எதனால் சில சமயங்களில் தடுமாறுகிறாய்?
பாட்டு பாடும்பொழுது உனக்கு எல்லாம் எளிதாக இருக்கிறதே!!
உனக்கு என்ன சொல்ல வேண்டும் என்பது தெரியும்.
சொல்ல வேண்டிய பதிலும் தெரியும்.
நண்பர்களிடம் பேசும்போது நீ இயல்பாகத்தான் பேசுகிறாய்.
ஆனால், உன்னைவிட வயதில் பெரிய ஒருவர் முன் நிற்கும்போது, உன்னைவிட அதிக அனுபவம் கொண்ட ஒருவர் முன் நிற்கும்போது, ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் பேசும்போது திடீரென்று ஏதோ ஒன்று உனக்குள் மாறிவிடுகிறது.
வார்த்தைகள் தடுமாறுகின்றன. பேச்சு தெளிவில்லாமல் போகிறது. சில நேரங்களில் திக்குவாய் ஏற்படுகிறது. தன்னம்பிக்கை குறைகிறது.
என்ன பேச வேண்டும் என்று தெரிந்திருந்தும், அதைச் சரியாக வெளிப்படுத்த முடியாமல் போகிறது.
அப்போது நீ உன்னையே கேட்டுக்கொள்வாய்:
“எனக்கு ஏன் இப்படி ஆகிறது?”
“எல்லோரிடமும் இயல்பாகப் பேசுகிறேன், இவர்களிடம் மட்டும் ஏன் முடியவில்லை?”
“நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அப்படியிருக்க ஏன் இவ்வளவு பயமாக இருக்கிறது?”
ஒருவேளை…
உனக்கு முன்னால் நிற்கும் அந்த மனிதரைப் பார்த்து மட்டும் நீ பயப்படாமல் இருக்கலாம். உன்னைவிடப் பழைய ஒரு பயம், உன்னைவிடப் பழைய ஒரு நினைவு, உன்னைவிடப் பழைய ஒரு உணர்ச்சிப் பதிவு, இன்றும் உனக்குள் இருந்து பதிலளித்துக் கொண்டிருக்கலாம்.
உனக்குள் இன்னும் ஒரு சிறு குழந்தை இருக்கலாம்! நீ சிறுவனாக இருந்தபோது அல்லது சிறுமியாக இருந்தபோது ஏதோ ஒரு சம்பவம் உன்னை ஆழமாகப் பாதித்திருக்கலாம்.
ஒருவர் உன்னை கடுமையாகக் கண்டித்திருக்கலாம். அவமானப்படுத்தியிருக்கலாம். பயமுறுத்தியிருக்கலாம். தண்டித்திருக்கலாம். நிராகரித்திருக்கலாம்.
அல்லது,
நீ பேச வேண்டிய ஒரு தருணத்தில், பயத்தால் உன்னால் பேச முடியாமல் போயிருக்கலாம். அந்தச் சம்பவம் முடிந்துவிட்டது. ஆண்டுகள் கடந்துவிட்டன.
நீ வளர்ந்துவிட்டாய்.
ஆனால் அந்தச் சம்பவத்தால் உருவான பயம், தாழ்வு உணர்வு அல்லது பாதுகாப்பற்ற உணர்வு ஆழ்மனதில் பதிந்து இருக்கலாம்.
அதனால்தான், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இன்றைய உன்னுடைய அறிவு வேறு ஒன்றைச் சொன்னாலும் உனக்குள் பதுங்கியிருக்கும் அந்தப் பழைய சிறுவன் மீண்டும் பயப்படத் தொடங்கலாம்.
அதுதான் நாம் குறிப்பிடும்,
“கண்ணுக்குத் தெரியாத சிறுவன்.”
அந்தச் சிறுவனை யாராவது கண்டுபிடித்து குணப்படுத்த முடியுமா?
முடியும் !! அதற்கான உளவியல் அணுகுமுறைகளில் ஒன்றாக Yozen Subconscious Therapy பயன்படுத்தப்படுகிறது.
ஒருவருடைய தற்போதைய பிரச்சினையை மட்டும் பார்த்துவிட்டு அதைச் சரிசெய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக, அந்தப் பிரச்சினையின் பின்னால் இருக்கக்கூடிய ஆழ்மனப் பதிவுகள் மற்றும் பழைய உணர்ச்சிப் படிமங்களைப் புரிந்துகொள்வது முக்கியமாகிறது.
இதற்காகவே அனுபவமுள்ள உளவியல் நிபுணர் அல்லது உளவியல் குருவின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
அவர் அந்த நபரின் வாழ்க்கையை ஆழமாகக் கேட்டு புரிந்துகொள்வார்.
சிறுவயது அனுபவங்கள், குடும்பச் சூழல், பெற்றோருடனான உறவு, பள்ளிப் பருவ அனுபவங்கள், பயம் ஏற்படுத்திய சம்பவங்கள், அவமானங்கள்,
நிராகரிப்புகள், தற்போதைய குடும்ப வாழ்க்கை, தொழில்,
மற்றும் குறிப்பாக, எந்த மனிதர்களிடம் அல்லது எந்தச் சூழ்நிலைகளில் இந்தப் பிரச்சினை அதிகமாக வெளிப்படுகிறது என்பதையெல்லாம் கவனமாக ஆராய்வார்.
அதன் மூலம், வெளியில் தெரியும் பேச்சுத் தடுமாற்றத்திற்குப் பின்னால் இருக்கக்கூடிய ஆழமான உளவியல் காரணங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யப்படுகிறது.
பின்னர், அந்த நபரின் தேவைக்கேற்ப Yozen Subconscious Therapy மூலம் அந்த ஆழ்மனப் பதிவுகளுடன் பணியாற்ற முடியும்.
சிலருக்கு மூன்று அமர்வுகள் போதுமானதாக இருக்கலாம். சிலருக்கு நான்கு அல்லது ஐந்து அமர்வுகள் தேவைப்படலாம்.
ஒவ்வொருவருடைய மனமும், வாழ்க்கை அனுபவங்களும் தனித்துவமானவை.
ஆனால் நோக்கம் ஒன்றுதான்:
பிரச்சினையின் வெளிப்புற அறிகுறியை மட்டும் பார்க்காமல், அதன் ஆழத்தில் இருக்கும் உணர்ச்சிப் பதிவைப் புரிந்துகொண்டு, அதில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது.
ஒரு உளவியல் குருவின் வழிகாட்டுதல் ஏன் முக்கியம்?
சில ஆழ்மனப் பதிவுகளை ஒருவர் தனியாகவே புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம். வெறும் புத்தக அறிவு அதற்கு பயன்படாது.
ஏனென்றால்,
நம் மனம் தன்னுடைய சில கதவுகளை நமக்கே திறக்காமல் வைத்திருக்கும். சில பூடகமான குறியீடுகள் வழியாக அதை புரிந்து கொள்ள வேண்டும். கூர்மையான பார்வையும் வாழ்க்கை பற்றிய தெளிவும் உளவியல் பட்டறிவும் அந்த துறை சார்ந்த வல்லுனருக்கு மிகவும் அவசியம்.
நமக்குத் தெரிந்த நினைவுகளுக்கு அப்பால், நம்முடைய நடத்தை, பயம், தயக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை பாதிக்கும் உணர்ச்சிப் பதிவுகள் இருக்கலாம்.
அவற்றை சரியான கேள்விகள் மூலமாகவும், உளவியல் புரிதலுடனும், அனுபவமுள்ள ஒருவரின் வழிகாட்டுதலுடனும் அணுகும்போது, நாம் இதுவரை புரிந்துகொள்ள முடியாத நம்மையே புரிந்துகொள்ளத் தொடங்கலாம்.
அந்தப் புரிதல்தான் நல்மாற்றத்திற்கான கதவைத் திறக்கும்.
நீ பயந்துகொண்டிருப்பது இந்த இப்போதைய மனிதனால் அல்ல!
ஒருவேளை நீ பயப்படுவது
உன்னுள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தச் சிறுவனாக இருக்கலாம்.
அவன் எப்போது பயந்தான்?
எதற்காகப் பயந்தான்?
யாரைப் பார்த்துப் பயந்தான்?
அந்தப் பயம் எப்படி ஆழ்மனதில் பதிந்தது?
இன்றைய உன் வாழ்க்கையில் அது எப்படி மீண்டும் எந்த சந்தர்ப்பங்களில், எந்த வடிவங்களில் எல்லாம் வெளிப்படுகிறது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் பயணமே உன்னைப் பற்றிய ஒரு ஆழமான உளவியல் பயணமாக மாறுமே ஒழிய, வேறு வகையிலான முயற்சிகள் ஒரு சிறு பயனையும் தராது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்!
அந்தப் பயணத்தில்,
ஒரு திறமையான உளவியல் நிபுணர் அல்லது உளவியல் குருவின் வழிகாட்டுதல், உனக்குள் மறைந்திருக்கும் அந்தக் குழந்தையைப் புரிந்துகொள்ளவும், அதன் பழைய பயங்களை எதிர்கொள்ளவும், மேலும் நம்பிக்கையுடன் முன்னேறவும் உதவியாக இருக்கும்.
கடந்த காலம் உன்னைத் தவறாக உருவாக்கியிருக்கலாம்.
ஆனால், அது உன் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய அவசியமில்லையே!
உனக்குள் இருக்கும் அந்தச் சிறுவனை ஒரு உளவியல் குருவின் வழிகாட்டுதல் வழியாக புரிந்துகொள்.
அவனுடைய பயத்தைப் புரிந்துகொள்.
அப்போது, உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையான மனிதனை நீ மீண்டும் கண்டுபிடிக்கத் தொடங்கலாம். அதற்குப் பிறகு உனக்கு உனது வாழ்வில் உண்மையான மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் பல மடங்கு முன்னேற்றம் தானாக நிகழ ஆரம்பிக்கும்!
நலமே விளையட்டும்!
-Yozen Balki 💢
ஆனால் அந்தச் சம்பவத்தால் உருவான பயம், தாழ்வு உணர்வு அல்லது பாதுகாப்பற்ற உணர்வு ஆழ்மனதில் பதிந்து இருக்கலாம்.
அதனால்தான், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இன்றைய உன்னுடைய அறிவு வேறு ஒன்றைச் சொன்னாலும் உனக்குள் பதுங்கியிருக்கும் அந்தப் பழைய சிறுவன் மீண்டும் பயப்படத் தொடங்கலாம்.
அதுதான் நாம் குறிப்பிடும்,
“கண்ணுக்குத் தெரியாத சிறுவன்.”
அந்தச் சிறுவனை யாராவது கண்டுபிடித்து குணப்படுத்த முடியுமா?
முடியும் !! அதற்கான உளவியல் அணுகுமுறைகளில் ஒன்றாக Yozen Subconscious Therapy பயன்படுத்தப்படுகிறது.
ஒருவருடைய தற்போதைய பிரச்சினையை மட்டும் பார்த்துவிட்டு அதைச் சரிசெய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக, அந்தப் பிரச்சினையின் பின்னால் இருக்கக்கூடிய ஆழ்மனப் பதிவுகள் மற்றும் பழைய உணர்ச்சிப் படிமங்களைப் புரிந்துகொள்வது முக்கியமாகிறது.
இதற்காகவே அனுபவமுள்ள உளவியல் நிபுணர் அல்லது உளவியல் குருவின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
அவர் அந்த நபரின் வாழ்க்கையை ஆழமாகக் கேட்டு புரிந்துகொள்வார்.
சிறுவயது அனுபவங்கள், குடும்பச் சூழல், பெற்றோருடனான உறவு, பள்ளிப் பருவ அனுபவங்கள், பயம் ஏற்படுத்திய சம்பவங்கள், அவமானங்கள்,
நிராகரிப்புகள், தற்போதைய குடும்ப வாழ்க்கை, தொழில்,
மற்றும் குறிப்பாக, எந்த மனிதர்களிடம் அல்லது எந்தச் சூழ்நிலைகளில் இந்தப் பிரச்சினை அதிகமாக வெளிப்படுகிறது என்பதையெல்லாம் கவனமாக ஆராய்வார்.
அதன் மூலம், வெளியில் தெரியும் பேச்சுத் தடுமாற்றத்திற்குப் பின்னால் இருக்கக்கூடிய ஆழமான உளவியல் காரணங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யப்படுகிறது.
பின்னர், அந்த நபரின் தேவைக்கேற்ப Yozen Subconscious Therapy மூலம் அந்த ஆழ்மனப் பதிவுகளுடன் பணியாற்ற முடியும்.
சிலருக்கு மூன்று அமர்வுகள் போதுமானதாக இருக்கலாம். சிலருக்கு நான்கு அல்லது ஐந்து அமர்வுகள் தேவைப்படலாம்.
ஒவ்வொருவருடைய மனமும், வாழ்க்கை அனுபவங்களும் தனித்துவமானவை.
ஆனால் நோக்கம் ஒன்றுதான்:
பிரச்சினையின் வெளிப்புற அறிகுறியை மட்டும் பார்க்காமல், அதன் ஆழத்தில் இருக்கும் உணர்ச்சிப் பதிவைப் புரிந்துகொண்டு, அதில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது.
ஒரு உளவியல் குருவின் வழிகாட்டுதல் ஏன் முக்கியம்?
சில ஆழ்மனப் பதிவுகளை ஒருவர் தனியாகவே புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம். வெறும் புத்தக அறிவு அதற்கு பயன்படாது.
ஏனென்றால்,
நம் மனம் தன்னுடைய சில கதவுகளை நமக்கே திறக்காமல் வைத்திருக்கும். சில பூடகமான குறியீடுகள் வழியாக அதை புரிந்து கொள்ள வேண்டும். கூர்மையான பார்வையும் வாழ்க்கை பற்றிய தெளிவும் உளவியல் பட்டறிவும் அந்த துறை சார்ந்த வல்லுனருக்கு மிகவும் அவசியம்.
நமக்குத் தெரிந்த நினைவுகளுக்கு அப்பால், நம்முடைய நடத்தை, பயம், தயக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை பாதிக்கும் உணர்ச்சிப் பதிவுகள் இருக்கலாம்.
அவற்றை சரியான கேள்விகள் மூலமாகவும், உளவியல் புரிதலுடனும், அனுபவமுள்ள ஒருவரின் வழிகாட்டுதலுடனும் அணுகும்போது, நாம் இதுவரை புரிந்துகொள்ள முடியாத நம்மையே புரிந்துகொள்ளத் தொடங்கலாம்.
அந்தப் புரிதல்தான் நல்மாற்றத்திற்கான கதவைத் திறக்கும்.
நீ பயந்துகொண்டிருப்பது இந்த இப்போதைய மனிதனால் அல்ல!
ஒருவேளை நீ பயப்படுவது
உன்னுள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தச் சிறுவனாக இருக்கலாம்.
அவன் எப்போது பயந்தான்?
எதற்காகப் பயந்தான்?
யாரைப் பார்த்துப் பயந்தான்?
அந்தப் பயம் எப்படி ஆழ்மனதில் பதிந்தது?
இன்றைய உன் வாழ்க்கையில் அது எப்படி மீண்டும் எந்த சந்தர்ப்பங்களில், எந்த வடிவங்களில் எல்லாம் வெளிப்படுகிறது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் பயணமே உன்னைப் பற்றிய ஒரு ஆழமான உளவியல் பயணமாக மாறுமே ஒழிய, வேறு வகையிலான முயற்சிகள் ஒரு சிறு பயனையும் தராது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்!
அந்தப் பயணத்தில்,
ஒரு திறமையான உளவியல் நிபுணர் அல்லது உளவியல் குருவின் வழிகாட்டுதல், உனக்குள் மறைந்திருக்கும் அந்தக் குழந்தையைப் புரிந்துகொள்ளவும், அதன் பழைய பயங்களை எதிர்கொள்ளவும், மேலும் நம்பிக்கையுடன் முன்னேறவும் உதவியாக இருக்கும்.
கடந்த காலம் உன்னைத் தவறாக உருவாக்கியிருக்கலாம்.
ஆனால், அது உன் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய அவசியமில்லையே!
உனக்குள் இருக்கும் அந்தச் சிறுவனை ஒரு உளவியல் குருவின் வழிகாட்டுதல் வழியாக புரிந்துகொள்.
அவனுடைய பயத்தைப் புரிந்துகொள்.
அப்போது, உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையான மனிதனை நீ மீண்டும் கண்டுபிடிக்கத் தொடங்கலாம். அதற்குப் பிறகு உனக்கு உனது வாழ்வில் உண்மையான மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் பல மடங்கு முன்னேற்றம் தானாக நிகழ ஆரம்பிக்கும்!
ஆம்! இது இங்கு யோஜென் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு நிகழ்ந்திருக்கிறது, உனக்கும் நிகழும்!
நலமே விளையட்டும்!
-Yozen Balki 💢
ஒரு சிறிய குறிப்பு…💟💟
Note:💢💢
நான் நினைத்தால் இந்தக் கட்டுரையை இன்னும் ஏராளமான உளவியல் தொழில்நுட்பச் சொற்களைப் பயன்படுத்தி எழுத முடியும்.
Subconscious processes,
emotional conditioning,
psychological patterns,
childhood imprinting,
behavioural responses,
என்று இன்னும் நிறைய
technical terms-களை அடுக்கடுக்காகப் போட்டு, இதைப் படிப்பவர்களுக்கு ஒரு பெரிய உளவியல் ஆய்வுக் கட்டுரை போலவும் மாற்ற முடியும்.
ஆனால், அப்படி வாசிப்பவர்களை குழப்புவது எனக்குப் பழக்கமில்லை.
உளவியல் என்பது சில குறிப்பிட்ட வல்லுநர்களுக்கு மட்டும் புரிய வேண்டிய ஒரு விஷயம் அல்ல.
தன்னுடைய மனதைப் புரிந்துகொள்ள விரும்புகிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது புரிய வேண்டும்.
அதனால்தான், நான் தெரிந்துகொண்டிருக்கும் விஷயங்களை முடிந்தவரை எளிமையான மனித மொழியில் சொல்ல விரும்புகிறேன்.
ஒரு கடினமான உளவியல் வார்த்தையைப் பயன்படுத்தி ஒருவரை வியக்க வைப்பதைவிட,
“அட… இதுதானா எனக்குள் நடக்கிறது?”
என்று அவரையே அவருக்குள் திரும்பிப் பார்க்க வைப்பதுதான் எனக்கு முக்கியம்.
அதுதான் உளவியலின் உண்மையான பயன் என்று நான் நம்புகிறேன்.
குழப்புவதற்காக அல்ல உளவியல்.
புரிய வைப்பதற்காகத்தான்.
— Yozen Balki 💢

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: