Translate this blog to any language

திங்கள், 26 ஏப்ரல், 2010

பாதிரியார்களின் பாலியல் குற்றங்கள்!

Source From : http://blog.tamilsasi.com/
ரோமன் கத்தோலிக்க மதத்தலைவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட், போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கூக்குரல்கள் தற்பொழுது உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. போப்பாண்டவருக்கு ஆதரவான வாதங்களும், எதிர் வாதங்களும் அமெரிக்க ஊடகங்களிலும், ஐரோப்பிய ஊடகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய போப்பாண்டவரான பெனடிக்ட் இதற்கு முன்பு கார்டினலாக இருந்த பொழுது பலக் கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் வன்முறைகளை மூடி மறைத்தார் என்றும், அதில் ஈடுபட்ட பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் தற்பொழுது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் இயற்ப்பெயர் ஜோசப் ராட்சிங்கர். இவர் போப்பாண்டவர் பதவிக்கு வரும் முன்பு கார்டினலாக பணியாற்றி இருக்கிறார். கார்டினலாக இருந்த பொழுது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாகவும் (Leader of the Congregation for the Doctrine of the Faith) ராட்சிங்கர் பொறுப்பு வகித்தர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்தீமீறல்கள் குறித்த பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது. அவ்வாறு இருந்தும் ஒழுக்கம் தவறிய பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள கத்தோலிக்க பாதிரியார்களை மிகவும் ரகசியமாகவே விசாரிக்க வேண்டும் என அனைத்து கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கும் ராட்சிங்கர் அனுப்பிய ரகசிய உத்தரவும் தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தன்னுடைய திருச்சபைக்கு களங்கம் நேராமல் காப்பாற்றவே வாடிகன் முனைந்ததே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் வாடிகன் எடுக்கவே இல்லை. இதன் காரணமாக குற்றம் செய்த பாதிரியார்கள் எந்த தண்டனையும் இல்லாமல் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இத்தகைய குற்றங்களை செய்து வந்திருக்கிறார்கள்.

அதுவும் இத்தகைய பாலியல் வன்முறை யார் மீது தொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா ? குழந்தைகளின் மீது. ஆம், பத்து வயது கூட நிரம்பாத சிறுவர்களையும், சிறுமிகளையுமே தங்களுடைய செக்ஸ் வக்கிரத்திற்கு இந்தப் பாதிரியார்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். Pedophiles எனப்படும் குழந்தைகளை பாலியலுக்கு உட்படுத்தும் பாலியல் வல்லூறுக்கள் தான் இந்தக் கத்தோலிக்க கிறுத்துவ பாதிரியார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபைகள் உலகெங்கிலும் பல்வேறு அனாதை ஆசிரமங்களையும், குழந்தைகளுக்கான காப்பகங்களையும் நடத்தி வருகிறது. இத்தகைய காப்பகங்களிலும், பள்ளிகளிலும் இருக்கும் சிறார்களின் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கப்படுவதாக பலக் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. இந்தக் குற்றங்களை போப்பாண்டவர் பதவிக்கு வருவதற்கு முன்பு தற்போதைய போப்பாண்டவர் மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டே தற்பொழுது எழுந்துள்ளது.

வழக்கம் போல போப்பாண்டவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக வாடிகன் கூறியுள்ளது. போப்பாண்டவருக்கு இத்தகையக் குற்றங்கள் நடந்தது தெரியாது என வாடிகன் பிரச்சனையை பூசி மொழுக முனைகிறது. இதை விட வேடிக்கை என்னவென்றால் வாடிகனைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி போப் மீதான குற்றச்சாட்டினை யூதர்கள் மீதான வெறுப்புடன் (Antisemitism ) ஒப்பிட்டுள்ளதும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனை பல யூத அமைப்புகள் கண்டித்துள்ளன. பல யூதர்கள் கொல்லப்பட காரணமான யூதர்கள் மீதான வெறுப்பினை (Antisemitism ) தற்போதைய போப் மீதான வெறுப்பாக கட்டமைக்க முனைவது வேடிக்கையானது. வாடிகன் தற்போதையப் பிரச்சனையை எவ்வாறு கையாளுவது என குழம்பிப் போய் உள்ள சூழ்நிலையையே இது வெளிப்படுத்துகிறது.

எப்படி எழுந்தது இந்தக் குற்றச்சாட்டு ?

கத்தோலிக்கத் திருச்சபைகளின் மீதான இந்தக் குற்றச்சாட்டு புதியது அல்ல. பல்வேறு நாடுகளில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் எழுப்பப் பட்டிருக்கின்றன. தற்போதையக் குற்றச்சாட்டு கடந்தக் காலங்களில் நடந்தக் குற்றங்களை ஒட்டியே எழுந்திருக்கிறது. குறிப்பாக அயர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த பாலியல் குற்றங்களே தற்போதைய குற்றச்சாட்டிற்கும் காரணமாக உள்ளது.

அயர்லாந்தில் நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பல்லாயிரம் குழந்தைகளை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பல்வேறு விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அது போல அமெரிக்காவிலும் பல்வேறு குற்றாச்சாட்டுகள் கத்தோலிக்க திருச்சபைகள் மீது வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இத்தகைய எந்தப் பாதிரியார்களும் தண்டிக்கப்படவே இல்லை.

ஏன் தண்டனை இல்லை ? கத்தோலிக்க வாடிகன் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியாதா ?

கத்தோலிக்கத் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியும். ஏனெனில் திருச்சபைகளில் நடக்கும் ஒவ்வொரு பாலியல் குற்றங்களும் வாடிகனுக்கு தெரியப்படுத்தப் பட வேண்டும் என்ற நெறிமுறை உள்ளது. ஆனால் இந்தக் குற்றங்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என வாடிகன் அஞ்சியது. இதனால் இந்தக் குற்றங்களை மூடி மறைக்க கத்தோலிக்கத் திருச்சபை முனைந்தது. இத்தகையக் குற்றங்களை மூடி மறைக்க தனி நெறிமுறைகளையே வாடிகன் வகுத்துள்ளது.

1962ல் வாடிகன் ஒரு ரகசிய ஆணையை பிறப்பித்து உள்ளது. இதன் பெயர் Crimen Sollicitationis. இதன் படி கத்தோலிக்க பேராயர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும் பொழுது அந்தக் குற்றங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றங்கள் குறித்து வெளியில் எதுவும் பேசக் கூடாது என்பதும் ரகசிய உத்தரவாகும். பாலியல் குற்றம் செய்தவர், பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்கள், குற்றத்தைக் கண்ட சாட்சிகள் என அனைவரும் இந்தச் சட்டத்தின் படி பாலியல் குற்றம் குறித்த ரகசியத்தை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு ரகசியத்தை கடைப்பிடிக்காவிட்டால் கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து நீக்கப்படுவார்கள் (excommunication). திருச்சபையில் இருந்து நீக்கப்படுவது என்பது சில இடங்களில் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றது தான். இது குறித்த ஒரு பிபிசி ஆவணப்படத்தில் தனது ஐந்து வயது பேரனுக்கு நடந்த பாலியல் வன்முறையை வெளிப்படுத்தியமைக்காக தான் எவ்வாறு திருச்சபையில் இருந்தும், கிராமத்தில் இருந்தும் ஒதுக்கப் பட்டேன் என ஒரு மூதாட்டி விளக்குகிறார்.

பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சிறார்கள் இந்தக் குற்றத்தைக் குறித்து வெளியில் பேசக்கூடாது என வரையறுத்த கத்தோலிக்கத் திருச்சபை, குற்றம் செய்த பாதிரியார்களுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இந்தக் குற்றம் குறித்து வெளியே கூறக்கூடாது என்ற ரகசிய உத்தரவு இருந்ததால் இது போலீசாருக்கோ, உள்ளூர் அரசாங்கத்திற்கோ தெரியப்படுத்தப்படவே இல்லை. கத்தோலிக்கத் திருச்சபையின் இத்தகைய நெறிமுறை குற்றம் செய்தவர்களுக்கே சாதகமாக இருந்தது. காரணம் இத்தகைய குற்றம் செய்த பாதிரியார்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டனர். இதன் காரணமாக ஒரு இடத்தில் குற்றம் செய்த பாதிரியார்கள், வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக குற்றம் இழைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளை பல நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரச்சனைக் குறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டப்பட்டனர். பலர் பல ஆண்டுகள் இதனை வெளியே கூறவே இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது தான் பலர் தங்கள் மீது சிறு வயதில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து கூறத் தொடங்கியுள்ளனர். இதில் எரிச்சல் ஊட்டும் வேதனையான உண்மை என்னவென்றால் கத்தோலிக்கத் திருச்சபை இத்தகைய பாலியல் குற்றங்களை ஒரு பாவமாகவும், பாவத்திற்கு மன்னிப்பாக பாவமன்னிப்பையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளது. இதனால் குற்றம் செய்த குற்றாவளிகளான பாதிரியார்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பல சிறார்களை தொடர்ந்து தங்கள் காமவெறிக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பாக அமெரிக்காவில் தேடப்படும் சில பாதிரியார்கள் அமெரிக்காவை விட்டு தப்பி வாடிகனில் அல்லது ரோமில் சுதந்திரமாக திரிவதாக கூட ஒரு தொலைக்காட்சியில் கூறப்பட்டது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இந்தக் குற்றங்களை கடந்த காலங்களில் பல ஊடகங்கள் வெளியிட்டு இருந்தாலும் வாடிகனின் போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 2006ல் பிபிசி இந்தக் குற்றங்களைச் சார்ந்து ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டு உள்ளது. அந்த ஆவணப் படத்தில் ஒரு பாதிரியார் செய்த குற்றங்கள் குறித்து விவரிக்கப்படுகிறது. குற்றம் செய்த பாதியாரின் பெயர் டார்டிசியோ. முதன் முதலில் 1991ம் ஆண்டு இவர் செய்த பாலியியல் குற்றம் பிரேசிலில் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் மீது எந்த நடவடிக்கையையும் வாடிகன் எடுக்க வில்லை. மாறாக அவரை வாடிகன் இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது. இவர் இடம்மாறிய இடங்களில் எல்லாம் இத்தகைய குற்றங்களை தொடர்ச்சியாக செய்துள்ளார். இவர் குற்றம் செய்வதும், இடமாற்றம் செய்யப்படுவதுமாக நிலைமை இருந்துள்ளது. இவ்வாறு சுமார் நான்கு முறை இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இறுதியாக 2005ல் இவர் போலீசாரால் பிடிபட்ட பொழுது தான் இவர் பற்றிய விபரங்கள் வெளியுலகுக்கு தெரிய வந்தது. இந்தப் பாதிரியார் எழுதியுள்ள டைரியில் எழு வயது முதல் பத்து வயதிற்குட்பட்ட ஏழை மற்றும் பெற்றோர் இல்லாத அனாதைக் குழந்தைகளையே இவர் தன் பாலியில் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.

பாதிரியார்கள் செய்த குற்றத்திற்கு போப்பாண்டவர் பெனடிக்ட் பொறுப்பாக முடியுமா ?

தற்போதைய போப்பாண்டவர், இந்தப் பதவிக்கு வரும் முன்பு திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்துமீறல்கள் குறித்தப் பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது.

இவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தும், குழந்தைகளை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பாதிரியார்களை நெறிப்படுத்தும், ஒழுங்குப்படுத்தும், தண்டிக்கும் எந்த நடவடிக்கையையும் ராட்சிங்கர் எடுக்கவில்லை. மாறாக 2001ல் ராட்சிங்கர் ஒரு ரகசிய உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன் படி பாதிரியார்கள் திருச்சபைகளில் செய்யும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட எல்லா செக்ஸ் குற்றங்களையும் மிகவும் ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். அதாவது 1962ல் இருந்த உத்தரவை மிகவும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதே அவரது ரகசிய உத்தரவு. இவ்வாறு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிமென் (Crimen) எனப்படும் ரகசியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வலியுறுத்திய ராட்சிங்கர் இத்தகைய குற்றங்களை தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அது மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் தொடர்பான ஒவ்வொரு குற்றத்தையும் வாடிகனுக்கு அனுப்ப வேண்டும் என்பதும், அவை வாடிகனின் நேரடிப் பார்வைக்கு வர வேண்டும் என்பதும் அவரது ஆணை. ஆனால் வாடிகனுக்கு அனுப்பப்பட்ட எந்தக் குற்றத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போப்பாண்டவர் பெனடிக்ட் தான் கத்தோலிக்கத் திருச்சபைகளில் நடந்த எல்லா குற்றங்களுக்கும் முழு பெறுப்பேற்க வேண்டியவராகிறார்.

போப்பாண்டவர் பெனடிக்ட் மீது இத்தகைய குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பாலியல் அத்துமீறலில் போப்பாண்டவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதற்கான ஆதாரங்களைக் கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டதை தொடர்ந்தே போப்பாண்டவர் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. கார்டினலாக பணியாற்றுவதற்கு முன்பு ஜெர்மனியில் பேராயராக பணியாற்றிய பொழுதும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடிமறைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையெடுத்தே தற்போதைய போப்பாண்டவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் குறித்து பிபிசி தமிழோசை இணையத்தளம் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.



அமெரிக்காவில் முன்பு கேட்கும் திறன் அற்ற கிட்டத்தட்ட 200
சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தொடர்பாக தனக்கு என்னென்ன தெரியும் என்பதை உலகுக்கு வெளியிட வேண்டும் என்ற குரல்களை தற்போது போப்பாண்டவர் பெனடிக்ட் எதிர்கொண்டுவருகிறார்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த சிறார்களை திட்டமிட்டு தொடர்ச்சியாக பாலியல்
துஷ்பிரயோகங்களுக்கு பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி உட்படுத்திவந்திருந்தார். இந்த துஷ்பிரயோகம் குறித்து லாரன்ஸ் மர்ஃபிக்கு மேலேயிருந்த திருச்சபை அதிகாரிகள் 1990களின் மையப் பகுதியில் அப்போது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வத்திகான் அதிகாரியாக இருந்த கார்டினல் ராட்ஸிங்கருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது.

போப்பாண்டவர் மீதான குற்றச்சாட்டு
பிற்பாடு போப்பாண்டவராக உருவெடுத்தவரான கார்டினல் ராட்ஸிங்கர் அக்கடிதங்களுக்கு பதில் எழுதியிருக்கவில்லை. பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கவில்லை. போப்பாண்டவர் பெனடிக் உரிய
நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று விமர்சகர்களும், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். திருச்சபைக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை மூடி மறைக்க நடந்த முயற்சிகளில்
போப்பாண்டவருக்கும் பங்கிருந்தது என்று கூட அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிபிசியில் விடுபட்டுப் போன ஒரு தகவல் - பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி நேரடியாக ராட்சிங்கருக்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதே சுமார் 200 காது கேளாத குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபியின் வேண்டுகோள். அதற்கு ராட்சிங்கர் என்ன விடை அளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்த லாரன்ஸ் மர்ஃபிக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இறுதி காலம் வரை பாதிரியாராக இருந்து லாரன்ஸ் மர்ஃபி 1998ல் இறந்திருக்கிறார். இந்தத் தகவல்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவில் வெளியான குற்றச்சாட்டினை தொடர்ந்து ஜெர்மனியிலும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டும் தற்பொழுது வெளியாகி உள்ளது. பாதிரியார் ஹல்லர்மேன் ஜெர்மனியைச் சேர்ந்தப் பாதிரியார் ஆவார். இந்தப் பாதிரியார் பாலியல் குற்றம் செய்ததான ஒரு பிரச்சனை 1980ல் எழுந்தது. அப்பொழுது அங்கு பேராயராக இருந்தவர் ஜோசப் ராட்சிங்கர். ஒரு 11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் பாதிரியார் ஹல்லர்மேன். பேராயராக இருந்த ஜோசப் ராட்சிங்கர் இந்தப் பாதிரியாரை முனிச் நகரத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். ஆனால் பாலியல் குற்றம் குறித்து போலீசாருக்கோ, அரசாங்கத்திற்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்பட்ட பாதிரியார் இடம் மாறிய இடத்திலும் தொடர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளார். இவ்வாறு இவரது பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும் இவர் மீது கத்தோலிக்கத் திருச்சபை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது மட்டுமல்ல, இவர் தொடர்ந்து குழந்தைகளுடன் பணியாற்றவும் அனுமதித்து இருக்கிறது. இறுதியாக 1986ல் இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு நடந்தும் அவர் பாதிரியார் பொறுப்பில் இருந்து விலக்கப்படவில்லை, கடந்த மாதம் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான பிறகே பாதிரியார் பொறுப்பில் இருந்து ஹல்லர்மேன் நீக்கப்பட்டார்.

இவையெல்லாம் போப்பாண்டவர் எத்தகைய பொறுப்புடன் இந்தப் பிரச்சனையை அணுகியிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?
போப்பாண்டவர் பல்லாயிரக்க்கணக்கான குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பாதிரியார்களின் குற்றங்களை மூடிமறைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்தக் குற்றங்கள் குறித்த தகவல்கள் திருச்சபையை விட்டு வெளியில் செல்லாத வண்ணம் பாதுகாத்து மறைத்துள்ளார். அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து இந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற ”மறைமுக” காரணமாக இருந்துள்ளார். Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். அந்தக் குற்றத்தை மறைப்பதும், உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றமே ஆகும். அந்த வகையில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை தங்களின் காமப்பசிக்கு இரையாக்கிய பாதிரியார்களை பாதுகாத்த போப்பாண்டவர் மிக மோசமான குற்றம் செய்த ஒரு கிரிமினல் என்ற குற்றச்சாட்டு உலகின் பல்வேறு நாடுகளில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வாதங்களில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. போப்பாண்டவர் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு கிரிமினல் குற்றவாளி என்ற வகையில் அவர் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

போப்பாண்டவரை கைது செய்ய முடியுமா ? அது நடைமுறையில் சாத்தியமா ?

போப்பாண்டவர் கிறுத்துவ மதத்தலைவர் மட்டுமல்ல. வாடிகன் என்ற நாட்டின் தலைவரும் ஆவார். இந் நிலையில் அவரை கைது செய்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் கற்பழிப்பிற்கு காரணமாக இருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான செயல்கள் புரிந்தவர் என்ற வகையில் அவரை கைது செய்ய முடியும் என சில பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். போப்பாண்டவர் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்பொழுது அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதற்கான சட்டரீதியிலான முயற்சியில் சில வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இவையெல்லாம் நடைமுறைச் சாத்தியம் அற்றது. என்றாலும், கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறையில் சாத்தியமானதா என்பதைக் கடந்து தார்மீக நோக்கிலே சரியான கோரிக்கையாகவே உள்ளது. எனவே போப்பாண்டவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்ந்து எழுப்பியாக வேண்டிய சூழ்நிலையே தற்பொழுது உள்ளது.

************
மதங்கள் மக்களை மடையர்களாக்கவும், அடிமைகளாக்கவுமே உருவாக்கப்பட்டதாக தந்தை பெரியார் கூறுகிறார். மதத்தை புனிதத் தன்மை மிக்கதாகவும், மதவாதிகளை புனிதர்களாகவும் சமுதாயத்தில் கட்டமைத்து உள்ளனர். ஆனால் இந்த மதவாதிகளே பல்வேறு கிரிமினல் வேலைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இது எல்லா மதங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. மதத்தலைவர்கள் செய்த பல்வேறு பாலியல் வன்முறைகள், எல்லா நாடுகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வெளிவந்தும் மதத்திற்கு புனித வட்டம் கட்டும் பணி எப்பொழுதும் நிற்பதில்லை. நித்தியானந்தாவின் பாலியல் வீடியோ காட்சிகள் வெளியான பொழுது ஹிந்து மதத்தின் புனிதத்தை அழிக்க முனைவதாக ஹிந்துத்வா கும்பல் அலறியது. ஹிந்து மதத்தின் ஆணிவேராக புனித வட்டம் கட்டப்பட்ட காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி (சமீபத்தில் நித்யாநந்தனின் லீலைகள்) ஆகியோரின் கிரிமினல் வேலைகளும், பாலியல் குற்றங்களும் கடந்த காலங்களில் வெளிவந்திருக்கின்றன. ஹிந்து மத சாமியார்கள் தொடங்கி கிறுத்துவ பாதிரியார்கள், போப்பாண்டவர் வரை எல்லோருமே பல்வேறு கிரிமினல் செயல்களை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்களை பாதுகாத்து புனித வட்டம் கட்ட முனைவர்களும் தங்களின் பணிகளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். மக்களின் ஞாபக மறதி மட்டுமே வாழையடி வாழையாக தொடர்ந்து மதத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
Source: http://blog.tamilsasi.com/

"இலவசங்களுக்கு" பழகும் இனம் அழிந்துதானே போகும்?


உழைப்பின் மீது நம்பிக்கையற்று,
ஒரே நாளில் பணக்காரனாகி சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும்
என்பது அமெரிக்காவில் குடியிருக்கும்  (இங்கு அமெரிக்கர்கள் என்று எப்படி நாம் சொல்ல முடியும் - அமரிக்கா ஒரு  சென்னை மாதிரி! அது பூர்வ குடிகள் என்றில்லாமல் வெறும், "குடியேறும் மக்கள் - பெரும்பான்மை விகிதம்" கொண்டது) மக்களின் கொள்கை!

அதன் விளைவு! நீங்களே பாருங்களேன், அமெரிக்க பொருட்களா இந்தியாவில் விற்கப் படுகின்றன? Suzhuki, Hyundai, Honda, kawasaki, Yamaha கார்களும், பைக்குகளும் யாருடையவை? Hero பேனா, இப்போது இந்தியச் சந்தையில் விற்கப்படும் Finland என்னும் சிறிய நாட்டைச் சேர்ந்த Nokia Mobiles, ஜப்பான் நாட்டு Sony, தென் கொரியாவின் SamSung, சீன, கொரிய பிற மொபைல் போன்கள், சீன பொம்மைகள் இத்யாதி இத்யாதி! எனக்குத் தெரிந்து Ford கார் அமெரிக்க தயாரிப்பு, அது கூட இங்கு நன்றாக சந்தையைப் பிடிக்க முடியவில்லை. அமெரிக்காவின் Motorola மொபைல் போன்கள் கதி இந்தியாவில் -அதோ கதி தான்!

சரி, இது தவிர உலகத்துக்கு அமெரிக்க தொழிலாளர்களின் பங்களிப்பு என்ன?

அணு ஆயுதங்கள் விற்பது ,ரொட்டி சுடுவது போல் copy-paste செய்யும் விதமான Micro Soft தயாரிப்புகள், இது தவிர என்ன பெரிய உழைப்பு அவர்களிடம் உள்ளது?
அதனால் இன்று அமெரிக்க வெள்ளையர்கள் / நீக்ரோக்கள் பாடு திண்டாட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

உழைக்கத் தயாரில்லாத இனம் அழிந்துதானே போகும்?

இங்கே பாருங்கள் அதே கருத்தை ஒரு அமெரிக்கத் தலைவர் சொல்வதை:

"மக்களுடைய சோம்பேறித்தனத்தால் வெளிநாட்டவர்கள்   வருகிறார்கள்'
First Published : 25 Apr 2010 12:00:00 AM IST


ஸ்பார்டன்பர்க்,ஏப்.24: உழைப்பதற்குத் தயாரில்லாமல் உள்ளூர் மக்கள் அரசு தரும் இலவசங்களை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், வேலை செய்வதற்காக வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமர்த்துவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது என்று கேட்கிறார் தெற்கு கரோலினா மாநிலத்தின் துணை கவர்னர் ஆந்திரே பாயர்

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் சமீபகாலமாக மெக்ஸிகோ உள்ளிட்ட தென் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறுவது அதிகரித்து வருவதால் அமெரிக்க மாநிலங்கள் அனைத்துமே கலவரப்பட்டு நிற்கின்றன. இது இப்படியே போனால் வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலும் உள்நாட்டவர் சிறுபான்மையினராகவும் மாறிவிடுவார்களே என்று அஞ்சுகின்றனர். இந்த நிலையில் அரிசோனா மாநிலத்தில், வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்குக் கடும் நிபந்தனைகளை விதித்து சட்டம் இயற்றியிருக்கிறார்கள். அதைப் போல தெற்கு கரோலினாவிலும் சட்டம் வருமா என்று கேட்டபோதுதான் ஆந்திரே பாயர் கொட்டித் தீர்த்துவிட்டார் தன்னுடைய மனக்குமுறல்களை. 

வேளைக்கு இலவச சாப்பாடு, உடல் நலத்தைப் பேண இலவச சிகிச்சை, படிப்பு இலவசம், பொழுதுபோக்கும் இலவசம் என்றால் எந்த பைத்தியம் வேலைக்குப் போய் கஷ்டப்படும் என்று சற்று கோபமாகவே கேட்டார் ஆந்திரே பாயர். நல்வாழ்வு அரசு என்று பெயரெடுத்திருப்பதால் இலவசங்களைக் கொடுப்பதே அரசுக்கு அழகு என்று யாரிடமும் கடுமையாக வேலை வாங்காமல் சும்மா விடுவதால் சோம்பேறித்தனம் அதிகமாகி எல்லோரும் வீட்டிலேயே ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

 நாளை சட்டவிரோத குடியேற்றங்களால் நாட்டின் தன்மையே மாறி, பெரிய உள்நாட்டுக் கலவரம் வெடித்தால், இப்போது சோம்பேறியாக சுற்றித் திரிகிறவர்கள்தான் முதலில் அதன் விளைவை அனுபவிக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார். கடந்த முறை கவர்னர் பதவி வேட்பாளராக குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பெற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோதும் மக்களை நேரடியாகவே ஆந்திரே பாயர் திட்டினார். கோயில் மாடுகளைப் போல வீதிகளில் வெட்டியாகத் திரிந்து கொண்டு அரசு தரும் இலவச உதவி என்ன என்று பார்த்துக் கொண்டிருந்தால் உருப்படுவது எப்போது என்று கேட்டார் ஆந்திரே பாயர். (நம் நாட்டிலும் இலவசம் தந்து மக்களை சோம்பேறிகளாக்கி வரும் நமது தலைவர்கள், ஆந்த்ரே பாயரின் பேச்சை கவனிக்க வேண்டும். கட்டிடம், மற்றும் மேம்பாலப் பணிகளில் பீகார், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா போன்ற பிற மாநில தொழிலாளர்கள் ரயில் பிடித்து பல்லாயிரக்கணக்கில் சென்னை-தமிழகம் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். வட சென்னை அந்த விஷயத்தில் வட-மாநில சென்னை ஆகி வருகிறது. பெரம்பூர் வியாசர்பாடியில் இப்போது வாடகைக்கு ஆயிரக்கணக்கில் குடும்பம் குடும்பமாக  பீகாரிகள் வந்து சேர்ந்து வேலை பார்க்கின்றனர். ஏற்கனவே சௌக்கார் பேட்டை, ராஜஸ் தானிகளுக்கு எழுதப்படாத சொத்தாகிவிட்டது! தமிழர்கள் கதி இனி அதோ கதிதான் போலும்! )

இதனால் மக்களுக்குக் கடும் கோபம் வந்தது. (கோபம்தான் வந்ததே தவிர ரோஷம் வரவில்லை). இப்போதும் அப்படியே தொடர்ந்து பேசி வருகிறார் ஆந்திரே பாயர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:http://www.dinamani.com

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

Unite Tamils or Perish Away! உலகத் தமிழா ஒன்றுபடு - இல்லை பகையால் தின்றுபடு!


புற நானூற்றின் வீரம் யாவும்
கலந்து பிறந்த ஓர் உயிரை

உலகம் மெச்சும் பண்பி னனை
உயர்வாய் பெற்ற ஒரு தாயை

பகைவன் கூட தொட வில்லை
பழிக்கு அஞ்சி விடை தந்தான்!

தர்மம் பேசும் 'ஹிந்தியர்' கள்
குதர்க்கம் பேசும் தமிழர் சிலர்

வயது முதிர்ந்த அன்னை யினை
மருத்துவம் செய்யவும் மாட்டமென

திருப்பி அடித்தக் கொடுமை தனை
நெருப்புத் தமிழர் காண் கின்றோம்!

இறைவா உனக்கு கண் இலையோ
உந்தன் அரசின் நீதி இதோ?

மனிதப் புலையர் இருக் கட்டும்
மாண்புக ளேதும் உனக் கிலையோ?

'கேவ லனுக்கு' எரி மதுரை
தர்மம் காக்க கலி குதிரை

கதைகள் ஏதும் நட வாதோ?
உதைகள் படவே தமிழ்க் குலமோ?

காலம் இன்னும் நீள் கிறது
சோகம் மேலும் சேர் கிறது!

இன்னும் தமிழர் சேர விலை!
ஒன்றே உடலாய் மாற விலை!

சேர சோழர்கள் கதை பேசி
சேராமல் நாம் போ னோமே!

'ஊருக் கொரு தலை' பேச்சாலே
ஒற்றுமை இன்றிச் சாய்ந்தோமே!

பிரியும் கொள்கைகள் பே சாதீர்!
ஒன்றே குரலாய் ஒலித் திடுவோம் !

உலகத் தமிழா ஒன்று படு
இல்லை பகையால் தின்று படு!

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

கண்ணை மூடிக் கொண்டு மேல் நாட்டவரை பார்த்து காப்பியடிக்கும் இந்தியர்கள் !!

எனது நண்பர், நடிகர் அடடே மனோகர் ( முரளி) அவர்கள் 
மேற்படி எனது  "நம் முன்னோர்களின் கட்டிடக் கலை" எனும் வலைத்தளத்தைப் பார்த்து விட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  அவரது உள்ளத்து உணர்வையும் நான் இங்கே பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். 

  

" நண்பரே:

நம் முன்னோர்களின் கட்டிடக் கலை பற்றி தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை. 
ஆம்....அவர்கள் வாழ வீடு கட்டினார்கள்;நாம்
இருக்க கட்டுகிறோம்.  எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு மேல் நாட்டவரை பார்த்து காப்பியடிக்கும் மனப்பான்மைதான்....
அவர்கள் நாட்டு சீதோஷ்ண
நிலைக்கு ஏற்றாற் போல அவர்கள் கட்டிக்  கொள்கிறார்கள்..நல்ல வேளை
எஸ்கிமோக்களைப் பார்த்து காப்பியடிக்காமல் விட்டோமே!

அப்படியேதான் சாப்பாடு விஷயத்திலும்.....மருத்துவர்கள் நெய் கூடாது எண்ணை கூடாது என்பதெல்லாமும் தவறே.
 நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு அளவோடு நெய், எண்ணை எல்லாம் சேர்த்துக் கொண்டே
ஆக வேண்டும்.

இப்படித்தான், முன்பு தமிழ்வாணன் ('கல்கண்டு') எண்ணைய் தேய்த்துக்
குளிப்பதை கிண்டல் செய்திருந்தார்....எல்லா டாக்டர்களும் கூட அதைத்
தவிர்க்க வேண்டுமென்று இப்போதும் சொல்லி வருகின்றனர்.  ஏனென்றால்
நம் தோல் ஒரு one way traffic க்காம்; அதனால் வியர்வையை வெளியே தள்ள முடியுமே தவிர எண்ணையை உள் வாங்கிக் கொள்ளாதாம்.  அதுவும் முற்றிலும் தவறு.    எப்படி இதை அழுந்தந்தத் திருத்தமாக சொல்கிறேனென்றால் எண்ணை தேய்த்து குளித்த பின் நான் அனுபவித்த சுகமும் தேய்க்காமல் நான் அனுபவித்த சோகமும் தான்.  நம் நாட்டுக்கு அது நிச்சயம் தேவை.  பிறந்த குழந்தைக்கு எண்ணைய் தேய்த்து குளிப்பாட்டுவதும்
சுத்தமாய் நின்றுவிட்டது.  அது மிகவும் தவறு.  எல்லாம் அரைகுறை படிப்பால் வந்த வினைதான்.

இப்படியேதான் நாம் உடை உடுத்துவதும்...பருத்தி ஆடைதான் நமக்கு
தோதுபடும்..  ஆனால்.....இனி ஏது சொல்லியும் பயனில்லை... ஆடையில்லாத ஊர்;  நாமும் நிர்வாணமாயிருப்போம்....

முடிந்தால் என் வீட்டிற்கு ஒரு தடவை வந்து போங்கள்...110 வருடங்களுக்கு முன் கட்டியது....நாட்டு-ஓடு வீடு.....களி மண்+காரை சுவர்...12 அடி உயர
கூரை...பின்னால் பெரிய தோட்டம் (ஆனால் என் தகப்பனாருக்குப் பின் 
அது தோட்டமாயில்லை...சும்மா புதர் மண்டி கிடக்கும் ஒரு திறந்த வெளி..
மத்தியானம் 4 மணிக்கு மேல் நல்ல இதமான காற்று.) வீட்டுக்குள் எப்போதும் குறைந்தது 4 டிகிரியாவது வெளியை விட உஷ்ணம் குறைந்தேயிருக்கும்..
கீழே தட்டு ஓடு...,மேலே ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப் பட்ட நாட்டு ஓடு...
உஷ்ணத்தை வாங்கும் வேகத்திலேயே திருப்பியனுப்பிவிடும்...களி மண்+காரை சுவர்களும் அவ்வாறே.....ஒரேயொரு குறை...இரண்டு பக்கமும் இடைவெளி யில்லாமல் வீடுகள்...சன்னல் வசதி சிற்சில அறைகளில் போதாது...மேலும் அந்த நாட்டு ஓடுகளை சரியாய் பழுது பார்த்து அடுக்க
இப்போது ஆட்களே கிடைப்பதில்லை....(மழை காலத்தில் சிறிது கஷ்டம்தான்
சென்னை மழையாதலால் சமாளிக்கிறோம்.)

நன்றி; வணக்கம்.

அன்பன், முரளி. "
___________________________________________________
முரளியின் மேற்படி கருத்துக்களில் நூறு சதவிகிதம் உடன்பாடு 
எனக்கு உண்டு!
இதனைப் படிக்கும் உங்களுக்கும் அப்படி இருக்கும் என்று நம்புகிறேன்!

திரு. முரளி அவர்களுக்கு - நன்றி!

-மோகன் பால்கி 

புதன், 7 ஏப்ரல், 2010

நம் முன்னோர்களின் கட்டிடக் கலை ! (Our forgotton past)

கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது.​ முன்பெல்லாம் சில ஊர்களில் மட்டுமே வெயில் அதிகம் என்று பயந்த காலம் மாறி,​​ இப்போது எல்லா ஊர்களிலும் ஏறக்குறைய 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.​ கோடை வெயிலைவிடக் கொடுமை பகல்நேர மின்வெட்டு.​ அலுவலகம்,​​ வீடு எங்கே என்றாலும் உட்கார முடிவதில்லை.​ உடலும் சேர்ந்து கொதிக்கிற வேளையில்தான் நம் முன்னோர்களின் கட்டடக் கலை நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தின் கோயில்கள்,​​ அரண்மனைகள்,​​ பழமைவாய்ந்த கட்டடங்கள் அனைத்தும் இந்தியச் சுற்றுச்சூழல்,​​ தட்பவெப்பம் ஆகியவற்றை மனதில் கொண்டு கட்டப்பட்டவை.​

பத்மநாபபுரம் அரண்மனை இன்றளவும் பொறியாளர்கள் சென்று பார்த்து வியக்கும் ஒரு கட்டடமாக இருந்து வருகிறது.​ காரணம்,​​ அந்த அரண்மனைக்குள் எப்போதும்,​​ எந்தப் பருவ காலத்திலும் தட்பவெப்பம் இதமாக இருப்பதால்தான்.​ திருமலை நாயக்கர் மகாலும் அப்படிப்பட்டதே.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட எந்தவொரு அலுவலகம் அல்லது வீட்டுக்குச் சென்றால்கூட,​​ வெளியே எத்தனை டிகிரி வெயில் இருந்தாலும்,​​ கட்டடத்துக்குள் ஒருவிதமான குளுமை எப்போதும் இருக்கும்.​ கூரையிலிருந்து 20 அடி நீளக் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்விசிறிகள் சுழலாத போதும் இந்தக் குளுமை நீடிக்கவே செய்யும்.​ காரணம்,​​ அந்தக் கட்டடத்தின் உள்பகுதி அந்த அளவுக்கு உயரமாகவும்,​​ ஜன்னல்கள் அதிக எண்ணிக்கையிலும் இருந்தது.​

ஆனால் இன்றைய பொறியாளர்கள்,​​ வெளிநாடுகளில் உள்ள கட்டடங்களை அப்படியே ​ காப்பியடித்து இங்கு கட்டுகிறார்கள்.

பத்து ஆண்டுகள் முன்புவரை குடிசைகள் கட்டுவோர்,​​ ஓலையால் கூரை வேய்ந்து,​​ சுற்றுச் சுவரை மண்ணால் கட்டினார்கள்.​ அத்தகைய வீடுகள் மழையிலும்,​​ வெயிலிலும் குளுமையாகவே இருந்தன.​ இப்போது,​​ அதே அளவில்,​​ தாட்கோ நிதியுதவியுடன் கட்டப்படும் ஆதிதிராவிடர் நலக் குடியிருப்புகளில் பகல்நேரத்தில் வேறு வழியின்றி இருந்தாக வேண்டும்.​ இரவில் கான்கிரீட் வெப்பத்தைக் கக்கும்போது,​​ இந்த ஏழைகள்,​​ வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.​

கிராமங்களிலாவது வெளியே வாசலில்,​​ திண்ணையில் படுத்து உறங்க முடிகிறது.​
நகரத்தில் வசிக்கும் மக்கள் திருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே உடல் வெம்பிக் கிடக்க வேண்டியுள்ளது.​
இவ்வாறு உடல் வெம்புதல் காரணமாக,​​ நகர்வாழ் மக்களைப் பாலுணர்வு ​ சிக்கல்களில் கொண்டு சேர்க்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.​ ​

பழைய காலத்துக் கட்டடங்களில் பெரும்பாலானவை கருங்கற்களால் கட்டப்பட்டவை.​ கருங்கற்கள் வெயில் சூட்டை உள்வாங்கி,​​ அதே திசையில் வெளியேற்றிவிடும்.​ கட்டடத்துக்குள் இருப்பவர்களுக்கு வெயில் தெரியாது.​ 

ஆனால்,​​ இன்றைய கான்கிரீட் கட்டடங்கள்,​​ வெப்பத்தை வாங்கி வீட்டுக்குள் பரவச் செய்கின்றன.​ அதைத் தணிக்க மின்விசிறி,​​ வசதியிருப்பின் ஏர்-கண்டிஷன் ஆகியவை தேவையாக இருக்கிறது.​ இதனால் மின்சாரத் தேவையும் கூடுகிறது.​ ​

தற்போது கிரீன் பில்டிங் என்ற கருத்தாக்கம் பரவலாகி வருகிறது.​ இதன் நோக்கம் மின்சாரம் மிகக் குறைவாகப் பயன்படுத்தும் கட்டடங்களை வடிவமைப்பதுதான்.​ சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டடங்களை உருவாக்குவதுதான் இதன் அடிப்படைக் ​ கருத்து.​ கட்டடத்தைச் சுற்றி மரங்களை வளர்த்துவிட்டால்,​​ அதன் மூலம் பசுமைச் சூழலை ஏற்படுத்தலாமே தவிர,​​ எரிசக்தி இல்லாத கட்டடமாக அதை மாற்ற முடியாது.​ ​

மின்சாரம் மிகக் குறைவாகத் தேவைப்படும் வீடுகள்,​​ பங்களாக்கள்,​​ அலுவலகங்கள் ஆகியவற்றை வடிவமைப்பதுதான் இன்றைய அவசியத் தேவை.​
பெருநகரங்களில் உள்ள வீடுகளிலும் அலுவலகங்களிலும் பகல் நேரத்தில் எரியும் விளக்குகள்,​​ இயங்கும் குளிரூட்டு சாதனங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுத்து.​ இவர்கள் பகல் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்தை மட்டும் கணக்கிட்டால் மின் உற்பத்தியில் பாதியை நகரங்கள் விழுங்கிக் கொண்டிருப்பதை உணரலாம்.​
இந்த மின்தேவையைப் பாதியாகக் குறைத்தாலும்கூட,​​ சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமா?​ நகரங்களில் மக்கள்தொகை பல கோடியாக அதிகரித்துவிட்ட நிலையில்,​​ அனைவருக்கும் வீட்டுவசதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டடங்கள் உருவாக்கப்படும்போது,​​ இத்தகைய கிரீன் பில்டிங் என்பது சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.​ இருப்பினும்கூட,​​
நமது பாரம்பரியக் கட்டடக் கலையின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு,​​ அதற்கேற்ப கட்டடத்தின் உட்கூரையை உயரமாக அமைப்பதும்,​​ ஜன்னல்களை அதிக எண்ணிக்கையில் வைப்பதும்,​​ சிமென்ட் பயன்பாட்டைக் குறைப்பதும்,​​ கட்டடம் எந்தத் திசையில் இருந்தாலும் எப்போதும் வீட்டுக்குள் வெளிச்சம் இருக்கும் வகையில் வடிவமைப்பதும்தான் இன்றையத் தேவை.​ ​

இந்த மண்ணின் தட்பவெப்பம்,​​ சூழல் அறிந்து,​​ முன்னோர் காட்டிய வழியில்,​​ இன்றைய கட்டுமானப் பொருளைப் பயன்படுத்தும் பொறியாளர்கள் நமக்குத் தேவை.​ இப்போது படிக்கும் இந்த மாணவர்களில் 10 சதவீதம்பேரையாகிலும் மரபின் பொறியாளர்களாக இப்பல்கலைக்கழகங்கள் மாற்றும் என்றால்,​​ மக்கள் பயன்பெறுவர்,​​ நாடும் பயன்பெறும்

நன்றி நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=223206&SectionID

Criss Angel...A wonderful Magician ! (Where is he now?)



better known by his stage name Criss Angel,
http://en.wikipedia.org/wiki/Criss_Angel
Criss Angel's Official website: http://www.crissangel.com/

"No one has the ability, that I'm aware of, to do anything supernatural, psychic, talk to the dead. And that was what I said I was going to do with the show "Phenomenon". If somebody goes on that show and claims to have supernatural psychic ability, I'm going to bust [him] live and on television."

""If on 9-10 somebody could have predicted that 9-11 was going to happen, they could have saved thousands of lives...right?"

"I don't fear death. So anything that happens is just something you learn from,"
- Criss Angel





 Other Magicians I Love:
(You click here to know about them)
 David Blaine 
David copperfield
P.C.Sorcar (Indian)

- Mohan Balki

புதன், 24 மார்ச், 2010

இவர்கள் தான் நம் அரசியல் வாதிகள்! (This is our present Politicians)

அரசியல் வாதிகள் உலகம் முழுவதும் எப்படி இருக்கிறார்கள் என்று பாருங்களேன்! தெருச் சண்டைக்காரர்களைப் போலவும்....தூங்கு மூஞ்சிகள் போலவும்!


                                                                        

கடைசியில் சீன அரசியல்வாதிகள் மக்கள் மன்றத்தில் தூங்குவதைப் பாருங்கள்!

முதலில் மேலே இருப்பது இந்தியா !!


                                                              

                                                               


        

திங்கள், 15 மார்ச், 2010

நம்ம நடிகர் அடடே மனோகர் - பாடல்களைக் கேளுங்கள்!


அடடே மனோகர்! என்று ஒரு சிரிப்பு நடிகர் நினைவு இருக்கிறதா உங்களுக்கு?

அவரது பிளாக் பற்றி எனது நண்பர் திரு அந்தோணி முத்து எனக்கொரு நாள் லிங்க் அனுப்பியிருந்தார்.
மனோஹரின் மிக்கத் தெளிவு, இறைமை பற்றிய தனது மேலான கருத்துக்கள், தானே எழுதி, இசை அமைத்த தனது இறை/தத்துவ/நிலையாமை /வாழ்வியல்உண்மைகள் பற்றிய கருத்துக்களை மற்றும் பாடல்களைக் கேட்டேன்! அதை அனைவரும் கேட்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், தனது வலைத் தளத்தில் இருந்து பிறர், பதிவிறக்கம் செய்யுமாறு அமைத்துள்ள உள்ளப் பாங்கு கண்டு வியப்பும் பெரு மகிழ்வும் கொண்டேன். பாடல்கள் பாடி இசை அமைத்துப் பதிவு செய்வது என்பது சின்ன விஷயம் அல்ல! அந்தப் பணியை எப்படியோ செய்து மெனக் கெட்டு பின்னர் அதை "சும்மா" தருவதற்கும் அவர் பெரிய தொழில் அதிபரோ சூப்பர் ஸ்டாரோ அல்ல! ஏதோ ஒரு இறைமையின் உந்துதல் அவரிடம் இருக்கிறது-இல்லாவிடில் இதை செய்ய முடியாது என்பது எனது கருத்து! சுமார் நாப்பத்தி ஒரு பாடல்களுக்கு மேல், அதில் வரவு எதுவும் இருக்காது என்று தெரிந்தே எழுதி, இசை அமைத்து, ஒலிப் பதிவு செய்வது-அதிலும் தரமாக- என்பது சாதாரண வேலை அல்ல!
இவர் ஒரு வித்தியாசமான நடிகர்-அதை விட மேலாக நம் சம காலத்தில் வாழும் ஒரு நல்ல உயிர்!
அவர் மேலும் நல்ல உடல்/மன/ஆன்ம நலம் பெற்று நீடு வாழ்க என்று வாழ்த்துவோம்!


நீங்களும், அவரது வலைத் தளத்துக்குத் தவறாமல் இப்போதே செல்லுங்களேன்!
http://adademanohar.blogspot.com/
அதை புக் மார்க் செய்து வையுங்கள்; சமயம் வாய்க்கும் போது அவரது அர்த்தமுள்ள இனிய பாடல்களை கேட்டு மகிழலாமே!
அவரது முகவரி/தொலைபேசி எண்கள்:

தெ.ரா. முரளி மனோகர்
('அடடே மனோகர்')
199 வெள்ளாளத் தெரு
புரசைவாக்கம்
சென்னை 600 084
(தொலை பேசி: 25325412)
(அலை பேசி: 9840061878)


-மோகன் பால்கி

வியாழன், 11 மார்ச், 2010

உங்களுக்கு அந்தப் 'பளிச்' பளிச்சிடுகிறதா?


ந்த நண்பரைப் பார்த்த உடன் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.
அது 1980-85 களுக்கு இடைப்பட்ட காலம்.
அவர் பெயர் செழியன். (சில காரணத்துக்காக இங்கு பெயரை மாற்றி உள்ளேன்). ஒவ்வொருவரிடமும் பேசுவதற்கு என்று அவர் ஒவ்வொரு விஷயம் வைத்திருப்பார். அவரைப் பார்த்த உடன் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். இத்தனைக்கும் அவரது உடைகள் சற்று கிழிந்தும், நல்ல காலணிகள் இன்றியும், கலைந்த தலைமுடி , மழிக்கப் படாத முகம் என்று சாதாரண தோற்றத்தோடு தான் இருப்பார்.

எனக்கு மனோ தத்துவத்தில் ஆர்வம் இருந்ததால், மனித உறவுகள், கோபம், பிரிவு அதற்கான காரணங்கள் என்று எதையும் ஆய்வுக் கண்ணோடு பார்க்கும் பழக்கம் சிறு வயது முதலே இருந்தது. அதனால், அவரை உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். அதாவது, எதனால் அவரிடம்  மற்றவர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆசை ஆசையாகப் பேசுகிறார்கள் என்று. சிரிக்கவே தெரியாத சில ஜடங்கள் கூட அவரைக் கண்டால் சிரித்துப் பேசி சகஜமாக பழகுவார்கள். என்ன மாயம் இது! அவர்களிடம் மைய இழையாக ஓடும் பொதுவான பேச்சு எதைப் பற்றியதாக இருக்கிறது? அதை ஆராயத் தீர்மானித்தேன்.

அவருக்கும் எனக்குமான உறவு அவரும் நானும் அந்நாட்களில் திராவிடர் கழக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதே. எனவே, எங்கு கூட்டம் நடந்தாலும் நிச்சயம் அவரைக் காண இயலும். அவரைப் பின்தொடர்ந்த படியே சில பல நாட்கள் ஆய்வு செய்ததில் எனக்கு ஒரு சுவாரசியமான விஷயம் புலப் பட்டது.

அவரது பேச்சு எப்போதுமே மற்றவர்களுக்கு உதவும் பேச்சாக, நலம் விசாரிக்கும் பேச்சாக, தகவல் அளிக்கும் பேச்சாக, பாராட்டும் பேச்சாக, நன்றி கூறும் பேச்சாக, உற்சாகம் தரும் பேச்சாக, கள்ளம் கபடம் அற்ற பேச்சாக மட்டுமே இருப்பதைக் கண்டு வியந்தேன்!

அவரது பேச்சு கிட்ட தட்ட இப்படி இருக்கும்:

"நான் காலையிலே உங்க வீட்டுக்கு வர்றேன். அந்த லெட்டர்-ஐ கொடுங்க. நான் அங்க தான் போகப் போறேன் - தந்துடறேன்"
" அய்யா! அந்த பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பம் தர ஆரம்பிச்சாச்சி- உங்க பையனுக்காக ஒரு நாள் சரவணன் கிட்டே கேட்டிருந்தீங்களே!"
" ஆமா! அன்னக்கி அந்த மழைல, பாவம் எப்படி போனீங்க - எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய் சேர்ந்தீங்க"?
" தம்பி! நேத்து மீட்டிங்குல கலக்கிட்டீங்க. ரொம்ப நல்லா இருந்தது உங்க பேச்சு. வாழ்த்துக்கள்!"
இப்படிதான் இருக்கும் அவரது உரையாடல்!
பிறரிடம் அவர் உதவி கேட்பதாய் இருந்தாலும், " எனக்கு ஒரு சின்ன உதவி..முடிஞ்சா பாருங்க...ஒன்னும் நிர்பந்தம் இல்ல.."ன்னு சொல்லி விட்டு இயல்பாக கேட்பார். நிறைய நண்பர்கள் இருந்ததால் அவருடைய வேலைகள் வெகு எளிதாகவும் விரைவாகவும் முடிந்துவிடும்.

இப்போது எனக்குப் புரிந்துவிட்டது! சிலரை நமக்கு அதிகம் பிடிப்பதும் - சிலரை ஏதோ காரணத்தினால் நம் மனம் தவிர்ப்பதும்!

மேற்கண்ட பேச்சையே இப்போது வேறு விதமாக மாற்றிப் பார்ப்போமா?

"நீங்க காலையிலே போற வழியிலே என் வீட்டுக்கு வந்துட்டு போக முடியுமா-ஒரு லெட்டர் இருக்கு-அவர் கிட்ட தந்துடுங்க "

உங்க வீட்டுப் பக்கத்துல அந்த பள்ளியிலே விண்ணப்பம் தர்றாங்க...வாங்கி வைக்க முடியுமா?

அன்னக்கி மழையிலே நிக்கறப்போ ஒரு பிளாட் பத்தி சொன்னீங்களே- விசாரிச்சுட்டீங்களா?

நேத்து மீட்டிங்குக்கு என்னால வர முடியலே....எனக்கு ஆபீஸ்-ல ஒரே டென்ஷன். இப்பக்கூட எப்பிடியோ அடிச்சி பிடிச்சி வந்தேன்"

மேற்கண்ட இரண்டு விதமான பேச்சும் பேச்சுதான்!

ஆனால், நம் உள் மனதில், முதல் விதப் பேச்சு ஒரு வித உற்சாகத்தையும்
இரண்டாம் விதப் பேச்சு ஒரு வித மனச் சோர்வையும் தருகிறது!

காரணம் வெளிப்படையானது தான் !
முதல் பேச்சில் பொது நலம், உள்நோக்கம் இன்மை, அன்பு, பிறர் மீது கரிசனம் வெளிப்படத் தெரிகிறது!
இரண்டாம் பேச்சில் தன்னை மட்டும் முன்னிறுத்திய தன்மை மறைந்து கிடக்கிறது!

அதாவது, சுயநலம், மற்றவர்கள் மீது வெறுப்பு உமிழ்தல், பரபரப்பு, இறுக்கமான மன நிலை, உழைப்பின் மீது நம்பிக்கை இன்மை, அடுத்தவர்களை குறை கூறுதல், நேரம் தவறுதல்-அதற்கு சாக்கு போக்கு கூறுதல், தனது மதம்/கட்சி அது சார்ந்த கொள்கைகளே உயர்ந்தது என்று விதண்டா வாதம் பண்ணி நேரக் கொலை செய்வது, துடுக்காகப் பேசி அடுத்தவர் மனதைப் புண்படுத்துவது, எப்போதும் தன்னைச் சுற்றியே இந்த உலகம் இயங்க வேண்டும் என்று, ஒரு வித
"தன் முனைப்போடு" (Egoful activities) செயல் படுவது, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தவறான நினைப்பு, மூடிய மன நிலை, ஆராயாமல் உடனடியாக
முடிவுக்கு வரும் குணம் (Jumping in to conclusions) இவை யாவும் கொண்ட ஒரு மனிதரை அல்லது இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் நமக்கு அவரைப் பிடிக்காமல் போய்விடுகிறது. திடீரென்று இது நடக்கும்!

மேல் மனதுக்கு ஏன் எதற்கு இப்படி பிடிக்காமல் போகிறது என்று காரணங்கள் புரியா விட்டாலும், ஒருவரைப் பிடிப்பதற்கும் தவிர்ப்பதற்குமான காரணம் என்னவென்று ஆழ் மனதுக்கு மட்டும் எப்படியோ 'பளிச்' என்று தெரிந்து விடுகிறது!

உங்களுக்கு அந்தப் 'பளிச்' பளிச்சிடுகிறதா?

-மோகன் பால்கி
( நட்பு எப்படி இருக்க வேண்டும்? இங்கே சொடுக்குக! )

இது நம் நீரிழிவு (Diabetes) நோயின் அளவு!



00:00



KanneKaniyamuthe Movie contd
Movies
01:30 Song Sequence Music based
04:30 News (இது மட்டும் தான் சினிமா இல்லை) News based
05:00 Song Sequence Music based
07:00 Movie - Avathara Purushan Movies
09:30 Kodambakkam Movies
10:00 Movie - Vesham Movies
13:00 Movie - Doctor Amma Movies
16:00 Vanna Thirai Movies
16:30 Movie - Kizhakkum Merkkum Movies
19:00 Sirikalam Vaanga Film based
19:30 Thirai Minnalgal பிலிம்
20:00 Movie - Nilakkaalam Movies
23:00 Movie - Kanne Kaniyamuthe Movies

00:00 KanneKaniyamuthe Movie contd Movies

http://www.sunnetwork.org/tvschedules/schedule.asp?tv=ktv
மேற்கண்ட இந்த அட்டவணை. K-டிவி யின் ஒரு நாள் பொழுது (K TV Schedule for 11-Mar-2010) எப்படிக் கழிகிறது என்பதாகும். ஜீரோ ஜீரோ முதல் இருபத்து நான்கு மணி வரை ஒரே ஒரு அரை மணி நேரம் தவிர மீதம் யாவும் திரைப் படங்கள், மற்றும் திரைப் பாடல்கள். இந்த டிவி-என்று அல்ல-கிட்ட தட்ட எல்லா டிவி-களிலும் இது போல் திரைப் படங்கள்-சின்னத் திரைத் தொடர்கள்! மக்கள் பாவம் என்னதான் செய்வார்கள்!

வேறு சில காரணங்கள் இருப்பினும் இது போன்று திரைப் படம் உட்கார்ந்து பார்த்துப் பார்த்து உழைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் சாப்பிட்டு சாப்பிட்டு, நீரிழிவு நோய் பெண்கள் பலருக்கும் இப்போது வர ஆரம்பித்து விட்டது. முன்பெல்லாம் ஆண்களுக்குதான், அதுவும் ஒய்வு பெற்றவர்களுக்கு வரும். இப்போது, இளைஞர்களும், தான் விளையாடுவதை விட்டு விட்டு பிறர் ஆடும் கிரிக்கெட்டை மணிக் கணக்கில் பார்த்துப் பார்த்து உழைப்பற்ற சோம்பேறிகள் ஆகி நீரிழிவுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஓடி ஆட வேண்டிய சிறுவர் சிறுமிகளும் இதில் அடக்கம். இப்போதெல்லாம் தெருவில், வீட்டு வாசல்களில், கோவில்களில், மக்கட் கூட்டத்தைக் காண முடிவதேயில்லை. மயானம் போல் இருக்கிறது. எல்லோரும் டிவி, வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் என்று அந்த முட்டாள் பெட்டிகளிடமே (Idiot-Boxes) தஞ்சம் அடைந்து ஒரு "நடமாடாப் பிணங்களாக" மாறி வருகிறர்கள். கை-காலை ஆட்டுவது கூட இல்லை! இதற்கு இடையில், வேளை தவறாமல் சாப்பிட்ட உணவு மட்டும், சக்தி செலவில்லாமல் மீதம் உள்ள உடலின் சக்தி (Excess Glucose) அதிக க்ளுகோஸ்-ஆக சேர்த்து வைக்கப் பட்டு நீரிழிவு நோய் ஆரம்பம் ஆகிறது!

வரும் காலத்தில், அதாவது இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் நீரிழிவு நோயாளிகளாக இருப்பார்கள் என்பது என் யூகம்!

-மோகன் பால்கி
(What is diabetes? What causes diabetes?மேலும் தகவலறிய இங்கே சொடுக்குக!)

ஞாயிறு, 7 மார்ச், 2010

தமிழருவி மணியன் உரை செய் - திருமந்திரம் !

ன்று மாலை எங்கள் பெரம்பூர் பகுதியில் "அன்ன தான சமாஜத்தில்" தமிழருவி மணியன் அவர்களின் "தீர்வு தரும் திரு மந்திரம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. அந்த வழியாக எதற்கோ சென்ற நான், தமிழருவி மணியன் என்ற பெயரைப் பார்த்ததும் உள்ளே சென்று அமரவும் அவர் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. நல்ல ஆற்றொழுக்கு போன்ற பிசிரற்ற நடை. மணியான உச்சரிப்பு. ஒரு உளவியல் நிபுணன் என்னும் பார்வையில், உதாரணங்களைச் சொல்லப் போய் அவர் தடம் மாறி விடாமல் மீண்டும் திரும்பி வந்து தலைப்பு சார்ந்த செய்திகளைத் தொடரும் கூர்த்த மதி யாவும் நான் கண்டு-கேட்டு ரசித்தேன். தேர்ந்த மனக் குவிப்பு உள்ளவர்கள் மட்டுமே அதைச் செய்ய இயலும். அதற்கும் நல்மன-நல் மொழி-நற்செயல்கள் அவசியம். அது மணியன் அவர்களிடம் அதிகம் உண்டு என்பது பகைவர்களும் ஏற்கக் கூடியதே! இல்லாவிட்டால் என் கால்கள் அது போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை ஒருபோதும் அழைத்துச் செல்லாது! நிற்க! திருமந்திரம் - திருமூலர் செதுக்கிய சிற்ப-உரை! அவர் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வரியாய் செதுக்கியது! அவரது சொந்த அனுபவங்களில் இருந்து! இந்தக் காலத்தில் பத்துப் புத்தகங்களைப் பார்த்து ஒரு புதியவன் புத்தகம் யாப்பது போலின்றி! திருமூலர், தானே சொல்கிற படி 'மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்" என்கிறார்! ஓரிடத்தில் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே" என்கிறார்! ஒவ்வொன்றும் நான்கு வரிப் பாடல்கள்!வெண்பா முறையில் எழுதி உள்ளார்! முதல் பாடல் என்ன தெரியுமா? "ஒன்றவன் தானே ; இரண்டவன் இன் னருள் நின்றனன் மூன்றினுள் ; நான்கு உணர்ந்தானைந்து வென்றன னாறு; விரிந்தன னேழும்பர்ச் சென்றனன்; தானிருந்தா நுணர்ந்தது வெட்டே"! ஒன்று அவன் தானே = இறைவன் ஒருவனே என்கிறார்! இரண்டு அவன் இன்னருள் = உரு - அரு ( matter & energy) அவனே! மூன்று நின்றனன் = படைத்தல், காத்தல், அழித்தல் நிலைகள். நான்கு உணர்ந்தனன் = அறம், பொருள், இன்பம், வீடு பேறு! ஆறு விரிந்தனன் = மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை ஆறு ஆதாரங்களிலும் இறைந்து பரவிய இறைவன்! ஏழு உம்பர்ச் சென்றனன் = அதற்கும் மேலாக ஏழாவது தளமான சகஸ்ரார்-இல் சென்றவன் ! தான்இருந்தான் உணர்ந்தது எட்டே! = அங்கு ஒருவன் உணர்வது, தானே பஞ்ச பூதக் கலவையாகவும் சூரிய சந்திர மற்றும் அனைத்து உயிராகவும்-அதாவது எட்டாக தன்னை உணர்தல் ! திருமந்திரத்தில் எனக்குப் பிடித்த இரு பாடல்கள் என்ன தெரியுமா? "கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை மன்னிய மாதவம் செய்வோர் ஒரு சிறை தன்னியல் புண்ணி உணந்தோர் ஒரு சிறை என்னிது? ஈசன் இயல் பறியாரே ! " (2073) (வெறும் வார்த்தைக்) கற்றோர் ஒரு சிறை - என்ன ஒரு கம்பீரமாய்ச் சொல்கிறார் பாருங்கள்! "நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர் நடுவு நின்றார் சிலர் தேவரு மாவர் நடுவு நின்றார் சிலர் நம்பனு மாவர் நடுவு நின்றா ரொடு நானுநின் றேனே!" (322) நடுவில் நிற்பது சுலபம் இல்லை! புத்தர் கூட (middle way) அதையே பேசுகிறார் ! எந்த மனிதனும் எதையோ சார்ந்து தான் வாழ்கிறான்-நடுவில் நிற்க முடிவதில்லை! இந்தியாவிலும் இல்லாமல் பாகிஸ்தானிலும் இல்லாமல் நடுவில்ஒருவன் வெறும் மனிதனாக இருப்பது அத்தனை சுலபம் இல்லை-இருந்தால் அவரே ஞானி-தேவர் என்கிறார் ! "நடுவு நின்றாரோடு நானும் நின்றேனே" என்று திருமூலர் சொல்வது எவ்வளவு சுகானுபவமாக பவ்வியமாக உள்ளது பாருங்களேன்! நேரம் கிடைக்கும் போது எனது தியான/உளவியல் பார்வையில் ஒரு சில பாடல்களுக்கு விளக்கம்-இந்த அர்த்தமாய்தான் இருக்கும் என்ற வகையில் எழுத வேண்டும் என்ற நினைப்பு நெடு நாட்களாய் உள்ளது! எனினும், அந்தக் குறையைப் போக்க திரு.தமிழ் அருவி மணியன் போன்ற சிறப்பான அன்பர்கள் இருக்கிறார்கள் என்பதால் நான் வேறு விஷயங்களில் எப்போதும் போல கவனம் செலுத்தலாம்! ஒரு இடத்தில நிலையாமை பற்றி உணர்த்த வந்த மணியன் அவர்கள், மனிதர்கள் நமக்கு அதிக பட்சம் தரப்பட்ட நாட்கள் 100 x 365 = 36500; அதற்குப் போய் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்ற போது அவை அர்த்தத்தோடு மவுனித்துப் போனது! இப்போதெல்லாம் ராப்பிச்சைக் காரனே ஏன் இல்லை தெரியுமா என்று கேள்வி கேட்டு விட்டு அதற்கு தானே பதில் சொல்ல முனைந்த தமிழருவி - அதற்கு காரணம் இக்காலத்தில் நம்மிடம் காணப்படும் அளவு கடந்த சுயநலம் - அதற்கு ஆதாரமாக நம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள Fridge-களே சாட்சி என்று சொன்ன போது எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது! திருமந்திரம் பற்றி மணியன் அவர்களைப் பேசச் சொல்லி வெறுமனே கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்துவிட வேண்டும்! பிறகு ஒரு விஷயம், நல்ல படித்தவர்கள் கூட்டமும் இருந்தது மேலும் ஒரு சிறப்பு! நீங்களும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு ஒரு முறை திருமந்திரம் படித்துப் பாருங்களேன்! (இங்கு கிளிக்குங்கள் நீங்களும் திருமந்திரம் இங்கு படிக்கலாம்) 
-மோகன் பால்கி

(இப்படி எல்லாம் நான் போற்றி புகழ்ந்து எழுதிய அந்த மனிதன் பிற்காலத்தில் திராவிடர் இயக்கங்களை (திமுக, அதிமுகவை) ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் பின்னால் அலைந்து கொண்டு, அவரை கட்சி ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்திக் கொண்டு, பிறகு அவருடைய தீய கனவு பலிக்காமல் புலம்பிக் கொண்டு இருந்ததெல்லாம் வரலாற்றில் அவர் பற்றிய மிகவும் அவலமான பகுதிகள்! அவர் வெறும் தமிழ் சார்ந்தவராக, இலக்கிய பேச்சாளராக இருந்திருக்கலாம்! அவர் உள்ளிருந்து வெளிவந்த திராவிட எதிர்ப்பு விஷம் மிகவும் கேவலமானது; அவர் மீது இருந்த மதிப்பு போய்விட்டது!)

மன்னர் ஆட்சியே எனக்குப் போதும்!


மன்னர் ஆட்சி முறை ஒழிந்து மக்கள் ஆட்சி ஏற்பட்டுவிட்டது என்று நம்ப முடியவில்லை!

இன்னும் சொல்லப் போனால் மன்னர் ஆட்சியே மேல் என்று தோன்றுகிறது.

காரணம், அன்றைய முகலாய மன்னர்கள் அல்லது அதற்கும் முன்னர் தென்னிந்தியாவில் சேர சோழ பாண்டிய மன்னர்களின் ராஜ போக வாழ்க்கையை விட அதிகமான சொகுசு வாழ்க்கை நமது மாநில மத்திய அமைச்சர்கள்/ அவர்களது குடும்பங்கள் வாழ்வது கண்கூடு. அன்றைக்காவது ஒரு நாட்டுக்கு ஒரு மன்னனும் அவனது ஒரே ஒரு குடும்பம்/சில பல மனைவியர்கள், ஒரு சில தேர்கள், கொஞ்சம் யானைகள், கொஞ்சம் குதிரைகள், கொஞ்சம் வைரம்-தங்க நகைகள், ஓரிரு அரண்மனைகள் என்று இருந்து விட்டு செத்துப் போனார்கள். இன்றைக்குப் பார்த்தால், சுதந்திரம்!!! பெற்ற இந்தியாவில் ஒரு 300 - 400 பாராளுமன்ற அமைச்சர்கள், 20 -25 மாநிலங்களில், ஒரு மாநிலத்துக்கு 100 - 300 எம்-எல்-ஏ க்கள், அதோடல்லாமல் மாநில அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், அரசுச் செயலாளர்கள், கலக்டர்கள் என்று ஒரு பெரிய மெகா-சைஸ் கும்பலே இருந்து கொண்டு ராஜ வாழ்கை அனுபவிக்கிறது.

பத்திரிக்கைகள் சொல்கிற புள்ளி விவரம், பொது மக்கள் பேசுவது, இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஒரு சாதாரண வட்டச் செயலாளர் ( ஆளும்/அல்லது ஆளாத கட்சியாக இருக்கலாம் ) முதற் கொண்டு கோடிக் கணக்கில் கொள்ளையடித்து வருவது தெரிகிறது. அதோடு, ஒரு அரசியல்/அரசு பிரமுகர் காரில் போனால் பின்னால் நூறு கார்கள், ஆயிரம் தொண்டர்கள் ஜே! ஜே! போடுவது, காலில் விழுவது, ஆங்காங்கு மேடை போட்டு அரசாங்கப் பணத்தில் இலவசங்களை மக்களுக்கு அள்ளித் தருவது! வழியெங்கும் தோரணங்கள்! வாழ்த்து Baner -கள், கொடிகள், அன்ன தானம், வஸ்த்ர தானம், கோவில் பூஜைகள், பண முடிப்புகள் வழங்குவது, இதையெல்லாம் பார்க்கும் போது, இந்த மக்கள் ஆட்சி முறை, ஆயிரக்கணக்கான குறுநில மன்னர்களின் தான்தோன்றித் தனமான ஆட்சி போலவும், அதிக செலவு பிடிப்பதாகவும், அதிக ஓட்டைகள் உள்ள பானையாகவும் தோன்றுகிறது.

மக்களின் அரசு என்பது நூறு ரூபாய் வருமானம் வந்தால் அதில் தொண்ணூறு ரூபாயை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டும். ஆனால், இப்போதுள்ள "மக்கள் - அரசாங்கப் பசு", நூறு ருபாய்க்கு புல்லும், புண்ணாக்கும் வாங்கிப் போட்டால் பத்து ரூபாய்க்கு மட்டும் பால் கறக்கிறது!! கொடுமை! தொண்ணூறு ரூபாயை இந்த மாதிரி, வழியில் போகிறவன் வருகிறவன் எல்லாம் கொள்ளையடித்து விடுகிறான். உழைக்கும் மக்களுக்கு, நல்ல தண்ணீர், நல்லக் காற்று, நல்ல சாலைகள், பயமுறுத்தாத விலையில் அரிசி, பருப்பு எதுவும் கிடைப்பதில்லை. ஆனாலும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் நம் நாட்டு தொழில் மன்னர்களும், அரசியல் மந்திரிகளும் தவறாமல் இடம் பெறுகிறார்கள். நூறு கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், ஒரு சில "தற்கால குறு-நில மன்னர்களிடம்" மட்டுமே குவிந்து கிடக்கிறது! என்ன எழவோ! இதற்குப் பெயர் மக்கள் ஆட்சி! ஜன நாயகம்! வெங்காயம்!

எனக்கு என்னமோ அந்த பழைய காலத்தில் தலைக்கு மேல் கிரீடம் வைத்து மன்னர் வருகிறார்!பராக்கு! பராக்கு! என்று சொல்லும் ஒற்றை மன்னர் முடியாட்சியே சிறந்தது என்று தோன்றுகிறது!

உங்களுக்கு எப்படி?

-மோகன் பால்கி

சனி, 6 மார்ச், 2010

"தூசு - தொங்கப்பா" என்று ஒருவன் !!

...................அழகான வீடும்-மோசமான அரசாங்க ரோடும்!

ஒரு ஊரில் தூசு தொங்கப்பா என்று ஒருவன் இருந்தான்.
வேலை வெட்டி இல்லாதவன். அதனால், பகலில் தெரு மண்ணை எடுத்து ஜல்லடையில் போட்டு சன்னமாக சலித்து மூட்டை மூட்டையாக வைத்துக் கொள்வான். அதை நடு இராத்திரியில் காற்று வீசும் திசையில் வைத்து தூவுவான்.

அது போய் அந்தத் தெருவில் எல்லோர் வீட்டிலும் அடை அடையாகப் படியும். பிறகு, காலையில் போய் அதைத் துடைக்கிறேன் பேர்வழி என்று ஒரு சில பணக்கார வீடுகளுக்குப் போய் கொஞ்சம் துடைத்து விட்டு, கையை காலை ஆட்டி விட்டு கைச்செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுவான்.


அந்த 'தூசு தொங்கப்பா' கதையாக இருக்கிறது நம்ம corporation மற்றும் High ways கதை! வருஷம் முழுவதும் தெருக்களை, சாலைகளைத் ஏதோ ஒரு காரணத்துக்காக தோண்டுவது.

மூடுவது-மீண்டும் தோண்டுவது!
தூசு தும்புகளைப் போட்டு மூடுவது!

அது அங்கு செல்லும் ஆயிரக்கணக்கான வண்டிச்சக்கரங்களில் பட்டு ஆகாயத்தில் மேல் எழும்பி, ஜாலியாக பறந்து வந்து நம் நுரை ஈரலுக்குள் போய் வசிக்க ஆரம்பித்து விடும்.
இது ஒரு நாள் ரெண்டு நாள் கதை அல்ல. பற்பல வருஷங்களாக இதே கதைதான். இத்தனைக்கும் நம்ம ஊரில் "தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்" என்ற  ஒன்று...வெட்டியாய் இருக்கிறது..நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் போங்களேன்!
அவர்கள் மொத்தம் எத்தனை பேர், எவ்வளவு அரசாங்க சம்பளம் போகிறது, அப்படி என்னதான் தினமும் செய்கிறார்கள் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? எனக்கும் தான் தெரியாது- அதுக்கு நான் என்ன பண்ண?அது போகட்டும், அதைப் பார்க்க, பார்க்காமல் இருக்கத்தான் அரசு-அரசு என்ற ஒன்று எப்பவும் வந்து போகிறதே ! நமக்கு என்ன வீண் கவலை! அது தவிர பொதுவாகவே...

நமக்குதான் "Pollution" பற்றிய பிரக்ஞையே கிடையாதே!
நாம தான் எது பற்றியும் முணுமுணுக்கக் கூட மாட்டோமே!
யாராவது தப்பித் தவறி முணுமுணுத்தால், அதை 'உனக்கு அரசியல்-பகை'
என்று உடனே இன்னொருவர் சொல்லிவிடுவோமே!

சரி, மேற்படி அந்தப் பள்ளத்தில் ஒரு வருஷ காலத்துக்கு அப்பப்ப ஏதாவது ஒரு பெரிய லாரியோ, பஸ்சோ மாட்டிக்கொண்டு அவதிப் படும்!

இல்லையென்றால், அந்த பள்ளத்தின் மீது ஒரு சமாதி-மேடு மாதிரி என்னமோ ஒன்றைக் கட்டுவார்கள்! கண்ணில்லாதவன் கறி சமைச்ச கதையாய்!

அதன் மீது ஆயிரக் கணக்கான வண்டிகள், ஆண்டுக் கணக்கில், இமயமலை ஏறுவது போல், ஏறி இறங்கி செல்லும்! உள்ளே பயணம் செய்பவர் எப்படியோ உயிர் வாழ்ந்து தொலைக்க வேண்டும்! ( பாவம்! இந்த முழு நேர டிரைவர்கள்! குடலெல்லாம் இறங்கிப் போய் இருக்கும்!) சென்னையில், பல சாலைகளில், பல ஆண்டுக் கணக்கில் இருக்கும் மேடு-பள்ளங்கள், சமாதி மாதிரி ஒட்டு போட்ட தார் ரோட்டு வேலைகள் (patch works) இன்னும் என் மனக் கண்ணில் அப்படியே இருக்கிறது.

அழகழகான வீடுகள் கட்டி இங்கே என்ன பிரயோஜனம்?
இப்படி அசிங்கமான சாலைகளை வைத்துக் கொண்டு?
(உங்கள் மனக் கண்ணில் இந்த "மக்கள் அரசுகளின்"  தெரு-சாலைகளை மறைத்து விட்டு, வெளிநாட்டுச் சாலைகள் போல கற்பனை செய்து பார்த்தால்...நாம் எல்லோருமே ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருப்பது போலத் தான் இருக்கும்! அந்த அளவு தனி மனிதர்களின் கட்டிட அமைப்புகள் சிறப்பாக இருக்கின்றன! அதைக் கெடுக்கும் பின்புலத்தை அரசு சாலைகள், தெருக்கள், குப்பைகள் ஏற்படுத்துவது கண்கூடு!)

வீட்டுக்கு உள்ளே இருக்கிற வரைக்கும் நாம் எல்லோரும் ராஜா-ரோட்டுக்கு வந்தா நசுங்கிப் போன கூஜா!

இன்னும் மழைக் காலத்தில் எந்தெந்த சாலைகளில், தெருக்களில், வெள்ளம் வடியாமல் நிற்கும் என்பது நிறைய பேருக்கு அத்துப்படி. ஆனால் இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவே தெரியாதாம்! ( உலகத்தில் பல நாடுகளில், எவ்வளவு அழகான சாலைகள் உள்ளன! தொலைக் காட்சிகளில் தான் நாம் தினமும் பார்க்கிறோமே! நம் மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் அந்த நாடுகளுக்குப் போய், எப்படி அவர்கள் அந்த மாதிரி உருப்படியான சாலைகள், மேம்பாலங்கள் கட்டுகிறார்கள் என்று பார்த்துவிட்டு வரவேண்டும்.)  ஆனால் இது போல பலப் பல மழை காலங்கள் எப்பவும் போல வரும்-போகும்! இந்தத் தொல்லைகள் மட்டும் தலைமுறை கடந்தும் தொடரும்!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தூசு பறக்கும் சாலைகள்!
 எப்படியோ....
வாழ்க! தூசு-தும்புகள்!
வாழ்க! மேடு பள்ளங்கள்!
வாழ்க! சமாதிகள்!
வாழ்க! வெள்ளம் தேங்கும் சாலைகள்!

-மோகன் பால்கி

வெள்ளி, 5 மார்ச், 2010

காந்தியின் உண்மைச் சீடர் - 'கோட்சே'-வை கொண்டாடலாமா?

நித்யானந்த சுவாமிகளின் அந்தரங்க வாழ்க்கைப் பற்றி பேச எவருக்குமே உரிமை இல்லை என்பது சிலரது வாதம்.

அவரும் ஏதோ ஒரு பெண்ணும் சேர்ந்து.....
(உங்கள் கண்களுக்கு மேலே உள்ள படத்தில் எலிகள் போன்று தெரிந்தால் நான் அதற்கு பொறுப்பில்லை. அதற்காக அவர்களின் அந்தரங்கங்களை ஆயிரம் தரம் போட்டு இந்த டிவி-காரர்களும் பத்திரிக்கை காரர்களும் நம் வீட்டை அசிங்கம் பண்ணியது போன்று நம்மால் இங்கே பண்ண முடியாது! )

.....ரகசியமாக எப்படி இருந்தாலும் உங்களுக்கு என்ன வந்தது என்று அந்த சிலர் கேட்கிறார்கள். ஆனால், எனது அடிப்படையான வாதம் என்னவென்றால்,

வள்ளலாரின் பக்தர் ஒருவர் பிரியாணி கடை வைக்கலாமா?

பெரியாரின் அத்யந்த சீடர் ஒருவர் அலகு குத்தி காவடி எடுக்கலாமா?

காந்தியின் உண்மைத் தொண்டர் ஒருவர் கோட்சே-வை கொண்டாடலாமா?

இந்த மாதிரி அடிப்படைக்கே விரோதமான காரியங்களை ஒருவர் செய்தால் யாருக்கும் கோபம் வருமா வராதா?
இதை ஏன் சொல்கிறேன் என்றால், நித்தியானந்த சுவாமிகள் ஒரு பிரமச்சாரி. அதோடு அவர் பிரம்மச்சர்யத்தை, பல முறை ஒசத்தியாக பேசி உள்ளார். தான் அதை முழுமையாக கடை பிடிப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றியும் வந்து உள்ளார்.
அவரது சொந்தப் பேச்சை இங்கே நீங்களும் You-Tube-இல் காண்க: http://www.youtube.com/watch?v=ve0Z6B5Q0BM

ஒரு வேளை
இந்தப் படம் திடீரென்று அவரது சீடர்களால் நிறுத்தப் பெற்றால் கீழ்க் கண்ட இந்த லிங்கில் பாருங்கள்: (sorry its not uploading. takes time too longer. If you unable to see from you-tube as i said, you just send me a mail. I will send you the other link)

அதுதான் அவரை நம்பி பின்னால் சென்ற பல பிரமசாரிகளின் கோபமும் ஆத்திரமும். அது மட்டும் இன்றி, பெண் வாடையே படாத சாமியார் என்ற பிராண்டுக்கு இந்தியாவில் மதிப்பு அதிகம். அந்த பிராண்ட் போலி என்று தெரியும்போது மக்களின் ஆத்திரம் பன்மடங்கு ஆகிறது.

மற்ற படி உடற் கூறு விஷயங்கள் என்பது, அது ஒரு இயற்கை உபாதை மாதிரி என்று நமக்குத் தெரியாதா? கோபம் என்னவென்றால், இயற்கையான ஒரு விஷயத்தைத் தான் அடக்கி விட்டதாகப் பீற்றிக் கொண்டு, மக்களை மடையர்களாக்கும்- மற்றும் சாதாரண மக்களின் சம்சார வாழ்க்கையை கேலி வேறு செய்யும் ஒரு மிக கேவலமான இழி செயலைத்தான் நான் இங்கு கண்டிக்க விரும்புகிறேன்!

(ஆதி காலம் தொட்டு இந்த சோம்பேறிச் சாமியார்களுக்கு சோறு போடுவதே இந்த உழைத்துப் பிழைக்கும் சாதாரண சம்சாரிகள் தான்...ஆனால் என்ன ஒரு தெனாவெட்டாக எந்த ஒரு சாமியாரும் பேசுகிறார்கள் என்று பாருங்களேன்)

இந்த சாமியார்கள் என்னமோ வேற்று கிரக வாசிகள் போலவும், எல்லாவற்றையும் அதாவது... பசி, தாகம், மூச்சு விடுவது, மல ஜலம் கழிப்பது உட்பட எல்லாவற்றையும் விட்டு விட்ட மாதிரியும் நடிப்பதை பார்த்தால் பற்றிக் கொண்டு எரிகிறது! என்னமோ இவர்கள் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்களைப் போலவும், நரை, திரை, மூப்பு கடந்தவர்கள் போலவும் வெட்டி பந்தா பண்ணுகிறார்கள்!

போங்கடா, நீங்களும் உங்கள் இயற்கையை மதிக்காத வெங்காய ஆன்மீகமும் என்று எட்டி மிதிக்கத் தோன்றுகிறது!

என்ன செய்வது? நாம் ஏமாறும் வரை ஏமாற்றுக் காரர்களும் இந்த பூமியில் நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கத்தானே செய்வார்கள்?

-மோகன் பால்கி

புதன், 3 மார்ச், 2010

Nityanandan Preaches Celebacy and Celebrating Sex with Actress !!

1. One more godman Nityananda Swamigal caught in bed with Tamil actress Ranjita:


Bangalore: A sting operation by a Tamil magazine and a local TV channel revealed the spiritual leader Swami Paramahamsa Nithyananda in an alleged sex scandal with a Tamil actress.

Though both the channel and the magazine have not revealed the location, the pictures show Swami Nithyananda in compromising positions with the actress.

Minor incidents of protests from various parts of Tamil Nadu and Karnataka have been reported after the channel played the story on Tuesday, following which the police has beefed up security at all his ashrams in the state including Tiruvannamalai, which Swami Nithyananda visits often.

Swami Nithyananda is a spiritual leader and runs the Nithyananda Mission which is part of a world-wide movement for meditation and peace.

Source: http://ibnlive.in.com/news/one-more-godman-caught-in-bed-with-tamil-actress/110982-3.html?from=tn

2. By Agencies
Chennai: Swami Nithyananda Scandal! According to the reports by Sun TV, Swami Nithyanand has been caught with a Tamil actress in compromising position.

Though, the Sun TV has not reveled the location, but it’s being said that the sting operation took place in a hotel or his ashrama.

In the mean time, security beefed up to cover Swami Nithyananda’s ashrama situated here at Adi Annamalai area, some 10km away from Tiruvannamalai town.

Locals said that the Swami visited the ashram two months back when he celebrated his birthday there. Police are looking into the matter.

Source: http://www.duniyalive.com/?p=105242

3. Bangalore: swami in sex scandal

A controversy has erupted over an alleged sex scandal involving Swami Nithyananda who has an Ashram outside Bangalore. The swami was allegedly filmed in a room with women in Tamil Nadu.

People attacked the ashram - even as his followers say the video was a mix of conspiracy, graphics and rumour.

Sachidanandaswamy said, "At this moment we feel that a mix of conspiracy, graphics and rumour are at play in these recent events that have unfolded. We are working on a legal course of action...In these trying times, we wish to reassure the lakhs of devotees and well-wishers whose sentiments have been deeply hurt by this conspiracy. We thank all the devotees and disciples for standing with us during these trying times."

Source: http://www.ndtv.com/news/cities/bangalore-swami-in-sex-scandal-17142.php

4. Nityananda and Actress Ranjitha Sex Scandal Videos: Source from You tube / Sun TV
http://www.youtube.com/watch?v=HLKQrBMA8lw
http://www.youtube.com/watch?v=jel3R5q7rP0
http://www.youtube.com/watch?v=cPcwnVwMdI0
http://www.youtube.com/watch?v=SK0hSIKtmLg
WATCH VIDEO HERE !!!!! Just click here and go to you tube (Might be withdrawn from you tube sooner too)

பிற் சேர்க்கை : நித்யாநந்தா-ரஞ்சிதா படுக்கையறை காட்சிகளை காமிராவில் ஒளிப்பதிவு செய்து காட்டிக் கொடுத்த சீடர் ஸ்ரீநித்ய தர்மானந்தா வின் போலீஸ் வாக்கு மூலம்: இங்கே கிளிக் செய்க: http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=6920&id1=12