பிக்கை தருகின்ற அறிவியலோ அல்லது ஆன்மிகமோ, எதையோ ஒன்றை அல்லது இரண்டையுமே கூட கைக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்!

10. இயற்கை அல்லது இறைவன் உங்கள் குடும்பத்துக்கு நல்லதே செய்வார் என்று நம்புங்கள்! "நம்பிக்கையை" விட மிகப்பெரிய சக்தி இந்த உலகில் வேறு எதுவும் இல்லை!

🍀🌸😇😇
அன்புடன் 
யோஜென் பால்கி
(உள இயல்)

சனி, 14 மார்ச், 2020

"திரு" என்று தமிழில் துவங்கும் அழகிய ஊர்ப் பெயர்கள்!


திரு அம்பர்மாநகர்
திரு அரத்துறை
திரு ஆப்பாடி
திரு ஆலங்காடு
திரு ஆலவாய் நல்லூர்
திரு ஆவணம்
திரு ஆவிநன்குடி
திரு ஆனைக்கா
திரு எவ்வுள்
திரு எடகம்
திரு ஏரகம்
திரு ஐயாறு
திருக்கச்சூர்
திருக்கடவூர்
திருக்கடையூர்
திருக்கண்டியூர்
திருக்கண்டீஸ்வரம்
திருக்கண்டீச்சுரம்
திருக்கண்ணபுரம்
திருக்கண்ணன்குடி

திருக்கண்ணமங்கை
திருக்கயிலாயம்
திருக்கருகாவூர்
திருக்கழிப்பாலை
திருக்கழுக்குன்றம்
திருக்களர்
திருக்காரிகுடி
திருக்காரிக்கரை
திருக்காவலூர்
திருக்காளத்தி மலை
திருக்குவளை
திருக்குறுங்குடி
திருக்கோடிகா
திருக்கோணமலை
திருக்கோலக்கா
திருக்கோவலூர்
திருக்கோழீச்சுரம்
திருக்கோளிலி
திருச்சம்பள்ளி
திருச்சாத்தமங்கை
திருச்சாத்துறை
திருச்சானூர்

திருச்சாய்க்காடு
திருச்சிரபுரம்
திருச்சிராப்பள்ளி
திருச்சிற்றம்பல நல்லூர்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றேமம்
திருச்சீர் அலைவாய்
திருச்சுகனூர்
திருச்சுரம்
திருச்செங்காட்டங்குடி
திருச்செங்குன்றம்
திருச்செங்கோடு
திருச்செந்தில்
திருச்செந்துறை
திருச்செந்தூர்
திருச்செம்பொன்பள்ளி
திருச்சேலூர்
திருத்தண்கா
திருத்தணிகை
திருத்தவத்துறை
திருத்தளூர்

வியாழன், 30 ஜனவரி, 2020

On Wealth : Albert Einstein


Mein Weltbild, Amsterdam: Querido Verlag, 1934.

"I am absolutely convinced that no wealth in the world can help humanity forward, even in the hands of the most devoted worker in this cause. 

The example of great and pure individuals is the only thing that can lead us to noble thoughts and deeds.

Money only appeals to selfishness and irresistibly invites abuse.

Can anyone imagine Moses, Jesus, or Gandhi armed with them money-bags of Carnegie?"

-Albert Einstein


சனி, 18 ஜனவரி, 2020

இப்படியே போய்விடாதே காலமே!


இன்னும் செய்ய
ஆயிரம்
இருக்கையில்
முகநூலில் மூழ்கியும்
குறுந்தகவல்களில் குலைந்தும்
தூரத்து மின்மினிகளில்
இலயித்தும்
ஒரு சுனாமியின் பாய்ச்சலாய்
கடந்துபோய் கழிந்துவிடாதே!
என் புத்திக்குள் சக்தியேற்று!
வேண்டிய பலவற்றை
விடாது செய்யவும்
வேண்டாத சிலவற்றை
யான் விலக்கி வைக்கவும்
வீரிய விருப்பம்
என்னுள் திணித்துவை!

வெறும் "முப்பத்தாறாயிரத்து
ஐநூற்று சொச்சத்தை"
அடிக்கடி நினைவூட்டு;
சீர்வாழ்வின் வீணை மீட்டு!
இருந்தவர் மறைந்த
ஏழாயிரம் கதையளி!
இருப்பதில் சிறப்பது
எதுவெனத் தெளிவி!
உள்ளம் உடையாதிருக்க
காலத்தில் அருள்செய்!
'இருமை' கடந்தேக
இதமாய்க் கற்பி!
என்னுள் கிடக்கும்
ஏகாந்தம் உணர்த்து!

எளிய உயிர்களையும்
ஏற்று 'மதிக்கும்' இங்கிதம் தா!
ஆனபணிகளை ஆற்றும் போது
அடங்கிநிற்கும் உள்ளம் உதவு!
சிறிது பெரிதென பேதமொழித்த
சீரிய சமநிலை தவறாது அளி!
குழந்தைகள் போற்று !

கூடி வாழ்ந்திடும் கூடுகள் கொடு!
நிலாச்சோறுண்ட அற்றைநாட்களை
அப்படியே மீண்டும் கையளித்துப்போ!
வீதியில் முளைத்த மூங்கில் கட்டிலில்
முதியவர்கள் 'கதைக்க'
இளைஞர்கள் 'கலக்கும்'
கலகலப்பு காட்டு!
எங்கள் வானத்தில்
மகிழ்ச்சியின் பூரிதத்தை
தாய் மழையாக்கு !

அன்பின் தலைமையில்
அறிவின் "சிறுபண்டங்கள்"
தொல்லை தராமல்
இருந்து கொள்ளட்டும்!

-YozenBalki

(Will continue... sometime if destiny permits...)
**********
www.yozenmind.com

ஞாயிறு, 17 நவம்பர், 2019

திருக்குறளை பழித்தாரா பெரியார்? இல்லவே இல்லை!

குறளை பழித்தார் பெரியார் என்று யாராவது சொன்னால் இதைப் படிக்கச் சொல்லுங்கள்!
_________________________________________

"குறளும் - நானும்" : தந்தை பெரியார் பேசிய உரை இது!

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, வணக்கம்!


வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.
எல்லாவற்றையும் குறை சொல்லும்போது, பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான், 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு என்று 
கூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?' என்று பதில் கூறுவேன்.

ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக்கூடாது என்று கருதி அந்தப்படியே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு - அறிவாளி என்றால்
பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு - நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். 

நான், 'இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை: அது குறளாசிரியர் கருத்தல்ல' என்று எடுத்துக்கூறி உண்மை  உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள்.

அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக்
கொண்டல்ல! 'நான் சொல்லுகிற கருத்து - அதிலும் இருக்கிறது பார்!" என்று கூறிவந்தேன்.

அதில் சிறிது குறை இருந்தால் இப்போதைக்கு அது இருக்கட்டும் என்று கருதினேன்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

கேரள வெள்ளம் உணர்த்தும் வாழ்க்கைப் பாடம் !

“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும். 
முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”



இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு இருந்தனர்! 

இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.

முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக் கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள். 

பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன!


பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்

அழகு சாதனப்பொருள்கள்

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

இட ஒதுக்கீடு என்பது நீதியா அநீதியா? பொருளாதார அளவுகோல் சரியா?

💛💚❤💚💛💜❤💚💙

உலகில் வேறெங்கும் காணப்படாத ஒரு மாபெரும் அநீதி இந்தியாவில் இன்றும் உண்டு! அது என்னவென்றால் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தில் பிறப்பதனால் குத்தப்படும் "பிறப்பின் அடிப்படையிலான சாதி முத்திரையே ஆகும்!"



இந்த நாட்டில் மட்டுமே ஒருவனின் கல்விப் பெருமையினாலோ அல்லது அவனது நன்னடைத்தை பற்றியோ அன்றி, இன்ன சாதித் தந்தைக்கு பிறப்பதினாலேயே ஒரு குழந்தை பிறப்பிலேயே உயர்ந்த சாதிக் குழந்தையாக மதிக்கப்படுவது, அல்லது பிறப்பின் அடிப்படையிலேயே "தீண்டத்தகாத சாதி குழந்தையாக ஒதுக்கப்படுவது", எனும் அவலம் ஆயிரம் ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது! 

அப்படி குழந்தை பருவத்திலேயே முக்கியமாக பள்ளிப் பருவத்தில், பிற மாணவர்களால் ஆசிரியர்களால், சாதி அடிப்படையில் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்டவரே டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஆவர்!


ஆதி தமிழர்களுக்கு பிறவியின் அடிப்படையிலான சாதிமுறை இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் இல்லை! தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழைய இலக்கிய நூல்கள் வழியாகவும் திராவிட சிந்து சமவெளி நாகரிகம், தமிழக கீழடி நாகரிகம் போன்ற புதைபொருள் ஆராய்ச்சியின் வழியாகவும் ஆய்வு செய்தபோது தமிழர்களின் சாதியற்ற சமுதாயம் தெரியவந்தது!

சனி, 3 ஆகஸ்ட், 2019

டெங்கு: தோலுரிக்கும் கட்டுரை !

இது வாட்சப்பில் வந்தது! மிக அருமையான பதிவு, அதை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் அப்படியே இங்கு படியெடுத்து ஒட்டி உள்ளேன்! இதை எழுதிய ஹீலர்.இரா.மதிவாணன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பலவும்!
-yozenbalki 
-----------------------------------------------------------


இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செறிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்ச்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.

இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.

எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.

சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.

தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.

உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை  நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.

நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.

ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.

வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.

செவ்வாய், 23 ஜூலை, 2019

Your 'Mind Software' Can Be Reprogrammed!

🌷🌾🌸🌼🌸🌾🌷
Many people are unaware of the truth that one's mind can be rearranged and reprogrammed!

One need not finish his journey with his/ her imposed inabilities in this life. Whatever, that's not of one's inherited quality, his/her mind will never accept those unwanted negativeness to stay in him/her. He always will fight for it to eradicate those attributes.

 

But, how do you do it to uplift yourself or uproot the venom put inside by time & personas? Will it ever be possible to operate oneself being himself, a great heart surgeon?

You need a realized being or an experienced psychologist to do it for you! Just a small correction, some addition & deletion in your "mind-ware" is enough unto fix up things!

And about the time frame to obtain it?
Really you will never believe that just a few sessions would be sufficient to address your life long riddle & its permanent solutions too. Just go to any Psychologist who is reputed in that field, wherever you live and He/She can observe your issues from various angles & can offer the appropriate antidotes too.


That cannot be done by yourself though you are wise enough ever!
A trained professional in any field can do wonder in his zone, that experience one should gain for one's betterment in life.

Psychologists & Psychiatrist are so trained to tackle the various challenges of your mind, do mind it Sir !!

Yozen Balki
Senior Psychologist, Chennai
www.yozenmind.com

ஞாயிறு, 21 ஜூலை, 2019

Self-Pity & Excessive Anxiety Kills!

Manjunath Naidu, 36, the famous "stand-up comedian", suffered a
cardiac arrest while performing his routine on stage on Friday at Dubai.


He complained of high level of anxiety, sat down on the bench next to him and collapsed onto the floor, with audience thinking that it must be a part of the show, Khaleej Times reported.

Naidu was born in Abu Dhabi, but later shifted base to Dubai!

"He was the last act in the line-up. He went on stage and was making people laugh with his stories. He was talking about his father and family. And then he got into a story of how he suffers from anxiety. And a minute into the story he collapsed," Miqdaad Dohadwala, his friend and fellow comedian, was quoted as saying in the report.

People thought it was part of the act. They took it as a joke as he was talking about anxiety and then collapsed, he said.

Dohadwala said that the paramedics could not revive him.

"His parents passed away and he has a brother but no relatives here. All in the arts and comedy circle are his family," he added.

Download the Times of India News App for Latest NRI News

🔥🔥🔥
https://m.timesofindia.com/nri/middle-east-news/indian-origin-stand-up-comedian-dies-while-performing-in-dubai/amp_articleshow/70314278.cms
🔥🔥🔥

Dictum of the story:

Never allow your Self-Pity:


To take over your control over your entire Body & Mind! Do forget the past, and never repeat your bygone days and struggles to everyone you see! Just be happy and be talking/ listening to the positive and jovial things happened around you!

Do you know one thing? Only the "Self-Pity" kills the human beings, faster than a bullet!

So, never revisit your sorrows ever!

-Yozen Balki
Psychologist, Chennai.