Translate this blog to any language

mind-counseling லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mind-counseling லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 டிசம்பர், 2011

How Pyschology is an incomparable Art -Top 10 Reasons! உள இயல் ஒரு உயர் கலை - 10 காரணங்கள்!

மனித மனம்!
ஒரு உளவியல் விற்பன்னன்/ உளவியல் குரு பார்வையில்:

1 .  உடலை நம்பியே மனம் இருப்பினும் மனம்தான் மனிதனின் வளர்ச்சி நிலைக்கான முழுக் காரணி!
2 .  மனத்தில் சோர்வு அல்லது பயம் ஏற்படும்போது பல்லாயிரம்
மன/ உடல் நோய்கள் ஏற்படுகின்றன!
( WHO declares that more than 70-80% physical diseases are caused by depressed mind)
3 .  பிறவியிலேயே சிதைந்த மனத்தை யாராலும் சரி செய்ய முடியாது!
4 .  உடல் நோய்களின் தாக்கத்தால் பாதிக்கப்படும் உடல் அவயங்களைக் கூட யாரும் மாற்றிவிடலாம்,
      ஆனால் ஒருவனின் மனம் போல இன்னொரு மனத்தை/மூளையை    யாராலும் தரமுடியாது!
5 .  ஏனென்றால், இன்னொருவர் மூளையில் இன்னொருவர் வாழ்க்கையின் நினைவுகளும் அனுபவமுமே இருக்கிறது! அதை யார் விரும்புவார்?
6 .  ஆக, பாதிக்கப்பட்டவரின்  மனத்தையே செப்பனிட்டு
மீண்டும் அவரிடம் தர வேண்டும்!
7 .  மேலும், மருந்து-மாத்திரை இன்றி, கத்தியின்றி ரத்தமின்றி எந்த வித சேதாரமும் இன்றி!
8 .  அதுவும் குறைந்த சில நாட்களிலேயே; விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது போல!
9 .  நிரூபணம் செய்யக் கூடிய அளவுக்கு நல்ல மாற்றங்கள் ஒரு சில சிகிச்சைக்குப் பிறகு தெரியவேண்டும்!
10 . நிரந்தர நற்-பலன் தரவும் வேண்டும்!


இதையெல்லாம் செய்யக் கூடிய ஒரு அதீத உளவியல் கலை
உலகின் அனைத்துக் கலைகளையும் தாண்டிய உயர் தன்மையது ஆகும்!

ஆம்! செத்தவனை உயிர்ப்பித்தல், இரும்பைத் தங்கமாக்குதல், கை அசைவில் கைக்கடக்கமான ரத்தினங்கள் வரவழைத்தல் போன்ற பிற கலைகளை விட இது மகா உன்னதமானது!

 ( உயிர்ப்பித்தவனும் உயிர்ப்பிக்கப்பட்டவனும்  மீண்டும் ஒருநாள் இறப்பர்..தங்கச் சுரங்கத்துக்கே அதிபதி ஆனாலும் நிம்மதிக்கு அதிபதியாக வேண்டுமே..ரத்தினங்கள் வரவழைப்பதை விட ஒரு நாட்டுக்கு சுபிட்சம் வரவழைக்க முடிந்தால் அது மிகவும் மேன்மையானது )

மேலும், உடலில் கோளாறுகள் இல்லாத ஒரு மாணவர், பொறியாளர், வழக்குரைஞர், சினிமா கலைஞர், வணிகர் போன்றோரைக் கூட நீங்கள் உலகில் பார்த்து விடலாம்!

ஆனால், மனதில் பயம்/துக்கம்/கோபம்/குற்ற உணர்வு. உலகத்தினரோடு ஒப்புரவு கொள்ளாமை,  அல்லது கொஞ்சமாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கான 'உள இயல் குறைபாடுகள்' இல்லாத ஒரு மருத்துவரையோ, மதத் தலைவரையோ, அறிவியல் அறிஞரையோ உலகில் காண்பது அரிதினும் அரிது ஆகும் ! 

மேற்படி அவர்களின் கட்புலனாகா உளவியல் குறைபாடுகளையும் உணர்ந்து உள்வாங்கி 'கத்தியின்றி ரத்தமின்றி' பழுது நீக்கி, சிற்பம் செதுக்குவது போல் செதுக்கி, அவர்களது மூளையை, அவர்களது உயர் சிந்தனையை அவர்களிடமே மீண்டும் தந்து, புத்தம் புது வாழ்வை மீட்டுத் தருகின்ற கலை, 'உயர்-யோக உள இயல்' கலை ஆகும்!

ஆக, பன்னூறு நதிகள் கடலை வந்து அடைவது போல எல்லாக் கலைகளும் வந்து சங்கமிக்கிற இடம் உள இயல் துறை! ஆயினும் நல்லதொரு உள-இயல் கலைஞரை, தேவையுள்ள ஒருவர், "இன்னும் பழுதுபடாத தனது ஒரு-பாக அறிவாற்றல்" வழியேதான் கண்டுகொள்ள வேண்டும்!

மேற்கண்ட இந்த பத்து அம்சங்களையும் நிதானமாக படித்து உணர்ந்தால், "உளவியல் நிபுணத்வம்" என்பது  ஏன் அனைத்துத் தரப்பினராலும் அதிக ஆர்வம்/பெருமதிப்புடன் கவனிக்கப் படுகிறது என்று விளங்கும்!


-யோஜென் பால்கி
yozenbalki



________________________________________________
"To me Psychology is more an Art than a science. Because, any science can be taught to multitudes.
But an Art can not be so. A real senior artist, wishing to teach for a student and a disciple who is searching for a real Guru are one day, somewhere, suddenly meeting in a same frequency! Now His heart opens up and unfolds the mysteries of all tangibles and intangibles. It is just an Art from Heart to Heart communion! Never a 'mind-game' and a science to me!".