Translate this blog to any language

வெள்ளி, 10 அக்டோபர், 2025

“Some beings live by eating, but a few live by being.”

“Some beings live by eating, but a few live by being.”

🕊️ The Hymn of Flight

Somewhere between the whisper of wind and the silence of stars,
a small bird lifts its wings—
and what follows is not flight, but a hymn.


It eats barely fifty grams of food,
yet crosses oceans and continents for fifty days without rest.
Science observes and writes equations,
but numbers cannot hold wonder.


For the bird is not moving through air—
it is the movement of air itself.


How can such a fragile creature traverse twenty thousand kilometers on a single breath of life?
Not because it burns fuel—
but because it lives in perfect harmony.


Each heartbeat, each wingbeat, each gust of wind—
woven into one unbroken rhythm,
a cosmic coordination beyond effort or resistance.


Hibernating beings live on stored prana,
but this bird lives on flowing prana—
a current born of surrender, not struggle.


It doesn’t fight nature;
it dissolves into nature so deeply
that nature begins to fly through it.


Science calls it efficiency.
The mystic calls it grace.
But both are shadows of the same light.


No laboratory can replicate it,
for what sustains the bird is not energy—
it is awareness.
The bird does not know God.
It does not believe in science.
It simply is the prayer it never speaks. 🌿



🌌 The Universe, the Divine, and I


I once worked among people who said,
“There is no God.”
They fought against idols, rituals, and fear.
They stood for courage and reason.
I honour that fire even now.


But one quiet evening, beneath an endless sky,
I asked myself:
If there is a God beyond the universe—
then whose universe is this?
If He stands outside creation,
has He not exiled Himself from His own breath?


From that moment, I stopped searching above.
For me, the universe itself is divine.
The atom and the galaxy are not creations of God—
they are expressions of God.


A coin and the metal within it are not two.
A dancer and the dance cannot be separated.
Existence and divinity are one rhythm.


I am not an atheist.
I am not a believer.
I am a child,
staring at the sky—
not worshipping, not debating,
but wondering.


The atheist denies God.
The theist defines Him.
I only witness Him—
in the pause between breaths,
in the rhythm of the sea,
in the trembling leaf that drinks morning light.


Call it Nature.
Call it God.
Call it the Unnamed Pulse of Being.


Whatever the name, the truth remains one:


The Universe and the Divine are one breath—
and I am that breath,
aware of itself.


🕊️ The Final Whisper

And perhaps, somewhere above,
a small bird still flies—
not to reach heaven,
but to remind heaven
where it truly lives.

 🌌✨ - Yozen Balki 


> To witness the universe without the cage of belief or denial —
that is the purest form of devotion.
The bird flies by harmony,
the mind lives by wonder.
Between them lies the truth:
Life itself is divine. 🌿


 “Some beings live by eating,
but a few live by being.”


📜 Author’s Note — Yozen Balki


ஞாயிறு, 5 அக்டோபர், 2025

The 3rd Button Computers Forgot


The 3rd Button concept illustration — an app dialog with Yes/No and a missing third button.

In today’s computerized world, almost every system runs on a simple binary: Yes or No. Click “Yes,” and you agree. Click “No,” and you reject. But what about the millions of moments when we neither agree nor disagree when we simply don’t understand what we are being asked? That’s where the problem begins.


Most computer systems, apps, and websites assume that the user is already aware of every technical term, every consequence, and every hidden clause. Yet in reality, a large portion of users ordinary human beings face a silent confusion. 


The screen flashes a question, often related to money, data sharing, or permissions, and the user has only two options: Yes or No. There is no room for a third option “No, I don’t understand. Please explain.” This absence is not just a design flaw. It’s a moral flaw. When a person is confused, technology must assist, not manipulate. 


When clarity is missing, computers should guide, not trap. But the modern software industry, obsessed with efficiency and profit, forgets one essential truth: Technology without empathy becomes tyranny in disguise. Imagine if every dialog box had a third button: “Explain this in simple terms.” It would protect millions from accidental financial losses, wrong clicks, and digital exploitation. 


It would make technology human. The idea of a third button is not about adding a feature it’s about restoring fairness, trust, and understanding. Every machine should respect the user’s right to clarity. After all, a confused human should never be treated as a faulty machine. 




A True Lesson from a False Click


Rajesh was a software wizard the kind of man who could fix any computer in minutes. In his office, people called him The Tech Doctor. He trusted his machines more than he trusted people. After all, computers never lied. Or so he thought. 


One evening, while transferring a large payment, his banking app suddenly flashed a small window:

“Do you wish to proceed?

Yes / No.” It was a simple question.

He was tired, rushing for a flight, and barely noticed the extra line of fine print below something about “auto conversion of funds.” Without thinking twice, he clicked “Yes.” In ten seconds, his years of savings disappeared into a system glitch or perhaps into someone else’s account.


The customer care said politely, “You have agreed to the terms, sir.” He tried to explain he didn’t understand those terms. But the machine had already decided. There was no third button that said, “Wait… I don’t understand. Please explain.” That night, Rajesh sat before his computer the same machine he had once worshipped and stared at its silent screen. It didn’t blink. It didn’t feel sorry. It had done its job efficiently, heartlessly. 


He realized something no manual had ever taught him: The real virus was not in the computer, but in the arrogance of those who designed it without space for human confusion.


Final Thought:


If science can send rockets to Mars, why can’t it create a small button for honesty on Earth? Until that day comes, every click we make will remind us of the "3rd button computers forgot".



Yozen Balki

Psychologist & Therapist



Yozen Balki | The Mind Behind The Words 🌿
Psychologist • Writer • Spiritual Thinker

புதன், 17 செப்டம்பர், 2025

தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாள்: செப்டம்பர் 17




பெரியாரை ரொம்ப 
ரொம்ப பிடிப்பதற்கு எனக்கு 1000 காரணங்கள் உண்டு! 

அதில் ஒரு பெரு வியப்பான அரும் காரணம் ஒன்னு இருக்கு! 

கடவுள் இருக்கோ இல்லையோ... 
"கடவுள் இல்லை" என்று சொல்லி கடவுள் மறுப்பு கல்வெட்டு ஊர் ஊருக்கு தமிழகத்தில் வைத்த உலகின் ஒரே வீரஞ்செறிந்த தலைவன் தந்தை பெரியார் மட்டும்தான்! 

(இந்தியாவில் காணப்படும் பற்பல சமுதாயச் சீர்கேடுகளுக்கு நாடோடி ஆரியர்கள் புகுத்திய சனாதன அதர்ம சாஸ்திரங்களும் புராணங்களும் தான் காரணம். அவர்கள் ஏற்படுத்திய நால்வர்ண பிரிவுகள் அதில் வந்த ஜாதி வேறுபாடுகள், பிறவி அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட உயர்வு தாழ்வு பேதங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தவர் தந்தை பெரியார். 

அவற்றுக்கு ஆணிவேர் கடவுள் நம்பிக்கை என்பதால் பெரியார் கடவுளை மறுத்தார்!)

-YozenBalki 


தந்தை பெரியார் 

பிறந்தநாள்:
செப்டம்பர் 17, 1879

மறைந்த நாள்: 
டிசம்பர் 24, 1973
....

"மூடநம்பிக்கைகளை அழிவு வேலைகளின் மூலம் தான் ஒழிக்க முடியும்! அதற்கு, மகத்தான உறுதியும், சிறிதும் சந்தேகமற்ற தெளிவும், சாவிற்கும், ஏன் பழிப்பிற்கும் கவலையற்ற துணிவு உள்ளவனால் தான் அது முடியும்!"

-தந்தை பெரியார்

🌿🌿

"ஆண்களால் ஒருபோதும் பெண்களுக்கு விடுதலை உண்டாகாது!
எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா?"

-தந்தை பெரியார்

...


திங்கள், 8 செப்டம்பர், 2025

விதையில்லாத கிராமம்!! மரபணு மாற்றப்பட்ட பழங்கள்!!


ஒரு சிறிய மலைக்கிராமம். அங்குள்ள மக்கள் கல்வி கற்றவர்கள் அல்ல; ஆனால் அவர்கள் நிலத்தை நேசித்தவர்கள். வியர்வையைச் சிந்தி உழைப்பதே அவர்களின் வாழ்வு.


அந்தக் கிராமத்தில் பழமையான மரபு இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் காய்கறிகள், பயறு வகைகள், தானியங்கள் – எல்லாவற்றிலிருந்தும் விதைகளை எடுத்து வைப்பது. அடுத்த பருவத்தில் அந்த விதைகள் தான் அவர்களின் வாழ்க்கைக்கு உயிராக இருந்தன.


🌿 புதிய பேராசை:

ஒரு நாள் நகரத்திலிருந்து வியாபாரிகள் வந்து, அவர்களிடம் புதுமையான காய்கறிகளையும் பழங்களையும் காட்டினார்கள்.
“பாருங்கள், இது விதையில்லாத திராட்சை. விதையில்லாத மாதுளை. விதையில்லாத தக்காளி. சாப்பிட சுலபம், சுவை அதிகம், சந்தையில் அதிக விலை வரும்,” என்றார்கள்.

கிராம மக்கள் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். “அட, விதையில்லாததால் சாப்பிட எளிது. குழந்தைகளுக்கும் நல்லது. இனி விதை எடுக்கும் சிரமமில்லை.” என்று நினைத்து, அவர்கள் பழைய மரபை மெதுவாக கைவிட்டனர்.

அவர்கள் பழைய விதையுள்ள காய்கறிகளை ஒதுக்கி வைத்து, அந்த வியாபாரிகள் விற்ற விதையில்லா காய்கறிகள், பழங்களை மட்டும் சாப்பிடத் தொடங்கினர்.


🌱 சிக்கல் ஆரம்பம்:

சில மாதங்கள் கழித்து, ஒரு விவசாயி – பெயர் ராமு – தன் மனைவிக்காக தோட்டத்தில் தக்காளி வளர்க்க நினைத்தான்.
அவன் வாங்கி வந்த விதையில்லா தக்காளியை வெட்டி, மண்ணில் போட்டான்.
நாட்கள் கடந்தும் எந்தச் செடியும் முளைக்கவில்லை.

“இது என்ன வியாபாரம்? பழம் இருக்கிறது, சுவை இருக்கிறது… ஆனா உயிரே இல்லை!” என்று அவன் தலையைப் பிடித்துக்கொண்டான்.

அவன் அடுத்த நாள் விதையில்லா கத்திரிக்காய், மிளகாய் – பலவற்றையும் மண்ணில் போட்டான். எந்த ஒன்றும் முளைக்கவில்லை.


🌾 முழு கிராமமும் அச்சத்தில்:

மெல்ல அந்த உண்மை கிராமம் முழுக்க வெளிப்பட்டது. யாருக்கும் விதை கிடைக்கவில்லை.
விதையில்லா பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்ததால், அடுத்த பருவத்தில் பயிரிடக் கூடும் விதைகள் எதுவும் அவர்களிடம் இல்லை.

அவர்கள் நகர வியாபாரிகளிடம் மீண்டும் போனார்கள்.
வியாபாரிகள் சிரித்து, “நீங்கள் விதை இல்லாததால் தான் எங்கள்மீது நம்பிக்கையாக இருக்க வேண்டியிருக்கு. விதைகள் வேண்டுமா? எங்களிடம் tissue culture plant-கள் இருக்கின்றன. ஆனால் விலை அதிகம்,” என்றார்கள்.

அந்த வார்த்தைகள் கிராம மக்களை அச்சுறுத்தின.
“இப்போ நம்ம வாழ்வு முழுக்க இவர்கள்மீதே சார்ந்துவிட்டதே? நம்ம நிலம் இருக்கிறது, தண்ணீர் இருக்கிறது, ஆனா விதைகள் இல்லையே!” என்று அவர்கள் கவலையடைந்தார்கள்.


🌳 பழைய ஞானம்:

அந்த நேரத்தில், கிராமத்தில் இருந்த முதியவர் கோபால் பேசத் தொடங்கினார்.
“நம் தாத்தா, பாட்டா காலத்திலிருந்து விதைகளை எடுத்துப் பேணி வைத்தார்கள். அதுதான் எங்களுடைய உண்மையான செல்வம்.

விதையில்லா பழங்கள் சுவைக்காக நல்லவை. ஆனால் வாழ்வுக்கான உணவு எப்போதும் விதையுள்ள மரபு வகைகளில்தான் இருக்கிறது. நாம் அந்த வழியை விட்டுவிட்டோம். அதனால்தான் இப்படி சிக்கலில் விழுந்திருக்கிறோம்.”


🌿 வெளிச்சம்:

அந்த சமயம், அருகிலுள்ள ஊரிலிருந்து வந்த விவசாய நிபுணர், மக்களிடம் சொன்னார்:
“நீங்கள் நினைக்கிறீர்கள் விதையில்லாதது தான் முன்னேற்றம் என்று. ஆனால் உண்மை வேறுபட்டது.

விதையில்லா வகைகள் – grafting, tissue culture போன்ற முறைகளால் பெருகும். அவை வணிகத்திற்கு நல்லவை.
ஆனால் உங்கள் குடும்பம், உங்கள் கிராமம் – வாழ்வதற்கு விதையுள்ள மரபு வகைகள் தேவை.

நீங்கள் மீண்டும் உங்கள் நிலங்களில் விதையுள்ள தக்காளி, கத்திரிக்காய், பயறு, மிளகாய், பசலை – எல்லாவற்றையும் நட்டு வளருங்கள்.
அவற்றிலிருந்து விதைகளை எடுத்து வையுங்கள். அதுதான் உங்கள் சுயசார்பு. அதுதான் உண்மையான சுதந்திரம்.”


🌾 புதிய தொடக்கம்:

அந்த வாரம், கிராம மக்கள் ஒன்று சேர்ந்தார்கள்.
அவர்கள் அருகிலுள்ள கிராமத்திலிருந்து சில மரபு விதைகளை வாங்கினார்கள்.

மீண்டும் நிலம் உயிர் பெற்று பசுமையாயிற்று.
ஒவ்வொரு குடும்பமும் விதைகளை சேமிக்கத் தொடங்கினார்கள்.
மரபு விதைகள் அவர்களின் வீடுகளில் தங்கம் போலப் பாதுகாக்கப்பட்டன.


முடிவுரை:

அந்தக் கிராமம் ஒரு பாடம் கற்றுக்கொண்டது:

விதையில்லா பழங்கள் சுவைக்காகவும் வணிகத்திற்காகவும் பயன்படும்.

ஆனால் விதையுள்ள மரபு வகைகள் தான் வாழ்வின் அடிப்படை.

உணவின் சுதந்திரம், விதையின் சுதந்திரத்தில் உள்ளது.


அவர்கள் அந்த நாளிலிருந்து எப்போதும் சொன்னார்கள்:

விதை இல்லாதது வியாபாரியின் வசதி; விதை உள்ளதே மனிதனின் உயிர்.”


-Yozenbalki 

புதன், 27 ஆகஸ்ட், 2025

விநாயகர் வழிபாடு எப்போது வந்தது?

எனக்கு தெரிந்து விநாயகர் வழிபாடு பிள்ளையார் வழிபாடு என்பது பவுத்த சமண சமயங்கள் தென்னிந்தியாவில் பரவ ஆரம்பித்த காலத்தில் அதை தடுக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.


அப்போது ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த சைவ சமயத்தினர் மற்றும் வைணவ சமயத்தினர் (அறுசமய வழிபாடு: சைவம், வைணவம், சௌரம், கௌமாரம், சாக்தம், காணாபத்யம்)
ஒன்று கூடி இந்த அறுவரும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு கடவுளாக வைத்து திணிக்கப்பட்ட வழிபாடாகவே அது தெரிகிறது! 

காரணங்கள் நான் சொல்கிறேன்: 

1. கோயில்கள் அதிகமாக உள்ள தமிழ்நாட்டில் விநாயகருக்கு எனறு முருகர் போன்று தொன்மையான தனிப்பட்ட பெரிய கோயில் எதுவும் கிடையாது.

2. பிள்ளையாரை "ஓம்" எனும் பிரணவத்தின் வெளிமுக குறியீடாகவே இன்றும் சொல்வதை நாம் கருத்தில் கொள்ள முடியும். 

3.  பிள்ளையார் ஓம் போலவே அமைந்திருப்பதையும் நாம் காணலாம்.
 பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் பிற்கால ஓலைச்சுவடிகள் அதிகம் உண்டு. 

4.  அனைத்து அறுசமய கோவில்களிலும் பிற்காலத்தில் பிள்ளையார் சிலைகளை வலிந்து திணித்திருப்பதை நாம் இன்றும் காண முடியும். அது மட்டும் புதிதாக செங்கற்களால் சில காலத்துக்கு முன் கட்டப்பட்டதாக இருக்கும். 

5. அது போதாது என்று தெருத்தெருவுக்கு ஊர் ஊராக ஆலமரம் அரசமரம் குளக்கரையில் திடீர் பிள்ளையார்கள் சைவம் தழைத்து ஓங்கிய தமிழ்நாட்டில் வைக்கப்பட்டது. 

6. அதுவும் போதாமல் தெருக்களில் நேர் குத்து வருகின்ற இடங்களில் அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் ஒரு சிறிய பிள்ளையாரை கண் திருஷ்டி பிள்ளையார் என்றும் வைக்கத் தொடங்கினார்கள்.

7. சமண சமயம் தமிழகத்தில் பரவத் தொடங்கிய போது அதைத் தடுக்கும் விதமாக அவர்களை வஞ்சகமாக வாதத்திற்கு அழைத்து ஏதோ ஒரு வகையில் தோற்கடித்து 8000 சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றவன் திருஞானசம்பந்தன் என்ற ஆரிய சைவன் ஆவான். 

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில்வென் றழிக்கத் திருவுள்ளமே…”
”அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெயத்திரு வுள்ளமே…”
”வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெயத்
திருவுள்ளமே"! இதெல்லாம் அவனுக்கு சமணர்கள் மீது இருந்த வெறுப்பை தெளிவிக்கும் பாடல்கள்! 

8. நரசிம்மவர்ம பல்லவனின் படைத்தளபதியான பரஞ்சோதி (சைவ நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர்) வாதாபியைக் கைப்பற்றிய பின்னர், அங்கிருந்த ஒரு வித்தியாசமான கணபதி சிலையை எடுத்து வந்து தமிழ்நாட்டில் பிரதிஷ்டை செய்தார். 
முதலாம் நரசிம்ம பல்லவனின் ஆட்சிக் காலம் (கி.பி. 630-668) ஆகும்.
அதுவே வாதாபி கணபதி என்று இன்றும் இந்தச் சிலை திருவாரூர்த் கோயிலில் உள்ளதாக ஒரு சாராரும், திருச்சங்காட்டங்குடியில் உள்ளதாக வேறு ஒரு சாராரும் கருதுகின்றனர். இது பல்லவர்கள் மற்றும் சாளுக்கியர்களின் கலை மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடையது.

9. ஆக கி.பி‌. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு இல்லை, விநாயகருக்கு (காணாபத்தியம்) என்று பெரிய கோயில்களும் இல்லை என்றே நம்மால் உணர முடிகிறது.

ஆக என்னுடைய துணிந்த கருத்து என்பது பௌத்த சமண மத சமயங்கள் தென்னிந்தியாவில் காலூன்றக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்கும் விதமாக ஐந்து அல்லது ஆறு சமயத்தினர் கூடி உருவாக்கிய அல்லது திணித்த ஒரு பொது இறை வழிபாடு விநாயகர் வழிபாடு என்கிற பிள்ளையார் வழிபாடு எனலாம்!

Yozen Balki 



செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

An Open Letter on Twitter Decency


A valuable social media platform like Twitter-X carries a huge responsibility that should never be ignored.



People from different countries and languages express their thoughts here. Twitter has a reporting feature for obscene or violent content, but in my experience, it fails 95% of the time.

Why?

1. Complaints are translated word-for-word into English.


2. Obscene words in ancient languages like Tamil (and many others) are culturally recognized, but word-for-word translation often misses their real meaning.


3. In Tamil society, for instance, most decent people avoid using such words in public — but Twitter fails to catch them.


A Possible Solution:

Twitter-X can appoint small monitoring groups (10 members each) from political parties and opposition parties in every country.

These groups can judge posts in the context of their language, culture, and customs.

This will make it clearer which posts are truly obscene and which are acceptable.


If not, Twitter risks turning into a platform dominated by indecent voices, driving away civilized users.

I sincerely request Twitter-X to make such arrangements, so that it remains a decent platform for future generations.

Thanks,
Yozenbalki
Senior Psychologist
Chennai, South India

ஞாயிறு, 25 மே, 2025

கீழடி நாகரிகமும் ஆரிய டகால்டி வேலையும்!


🔹கி.மு. 8 ஆம் நூற்றாண்டு வரையிலான கீழடியின் தொல்லியல் ஆய்வை ஏற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு!

🔹வரலாற்று உண்மையை ஒதுக்கித் தள்ளி புராண அகத்தியரை முன்னிறுத்துவது ‘‘ஆரியர் – திராவிடர்’’ கண்ணோட்டமே!

🔹திராவிடப் பண்பாட்டை மீட்டெடுக்க விரைவில் போராட்ட அறிவிப்பு!

தமிழர் வரலாறு - பண்பாட்டின் மீதான தனது வெறுப்பை மீண்டும் ஒரு முறை ஆளும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தியுள்ளது.
2,600 ஆண்டுகளுக்கும் முந்தைய தொன்மை வாய்ந்த கீழடி நகர நாகரிகம் அகழாய்வு மூலம் வெளிக்கொணரப்பட்டதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எழும் காழ்ப்பும், கோபமும் கொஞ்சநஞ்சமல்ல; ஆரியத்துக்கு மூத்த திராவிட நாகரிகத்தின் அறிவியல் சார்ந்த நிரூபணம் அவர்களுக்குத் தரும் அளப்பரிய ஆற்றாமையும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது.

🔹கீழடி ஆய்வை நிறுத்திட ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சிகள்!

2014-2015 ஆம் ஆண்டில் (முதல் ஆண்டு) கீழடியில், இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தொன்மைக்கான சான்றுகள் வெளிப்படத் தொடங்கின. அடுத்த ஆண்டு ஆய்வுகள் (2015-2016) நடைபெற்ற பின், கீழடியின் காலம் குறித்தும், தமிழ்நாட்டில் நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றாகவும், தொல்லியல் ஆய்வில் முதல்முறையாக வாழ்விடப் பகுதி கிடைத்த நிலையிலும், கீழடி ஆய்வை நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியது ஒன்றிய அரசு.

மூன்றாம் ஆண்டு ஆய்வு நிறுத்தப்பட்டது. அதற்கும் வழக்கு தொடர்ந்து, ஆய்வு தொடரப்பட வேண்டும் என்று போராட வேண்டியிருந்தது! ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அசாமுக்கு மாற்றப்பட்டார். அவரிடமிருந்து அகழாய்வுப் பணி பறிக்கப்பட்டு சிறீராம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. அவர் இனிமேல் கீழடியில் எதுவும் இல்லை என்று கூறினார். அதன்பின், தமிழ்நாட்டில் எழுந்த தொடர் எதிர்ப்பின் காரணமாக அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவருகிறது. இப்போது பத்தாவது ஆண்டு ஆய்வு நடைபெற்றுவருகிறது.

🔹கோயில்களை ஆய்வதிலேயே கவனம்!

1939 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் வைகை நாகரிகமும், பொருநை நாகரிகமும் சிந்துவெளிக்கு இணையான தொன்மை படைத்தவையாக இருக்கக்கூடும் என்று அந்நாளைய இந்தியத் தொல்லியல் துறையின் தலைவர் கே.என்.தீட்சித் என்பவர் முன்னறிவித்திருந்தும், அது குறித்த தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேயில்லை. தமிழ்நாட்டில் கோயில்களை ஆராய்வதிலேயே தொல்லியல் துறை அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. திராவிடப் பண்பாட்டின் தொன்மையை நிறுவும் ஆதிச்சநல்லூர் ஆய்வுகளும் முடக்கி வைக்கப்பட்டே இருந்தன. இந்நிலையில் கீழடி ஆய்வுகள் தான் மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கின. அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின் மூலம், இந்தியாவில் இரும்புக் காலத்தின் தொடக்கமே தமிழ்நாட்டிலிருந்து தான் என்னும் அளவுக்கு தொன்மைத் தடயங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரியது எத்தனை உண்மை என்பது தொடர்ந்து நிறுவப்பட்டுவருகிறது.

🔹புராணமும், வரலாறும் ஒன்றா?

காலம் காலமாக இந்திய வரலாற்றின் தொடக்கமே வேத கால நாகரிகம் தான் என்றும், புராணங்களும், இதிகாசங்களுமே இந்திய வரலாறு என்றும் அளந்துவிட்டுக் கொண்டிருந்தவர்களின் புளுகுகள் எல்லாம் சிந்துவெளி ஆய்வுகள் மூலம் அம்பலப்படத் தொடங்கின. தெற்கின் வரலாறு கீழடி ஆய்வுகள் மூலம் வெளிவரத் தொடங்கியதும், மொத்தமாக அவர்களின் பொய்மூட்டைகள் அடியற்றுப் போயின. சிந்துவெளி ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகத்தை, சரஸ்வதி நாகரிகம் என்று திரிக்க முயல்கிறார்கள். கிருஷ்ணனுக்கு ஆதாரம் துவாரகைக் கடலுக்குள் தேடுகிறோம் என்கிறார்கள். ஆனால், கிடைத்த ஆதாரங்களை அழிக்கவும், மொத்தமாக இழுத்துமூடவும் முயல்கிறார்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கிடப்பில் போட, ‘ஆதாம் பாலம்’, ‘இராமர் பாலம்’ என்ற ‘புரூடா!’ வழக்கு விசாரணையின்போது பா.ஜ.க. ஆதாரம் தரவில்லை!

இந்நிலையில் பல்வேறு இடையூறுகளுக்குப் பின்னர் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான 982 பக்க ஆய்வு அறிக்கையை 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. அதை வெளியிடாமல் இருப்பதைக் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் அரசு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று ஆராய்வதற்கான கூட்டம் வரும் 27 முதல் 29 ஆம் தேதி வரை ஊட்டியில் நடைபெறவுள்ள நிலையில், கீழடி அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என்னும் கேள்விக்குப் பதில் அளிக்காமல் தப்பிப்பதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றொரு சதிச் செயலில் இறங்கியுள்ளது.

-ஆசிரியர் திரு. கி. வீரமணி

X பதிவில் இருந்து 
இன்று...(Twitter)

🌿🌿🎊🎊