Translate this blog to any language

வியாழன், 22 டிசம்பர், 2022

முதுமையைத் தள்ளிப்போட தினந்தோறும் நடை பயிற்சி செய்யுங்கள்

_முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!
      _*நடக்காத*_ _*ஒவ்வொரு நாளும்* _*உங்களை*_ _*வயதானவராக ஆக்கிக் கொண்டே*_
_*போகும்.*_

உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

 * *நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள் அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. 
* தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள். 

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
_*நடந்து செல்லுங்கள்*_ 

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் *செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை *மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 _*எனவே நடந்து செல்லுங்கள்*_ 

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், *நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது *

. நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
* *கால்கள் ஒரு வகையான தூண்கள் *, மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
_*தினமும் நடைபயிற்சி.*_
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
_*நடந்து செல்லுங்கள்*_ 

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 _*10,000 அடிகள் / நாள்*_
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
*இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. *

 * ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை! * 
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். _*எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.*_

 * கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
_*தயவுசெய்து நடந்து செல்லுங்கள்*_

 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
 _*நடங்கள்.*_

வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 

பொதுவாக வயதான நோயாளிகளில் 15%, தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
_*தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்*_ 

▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 

_*10,000 அடிகள் நடக்க*_
 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 

_*365 நாட்கள் நடைபயிற்சி*_ 
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 

_*இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்*_ ‍🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻

-Whatsapp University 

புதன், 21 டிசம்பர், 2022

நன்றி Gratitude பற்றி ஹீலர் பாஸ்கர் சொல்கிறார்!

பிறரால் நமக்கு ஒரு உதவி அல்லது நன்மை கிடைத்தால், அதை ஞாபகம் 
வைத்து, நமக்கு உதவி செய்த அந்த நபருக்கு நம் கடமை பட்டிருக்கிறோம் என்று உணரும் தன்மைக்குப் பெயர் நன்றி உணர்வு.

நாம் மட்டும் எப்பொழுதுமே மற்றவர்களிடம் நன்றி உணர்வை எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் மற்றவர்களுக்கு நன்றி உணர்வோடு இருக்கிறோமா என்பதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

நன்றி 7 வகைப்படும்.

1. வாய் நன்றி
2. மன நன்றி
3. உணர்ச்சி நன்றி
4. மன வாய் நன்றி
5. மன வாய் உணர்ச்சி நன்றி
6. நடிப்பு நன்றி
7. கடமை நன்றி

1. சிலர் நன்றி என்று வாயால் கூறுவார்கள். ஆனால் மனதில் நன்றி உணர்வு இருக்கவே இருக்காது. இது வாய் நன்றி. 

2. சிலர் மனதில் நன்றி உணர்வு இருக்கும். ஆனால் வாயை திறந்து சொல்லவே மாட்டார்கள். இது மன நின்றி.

3. சிலர் நன்றி உணர்வை, உணர்ச்சி மூலமாக தெரிவிப்பார். அவர்களுக்கு வார்த்தைகளால் சொல்லத் தெரியாது / முடியாது/ வழக்கம் இருக்காது. எனவே உடல் அசைவு / கண்கள் கண்ணீர் / எமோஷனல் மூலம் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். இதற்கு உணர்ச்சி நன்றி என்று பெயர். உதாரணம் குழந்தைகள்.

4. சிலர் நன்றி உணர்வு மனதுக்குள் இருக்கும். அதே சமயம் வார்த்தைகளால் சொல்வார்கள். இதற்கு மன - வாய் நன்றி என்று பெயர். 

5. சிலருக்கு நன்றி உணர்வு மனதுக்குள் இருக்கும். அதேசமயம் உணர்ச்சியாகவும் வெளிப்படுத்துவார்கள். அதே சமயம் வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்கள். இதற்கு மன - வாய் - உணர்ச்சி நன்றி என்று பெயர். இது மிக மிக மிக சிறந்த குணம்.

இருப்பதிலேயே இந்த குணம் தான் மிக மிக சிறந்தது. தயவுசெய்து இதுபோல் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

6. சிலர் ஆதாயத்திற்காக நன்றி உள்ளது போல் நடிப்பார்கள். இவர்களுக்கு மனதில் நன்றி உணர்வு இருக்காது. ஆனால் வாய் மூலமாக நன்றி சொல்வார்கள். சிலர் உணர்ச்சியை கூட நடிப்பால் காட்டுவார்கள். இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இதற்கு நடிப்பு நன்றி அல்லது போலி நன்றி என்று பெயர்.

7. விமானத்தில் பயணம் செய்து இறங்கும் பொழுது பணிப்பெண் உங்களிடம் நன்றி கூறுவார்கள். இது கடமை நன்றி. 

வியாபாரத்தில் / கஸ்டமர் கேரில் / ஹோட்டல் ரிசப்ஷனில் / OFFICIAL MEETING ல் / அரசியலுக்காக / வாங்கும் சம்பளத்திற்காக. ECT.... நன்றி கூறுவது கடமை நன்றி என்று பெயர். OFFICIAL THANKS.

குறிப்பு : 

1. வாயில் மட்டும் நன்றி சொல்லும் நபர்கள். தயவு செய்து இனிமேல் மனதிலும் நன்றியை உணர்வதற்கு முயற்சி செய்யுங்கள். உணர்ச்சி மூலமாகவும் நன்றியை தெரிவிக்க முயற்சி செய்யுங்கள்.

2. மனதிற்குள் மற்றும் நன்றி சொல்லும் நபர்கள். தயவு செய்து இனிமேல் வார்த்தைகளால் மற்றவர்களுக்கு சொல்லுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்கள் உங்களிடம் நன்றி உணர்வு இருக்கிறது என்று புரிந்து கொள்வார்கள். 

நீங்கள் வாயைத் திறந்து நன்றி சொல்லவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர் உங்களுக்கு நன்றி உணர்வு இல்லை என்று தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

3. மனதிலும், உணர்விலும், உணர்ச்சியிலும், வார்த்தைகளிலும் நன்றி சொல்லும் நபர்கள் பெருமைப்படுங்கள். நீங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள்.

4. தயவுசெய்து நன்றி உணர்வை போலியாக, நடிப்பாக பயன்படுத்தாதீர்கள். இது கேவலம். 

இது போன்ற நபர்களிடம் தயவு செய்து உஷாராக இருங்கள். போலியாக நன்றி சொல்லும் நபரை நம்பாதீர்கள். எந்த நேரத்திலும் நம்மை கவுத்து விடுவார்கள்.

5. கடமைக்காக நன்றி சொல்லும் நபர்கள் இனிமேல் அதை மனதார சொல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

6. நமக்கு யாராவது உதவி செய்தால்தான் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் தன் கடமையை செய்தால் கூட நன்றி சொல்லலாம். ஏன் நமக்கு உபத்திரவம் செய்யாத நபருக்கு கூட நன்றி சொல்லலாம். உதாரணமாக மருத்துவர் / செவிலியர் / பேருந்து ஓட்டுனர் / ஆட்டோ ஓட்டுனர் / சர்வர் / கடைக்காரர் /பிளம்பர் / எலக்ட்ரீசியன் / அரசாங்க அதிகாரிகள் / நண்பர்கள்/ குடும்ப உறுப்பினர்கள் / சோந்த காரர்கள் / சக ஊழியர்கள் / குப்பை அள்ளுபவர்கள்/ உங்கள் வீட்டு வேலைக்காரர். இவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

நம் வீட்டு வேலைக்காரருக்கு சம்பளம் கொடுக்கிறோம் பிறகு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்க கூடாது. அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

பணம் கொடுத்து தானே பயணம் செய்கிறோம்!! பின்னர், ஓட்டுநருக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. பேருந்தில் இருந்து இறங்கும்பொழுது ஓட்டுனருக்கு அவர் செய்த கடமைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆட்டோவில் பயணம் செய்தால் ஆட்டோ டிரைவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகு சமைத்த அம்மாவுக்கு அல்லது மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எந்த எந்த இடத்தில் முடியுமோ எல்லா இடங்களிலும் நன்றி சொல்ல வேண்டும்.

சம்பளம் வாங்கும் போதெல்லாம் தொழிலாளி முதலாளிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சம்பளம் கொடுக்கும் போதெல்லாம் தொழிலாளிக்கு முதலாளி நன்றி சொல்ல வேண்டும்.

நாம் இப்பொழுது உயிரோடு இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி உணர்வு என்பது ஒரு அருமையான குணம்.

இது எந்த அளவுக்கு நம்மிடம் உள்ளதோ நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். படுத்தால் தூக்கம் வரும். நிம்மதியாக வாழ்வோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நம்மிடம் ஒழுங்காக, பாசிட்டிவாக நடந்து கொள்வார்கள்.

நன்றி உணவு இல்லாத பொழுது நம் உடலுக்கு நோய்கள் வருகிறது. மனதில் துன்பம் வருகிறது. நம் உடன் இருப்பவர்கள் நம்மிடம் ஒழுங்காக நடந்து கொள்ள மாட்டார்கள். பல நேரங்களில் நஷ்டமும் வரும் கஷ்டமும் வரும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் டைரியில் இன்று எந்த எந்த விஷயங்களுக்கு, யார் யாருக்கு கடமைப்பட்டு உள்ளீர்களோ, அவர்களுக்கு நன்றியை எழுதி விட்டு தூங்குங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

நன்றி உணர்வு என்பது ஒரு சாதாரண மனித குணம். இதை கட்டுரை எழுதி / வகுப்பு எடுத்து / உதாரணங்களை கூறி புரிய வைக்க வேண்டும் என்ற நிலை சிந்திக்க வேண்டியது. 

எப்போதெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ. வார்த்தையில் / நேரடியாக / WHATSAPP / E MAIL / TELEGRAM / SMS / CALL / INSTAGRAM / LETTER பயன்படுத்தி நன்றியை பரிமாறலாம்.

நன்றி உணர்வு. நமக்கும் நல்லது. பிறருக்கும் நல்லது.

என்னையும் மதித்து, நான் எழுதும் கட்டுரையை படிக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

செவ்வாய், 25 அக்டோபர், 2022

தீபாவளிக்கு மாற்று என்ன?

இப்போதெல்லாம் நமது தமிழினக் குடும்பங்களில்
நாம் கொண்டாடும் தீபாவளி நரகாசுரன் சம்பந்தமான மூட தீபாவளி அல்ல! 

அதே நாளில் நம்முடைய குழந்தைகள் எல்லோரும் பட்டாசு கொளுத்தி புத்தாடை அணிகிறார்கள் அவ்வளவுதான்!

மேலும், பழக்கத்தில்/புழக்கத்தில் வந்துவிட்ட அந்நிய பேண்ட் சூட் கோட்டு போன்றவற்றை உடனே சட்டென பிடுங்கிவிட முடியாது; அதற்கான மாற்று வைக்கப்பட வேண்டும்! அதுதான் நியாயம்! சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் 8 லட்சம்+ ஏழைத் தொழிலாளர்கள் வேலை பார்த்து பிழைக்கிறார்கள்! 

அந்த நாட்களில் ஒருவருக்கொருவர் நமக்குள் நாம் செய்து கொள்ளும் வியாபாரம், வேலை வாய்ப்புகள் யாவும் எண்ணற்றவை!

ஒரு மாற்றுப் பண்டிகையை நாம் ஏற்பாடு செய்துவிட்டு தீபாவளி என்ற பெயரை நாம் ஓரம் கட்டி விடலாம்!

அது தமிழினத்தை நடத்திக் கொண்டிருக்கிற பற்பல தலைவர்களுடைய கடமை!

அட! தமிழகத்தில் உள்ள எல்லா முக்கிய  தமிழ் நிலங்களும் அன்னியர்களிடம் கொள்ளை போய் விட்டன! இனி அவர்கள் சொல்லும் மொழி பேச வேண்டும் அவர்கள் போடும் சட்டதிட்டங்களுக்கு நாம் உடன்பட வேண்டும்...இப்படி வந்த 
கோட்டு சூட்டு பேண்ட் ஷர்ட்டுதான் தீபாவளி!!

தவிர்க்க முடியாதது... மாற்று ஏற்பாடு யார் எப்போது செய்வது? அப்படி செய்துவிட்டு நமது குழந்தைகளிடம் நாம் பேசலாம்!

-YozenBalki 
25th Oct 2022

🥸🥸

திங்கள், 24 அக்டோபர், 2022

தீபாவளி கொண்டாடலாமா?

"தமிழர்கள் தீபாவளியை கொண்டாடக்கூடாது", என்ற சித்தாந்த கருத்து என் போன்ற பலரிடமும் உண்டு!
அது ஆரியர்கள் தமிழினத்தின் மீது திணித்த ஒரு வஞ்சகத் திட்டம் என்ற வழக்கு தொடர்கிறது!

எவன் காலிலும் நமது குழந்தைகள் விழாத வரை
எந்த அடிமைத்தனத்திலும் நாம் உட்புகாத வரை
இது வெறும் பண்டியாகவே இருக்கும் நாள் வரை
அதை கொண்டாடிவிட்டு போவதில் என்ன பிழை?

பொங்கலோ தீபாவளியோ எல்லாம் நமக்கு ஒன்றுதான்!
சந்தையில் நம் சொந்தங்கள் விளைவித்த பொருள்களை நாம் வாங்குகிறோம்; ஒருவருக்கொருவர் பயன் அடைகிறோம்!

அதற்குள் சண்டையிட பண்டிதர்கள் போகட்டும்!
ஏழை பாழைகளுக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது!
பண்டிகை என்பது உற்சாகம்!
பெரியவர்களும் குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் ஊர் விட்டு ஊர் சென்று ஒருவரையொருவர் சந்திக்கும் விழா!

அதுதான் எனக்குத் தெரிகிறது; மற்று எந்த காலத்திலோ உட்பொதிந்த  கொள்கை விளக்கங்கள் தெரியவில்லை!

வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக ஒரு, இதே போன்ற நற்பண்டிகைகளை விழாக்களை உருவாக்குவோம்!

எனினும், அதற்கு இணையான ஒரு பண்டிகையை தமிழின அறிஞர்கள், தமிழின அரசர்கள், தமிழினத் தலைவர்கள் ஒன்று கூடி இதுவரை அமைக்க முடியாத தோல்வியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

எப்படியோ ஒரு பெரிய இரு பண்டிகைகள் தமிழ் இனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன! 
அது ஒரு புறம் இருக்க, பண்டிகை சமயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் விளை பொருட்கள் வழியாக மானுடம் தங்கள் உழைப்பு சக்தியை (பணத்தைப்) பரிமாறிக் கொள்கிறதே!

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் சோர்வு அவநம்பிக்கை கலந்த மனித வாழ்வில், ஒரு சமூகம், ஒரே சமயத்தில் கொண்டாடும் பண்டிகைகள் குடும்பத்தில் ஒரு தற்காலிக மகிழ்ச்சியையேனும் தருகின்றன!

இதில் குழந்தைகளும் பெரியவர்களும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கலந்து மகிழ்ந்து அன்பை பரிமாறிக் கொள்கின்ற காட்சியை நாம் காண முடியும்! பண்டிகை காலத்தில் நிரம்பி வழியும் ரயில் நிலையங்கள் பஸ் நிலையங்கள் ஊரு விட்டு ஊரு செல்லும் மனிதர்கள் அதற்கு சாட்சி!

அட! இதுபோன்ற சென்டிமென்ட் இல்லாத வாழ்க்கை மிகவும் அருவருப்பானது!

எந்த பண்டிகையை கொண்டாடுவது என்பதை தனி மனிதர்கள் அல்லது சிறு குழுக்கள் தீர்மானிக்கவே இயலாது! அது தானாக பெரிய அளவில் எப்படியோ நிகழ்கிறது!

இப்போதும் கூட தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடுவதில் நமக்கு மறுப்பும் ஏற்பும் சமமாகவே இருக்கிறது!

சரி போகட்டும்! தமிழர்கள் அனைவரும் அதற்கு இணையான அல்லது அதற்கு மேலான ஒரு நன்னாளை கண்டுபிடித்து கொண்டாடி மகிழலாமே! யார் தடுத்தார்கள்?

கொண்டாட்டம் ஒரு சென்டிமென்ட்!

வெறும் சோறு மட்டும் தின்றுவிட்டு பண்டிகைகளே இல்லாமல் உயிர் வாழும் ஒரு சிறிய இனக்கூட்டம் கூட உலகில் எந்த பாகத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

ஏதாவது ஒரு காலத்தில் உலக மக்கள் யாவரும் ஒருமித்து கொண்டாடக் கூடிய

(அந்நாளில், 'எனது உற்பத்திப் பொருளை அல்லது சேவையை இன்னொருவர் பெற, அவரிடம் இருந்து நான் அது போல் பெற', என்று மானுட இனம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுகின்ற) 

ஒரு பண்டிகை ஏதாவது வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்!

அதுநாள் வரை இது போன்றவை தொடரட்டும் என்றே நான் விழைகிறேன்!

YozenBalki 

😎🙏🙏😎

சனி, 17 செப்டம்பர், 2022

யாரந்த பெரியார்? ஏனிந்த புகழ்ச்சி? (கவிதை)

எந்த ஒரு சொல்?
******************
எந்த ஒரு சொல் 
ஆதிக்கவாதிகள்
கோட்டை கொத்தளம்
சுக்குநூறாக்கி 
மண் மேடாக்கிய
அந்த ஒரு சொல்?

எந்த ஒரு சொல் 
ஆரிய சனாதன
மென்னி திருகி 
மூச்சு நிறுத்தி 
திராவிட பூமியை
நிறுவிய திருச் சொல்?

எந்த ஒரு சொல்
சூத்திரர் வாழ்வை
நெம்பி நிறுத்தி 
உலகம் வென்றிட
கல்வியும் வேலையும்
அருளிய அச் சொல்?

எந்த ஒரு சொல்
பூமியில் பாதியாம்
பெண்ணின உயிரை
சமமாய் நடத்தென 
போர்க்குரல் உயர்த்தி
உழைத்திட்ட அருஞ்சொல்?

எந்த ஒரு சொல்
அமிழ்ந்தவன் உயர 
மூத்திரச் சட்டியை
சுமந்திட்ட வாறே 
இடையறாத் தொண்டு
புரிந்திட்ட பெயர்ச் சொல்?

எந்த ஒரு சொல்
மானமும் அறிவுமே
மனிதனுக்கு அழகென
தடியால் அடித்து
தமிழினத் தூக்கம் 
கலைத்திட்ட வினைச் சொல்?

அந்த ஒரு சொல்
தந்தை பெரியார் 
தந்தை பெரியார்!!

எந்தன் உள்-வெளி 
எங்கணும் நிறைந்து
உயிரெலாம் கலந்து
போர்க்குணம் நல்கிடும்
சமநெறி ஞாயிறு
தந்தை பெரியார் 
பிறப்பை போற்றுவம்!

-YozenBalki 

பெரியார் பிறந்தநாள் 
144-வது ஆண்டு
September 17-2022

புதன், 7 செப்டம்பர், 2022

யார் தீண்டத்தகாதவர்கள்?

மீன்கள் வாசமில்லா
குளங்கள் கொண்ட
கோவில்கள் உண்டா?

சந்தையில் வாங்கிய
பூக்கள் யாவும்
எந்த விரல்கள்
பறித்த பூக்கள்?

காய்ந்த
மாட்டின் சாணம்
வரட்டியில்
எங்கள் கைபடாத
விபூதி தான் உண்டா?

உங்கள்
ஆராதனை தட்டில்
விழுந்த காசுகளை
மனுதர்மப்படி
எப்படிப் பிரிப்பீர்?

எங்கள்
ஆடு மாடு கோழி
மேய்ந்து திரிந்து
போட்டக் கழிவுகளில்
முளைத்த
தர்பைப் புற்கள்
உங்கள் கைகளில்!

இப்போது
சொல்லுங்கள்
யார்
தீண்டத்தகாதவர்கள்?

-கவிஞர் கு.தென்னவன்

Courtesy:
WhatsApp University 

எனது நீண்ட கால நண்பர் "சமூக நீதிக் கவிஞர் தென்னவன்", அவர்கள் இன்று எழுதிய கவிதை!
🌸☘️❣️❣️☘️🌸


கண்டா வரச் சொல்லுங்க..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயில்களில் டீ விற்கும் தமிழனைக் கண்டதுண்டா...?

மத்தியப் பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னல்களில் கார் ஸ்டிக்கர் விற்கும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

ஜார்கண்ட் மாநில ரயில் நிலைய வாசல்களில் கைக்குழந்தைகளோடு பொம்மை விற்கும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

பீஹார் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதில் வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

ராஜஸ்தான் செங்கல் சூளைகளில் குடும்பத்தோடு வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

சத்தீஸ்கர் மாநில அரசுப் பணிகளை ஆக்கிரமித்த தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

குஜராத் கிரானைட் கடைகளில் குடும்பத்தோடு தங்கி கூலி வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

வடமாநில டிராபிக்களில் ஹிந்தி தெரியாமல் பிச்சை எடுக்கும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்வோரே, புலம் பெயர் தொழிலாளிகளாய்
வடமாநிலங்களிலிருந்து தமிழகம் நோக்கி கூட்டம் கூட்டமாக நடந்து வந்த தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு…

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை  அதிகரித்துள்ளனர்..
அதிகமாக அல்ல..!

முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்..

உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே....
 
அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு...

எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்..
எனத்தெரியவில்லை..!

மேலே சொன்னது அனைத்தும் உண்மை...

*மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்றால் தமிழகம் வட மாநில வேட்டைக்காடாக மாற்றப்படும்.    

*டிஎன்பிஎஸ்ஸி (TNPSC)   கலைக்கப்படும்.   

*அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும்.  
 
*சமூக நீதி கொள்கையின் மணி மகுடமான 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.   

*அனைத்துத் துறைகளிலும் அரிய வகை உயர்சாதி  ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.   

*தமிழகத்தின் நீர் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் செல்லும்.

*தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படும்.   

*மின் கட்டணம் மூன்று மடங்கு உயரும்.

*தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படும். 

*ஆரம்பக் கல்வியிலிருந்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வதற்கான உயர்கல்வி வரை அனைத்து இடங்களிலும் நீட் தேர்வு புகுத்தப்படும்.

*தமிழக காவல்துறையில்   முழுக்க முழுக்க வட மாநில அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

*தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளும் தனியார் மயமாக்கப்பட்டு அதானி வசம் ஒப்படைக்கப்படும்.

*மீனவர்களின் மீன்பிடி உரிமையை தனியார் வசம் செல்லும்.

*சிறு குறு தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனைவரையும் குலத்தொழில் நோக்கி செல்லும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும். 

*அமைதிப்  பூங்காவான தமிழகம் சாதி மத கலவரங்கள் தூண்டப்பட்டு கலவர பூமியாக மாறும்.

*சிந்தித்து செயல்படுவோம்.*😢

Courtesy:
Whatsapp University
☘️🌸☘️🌸