நான் உளவியல் நிபுணர் என்ற வகையில் பல ஆண்டுகளாக மனிதர்களுடைய மனதைப் பற்றி கவனித்து வருகிறேன்.
ஒரு விஷயம் என்னை அடிக்கடி சிந்திக்க வைக்கிறது.
இன்றைய மனிதனிடம் தொடர்புகள் அதிகமாக இருக்கின்றன; ஆனால் உண்மையான உறவுகள் குறைந்து கொண்டிருக்கின்றன.
நம்முடைய Phone Contact List-ல் நூற்றுக்கணக்கான பெயர்கள் இருக்கின்றன. Social Media-வில் ஆயிரக்கணக்கான Followers இருக்கிறார்கள். WhatsApp-ல் பல Groups இருக்கின்றன.
ஆனால் ஒரு நாள் மனம் உடைந்து போனால்,
“என்ன நடந்தாலும் பரவாயில்லை… நீ என்னிடம் பேசலாம்”
என்று சொல்லக்கூடிய ஒருவர் நம்மிடம் இருக்கிறாரா?
இதுதான் நான் இங்கே பேச விரும்பும் முக்கியமான உளவியல் பிரச்சனை.
தனிமை என்பது தனியாக இருப்பது மட்டுமல்ல
Psychology-ல் Loneliness என்று சொல்லப்படும் தனிமை உணர்வு என்பது, சுற்றிலும் யாரும் இல்லாத நிலை மட்டுமல்ல.
சில நேரங்களில் நூறு பேர் நடுவிலும் ஒருவர் மிகவும் தனிமையாக உணரலாம்.
அதற்கு மாறாக, தனியாக வாழும் ஒருவர் கூட தன்னுடன் உண்மையாகப் பேசக்கூடிய சில மனிதர்கள் இருப்பதால் மனதளவில் மிகவும் நிறைவாக இருக்கலாம்.
நான் கவனித்த வரையில் மனம் விட்டு பேச சரியான ஒரு சில நண்பர்கள் இல்லாதவர்கள் தான் வாழ்க்கையில் ஒரு தீவிரமான பிரச்சினை வரும்பொழுது கடுமையான சில உளவியல் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால், Social Isolation மற்றும் Loneliness இரண்டும் ஒன்றல்ல.
Social Isolation என்பது சமூகத் தொடர்புகள் குறைவாக இருப்பது.
Loneliness என்பது “என்னை உண்மையாகப் புரிந்துகொள்ள யாரும் இல்லை” என்ற உள்ளார்ந்த உணர்வு.
இந்த இரண்டுமே நீண்ட காலம் தொடரும்போது மனிதனுடைய Emotional Well-being பாதிக்கப்படலாம்.
ஏன் ஒரு நல்ல நண்பர் அவ்வளவு முக்கியம்?
நான் பல வருடங்களாக மனிதர்களிடம் கவனித்த ஒரு விஷயம் இருக்கிறது.
பல பிரச்சனைகளுக்கு மனிதர்களுக்கு முதலில் தேவைப்படுவது அறிவுரை அல்ல.
ஒருவர் தங்களைத் தீர்ப்பளிக்காமல் கேட்பது.
அதுதான் Emotional Support.
ஒரு நல்ல நண்பன் நம்முடைய பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் இருக்கலாம்.
ஆனால்,
“நான் உன்னுடன் இருக்கிறேன்”
என்று சொல்ல முடியும்.
அந்த ஒரு உணர்வே பல நேரங்களில் மனதிற்கு மிகப்பெரிய பாதுகாப்பாக மாறுகிறது.
Psychology-ல் இதை Social Support என்று குறிப்பிடுகிறோம்.
நல்ல சமூக ஆதரவு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் நம்முடைய Stress Response-ஐ சமநிலைப்படுத்த உதவக்கூடும். வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கும் Resilience-ஐயும் அது வலுப்படுத்துகிறது.
நண்பர்கள் நம்முடைய மன ஆரோக்கியத்திற்கு ஒரு பாதுகாப்பு வளையம் ஒரு மனிதனுக்கு உண்மையான நண்பர்கள் இருக்கும்போது அவனுக்கு பேசுவதற்கான இடம் கிடைக்கிறது.
சிரிப்பதற்கான இடம் கிடைக்கிறது.
தன்னுடைய பயத்தை வெளிப்படுத்துவதற்கான இடம் கிடைக்கிறது.
தன்னுடைய தோல்வியை மறைக்காமல் சொல்லக்கூடிய இடம் கிடைக்கிறது.
இதனால் மனதிற்குள் உணர்வுகளை அடக்கி வைக்கும் Emotional Suppression குறையலாம்.
அதேபோல், ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ச்சியான மனித உறவுகள் இருப்பது Cognitive Well-being-க்கும் முக்கியமானதாக இருக்கலாம்.
மனிதன் ஒரு Social Being.
அவனுடைய மூளை கூட உறவுகளுக்குள் தான் முழுமையாக இயங்குகிறது.
ஆனால் இன்றைய வாழ்க்கையில் என்ன மாறிவிட்டது?
நாம் மிகவும் பிஸியாகிவிட்டோம்.
வேலை.
பணம்.
Target.
Career.
Children.
EMI.
Social Media.
Mobile Phone.
இதற்கிடையில் ஒரு நண்பனை அழைத்து,
“எப்படி இருக்கிறாய்?”
என்று கேட்பதற்கே நேரமில்லை.
“நேரமில்லை நண்பா…”
இது இன்று நம்முடைய வாழ்க்கையின் மிகவும் சாதாரணமான பதிலாகிவிட்டது.
ஆனால் உண்மையில் நமக்கு நேரமில்லையா?
அல்லது நம்முடைய Priority மாறிவிட்டதா?
நாம் பணம் சம்பாதிக்க நேரம் ஒதுக்குகிறோம்.
நம் உடலை பராமரிக்க நேரம் ஒதுக்குகிறோம்.
Mobile Screen-க்கு நேரம் ஒதுக்குகிறோம்.
ஆனால் நம்முடைய மனதிற்கு தேவையான மனித உறவுகளுக்கு நேரம் ஒதுக்க மறந்துவிட்டோம்.
Social Media நட்பும் உண்மையான நட்பும்
Facebook-ல் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கலாம்.
Instagram-ல் ஆயிரக்கணக்கான Followers இருக்கலாம்.
WhatsApp-ல் நூறு Groups இருக்கலாம்.
ஆனால் இவை அனைத்தும் Emotional Intimacy-ஐ உருவாக்கிவிடும் என்று நினைக்கக்கூடாது.
ஒருவருடைய photograph-க்கு Like செய்வது வேறு.
அவருடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று உண்மையாகக் கேட்பது வேறு.
“Happy Birthday” என்று ஒரு Message அனுப்புவது வேறு.
அவர் வாழ்க்கையில் உடைந்து போகும் நேரத்தில் அவருடன் இருப்பது வேறு.
Digital Connection என்பது Human Connection-க்கு சமமானது அல்ல.
Technology மனிதர்களை இணைத்திருக்கிறது.
ஆனால் சில நேரங்களில் அது மனிதர்களை இன்னும் ஆழமாகத் தனிமைப்படுத்தவும் செய்கிறது.
நட்பு Instant Noodles அல்ல!
ஒரு நல்ல நட்பு ஒரே நாளில் உருவாகாது.
அதற்கு Time Investment தேவை.
ஒருவருடன் தொடர்ந்து பேச வேண்டும்.
அவருடைய வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
அவருடைய சந்தோஷத்தில் சந்தோஷப்பட வேண்டும்.
அவருடைய கஷ்டத்தில் அருகில் இருக்க வேண்டும்.
சிறிய தவறுகளை மன்னிக்க வேண்டும்.
நம்முடைய Ego-வை சில நேரங்களில் பக்கத்தில் வைக்க வேண்டும்.
அப்போதுதான் ஒரு சாதாரண அறிமுகம் மெதுவாக நட்பாக மாறுகிறது.
நட்பு உருவான பிறகும் அதை பராமரிக்க வேண்டும்.
ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் விட்டால் அது வாடிவிடும்.
அதேபோல,
நட்புக்கும் தண்ணீர் தேவை.
அந்தத் தண்ணீரின் பெயர் உரையாடல்.
நம்முடைய நண்பர்கள் உண்மையானவர்களா?
இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுப் பார்க்க வேண்டும்.
நாம் வேலை செய்யும் இடத்தில் பலருடன் பழகலாம்.
ஆனால் எல்லா Workplace Relationships-ம் ஆழமான நட்பாக மாறுவதில்லை.
Social Media-வில் பலருடன் தொடர்பில் இருக்கலாம்.
ஆனால் எல்லோரும் Emotional Support System ஆக இருப்பதில்லை.
சில நண்பர்கள் நம்முடன் சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்து கொள்வார்கள்.
சில நண்பர்கள் நம்முடைய கண்ணீரையும் பார்த்திருக்கிறார்கள்.
இந்த இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
Attachment-ன் அழகு
மனிதனுக்கு Attachment என்பது மிகவும் அடிப்படையான உளவியல் தேவை.
நம்மை யாரோ ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வு கூட மனதிற்கு பாதுகாப்பைத் தருகிறது.
“எனக்கு யாரோ இருக்கிறார்கள்”
என்ற உணர்வு ஒரு மனிதனுடைய மனத்தில் மிகப்பெரிய Psychological Security-ஐ உருவாக்குகிறது.
அதனால் தான் உண்மையான நட்பு வயது அதிகரிக்கும்போது இன்னும் முக்கியமாகிறது.
இளமையில் நண்பர்கள் இயல்பாக கிடைத்துவிடுவார்கள்.
பள்ளி.
கல்லூரி.
வேலை.
விளையாட்டு.
ஆனால் வயது அதிகரிக்கும்போது வாழ்க்கை வேறு திசையில் செல்கிறது.
பொறுப்புகள் அதிகரிக்கின்றன.
அதனால் புதிய நட்புகளை உருவாக்குவதும், பழைய நட்புகளை பாதுகாப்பதும் ஒரு conscious effort ஆகிறது.
அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
முதலில் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நட்பு தானாகத் தொடராது.
நாம் அதற்கு நேரம் கொடுக்க வேண்டும்.
நீண்ட நாட்களாக பேசாத ஒரு நண்பரை இன்று அழைக்கலாம்.
“எப்படி இருக்கிறாய்?” என்று மட்டும் கேட்கலாம்.
வாரம் ஒருமுறை சந்திக்கலாம்.
சந்திக்கும் போது Mobile Phone-ஐ சில நிமிடங்கள் பக்கத்தில் வைக்கலாம்.
மனம் விட்டுப் பேசலாம்.
மற்றவர்களின் கதையை கேட்கலாம்.
தேவைப்பட்டால்,
“மன்னித்துவிடு.”
என்று சொல்லலாம்.
தேவைப்பட்டால்,
“நன்றி.”
என்று சொல்லலாம்.
சில சமயங்களில் ஒரு நட்பை காப்பாற்றுவதற்கு பெரிய தியாகங்கள் தேவையில்லை.
ஒரு சிறிய Phone Call போதும்.
ஒரு உண்மையான வார்த்தை போதும்.
ஒரு அன்பான சந்திப்பு போதும்.
கடைசியாக ஒரு விஷயம்...
நம்முடைய வாழ்க்கையில் பணம் தேவை.
பதவி தேவை.
வெற்றி தேவை.
ஆனால் இவை எல்லாவற்றையும் அனுபவிக்க ஒரு மனமும் தேவை.
அந்த மனம் சோர்ந்து போகும் நேரத்தில் அருகில் உட்காரும் ஒரு மனிதன் தேவை.
நம்முடைய வெற்றியைப் பார்த்து உண்மையாக மகிழும் ஒருவர் தேவை.
நம்முடைய தோல்வியைப் பார்த்து நம்மை விட்டு ஓடாமல் இருப்பவர் தேவை.
அவர்தான் நண்பர்.
அதனால் நான் சொல்ல விரும்புவது ஒன்றே.
நண்பர்களை எண்ணிக்கையில் அளக்காதீர்கள்.
நெருக்கத்தில் அளவிடுங்கள்.
ஆயிரம் Contacts இருப்பதைவிட,
ஒரு உண்மையான நண்பர் இருப்பது பெரிய விஷயம்.
உங்கள் Contact List-ஐ இன்று ஒருமுறை பாருங்கள்.
நீண்ட நாட்களாக பேசாத ஒரு நல்ல நண்பரின் பெயர் அதில் இருக்கலாம்.
அவருக்கு ஒரு Message அனுப்புங்கள்.
“நண்பா… ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கிறாய்?”
என்று மட்டும்.
ஒருவேளை அந்த ஒரு Message,
உங்களுடைய நட்பை மட்டுமல்ல…
ஒரு மனிதனுடைய தனிமையையும் மாற்றக்கூடும்.
நட்பை பாதுகாப்போம்.
நம்மை நாமே பாதுகாப்போம்.
-Yozen Balki




















