Translate this blog to any language

திங்கள், 5 செப்டம்பர், 2022

கரைக்கப் போன எடத்துலே!


பதினொண்ணாப்பு
படிக்கிற மவன்
ஏதோ கைடு வாங்கணும்ணு
500 ருவா கேட்டான்.

காசில்லய்யா அடுத்த மாசம்
வாங்கலாம்னு சொல்லிட்டேன்.
போன வருசத்த விட
இந்த வருசம்
பெருசா செய்யணும்ணு
எங்க தெருவுல பேசிக்கிட்டோம்.
ஆமா செமயா இருக்கணும்ணு
எனக்கும் ஆசை.
வீட்டுக்கு ரெண்டாயிரம் ருபா
போக...
ஆம்பளைங்க தகுதிகேத்த மாதிரி
எக்ஸ்ட்ரா.
நெனைச்ச மாதிரியே...
மெர்சல் பண்ணிட்டோம்.
அவ்ளோ பெருசு.
பாக்கிறவங்க எல்லாம்
பிரமிச்சாங்க.
ஒவ்வொரு நாளும்
செமயா செஞ்சோம்.
மைக் செட் ஸ்பீக்கர்,
பந்தல், பாயசம்னு...
வேற மாரி... 
பெரிய வண்டி பிடிச்சு
மேள தாளத்தோட
ஆட்டம் பாட்டம்னு
கொண்டு போனோம்.
யாரோ எங்க வண்டிய
நிறுத்தி கொடி கட்டி விட்டாங்க.
எங்க வண்டி மட்டுமில்ல
எல்லா வண்டிலயும்.
கடற்கரைக்குப் போனா
அம்மாங் கூட்டம்.
எவ்ளோ ஜனம்...
எத்தனை செல..
ஆனாங்காட்டி...
கரைக்க வந்த
எல்லாருமே 
கருப்பா தான் இருந்தாங்க.
வெள்ளையா செகப்பா
ஒருத்தனை ஒருத்திய
பாக்க முடியல.

பூணூல்போட்டவங்களையோ 
சமசுகிருத மந்திரங்கள் ஒதுரவங்களையோ 
ஒருத்தரக் கூட காணோம் 

பட்டை போட்டவனும் இல்லை 
நாமம் போட்டவனும் வரவில்லை 
பட்டாடை உடுத்துனவங்களோ
வெண்நூலாடை போட்டவங்களோ
யாருமே இல்ல.
பெரிய பெரிய பதவில
இருக்கிறவங்க 
யாரும் கூட்டத்தில 
இருக்கிற மாதிரி தெரியல.
ப்ச்...
ஏன் அவங்கல்லாம்
வரலேன்னு ஒரு கேள்வி.
அவங்க இதெல்லாம்
செய்ய மாட்டாங்களான்னு
கூட ஒரு கேள்வி.
அப்போ
நம்ம மட்டுந்தான்
இதெல்லாம் செய்றமா?

நமக்கு ஏன் அறிவில்லாம போச்சி?

கூட்டம் கூடுறதுக்கும் 
கும்மி அடிக்கிறதுக்கும்
 குத்தாட்டம் போடுறதுக்கும் 
கலவரம் செய்றதுக்கும் மட்டும்தான் நாமளா?  
அதுவரை கொண்டாட்டமா
இருந்த மனம்
சட்னு வடிஞ்சிருச்சி.
அங்க நிக்கவே
ஒரு மாதிரி இருந்தது.
கைடு வாங்க 
காசு கேட்ட மவன் மொகம்
கண்ணுக்குள்ள வந்து போச்சு.
திரும்பிப் பாக்காம
நடையைக் கட்டிட்டேன்.

புத்தி வந்து சேர்ந்ததாலே 

இனிமேல் இந்தக் கூட்டத்துல 
ஒருநாளும் சேர மாட்டேன் 
சங்கியா நான் சாக மாட்டேன்!

Courtesy:
Whatsapp University Professors
🌸🌸🙏🙏☘️☘️

வெள்ளி, 27 மே, 2022

"மனம் மனம் அறிய ஆவல்", புத்தகம் Practical Psychology

☘️🌸☘️🌸
நண்பர்களே!

எனது "யோஜென் மைண்ட்" உளஇயல் மையத்தின், 
*"மனம் மனம் அறிய ஆவல்"* எனும் புத்தகம் அமேசான் கிண்டிலில் வெளிவந்துள்ளது! (அதை செல்பேசியிலும் படிக்கலாம்)

மனம் மனமறிய ஆவல்: உளஇயல் உண்மைக் கதைகள் (Tamil Edition) https://www.amazon.in/dp/B0B1WRRXT1/ref=cm_sw_r_apan_BVZGBWBVKS4KYW25Q507

சிறு சிறு கதை வடிவத்தில் 25 தலைப்புகளில் உளஇயல் சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்படி மிகச்சிறிய நுட்பமான ஆலோசனைகள் மூலம் முழுமையான அரிய தீர்வுகள், தரப்பட்டுள்ளன என்பதை இந்தப் புத்தகம் அழகுற விளக்குகிறது!

வாங்கிப் படியுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றி சமூக ஊடகங்கள் வழியாக சொல்லி 'லிங்க்' அனுப்புங்கள்!


மிக்க அன்புடன்
YozenBalki
(Mohan Balakrishna) 

www.yozenmind.com


புதன், 25 மே, 2022

எத்தனை வரி வசூல் டா ங்கப்பா!!!

ஒரே ஒரு 'வரி' கேட்டதுக்கே கட்டபொம்மனுக்கு அவ்வளவு கோபம் வந்தது...

கடவுளே!

நான் I.T. கட்டி விட்டேன்
GST கட்டிவிட்டேன்
VAT கட்டி விட்டேன்
CST கட்டி விட்டேன்
Service Tax கட்டி விட்டேன்
Excise Duty கட்டி விட்டேன்
Customs Duty கட்டி விட்டேன்
Octroi கட்டி விட்டேன்
TDS கட்டி விட்டேன்
ESI கட்டி விட்டேன்
Property Tax கட்டி விட்டேன்
Stamp duty கட்டி விட்டேன்
CGT கட்டி விட்டேன்
Water Tax கட்டி விட்டேன்
Professional Tax கட்டி விட்டேன்
Corporate Tax கட்டி விட்டேன்
Road Tax கட்டி விட்டேன்
STT கட்டி விட்டேன்
Education Cess கட்டி விட்டேன்
Wealth Tax கட்டி விட்டேன்
TOT கட்டி விட்டேன்
Capital Gain Tax கட்டி விட்டேன்
Congestion Levy etc etc etc...
கட்டி விட்டேன்
TOLL GATE FEE - யும் 
 மாமூல்-ஐயும் கூட கட்டி விட்டேன்

இதுக்கு பேசாம வெள்ளக்காரன்கிட்ட அடிமையாவே இருந்துருக்கலாம் மை லார்டு.
😭😭😭

from Whatsapp University
-யாரோ

சனி, 21 மே, 2022

பெரியார் சொத்துக்கள் பெரியாரது முக்கிய கொள்கைகள் பரவ உபயோகப்படுகிறதா?

தந்தை பெரியார் அவர்கள் பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்க நிறுவனம் என்று பெயர் வைத்து விட்டுப் போனார்; கூடவே இன்றைய பண மதிப்பு சில ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களையும்!


எந்த காரணத்துக்காக துவங்கப்பட்டதோ அந்த காரணத்துக்காக 90% வருமான மிச்சத்து வட்டியை செலவிடுவது தான் தம் வாழ்நாள் முழுவதும் நமக்காக உழைத்த அன்புப் பெரியாருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், அறத்தொண்டு ஆகும்! 

மாதந்தோறும் வரும் உபரி வருமானத்தில் 80-90% பணத்தை பெரியார் மற்றும் திராவிடர் இயக்க முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதிய இலவச புத்தகங்கள் உலகம் முழுவதும் அனுப்பலாம், மாவட்ட செயலாளர்களுக்கு மாதம்தோறும் ஓரிரு பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்த ஒரு நியாயமான தொகையைப் பிரித்து தரலாம்!

அதே போல, இந்திய மாநிலங்கள்/உலகம் முழுவதும் பெரியார் சுயமரியாதை இயக்க கருத்துக்களை (ஆர்எஸ்எஸ் வைத்துள்ள ஆயிரக்கணக்கான Paid Staffs முழு நேரத் தொண்டர்களைப் போல), சில நூறு பேரையாவது நியமித்து கொள்கைகள் பரப்பலாம்! 

இது போன்ற எந்தவொரு நீண்டகால பிரச்சார திட்டங்களும், கூர்நோக்கு பார்வையும் இல்லாமல் எப்படி தந்தை பெரியாரின் கருத்துக்கள், எதிரிகள் மற்றும் துரோகிகளின் பண-பலம் பிரச்சார-பலத்தை மீறி வளர இயலும்? 
நன்றாக யோசித்துப் பாருங்கள்!

தற்போது பெரியார் திடலில் உள்ளவர்கள், அச்சு அசலாக பிற பல உலகிலுள்ள
மதவாதிகளைப் போலவே கல்வி நிறுவனங்கள் நடத்துவது, அதில் வரும் இலாபத்தில் இன்னொரு கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது, திராவிட நலநிதி என்று வட்டிக்கு விடுவது, என்ற வகையில் மட்டும் 90% பணம், உழைப்பு, நேரத்தை செலவு செய்வதாகவே எனக்குத் தோன்றுகிறது! உங்களுக்கு அப்படி தோன்றவில்லையா?

நாம் மிக மிக அபாயமான பெருநோய்கள் பீடிக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம்! தந்தை பெரியார் கொள்கைகள்தான் அதற்கு அருமருந்து என மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதே! அந்த "சமத்துவம்-சமூக நீதி", என்னும் மாமருந்து மானுட சமூகம் முழுவதும் விநியோகிக்கப்பட வேண்டாமா?

ஆக, பெரியார் கொள்கைகள் மீது உண்மையான பற்று உள்ளவர்கள்
பெரியார் சம்பாதித்த சொத்துக்கள், அவரது முக்கிய கொள்கைகளைப் பரப்புவதற்கு எத்தனை சதவீதம் பயன்படுகிறது என்ற மிக மிக முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும்! 

இது யாரையும் கொச்சை படுத்துவதற்காக அல்ல; காலமெல்லாம் நமது சூத்திர மக்கள் இழிவு நீங்க மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு உழைத்த, ஈடிணையற்ற அந்த அன்பின் பேரொளி, தந்தை பெரியாரின் நோக்கங்கள் சீக்கிரம் நிறைவேறத் தாம்!

-YozenBalki

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

EB ஆஃபீசரும் வாழைப்பழமும் !!

ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்...

*EB ஆபிஸர் :* வாழைபழம் என்னபா விலை..?

*வியாபாரி :* சார், பழத்தை எதுக்கு வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் விலை செல்ல முடியும்...?

*EB ஆபிஸர் :* என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

*வியாபாரி :* இல்ல சார், நீங்க இந்த வாழைப் பழத்த கோயிலுக்குனு வாங்குனா ஒரு பழம் 5 ரூபா.

வீட்ல குழந்தைகளுக்குனு வாங்கினா ஒரு பழம் 7 ரூபா.

தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா ஒரு பழம் 10 ரூபா.

நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 20 ரூபா சார்.

*EB ஆபிஸர் :* யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்.??

*வியாபாரி :* This is my tariff plan.
 நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு, வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி Rate னு சொல்வீங்க. கேட்டா tariff plan னு சொல்லுறீங்களே சார்!!!!."
😂😛

*Banana vendor rocked..*👍😂
*The EB officer shocked.*😳😳

⚡⚡🤩🤩💯💯⚡⚡

-Whatsapp University

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தற்போதைய இந்திய அரசியல் அமைப்பின் முரண்பாடுகள்!

⚔️🇮🇳✒️🇮🇳⚔️மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா குறிப்படுவது:

😰🇮🇳😰சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா?

நீங்களே முடிவு செய்யுங்கள்:

✒️🇮🇳🥨 1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது.
ஆனால், தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம்.

✒️🇮🇳🥨 2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.
ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.

✒️🇮🇳🥨 3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்கு சென்றால் கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்கு தடை விதிக்கப்படும்,
ஆனால், கொலை அல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரிய குற்றம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாக போட்டியிடலாம், அவர் பிரதமராகவும் அல்லது ஜனாதிபதியாக கூட போட்டியிடலாம். எந்த தடையும் இல்லை.

🥨🇮🇳✒️ 4. ஒரு சாதாரண மனிதன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் கம்பெனியிலோ, ஒரு சுமாரான வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.
ஆனால், அரசியல்வாதி கட்டைவிரல் ரேகை வைக்கும் படிப்பறிவே உள்ளவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவோ பிரதமராகவோ இருக்க முடியும். அவர் பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.

✒️🇮🇳🥨 5. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஒரு சிப்பாயாக வேலை பெற, நீங்கள் 10 கிலோமீட்டர் ஓடி காட்ட வேண்டும்.
ஆனால் அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், உடல் ஊனமுற்றவராலவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், அந்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.

🥨🇮🇳✒️அவருக்கே எதிராக எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஒரு தலைவர் காவல்துறை, அல்லது உள்துறை அமைச்சராகவே இருக்கலாம்.

🥨🇮🇳✒️ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகளும், காலவரையும் உண்டு.

🥨🇮🇳✒️ஆனால் ஒரு எம் எல் ஏ, எம்பி சேவை செய்வதாக சொல்லி பதவிக்கு வந்து, 5 வருடம் லஞ்சம், ஊழல் மற்றும் எத்தனை அராஜகம் செய்தாலும், எந்த நிபந்தனையும், கால வரையும் இன்றி வாழ்னாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும்,

🥨🇮🇳✒️ இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?
இந்த அமைப்பு மாற்றப்பட வேண்டுமா, இல்லையா?

🥨🇮🇳✒️தலைவர் மற்றும் மக்கள் இருவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டுமா, இல்லையா?.

🥨🇮🇳✒️இந்த செய்தியை அனுப்புவதன் மூலம் நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த தயவுசெய்து உங்கள் ஆதரவை வழங்கவும்.

🥨🇮🇳✒️நீங்கள் முன்வரவில்லை என்றால் எந்த தலைவரையும் குற்றம் மட்டுமே சொல்லாதீர்கள்.
ஆம், உங்கள் இழப்புக்கு நீங்களும் பொறுப்பு ஆவீர்கள்.

🥨🇮🇳✒️திரு. டி.கே. ஸ்ரீவாஸ்தவா,
தலைமை அரசு வழக்கறிஞர்,
பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய்.

🥨🇮🇳✒️இந்த பிரச்சாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம்.
அனைவருக்கும் பகிர்வோம். 💐⚔️🙏🇮🇳🕉️☪️✝️🇮🇳🙏⚔️💐

Source: From
Whatsapp University

வியாழன், 23 டிசம்பர், 2021

நிலக்கடலை: நவீன மருத்துவத்தின் எதிரி!

மல்லாட்டை... 
கல்லக்கா..
வேர்க்கடலை..
இப்படி எல்லாம் சொல்லப்படுகின்ற
"நிலக்கடலை"
நவீன மருத்துவத்தின் எதிரி
என்றே  கருதப்படுகிறது!

சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!!

#நிலக்கடலை_சர்க்கரையை_கொல்லும்..!!

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

 நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

★ நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

★ பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

★ இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

★ இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

★ ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

★ மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

★ கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. 

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

★ அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

 எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

★ கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, 
பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

★ பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.

 நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

பகிருங்கள் பலரும் தெரிந்துகொள்ளட்டும்... கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்...

எளிதாக கிடைப்பதனை அடுத்தவருக்கு சத்தான கடலையை தானம் கொடுக்கிறோம் ஏன்???

-Courtesy Web World