Translate this blog to any language

திங்கள், 27 அக்டோபர், 2008

தாமரை அழகில்லை!


சூரியன் எழுமுன்
எழுந்து போய்
தாமரை மலர்வதைக் காண
பேராவல் எனக்கு !

நகர வாழக்கையில்
அதற்கு எங்கே போவது?

இதோ!

அதை விடப் பேரழகாய்
என் குழந்தை
காலையில்
கண் மலர்ந்தாள்!

-"இந்தக் கணத்தில்".... - 1997
மணிமேகலைப் பிரசுரம்
- மோகன் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: