Translate this blog to any language

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

ஆரிய பார்ப்பன பாஜக தமிழகத்துக்கு ஆபத்து!!

நமது தமிழ் இளைஞர்கள், பொதுவாகவே திமுக ஊழல் செய்கிறது, அண்ணா திமுக ஊழல் செய்கிறது என்று யாராவது மனோவசியம் செய்தால் ஏமாந்து விடுகிறார்கள்!

ஏதோ பிற உலக கட்சிகள், இந்திய கட்சிகள் ஒரு ஊழலும் செய்யாத உத்தமர்கள் போல! சொல்லப்போனால் இந்தியாவிலேயே அதிக தொகைகளுக்கு பல லட்சம் கோடி ஊழல் செய்த கட்சி ஆரிய பார்ப்பன பாஜக கட்சி தான்!

சரி, நான் திராவிட இயக்கங்களை போற்றுபவன்! அதற்கு என்ன காரணம் என்று சொல்கிறேன்!

திராவிட இயக்கம் என்னதான் ஊழல் செய்தாலும் நான் வந்து 70% திமுக 30% அதிமுக, அதன் பிறகு எனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, டாக்டர் திருமா அவர்களின் கொள்கை பிடிப்பு ரொம்ப பிடிக்கும்!

பாஜக என்பது பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஆர்எஸ்எஸ் ஆரம்பித்த ஒரு அமைப்பு!

நமது சூத்திரப் பிள்ளைகளின் கல்வி உரிமையை ஒழித்து நம்மை பழையபடி சனாதன (அ)தர்ம சாக்கடையில் ஆழ்த்தி பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள்...
பிற 97% மக்கள் தாழ்ந்தவர்கள் 
என்ற ஆரிய பார்ப்பன ஜாதீய கருத்தை நிலை நிறுத்தத் துடிப்பவர்கள்!

அதனால் எனக்கு பாஜக அறவே பிடிக்காது!

இன்னொன்று
பற்பல துறைகளில்
360°
மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான்!

உலகத்திலேயே அதிக உயர் கல்வி படித்தவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்! அதற்கு காரணம் தொடர்ந்து வந்த இரண்டு திராவிட இயக்க ஆட்சிகள் தாம்!

அதற்கு மூல காரணம் தேடித் தேடி குழந்தைகளை ஊக்குவித்து, பள்ளிப்படிப்பு கல்லூரி படிப்பு வேலைவாய்ப்பு என்றெல்லாம் சூத்திர குழந்தைகளை உயரத்தில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் பெரியார் அண்ணா அம்பேத்கர் கொள்கைகள் தாம்!

அதனால் தான் வடமாநிலங்கள் நம்மை விட நூறு வருடம் பின்தங்கி இருக்கின்றன! இன்னும் கூட அங்க சராசரி பொதுமக்களுக்கு கக்கூஸ் கட்டவில்லை!

வடக்கிலிருந்து இளைஞர்கள் பாஜக காங்கிரஸ் ஆட்சியில் சிக்கி சீரழிந்து படிப்பும் இல்லாமல் வேலையும் இல்லாமல் தமிழ்நாட்டை நோக்கி கோடிக்கணக்கில் வந்து கூலி வேலை செய்து பிழைப்பது ஏன்?

ஏன் அவர்களுக்கு உயர்கல்வி இல்லை வேலை வாய்ப்பு இல்லை அங்கேயே வாழ்வதற்கு வசதி இல்லை? 

சுதந்திரம் பெற்று ஒரே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரித்து, மாநில வளர்ச்சிக்கு அவர்களே பட்ஜெட்டில் அதிகம் கொள்ளையடித்துக் கொண்ட போதும் அந்த வட இந்திய மாநிலங்கள் ஏன் வளர்ச்சி அடையவில்லை!

அங்குதானே இவர்கள் போற்றுகின்ற வட இந்திய பெருந்தலைவர்கள் பலரும் பிறந்தார்கள்? 

ஆக, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இன்று வரை வாயில் வடை சுட்டு திராவிடத்தை திட்டிக்கொண்டு பிழைத்து வருகிறார்கள் என்பது மட்டுமே தெள்ளத்தெளிவான உண்மை!

சரி! ஊழல் என்பது உலக நாடுகளில் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது! தேன் எடுப்பவன் தன் கையை நக்குவான் தானே?

பணப்புழக்கம் உள்ள வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் மற்றும் எல்லா நாடுகளிலும் ஊழல் உள்ளது; அதன் விகிதம் மட்டுமே மாறும்!

என்னைப் பொறுத்தவரை தமிழன் ஊழல் செய்தால் அந்தப் பணம் தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தான் உலவும்! அதனால் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும்!
ஏனென்றால் யாரும் பணத்தை தின்று விட முடியாது! 

அந்த வகையில் தமிழர்கள் செய்கிற ஊழல் மகா குற்றம் கிடையாது!

ஊழல் செய்த பணத்தைக் கொண்டு அவர்கள் அணுகுண்டு தயாரிக்கவில்லை! கல்வி நிறுவனங்கள் கட்டி, பாதி பணம் 'கோட்டா' வழியாக சம்பாதிக்கிறார்கள், மீதி ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அறிவு வேலை வாய்ப்பு பெற்று தருகிறார்கள்!

அதனால்தான் தமிழகம் உலகத்திலேயே அதிக உயர்கல்வி படித்தவர்களைக் கொண்டிருக்கிறது!

எனவே, நான் என்றென்றும் திராவிட கொள்கைகளை, சமத்துவம் சமநீதி பேசும் தமிழக கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பவன்!

நான் *பெரியார் கண்ணாடி* வழியாக இந்தத் தமிழ்ச் சமூக முன்னேற்றத்தைப் பார்க்கிறேன்!

ஆரிய பார்ப்பன 
ஆர்எஸ்எஸ் பாஜக என்பது, தமிழ் மொழி தமிழ்ப் பண்பாடு, தமிழின உரிமை, தமிழர்களின் உணவுத் தேர்வு, தமிழினக் குழந்தைகளின் உயர்கல்வி வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், ஜாதி வேறுபாடு இல்லாத சமூகம், கருவறையில் தமிழ் பூசை போன்ற எல்லாவற்றிற்கும் எதிரானவை!

சுருக்கமாக சொன்னால் ஆர்எஸ்எஸ் பாஜக என்பது தமிழகத்துக்கு ஒரு பெரும் ஆபத்து!

Yozenbalki
💫💫🎊🎊

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

தமிழர் பாரம்பரிய அரிசி வகைகள் 1000 தெரியுமா?

நாம் உண்ணும் அரிசி வகை என்றாலே அது வெள்ளையாக தான் இருக்கும் என்று நம்மில் பலர் அப்பாவியாக நம்பிக்கொண்டு இருக்கிறோம்! 

மிகவும் முக்கியமான இரகங்களான, கறுப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, அருங்குருவை, காட்டுயாணம் அரிசி இவை யாவும் தனித்துவமானவை, நிறங்களில் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை தெரியுமா?

மேலும், நம் சாப்பாடு தட்டுக்கு வருவதற்கு முன்னாள் அரிசியானது பலவகையில் பட்டை தீட்டப்பட்டு வெறும் சக்கையாத்தான் நாம் உணவென தின்று கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் பயிரிடப்படும் அத்தியாவசிய வகைகளில் ஒன்றுதான் நெல். பாரம்பரிய நெல் சாகுபடி சில வழிமுறைகளை உள்ளடக்கியது மற்றும் மண் வளத்தை அடிப்படையாகக் கொண்டு வளரும். நமது பாரம்பரிய உணவு அரிசி அதிக ஆற்றலை அளிக்கிறது, உடல் பருமன், புற்றுநோய், அல்சைமர் நோய், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. 

செரிமான குணங்கள்:
நன்கு சமைத்த அரிசியில் 68% நீர், 28% கார்போஹைட்ரேட், 3% புரதம் மற்றும் மிகக் குறைவான கொழுப்பு உள்ளது.

அத்துணை சிறப்புகள் பெற்ற அரிசியில் இன்று நாம் முழுக்க முழுக்க பாலிஷ் செய்துவிட்டு சாப்பிடும் இந்த சக்கையினால் சக்கரை நோய் வந்ததுதான் மிச்சம். 

அந்தக் காலத்திலும் நம் மக்கள் அரிசியைத்தான் சாப்பிட்டார்கள். அவர்களுக்கு இன்று வரும் நோயெல்லாம் அப்போது வரவில்லை. காரணம் அவர்கள் அரிசியின் மேலே இயற்கை ஒட்டி வைத்திருக்கும் சத்தையெல்லாம் உதிர்த்து விடாமல், பட்டை தீட்டாமல் சாப்பிட்டார்கள்.

‘ இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘ 
திரு. நம்மாழ்வார் அய்யா கூறியபடி அந்தக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் நம்மிடம் இருந்தது. அவையெல்லாம் நம் ஆரோக்கியத்துக்கு அரணாக இருந்தன. 

நம் முன்னோர்கள் அந்த அரிசி வகைகளை பட்டைதீட்டமால் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு, தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தான் காரணம்.

தமிழகத்தில் இப்போதும் பலர் உங்களுக்காக அவர்களால் முடிந்த பாரம்பரிய அரிசி வகைகளை இயற்கை முறையில் விளைவித்து அரிசியாக அளித்து வருகின்றனர்.

Thooyamalli Rice – Traditional Rice - Gramiyum  https://gramiyum.in

The nine traditional rice varieties of Tamilnadu - UlaMart https://www.ulamart.com

Traditional Rice: B&B Organics https://bnborganics.com

Buy Organic Traditional Rice Online https://www.thanjaiorganics.com

Buy Organic Rice online https://www.ulamart.com

தற்போது அமேசானில் கூட கிட்டத்தட்ட இவை எல்லாமே கிடைக்கிறது!
www.amazon.in 
www.amazon.com

சரி போகட்டும்!

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாரம்பரிய அரிசி வகைகள் இவை:

மாப்பிள்ளை சம்பா
கருப்பு கவுனி
குடவாழை
துளசிவாச சீரகச்சம்பா
கண்டசாலி
கைவரச்சம்பா
வாடன் சம்பா
தேங்காய்பூச் சம்பா
வாலான்
சிங்கினிகார்
பூங்கார்
ராஜமன்னார்
 பவானி
சம்பா மோசனம்
செம்பாளை
கொட்டாரச் சம்பா
ராஜயோகம்

அரசர்களின் அரிசி:

"கறுப்பு கவுனி" அரிசியை அரசர்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் இதை, ‘அரசர்களின் அரிசி’ என்பார்கள்

மிளகுச் சம்பா
நவரா
கருங்குறுவை
சொர்ண மசூரி
அறுபதாம் குறுவை
மைசூர் மல்லி
காலா நமக்
சின்னார்
கிச்சிலிச் சம்பா
காட்டுயானம்
பொம்மி
ஒட்டடம்
பால் குடவாழை
சொர்ணவாரி
தூயமல்லி
ஆத்தூர் கிச்சிலிச்சம்பா
தங்கச்சம்பா
ராஜமுடி
குழியடிச்சான்
நீலஞ் சம்பா
குண்டுக்கார்
கொத்தமல்லிச் சம்பா
கவுனி

கல்லுண்டை
முற்றின சம்பா
சேலம் சம்பா
மரத்தொண்டி
சிவப்புக்கவுனி
இலுப்பைப் பூச்சம்பா
திருப்பதி சாரம்
சிவப்புக் குருவிக்கார்
சண்டிக்கார்
குள்ளக்கார்
அனந்தனூர் சன்னம்
கைவரச்சம்பா
ஒட்டடையான்
பனங்காட்டுக் குடைவாழை
கொச்சின் சம்பா
பொன்னி
கருடன் சம்பா

“கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி, விஷக்கடி போன்றவற்றுக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும், சீரக சம்பா செரிமானத்துக்கும் உகந்தது என்பது போன்ற குறிப்புகளும் ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் உள்ளன”

கள்ளிமடையான்
 காட்டுச்சம்பா
 மாப்பிள்ளைச் சம்பா
 சிறுகமணி சம்பா
 சண்டிகார்
 நீலம் சம்பா
 மடுமுழுங்கி
 சேலம் சன்னா
 பாசுமுகி
 காலா ஜீரா
 கைவரச் சம்பா
 சிங்கார்
 சித்த சன்னா

மாப்பிள்ளை சம்பா

 வைகுண்டா
 தீகார்
 சன்ன சம்பா
 முற்றின சம்பா
 ராஜமன்னார்
 மிளகுச் சம்பா
 ரத்தசாலி
 பிசினி
 கொத்தமல்லிச் சம்பா
 வாழைப்பூ சம்பா
 பொலிநெல்
 பால் குடைவாழை
 காட்டுப்பொன்னி
 ராஜயோகம்
 யானைக் கொம்பன்
 வெள்ளைக் குடைவாழை
 கம்பன் சம்பா
 ஆற்காடு கிச்சிலிச் சம்பா
 ராம ஜடாலே
வாலன் சம்பா
 இரவைப்பாண்டி
 ரசகடம்
 மரநெல்
 துளசி வாசனை சம்பா
 சீரகச் சம்பா
 காட்டுயானம்
 தூயமல்லி
 கல்லுண்டைச் சம்பா
 கண்டசாலி
 கந்தசாலா
 சிவன்சம்பா
 கலர்பாலை
 சீரகச் சன்னா
 ஒட்டடம்
 அனந்தனூர் சன்னம்
 பச்சை பெருமாள்
 கருத்தகார்
 கட்டச்சம்பா

செம்புளிச் சம்பா
 காலா நமக்
 சூரக்குறுவை
 கருப்பு சீரகச்சம்பா
 ராமஹல்லி
 குருவா
 கேரள சுந்தரி
 வெள்ளசீரா
 பாராபாங்க்
 காலாபத்தி பிளாக்
 மாலாபத்தி
 வடக்கன் சீரா
 தோடா பெருநெல்லு
 ஜீமாய்நாடு
 ஜீரக சாலா
 அரிமோடன்
 ஆனமோடன்
 பாளியாறல்
 குரியாகயாமா
 காலாச்சி பிட்

மரத்தொண்டி
 செந்நெல்
 கரிகஜனவள்ளி
 வெள்ளைக்கார்
  ரக்தாசுடி
 ராணிசால்
 நாசர்பாத்
 புல்பாப்ரி
 தங்கச் சம்பா
 மஞ்சள் பொன்னி
 அறுபதாம் குறுவை
 கொடகுவிளையான்
 துளுநாடான்
 சன்ன நெல்
 விஷ்ணுபோகம்
 ஆத்தூர் கிச்சிலிச் சம்பா
 சௌபாக்கி
 ஆம்பிமோகர்
 ஹரித்திகத்தி
 எளாய்ச்சி
 பாசுபதி
 தில்கஸ்தூரி

நமது தமிழக அரிசி வகைகள் யாவும் அதிக ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்புகளைக் கொண்டுள்ளன. நம்மிடம் 5000 அரிசி வகைகள் அந்த காலத்தில் இருந்தன, ஆனால் இப்போது கிட்டத்தட்ட 200 ரகங்களை மட்டுமே தமிழ்நாட்டில் சேமிக்க முடிந்தது. இந்த 200 வகைகளும் அழிந்துவிடக் கூடாது. 

குறைந்த பட்சம் நம் தமிழ்நாட்டின் மதிப்புமிக்க இத்தகு அரிசி இனங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொண்டு அதை காப்பாற்றும் பொறுப்பு தமிழர்களான நமக்கு உண்டு.

மேற்படி அரிசி வகைகளை இணையம் மூலம் தேடி கண்டுபிடித்து ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ ஒரு கிலோவாவது ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் நாம் மேற்கொண்டால் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அத்தகு அரிசி வகைகளை, கைவிடாமல் விளைவித்துக் கொண்டு வருவார்கள்! 

இல்லை என்றால் அந்த மிச்ச சொச்சம் இருக்கிற அரிசி வகைகளும், நம்மிடமிருந்து அழிந்து போய்விடும்! அதனால் நாம் எல்லோரும் சேர்ந்து அதை காப்பாற்ற முன்வர வேண்டுகிறேன்!

இது பற்றி நமது பற்பல அரசியல் தலைவர்களும் தமிழக அரசாங்கமும் கூடிக் கலந்து பேசி "தமிழர் பாரம்பரிய நெல் ரகங்கள் காப்பாற்றும்" ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் மிக்க  அன்புரிமையுடன் கோருகிறேன்!

-YozenBalki 

(இவை இணையத்தில் திரட்டப்பட்ட தகவல்கள்! இது போன்ற நம் மரபு சார்ந்த செய்திகள், கடல் கடந்த நாடுகளில் வாழும் நம் தமிழின குடும்பங்களிலும் இது பரவ வேண்டும் என்று பதிவு செய்திருக்கிறேன்!)

புதன், 27 செப்டம்பர், 2023

நீதிபதி சந்துருவைப் போல வாழுங்கள்!

1996ல் எனக்கு திருமணம். 
அது சாதி மறுப்புக் காதல் மணம்.

அவர்கள் பெயர் பாரதி. 
பச்சையப்பன் கல்லூரியில் 
அவர் வரலாற்றுத்துறை பேராசிரியர். 

பாரதியின் வருகைக்குப் 
பிறகுதான் மறுபடியும் 
எனக்குக் குடும்பம் வந்தது. 
பொறுப்புகளும் வந்தன. தான் தோன்றித்தனமான வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு வந்தது. 

எங்களுக்கு 
கீர்த்தி என்று ஒரு மகள். 

பொருளாதார ரீதியாக 
ஓரளவு நல்ல நிலை 
என்றாலும் 
பணத்துக்காக எந்த வழக்கையும் 
நான் எடுத்து நடத்தியதில்லை. 

ஏழைகளுக்காகவே அதிகம்
வாதாடி இருக்கிறேன்.

இந்நிலையில் 
அப்போது நீதிபதியாக இருந்த 
வி.ஆர்.கிருஷ்ணய்யர், 
என்னையும் நீதிபதி ஆகச் சொன்னார். 

அதை ஏற்று இருமுறை நீதிபதிக்காக 
விண்ணப்பித்தேன். 
'இவர் தீவிரவாதிகளுக்கான 
வக்கீல்’ என்று சொல்லி 
அப்போது தமிழக 
முதல்வராக இருந்த ஜெயலலிதா 
எனக்கு போஸ்டிங் போட மறுத்தார்.

பிறகு 2006 ஆம் ஆண்டில்
 ‘வழக்கறிஞர் என்பது தொழில். 

யாருக்காகவும் 
யாரும் வாதாடலாம். 
இதைக் காரணம் காட்டி 

நீதிபதி பொறுப்பைக் 
கொடுக்காமல் இருக்க முடியாது’ 
என உச்ச நீதி மன்றம் 
சொல்லிய பிறகு 
என்னை நீதிபதியாக நியமித்தார்கள். 

நீதிபதியாக நான் பணியில் 
இருந்த காலத்தில் 

*96 ஆயிரம்*
 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறேன்.

இந்தியாவிலேயே 
இவ்வளவு வழக்குகளுக்கு 
யாரும் தீர்ப்புச் சொன்னதில்லை. 

ஆந்திராவைச் சேர்ந்த 
நீதிபதி ஒருவர், ‘

இந்திய நீதிமன்றங்களின் 

*சச்சின் சந்துருதான்*… 

அவரது ஸ்கோரை முறியடிக்க யாருமில்லை…’ 
என எழுதியிருக்கிறார்.

நான் அமர்ந்தால் 
எந்த வாய்தாவும் கிடையாது. 
தீர்ப்புதான். 

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட 
டிக்டேஷன் செய்வேன். 

*‘சந்துருவுக்கு மட்டும்*
*வாரத்துக்கு 8 நாள்’ என* 
வி.ஆர்.கிருஷ்ணய்யர்*
கிண்டல் அடிப்பார். 

நீதிபதிகளுக்குப் பாதுகாப்புக் 
காவலர் கொடுப்பது வழக்கம். 

எனக்கு அப்படி யாரும் வேண்டாம் 
என எழுதிக் கொடுத்தேன். 

மக்கள் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. 

கார் கூட பயன்படுத்த மாட்டேன். 

பெரும்பாலும் 
பஸ், ரயில்தான்.

பதவிக்கு வந்ததுமே 
என் சொத்து விவரங்களைச் சமர்ப்பித்தேன். 

பல சீனியர்கள் இதனால் 
என் மீது கோபம் அடைந்தார்கள். 

கடைசியில் அனைவரும் 
சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் 
என வேண்டுகோள் வந்தது. 

எனது மகள் கீர்த்தி 
*பல் மருத்துவராக இருக்கிறார்*. ‘

ஒருவேளை நான் வழக்கறிஞராகி 
சுமாராக இருந்தால்… ‘

என்ன, 

சந்துரு மகளா இருந்துட்டு 
இப்படி சுமாரா இருக்க’ 
என்ற பேச்சு வரும். 
அதனால் வழக்கறிஞராக மாட்டேன்’ 
என கீர்த்தி சொல்லி விட்டார். 

என் நிழலில் வாழாமல் 
அவர் தன் துறையில் முன்னேறுவது 
மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு, 
என் மனைவிக்கு, 
மகளுக்கு 
எல்லாம் இந்த வாழ்க்கையைக் கொடுத்தது 
*கல்விதான்.*

 எங்களுக்கு மட்டுமில்லை… 
என் சகோதரர் களுக்கும் 
சகோதரிக்கும் 
கூட நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருப்பது 
*இந்த கல்வி மட்டும் தான்.*

நாம் மேற்கொள்ளும் பணியை 
எந்த அளவுக்கு சின்சியராக 
மக்கள் நலன் சார்ந்து 
செய்கிறோமோ 
அந்தளவுக்குச் சமூகத்தில் 
நமக்கு பெயர் கிடைக்கும். 
என் வாழ்க்கை 
எனக்கு உணர்த்தும் பாடம் இதுதான்.

ஓய்வுக்குப் பிறகு 
இன்றும் தினமும் படிக்கிறேன். 
படித்த நூல்களை லாரியில் 
ஏற்றி மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைப்பேன். 

இப்போது நடைபெறும் 
வழக்குகள் சார்ந்து 
என் கருத்துகளை வெளியிட்டு வருகிறேன். 

அந்த வகையிலேயே 
சமீபத்தில் 
மிசாவில் 
திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை 
என அவதூறு கிளம்பியபோது 

அதை மறுத்து ஆதாரங்களை வெளியிட்டேன். 

*மனித உரிமைகளுக்காகவும்* 
*ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்*
 என்றும் குரல் கொடுப்பேன்!

-நீதிபதி சந்துரு

கூடுதலாக அவர் 
இந்தியமாணவர்சங்கத்தில் 
SFI யில் செயல்பட்டவர் 
இடதுசாரி எண்ணம் கொண்டவர்.
 
நன்றி: 
சக்கரம்.காம்

Courtesy: Whatsapp University !!

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

சனாதன (அ) தர்மம் பெண்களுக்கு இதுதான் செய்தது!

பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18  சாதிகள் பட்டியல் தெரியுமா?

இன்னைக்கு என்னமோ இந்து சனாதன தர்மம் பற்றி ரொம்ப பெருமையா பீத்திக்கிறானுங்க!!

(இதையெல்லாம் ஒழித்தது முற்போக்கான சில வெள்ளையர்கள், அதற்குப் பிறகு வந்த நமது நீதிக் கட்சி, அதற்கு பின் வந்த நம் பெரியார் இயக்க சிந்தனைகள் தாம்! 
தந்தை பெரியார் அவர்கள் இதே திருவாங்கூர் சமஸ்தானத்தில் குறிப்பிட்ட தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கவே கூடாது, நடந்தால் தீட்டு, என்ற கொடுமையை எதிர்த்து வைக்கம் போராட்டம் நிகழ்த்தி வெற்றி கண்டவர், என்பதும் நினைவு கூறத்தக்கது!)

அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில் தோள் சேலை (மாராப்பு) அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்: 

ஆக, இவர்கள் எல்லாம் மார்பகத்தை மூடாமலே எப்பொழுதும் இருக்க வேண்டும், பொது இடங்களில் வேலை பார்க்க வேண்டும் என்ற அநீதியான சட்டம் இருந்தது! ஒருவேளை அதில் ஒரு அழகிய பெண் இருந்தால் அந்த பெண்ணை மணமுடிக்கும் அல்லது வைத்துக் கொள்ளும் செல்வந்தர்கள் அந்த பெண்ணுக்கு மட்டும் சிறப்புரிமை வாங்க வேண்டும் என்றால் ம*** வரி கட்ட வேண்டும்! Breast Tax!!

அப்படி மு*** வரி கட்டாதவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு!
ஆதாரம்:
https://en.m.wikipedia.org/wiki/Breast_tax

இது ஏதோ மன்னர் காலத்தில் மட்டும் போடப்பட்ட சட்டமல்ல; ஈராயிரம் வருடங்களாக இந்த நாட்டில் இருந்த கொடுஞ்சட்டமே ஆகும்!


அந்த 18 சாதி பெண்கள் யார் யார் அறிவோமா?

1) குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)

2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்)

3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)

4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர்.

5) இடையர் (கோனார்).

6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர்.

7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.

😎 சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.

9) பறையர் (பறையடிக்கும் தொழில்) சாதியினர்.

10) நசுரானியர் (சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்.

11) குறவர் (கூடை முடைதல்) சாதியினர்.

12) வாணியர் (வாணிய செட்டியார்) சாதியினர்.

13) ஈழவர், தீயர் (இல்லத்து பிள்ளைமார்) மற்றும் அந்த சாதியோடு தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்.

14) பாணர் (ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர். 

15) புலையர் (பறையருள் ஓர் உட்சாதி- வேட்டைத் தொழில்) சாதியினர்.

16) கம்மாளர் (ஆசாரி - இன்றைய காலத்தில் 'விஷ்வகர்மா' என்ற பெயரால் ஏமாற்றப்படும்) கைவினை தொழில் சாதியினர்.

17) கைக்கோளர் (முதலியார்) சாதியினர்.

18) பரவர் (முத்தரையர்) சாதியினர்.

மேலே குறிப்பிட்டுள்ள சாதியினர்கள் சனாதனம் தலைவிரித்தாடும் போது,
எந்த சனாதனிகள் இவர்களுக்குக் குலத் தொழிலைச் செய்ய நிர்பந்தித்தார்களோ, அதே சனாதனிகள்தான், அன்றைக்கு நிர்ப்பந்தித்த தொழிலை, இன்றைக்கு சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு மூலம் இப்போது 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஸனாதனத் திட்டத்தை அறிவித்து, 'அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம்' என வஞ்சகமாக அறிவித்திருக்கிறது.

மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து, முன்னேற விடாமல் தடுப்பதற்கு இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு. 

அதனால்தான், "சனாதனத்தை ஒழிப்போம்!" என்று ஓங்காரமான குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது; ஒலிக்கட்டும்!

-From Twitter Friends 

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பிள்ளையாரை முன்ன போல பெரியாரிஸ்டுகள் உடைக்க முடியுமா?

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? 

இது இப்பொழுது சங்கீகள் சனாதனவாதிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி!!

பெரியார் காலத்தில் அவரது செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன RSS & சங்கிகள், தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது சவால் விடுகிறார்கள்.

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள் இவை:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து "சூத்திரப்பயலே தள்ளிப் போடா" என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?

2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?

4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?

6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?

7) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

😎 முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?

9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! 

இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?

13) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?

14) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?

15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

17) முன்பு RSS தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு, அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விளக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே, இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?

18) முன்பு எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே, இன்று அதுபோல் வரி போட முடியுமா?

19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

20) முன்பு சீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே இப்போது அப்படி வைக்க முடியுமா?

21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

24) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?

25)இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

26)அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?

27) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க... குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?

28) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?

29) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?

30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?

31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?

32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?

34) 5 வயசு பார்ப்பன பொடியன் 60 வயசு முதியவரை டேய் குப்பா , டேய் முனியான்னு கூப்பிட்டீங்களே ! இப்ப அப்படி கூப்பிட முடியுமா ?

35. இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எரித்தார்.

பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி சனாதன தர்மம் என்று சொல்லி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்! அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏமாறப் போவது கடைசியில் நீங்கள்தான்!

By
தோழர் 
கிருஷ் from Twitter
5th September 2023

ரொம்ப நல்லா இருந்தது! அதான்
அவரது அனுமதி பெற்று இங்கு பதிவிட்டு இருக்கிறேன்!

https://twitter.com/krish_itz?t=ZZVHv3KS8P1cxQ1ICcW52w&s=09

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

வரி மேல் வரி போட்டு சாகடிக்கிறீங்க?

பொதுமக்கள் நாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதம் income tax தருகிறோம் (அரசுக்கு). மீதி சம்பளத்தில் (28 சதவீதம் GST என வாங்கும் பொருளுக்கு கட்டுகிறோம். பெட்ரோல் மற்றும் பல பொருட்கள் GST யில் சேர்க்காமல் 60 சதவீதத்திற்கும் மேல் TAX கட்டுகிறோம். 

மொத்தத்தில் சராசரி 50 சதவீதம் வாங்கும் பொருளுக்கும் உங்களிடமே (அரசுக்கு) வரி வருவாய் தருகிறோம்.

ஆக 30+50= 80 சதவீத வருமானத்தை உங்கள்(அரசு) கஜானாவில் சேர்த்துள்ள எங்களைப் பார்த்து

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ? என கேட்பவர்கள் கவனிக்க!

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர்" தமது மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 

“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே, அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை - எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று 
காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும் பயணப்படுவதற்காக – உருப்படியான வேலை எதுவும் இல்லாமல், சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 
எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக் கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில் செய்துக்
கொள்ளும் நாள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும் Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள்? திரிகிறார்கள்!
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல் 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின் நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை என்றுமே உறுத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் தான் எத்தனையெத்தனை …

Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax 
Entertainment tax
Property Tax – etc etc.

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –

அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை 
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம் விட்டுக் கொடுப்போம்…!!! 
                   
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
WhatsApp இல் வந்தது இது!

இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், 
நன்றி !!    

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

நாங்குநேரி பள்ளிக்கூட ஜாதீய அரிவாள் வெட்டு;

சமீபத்தில் தமிழகத்தில் "நாங்குநேரியில்" ஒரு தலித் பள்ளிக்கூட மாணவனை வேறு சமூகத்தை சார்ந்த மூன்று மாணவர்கள், வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் வெட்டி இருக்கிறார்கள்! 

 வயது முதிர்ந்தவர்களிடம் தமிழகத்தில் ஓரளவுக்கு இருந்து வந்த ஜாதிப் பிரிவினை வெறுப்பு இன்று பள்ளிக் குழந்தைகள் வரை இறங்கி வந்திருக்கிறது!

அதற்குக் காரணம் என்ன? 

கிராமங்களில் நிலை பெற்று வாழும் இடங்களில் ஊரும் சேரியும் தனித்தனியாக இருக்கின்றன! ஊர் மாறும் பொழுது ஜாதிப் பெருமை பேசுவது ஒழிந்து போய் விடுகிறது!

அது, சமீப காலமாக குறிப்பாக தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின்னால் அரசியல் பொதுக்கூட்டங்களில் ஜாதிக் கட்சி தலைவர்கள் பலரும் ஆளாளுக்கு தங்களுக்கான ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ள பேசி வரும் "ஷத்திரிய வீரம்" பற்றிய பேச்சுகளே ஆகும்! 

அது ஒரு விதமான தவறான வீண் பெருமையை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் விதைத்து அவர்களை ஒரு ஜாதீய வெறி பிடித்த தீவிரவாதிகளாக மாற்றுகிறது! அவர்கள் இனி கல்வியில் கவனம் செலுத்த மாட்டார்கள்; ஒரு தலைவனுக்கு அடிமையாக ஜாதிப் பெருமை மட்டும் பேசிக் கொண்டு திரிந்து கல்வி வேலைவாய்ப்பு மீது கவனம் செலுத்தாமல் சீரழிந்து போவார்கள்!

நீங்கள் ஒன்றை கூர்மையாக கவனித்து பார்த்திருக்கிறீர்களா? காதல் திருமணங்களையும், சாதி மறுப்பு திருமணங்களையும் இந்தியாவிலேயே ஒரு கொள்கை ரீதியாக ஒரு தொடர்ந்த வேலைத் திட்டமாக தந்தை பெரியார் துவங்கி வைத்த திராவிடர் இயக்கங்கள் மட்டுமே தொடர்ந்து செய்து வந்தன/ வருகின்றன/ வரும்! 

ஏனென்றால், வெறும் கல்வி அறிவு வழியாக மட்டுமே ஒரு அடிப்படை சமூகப் புரட்சியைச் செய்துவிட முடியாது!

அதற்கு ஒரு தொடர்ந்த உயர்நோக்கம் உள்ள சமூகத் தொண்டு, இடையறாமல் நடைபெற வேண்டும்! அதனால் தான் அம்பேத்கர் இயக்கங்கள், வெறும் ஓட்டு அரசியல் மட்டும் பேசிக் கொண்டு வடக்கில் படுதோல்வி அடைந்து விட்டன!

ஈராயிரம் வருடத்திற்கு மேலான இறுக்கமான சாதி அமைப்பு, கொஞ்சமாவது தளர்ந்து இன்று நமது தமிழகத்தில் இயங்கும் பற்பல திருமண பதிவு மையங்களில் "எந்த சாதியானாலும் பரவாயில்லை!" என்று பேசும் நிலை தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது! 

அதற்கு மூல காரணம் பெரியார் இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும், சொல்ல போனால் அத்தகு சாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு தரும் சாதி மறுப்பு திருமணங்கள் தாம்!

ஆனால் நமக்கு கொஞ்சம் கெட்ட காலமாக, வன்னியர் கட்சி (பா.ம.க) ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணமூர்த்தி போன்ற ஜாதிக்கட்சி ஆட்களால் தமிழகத்தில் சாதியின் இறுக்கம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது! 

அது ஆரிய பார்ப்பன பாஜகவுக்கு குதூகலம் ஏற்படுத்தியுள்ளது! ஆரிய பாஜகவுக்கும் ஜாதி கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த நன்மைகள் இருக்கின்றனவே!

மேலும் பார்ப்பனீய சனாதன சாதிக் கட்சிகளை பாஜகவினர் உள்ளே கொண்டு வந்து வடநாடு போல தமிழ்நாட்டை துர்நாற்றம் வீசும் வர்ணாஸ்ரம சாக்கடையாக மாற்றத் துடிக்கிறார்கள்!

ஆனாலும் நாம் அந்த சாதி அமைப்பை, உயர் கல்வி மற்றும் பெரியாரிய தொடர் பரப்புரைகள் வழியாக உடைத்தெறிந்து ஒரு சமத்துவ சமூகத்தை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும்! அது ஒன்றே வழி!

சரி! அதை, பெரியார் இயக்கங்கள் துணை இன்றி வெறும் அம்பேத்கர் இயக்கங்கள் வழியாக செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது! காரணம் அம்பேத்கர் இயக்கம் என்று வரும் பொழுது அது தலித்துகள் பெரும்பான்மை பங்கு வகிப்பது தானே என்று உயர் தட்டு வர்க்கம் சட்டென வெறுப்பு கொள்கிறது! 

அதில் கலந்து பெரும்பான்மைச் சமூகம் எவரும் பங்களிப்புச் செய்ய முன் வருவதில்லை! (Don't say about Exceptions. Exceptions cannot be a Rule)

ஏழைகள் பேசும் கம்யூனிசத்தை பணக்காரர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ, அப்படியே சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் பேசும் சமத்துவ நெறியை உயர் வகுப்பினர் என்று தம்மைக் கருதுபவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள்!

அங்குதான் அனைத்து சமூக மக்களும் கலந்து பங்களிக்கும் தந்தை பெரியாரின் இயக்கங்கள் நமக்கு ஒரு நம்பிக்கை ஊட்டுகின்றன! ஒரு சமரசம் இன்றி செயல்பட்டவாறு தொடர்ந்த சமூக மாற்றத்தை அவை ஏற்படுத்தி வருகின்றன! 

சொல்லப் போனால், இந்தியாவின் பிற மாநிலங்களிலேயே தமிழகத்தில் மட்டும் தான் சாதி மறுப்பு திருமணங்களுக்கு 95% அளவுக்கேனும் சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளது! சங்க காலம் போல காதல் மனம் தான் ஜாதியை ஒழிக்கும் சிறந்த துணையாகும்! 

அதைப் புரிந்து கொண்ட ஜாதி வெறியர்கள் காதல் மணத்துக்கும் இப்போது தடையாக இருந்து அவர்களைக் கொலை செய்யும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்! அங்கு சாதி ஓட்டு வாங்கி பிழைக்கும் அரசியல் கட்சிகள் மவுனம் சாதிக்கும் நிலை ஏற்படுகிறது!

ஆனாலும், இங்கு ஓட்டு கேட்கும் அரசியல் கட்சியாக இல்லாமல் வெறும் சமுதாய இயக்கமாக செயல்படுகின்ற தலைவர்களைக் கொண்ட பெரியார் இயக்கங்கள் உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகம் காணப்படுகின்றன! 

அதுவே தந்தை பெரியார் மீது நாம் வைக்கும் பெருமதிப்பிற்கு இன்னும் ஆழமான காரணமாக அமைந்து விடுகிறது!

தந்தை பெரியார் ஆரம்பித்த திராவிடர் கழகத்தை இன்று வரை வழி நடத்தும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், தோழர் கோவை கு. ராமகிருஷ்ணன், தோழர் கொளத்தூர் மணி அவர்கள், மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் போன்றோர் எந்தவித சிறு சுயநலமும் இல்லாமல் தொடர் பரப்புரை செய்கிறார்கள்! அவர்கள் பேசுகின்ற நடத்துகின்ற, தமிழ் மக்களை பண்படுத்தி வரும் சமூகப் புரட்சிதான் என்ன என்பதை சற்று நிதானமாக நாம் படித்தால் அதன் வீரியத்தை அதனால் நாம் பெற்றுவரும் நற்பலனை நன்கு உணரலாம்!

அது புரிய வேண்டும் என்றால் பிற மாநிலத்து சாதி மறுப்பு இணையர்கள் தமிழ்நாட்டில் வந்து அடைக்கலம் புகுந்து திருமணம் செய்து கொள்வது ஏன் என்றும் நமக்கு எளிதாகப் புரியும்!

ஆக, இங்கு கடைசியாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், இந்தியாவில் ஒரு சமத்துவ சமூகம், சாதியற்ற சமூகம் உருவாக வேண்டும் என்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்!

சனாதன அதர்மத்தை, அது ஏற்படுத்திய ஜாதியை ஒழிக்க பெரியாரின்  கொள்கைகள் என்னும் படைக்கலன்கள் தான் முக்கிய பங்கு வகிக்க முடியும்! அவை மட்டுமே ஒழிக்கும் கருவிகளாக செயல்படும்! அதற்கு மாறாக கல்வி கற்பது மட்டுமே போதும், ஜாதியை ஒழித்து விடலாம் என்ற அம்பேத்கர் வழியில் சென்றால் அது வெறும் கேடயத்தை தூக்கிக்கொண்டு போருக்கு செல்வது போன்றதாகும்!

கேடயங்கள் வெறும் தற்காப்பு வேலைகளுக்கு பயன்படுகின்றன; அது முன்னேறிச் சென்று தீமைகளை அழிக்க பயன்படாது!

கேடயத்தினால் பெரும் பயனேதும் கிட்டி விடாது! அதையே நாம் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

ஆனால், படைக்கலன்கள் என்பன சமூகத் தீமைகளை, சாதீய கட்டுமானங்களை, நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் ஒழிக்கும் கருவிகளாக செயல்படும் சக்தி மிக்கவை!

ஆகவே தந்தைப் பெரியாரைப் புறம் தள்ளிவிட்டு இந்தியாவில் ஒரு பெரிய சமூக புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று சில பல தலைவர்கள் நினைப்பதும் பேசுவதும் வெறும் பகல் கனவே ஆகும்! 

நான் சொல்வதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்!

-YozenBalki 

💫💫💫💫