இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் மலிவான விலையில் பொருட்களைக் கொண்டு சேர்க்கும்
ஒரு ஆப் தான் இந்த 'மீஷோ' (Meesho).
ஒரு ஆப் தான் இந்த 'மீஷோ' (Meesho).
பெரிய பிராண்டுகள் மற்றும் கோடீஸ்வரர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்த இ-காமர்ஸ் சந்தையில்,
ஏழை எளிய சிறு வியாபாரிகளுக்காக
ஒரு பெரிய புரட்சியையே இது செய்துள்ளது.
ஏழை எளிய சிறு வியாபாரிகளுக்காக
ஒரு பெரிய புரட்சியையே இது செய்துள்ளது.
இதற்குப் பின்னால் இருக்கும் இரண்டு
இளைஞர்களின் உழைப்பு நம்மை நெகிழ வைக்கிறது.
யார் இந்த இளைஞர்கள்?
விதித் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பர்ன்வால் (Vidit Aatrey, Sanjeev Barnwal)
ஆகிய இருவர்தான் இந்த மீஷோவின் நிறுவனர்கள்.
இவர்கள் இருவரும் ஒன்றும் பரம்பரை கோடீஸ்வரர்களோ,
பெரிய தொழிலதிபர்களின் பிள்ளைகளோ அல்லர்.
நம்மைக் போன்ற மிகச் சாதாரண நடுத்தரக் குடும்பப் பிள்ளைகள்!
விதித் ஆத்ரேவின் தந்தை டெல்லியில் உள்ள குடிநீர் வாரியத்தில் (Delhi Jal Board) பணிபுரிந்த ஒரு சாதாரண அரசு ஊழியர் ஆவார்.
டெல்லியில் ஒரு சிறிய 2-BHK அரசு குடியிருப்பில்தான் விதித் தனது சிறுவயதைக் கழித்தார்.
மற்றொரு நிறுவனரான சஞ்சீவ் பர்ன்வால், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரைச் சேர்ந்த மிகவும் எளிய பின்னணியைக் கொண்டவர்.
ஏழைகளுக்கான ஒரு உன்னத லட்சியம்
தங்கள் கடின உழைப்பால் படித்து, இந்தியாவின் மிக உயரிய ஐஐடி டெல்லியில் (IIT Delhi)
இடம்பிடித்த போதுதான் இருவரும் நண்பர்களாயினர்.
படிப்பு முடிந்ததும் வெளிநாட்டு நிறுவனங்களில்
லட்சக்கணக்கில் சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், இந்தியாவின் ஏழை எளிய மனிதர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தனர்.
இந்தியாவில் உள்ள சிறு குறு தொழிலாளர்களும்,
இல்லத்தரசிகளும் முதலீடே இல்லாமல்
எப்படிச் சம்பாதிக்கலாம் என்று யோசித்தனர்.
விளைவு, 2015-ல் உருவானதுதான் 'மீஷோ'.
0% கமிஷன் - வியாபாரிகளின் தோழன்:
பெரிய அமேசான், ஃபிளப்கார்ட் நிறுவனங்கள்
விற்பனையாளர்களிடம் பெரும் கமிஷன் வாங்கியபோது, மீஷோ "0% கமிஷன்" என்ற கொள்கையை அறிவித்தது.
"பொருட்கள் தயாரிக்கும் ஏழை எளிய தொழிலாளர்களிடம் இருந்து ஒரு பைசா கூட கமிஷன் வாங்கக் கூடாது"
என்பதில் இவர்கள் இன்றுவரை உறுதியாக இருக்கிறார்கள்.
ஒரு எளிய நெசவாளர் அல்லது தையல் கலைஞர் தங்கள் பொருளை விற்க மீஷோ ஒரு பைசா கூட கமிஷனாகப் பறிப்பதில்லை.
சொந்த வாழ்க்கையில் நடுத்தரக் குடும்பத்தின் பொருளாதாரச் சவால்களைப் பார்த்ததால்தான்,
அவர்களால் இந்த எளிய மனிதர்களுக்கான
வணிக மாதிரியை உருவாக்க முடிந்தது.
இன்று இந்தியாவின் நம்பர்-2 ஷாப்பிங் ஆப்பாக மீஷோ வளர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு இந்த இரு இளைஞர்களின் உன்னத லட்சியமே காரணம்.
வறுமையும், எளிய பின்னணியும் ஒருபோதும் சாதனைக்குத் தடையல்ல என்பதற்கு இந்த இரு இந்திய இளைஞர்களே ஆகச்சிறந்த உதாரணம்!
-Yozen Balki

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: