Translate this blog to any language

திங்கள், 25 நவம்பர், 2024

நீ ஓடிக் கொண்டிருக்க வேண்டும்! Run Run Run!!



Every morning in Africa, a deer wakes up
It knows it must run faster than the fastest cheetah or it will be killed.

Every morning a lion wakes up
It knows it must outrun the fastest gazelle or it will starve.

It doesn't matter whether you're a Cheetah or deer; when the sun comes up, you'd better be running.

Translation: 😂 😁 ❣️ 😁❣️ 

ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு காலையிலும் ஒரு மான் எழுகிறது,
அது வேகமான சிறுத்தையை விட வேகமாக ஓட வேண்டும்; இல்லை என்றால் அது கொல்லப்படும்.

ஒவ்வொரு காலையிலும் ஒரு சிங்கம் எழுகிறது,
அது வேகமாக ஓடும் மானை விட வேகமாக ஓட வேண்டும்; இல்லை என்றால் அது பசியால் உயிரிழக்கும்.

நீ சிறுத்தையாக இருக்கிறாயா அல்லது மானாக இருக்கிறாயா என்பது முக்கியமில்லை;
சூரியன் உதிக்கும் போது நீ ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

-இணையத்தில் எங்கோ பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது! அதான் இங்க போட்டு இருக்கேன்! 

🌿🌿☀️☀️



புதன், 13 நவம்பர், 2024

"தூங்கா நகரம்", மதுரை: ஏன்?

மதுரை “தூங்கா நகரம்” என அழைக்கப்படுவதற்குக் காரணங்கள் என்ன?


“#தூங்கா_நகரம்” என்பது இரவு-பகல் வேறுபாடின்றி எந்த நேரமும் (24*7) செயற்பட்டுக் கொண்டிருக்கும் நகர் என்ற பொருளில் அமையும். 

இன்று நேற்றல்ல, மதுரையானது #சங்க_காலம்_முதற்கொண்டே ‘தூங்கா நகரம்’ என்ற பெயரிற்கு ஏற்பவே தொழிற்பட்டு வந்துள்ளது. 

ஒரு சங்ககாலப் பாடல் (மதுரைக் காஞ்சி 425) இருக்கு

“மழைகொளக் குறையாது புனல்புக மிகாது கரைபொருது இரங்கு முந்நீர் போலக் கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங்காடி” -(மதுரைக்காஞ்சி 425)

மேற்குறித்த பாடலில் மதுரைச் சந்தையானது நாளங்காடி எனக் குறிக்கப்படுவதனைக் காணலாம். 

நாளங்காடி என்ற சொல்லானது #பகற்_சந்தையினையே குறிக்கும். 

#நாளங்காடி - #அல்லங்காடி (இரவுச் சந்தை) என்ற வேறுபாடு இருந்ததனாலேயே #நாளங்காடி’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

#அங்காடி என்ற பொதுப் பெயரே பயன்படுத்தப்பட்டிருக்கும். 

இதோ இன்னொரு பாடலில் அல்லங்காடி பற்றி நேரடியாகவே குறிப்பிடப்படுகின்றது.

அல் (இரவு)+ அங்காடி (சந்தை)= அல்லங்காடி (இரவுச் சந்தை).

“பல்வேறு புள்ளின் இசையெழுந்தற்றே
அல்லங்காடி அழிதரு கம்பலை” - (மதுரைக்காஞ்சி543-44)
சிலப்பதிகாரத்திலும் மதுரையின் சிறப்பு பேசப்படுகின்றது.

இவ்வாறு 2000 ஆண்டுகளிற்கு முற்பட்ட காலத்திலேயே #மதுரை_தூங்கா_நகரமாகவே”காட்சியளித்துள்ளது.

இன்றும் மதுரையின் சில பகுதிகளில் பகல்- இரவு வேறுபாடு தெரியாதளவிற்கு வணிகம் நடைபெறும் பகுதிகள் உண்டு. 

எடுத்துக் காட்டாக, சிம்மக்கல்பகுதியில் இரவு நேரத்தில் திறக்கப்பட்டு, பகலினை விட பரபரப்பாக இயங்கும் தேநீர் கடைகளைக் காணலாம். 

இங்கு பழங்களை கொள்வனவு செய்ய வணிகர்கள் இரவு நேரத்திலேயே பெரிதும் கூடுவார்கள். 

#யானைக்_கல்பகுதியில் சில கடைகளிற்கு கதவுகளே இல்லை என்றும், ஏனெனில் அவை #மூடப்படுவதேயில்லை என்றும் கூட சொல்லப்படுகிறது. 

அதே போன்று #கறிமேடு_மீன் சந்தையும் நடு இரவிலேயே பரபரப்பாக இயங்கும். 

இவ்வாறான காரணங்களாலேயே மதுரையானது இன்றும் “#தூங்கா_நகரமாக” விளங்குகின்றது.
வழக்கம் போலவே இதற்கும் ஒரு புராணக்கதை கட்ட மதவாதிகள் தவறவில்லை. 

அதாவது மதுரை மீனாட்சி கண் சிமிட்டாமல் கண் விழித்து மதுரையினை காவல் காப்பதனாலேயே “தூங்கா நகர்” என்ற பெயர் வந்தது என்பதே அந்தக் கட்டுகதை. 

அவ்வாறாயின், ஏனைய ஊர்களிலுள்ள தெய்வங்கள் தூங்கி மக்களை காவல் காப்பதிலிருந்து தவறுகின்றனவா? என்பதனை இவர்கள் விளக்குவதில்லை. 

இது அறிவிற்கொவ்வா கற்பனைக் கதை.

முடிவாக, சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் மதுரை வணிகத்தில் பகல்+இரவு நேரங்களில் சிறந்து விளங்கியமையாலேயே 
‘#தூங்கா_நகர்’ என்ற 
பெயர் பெற்றது.
🌿🌿

Courtesy: எனது ட்விட்டர் தோழர்
சுவர்ணா அவர்கள் 
X தளத்தில் இன்று எழுதி இருந்தார்! 

@swarna718051021

செவ்வாய், 12 நவம்பர், 2024

ஒறவே!! திராவிடத்தால் வீழ்ந்தோம்!!😋😋

திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்றீயே தம்பி, உன்னோட பெயர் என்ன?

Selvam sir!

சரி, அப்பா என்ன வேலை செய்றாறு..?

சிறு விவசாயி சார்..

அப்பா பெயர் என்ன..?

கோபால் சார்..

தாத்தா பெயர் என்ன..?

குப்புசாமி..

ரெண்டு பேரும் என்ன படிச்சிருக்காங்க..?

தாத்தா கை நாட்டு, அப்பா எட்டாவது வரை படிச்சிருக்கார்..

நீ..?

பி.இ.

காசு கட்டி படிச்சியா?

இல்ல, பிரீ சீட்.. MBC/BC/SC கோட்டா.. முதல் தலைமுறை பட்டதாரி சலுகை, இலவச பஸ் பாஸ் எல்லாம் குடுத்தாங்க.. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுத்தாங்க..

அம்மா என்ன தம்பி செய்றாங்க?

வீட்டோட தான் இருக்காங்க, ரொம்ப நாளைக்கு முன்னாடி கர்ப்பப்பை புற்றுநோய் வந்தது, கலைஞர் காப்பீட்டு திட்டத்தில இலவசமா ஆபரேஷன் செய்துகிட்டங்க.. இப்போ நல்லா இருக்காங்க..

நீ மட்டும் ஒரே பையனாப்பா?

இல்லைங்க, ஒரே தங்கச்சி, நுழைவுத் தேர்வ ரத்து செய்தப்போ, ஓபன் கோட்டாவுல மெடிக்கல் சீட் கிடைச்சது.. இப்போ லண்டன்ல மேற்படிப்பு படிச்சிட்டு இருக்காங்க..

சரி தம்பி, இப்ப நீங்க என்ன செய்யுற..?

நான், ஒரு MNC கம்பெனியில சாப்ட்வேர் மேனேஜரா வேலை செய்யுறேன்.. ஆன்சைட்ல கொஞ்சநாள் இருந்தேன்..

கல்யாணம் ஆயிடுச்சா..?

கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகள் இருக்காங்க..

உங்க மனைவி என்ன செய்றாங்க..?

அவுங்க ஈபில இஞ்சினியரா வேலை பார்க்கிறாங்க

உங்க பிள்ளைகள் கவர்மெண்ட் ஸ்கூல்யா படிக்கிறாங்கா..?

நோ.. நோ.. கான்வெண்ட்ல படிக்கிறாங்க..

அப்புறம், சொந்தம்மா வீடு? கார்??

கிராமத்துல சின்னதா ஓட்டு வீடு, பாகம் பிரிச்சதுல பெரியப்பாவுக்கு போயிடுச்சி.. பக்கத்து டவுன்ல வாடகவீடுல தான் இருந்து படிச்சேன், வளர்ந்தேன்.. ஆனா, இப்போ, சென்னை OMRல டீலக்ஸ் டிரிபுள் பெட்ரூம் பிளாட்டு, ECRல வைஃப் பேர்ல பண்ணை வீடு, SUV காருன்னு செட்டில் ஆயிட்டேன்..

சரி தம்பி! 

இதுக்கிடையில் எங்க தம்பி திராவிடத்தால் வீழ்ந்திங்க..?

அது வந்து.. அது வந்து..

சொல்லுங்க தம்பி , எப்ப திராவிடத்தால் வீழ்ந்த..?

சார் மன்னிச்சிக்கங்க, இப்படி சொல்லியே பழக்கமாயிடுச்சி அதான்.. ஆனா, சார், எல்லா மாநிலத்திலேயும் தான் மக்கள் முன்னேறியிருக்காங்க.. இது என்ன பெரிய விஷயம்மா?

கரெக்ட்டான கேள்வி தம்பி... 

நாளைக்கு உன்னோட ஆபீசுக்கு போன உடனே, உன் கூட வேலை செய்யுற மற்ற மாநில ஆட்களை பாரு, குறிப்பா வட மாநில ஆட்கள, அவுங்க பேர்ல இருக்க 'சர் நேம்ம' கூகிள்ல தேடு.. அதுல 80% ஒரு குறிப்பிட்ட முன்னேறிய பிரிவ சேர்ந்தவங்களா இருப்பாங்க, அதுவும் சிட்டியில படிச்சி வளந்தவுங்களா இருப்பாங்க.. 

ஆனா, ஐடி போன்ற கார்பரேட்கள்ள வேலை செய்யுற தமிழ்நாட்ட சேந்தவுங்கள பாத்தா, எல்லா தரப்பையும், பிரிவுகளையும் சேர்ந்தவுங்க கட்டயமா இருப்பாங்க.. ஏன்னா, இங்கிருப்பது, அனைவருக்கும் பலனளிக்கும் ஒருங்கிணைத்த வளர்ச்சி, இன்குளுசிவ் க்ரோத்.. மற்ற இடங்கள்ள அப்படி இல்ல..  

அப்படிங்களா சார்...  
 
ஆமா, போன்ல நெட் இருக்குல்ல, அதுல தேடி, தமிழ் நாடு எப்படி இந்தியாவுல எல்லா சமூக சுகாதார பொருளாதார குறியீடுகள்ள (Social economical indicators) தொடர்ச்சியா முதலிரண்டு இடங்கள்ள இருக்கு, GDPல இரெண்டாம் இடத்துல இருக்கு.. இதையெல்லாம் படிச்சி தெரிஞ்சிக்குங்க.. 

வெறும் வாட்ச்சப்ல யாரோ பார்வர்ட் செய்வத அப்படியே நம்பாதிங்க.. விஷங்களை தேடி, படிச்சி உண்மைய தெரிஞ்சிகிங்க...  

ரொம்ப நன்றி சார்.. கண்டிப்பா படிக்கிறேன் சார்...

👋👋👋👋 The truth
Courtesy:

ட்விட்டரில் என்னுடைய நண்பர் சண்முகம் சின்னராஜ் எழுதியது
@shanmugamchin10

வியாழன், 31 அக்டோபர், 2024

Deepavali (Diwali) Cele-bright: A thought: A poem:




To celebrate like a believer, bright and bold,
Or question like a skeptic, stories old.
Between these worlds, I find my way,
For children’s laughter, I light the day.

Until our Tamil land brings forth a fest,
With meaning deep, a brighter crest,
What can one do, but join the cheer,
With hope for change in future years?

I know the myths, dark and deep,
And Sivakasi’s children, struggles steep.
In this balance, torn I stand,
Wishing joy, yet hearts to understand.

So, here I am, in between,
Lighting lamps, yet keeping clean.
Until another festival rises high,
What choice remains but to comply?

For those who celebrate, may joy be near,
For those who question, lend a Sivakasi ear.

-Yozenbalki 
♥️😭😭♥️


ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

இதெல்லாம் கவிஞர் வாலி!! Yovv! We Miss You So Much!! 🌿💯🙏🏻🙏🏻



கண்ணிரண்டில் 100
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்

மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்!

-கவிஞர் வாலி 💞💞🌿🌿
(போயா யோவ்! சாகடிக்கிற!)
💯🙏🏻🙏🏻💯

YouTube My Clip:

https://youtube.com/clip/UgkxKkItHJq8VX-F6vOrX_xBEPKCTNUebRzD?si=-jH0uT9hythp0ngW


படம்: வள்ளி

கவிஞர் வாலி
இளையராஜா 
சொர்ணலதா 

இந்த மூன்று பேரும் சேர்ந்து 
நம்மள என்னமோ பண்றாங்க...
மயங்கிப் போவுது மனசு!!

🌿🌿💗💗

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

Aryan Brahmin's Endless lies !!


The Aryan Brahmin’s endless lies, 
Deception spreads beneath the skies.  
A thousand vile deeds, unseen, unfurled,  
Their darkness hidden from the world.  
  
The media stands by their side,  
Betraying people with false pride.  
In righteous masks, they play their part,  
But treachery lies in their heart.  
  
A crowd believes their woven tales,  
Falsehood upon the land prevails.  
They worship lies, the truth unknown,  
But when it's seen, they’re overthrown.  

The Aryan's fall will surely be,  
When truth brings light to what we see.  
Justice will rise, the lies will burn,  
And freedom’s voice will then return!

-YozenBalki 

சனி, 7 செப்டம்பர், 2024

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி உடைக்க முடியுமா?


பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா?

பெரியார் காலத்தில் அவரது செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன RSS & சங்கிகள், தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது இப்படி சவால் விடுகிறார்கள்.

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து "சூத்திரப்பயலே தள்ளிப் போடா" என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?

2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?

4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?

6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?

7) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

8) முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?

9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! 

இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?

13) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?

14) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?

15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

17)முன்பு RSS தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு, அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விலக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே, இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?

18)முன்பு எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே, இன்று அதுபோல் வரி போட முடியுமா?

19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

20) முன்பு ஸ்ரீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே! இப்போது அப்படி வைக்க முடியுமா?

21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

24) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?

25)இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

26)அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?

27) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க. குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?

28) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?

29) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?

30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?

31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?

32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?

34) 5 வயசு பார்ப்பன பொடியன் 60 வயசு முதியவரை டேய் குப்பா , டேய் முனியான்னு கூப்பிட்டீங்களே! இப்ப அப்படி கூப்பிட முடியுமா ?

35 இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எறித்தார்.

பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள்!
ஏமாறப் போவது நீங்கள்தான்!

-Courtesy:
https://x.com/dravidafirewall?t=twSu2kApJ0NTJnxGX6s1mw&s=09