Translate this blog to any language

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:




ஹிக்ஸ்--போசான் ( God-particle or Higgs-Boson particle) என்பது என்ன?

தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது
அதற்கு முன்னர் நான் வேறு ஒரு விஷயம் பேசுவேன்!
அறிவியலாளர்களுக்கு வெகு காலமாய் ஒரு கேள்வி இருந்து வருகிறது.
பருப் பொருள்களுக்கு எடை எப்படி உண்டாகிறது என்பதே அது!!

ஒரு அங்குலம் கன சதுர வடிவமுள்ள ஒரு இரும்புத் துண்டுக்கும், அதே அளவுள்ள ஒரு தங்கத்துக்கும் அடிப்படையில் எடை மாறுபாடு ஏன் உண்டாகிறது (வெவ்வேறு தளங்களில் இயங்கும் ஈர்ப்பு விசையை (Gravity) அங்கு கணக்கில் கொள்ளாமல்)?

உதாரணமாக இரும்பின் அடர்த்தி சுமார் 7.874 g.cm -3
அதுவே தங்கத்தின் அடர்த்தி 19.30 g.cm -3
இரும்பின் அணு எடை 55.847
தங்கத்தின் அணு எடை 196.9655

அவற்றின் எடைக்குக் காரணம், அவற்றின் அணுவுக்குள் ஒளிந்திருக்கும் எலெக்ட்ரான், ப்ரோடான், நியூட்ரான் (Electron, Proton, Neutron the three fundamental

sub-atomic particles. There are more sub-atomic particles and antiparticles in a single atom) என்று சொன்னாலும் கூட, அந்த மூன்றும் வெறும் அலைகளே அல்லவா? அலைகளுக்கு எப்படி எடை வந்து அவை பொருளாக மாற இயலும்? அதுவும் அந்தப் பொருள்கள் வெற்றிடத்தில் இருந்து...கருந்துளைகளில் இருந்து எப்படி வெளியாக இயலும்?
வெற்றிடம் அல்லது வளி மண்டலம் ( The Space) என்பது சார்பற்றதா அல்லது சார்புற்று தனித் தனியே தாம் சார்ந்த பொருள்களுடன் நகரும் இயல்புடையதா? அப்படியாயின் எண்ணற்ற வளி மண்டலங்கள் உள்ளனவா? அதாவது பூமிக்கு ஒரு வளிமண்டலம்-அதாவது பூமியோடு நகரும் வான வளி. அதே போன்று, சந்திரனுக்கு ஒரு வளி மண்டலம்-சந்திரனோடு நகரும் வான வளி. இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வளி..அது யாருடையது அய்யா?? அதேபோன்று, எனக்கென்று ஒரு வளிமண்டலம், உங்களுக்கென்று ஒன்று...இந்த அணுவுக்கு இந்தவொரு சிறு வளி-அந்த அணுவுக்கு இன்னொன்று.. இவ்வாறாக?

நீரில் வாழும் மீன்களுக்கு நீர் ஒரு கவசம் போல இருக்கிறது. எனினும் அங்கு தனித் தனி நீர் நிலை என்பது கிடையாது-அங்கு நீர் என்பது ஒரு ஒரே தொகுப்பு. ஆனால், இங்கே நமது வளி மண்டலம் அப்படி ஒன்றே ஒன்றாக இல்லை என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். பார்ப்பதற்கு வானம் என்பது ஒரு மாறாத ஒற்றைப் பின்புலம் போலத் தோன்றினாலும்.....

வெள்ளி, 8 ஜூன், 2012

Jadav "Molai" Payeng, Single man Planted 1,360 Acre Forest in India!


More than 30 years ago, a teenager named Jadav "Molai" Payeng began planting seeds along a barren sandbar near his birthplace in India's Assam region, the Asian Agereports.

It was 1979 and floods had washed a great number of snakes onto the sandbar. When Payeng -- then only 16 -- found them, they had all died.

"The snakes died in the heat, without any tree cover. I sat down and wept over their lifeless forms," Payeng told the Times Of India.

"It was carnage. I alerted the forest department and asked them if they could grow trees there. They said nothing would grow there. Instead, they asked me to try growing bamboo. It was painful, but I did it. There was nobody to help me," he told the newspaper.

Now that once-barren sandbar is a sprawling 1,360 acre forest, home to several thousands of varieties of trees and an astounding diversity of wildlife -- including birds, deer, apes, rhino, elephants and even tigers.

The forest, aptly called the "Molai woods" after its creator's nickname, was single-handedly planted and cultivated by one man -- Payeng, who is now 47.

According to the Asian Age, Payeng has dedicated his life to the upkeep and growth of the forest. Accepting a life of isolation, he started living alone on the sandbar as a teenager -- spending his days tending the burgeoning plants.

Today, Payeng still lives in the forest. He shares a small hut with his wife and three children and makes a living selling cow and buffalo milk, OddityCentral.com reports.

According to the Assistant Conservator of Forests, Gunin Saikia, it is perhaps the world’s biggest forest in the middle of a river.

"We were surprised to find such a dense forest on the sandbar," Saikia told the Times Of India, adding that officials in the region only learned of Payeng's forest in 2008.

Finally, Payeng may get the help -- and recognition -- he deserves.

"[Locals] wanted to cut down the forest, but Payeng dared them to kill him instead. He treats the trees and animals like his own children. 



"We're amazed at Payeng," says Assistant Conservator of Forests, Gunin Saikia. "He has been at it for 30 years. Had he been in any other country, he would have been made a hero."

Yes! A real Hero labelled "uneducated" is educating our educated world by his dedicated deeds rather than mere articulating words!!


What are we going to do?

-Yozenbalki

உன்னத மனிதர் திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng)


இந்தியாவின் பெருமை திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng. Called as 'Mulay')!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது... நம் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். கேட்டால் 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை ' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி அடக்கமாய் முடித்துக் கொள்கிறார். அப்படி என்ன செய்தார்?!! 

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் 
தனி நபராக ஒரு அழகிய பசுமைக் காட்டை
உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?  

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கிராமவாசி 
திரு.ஜாதவ் பயேங் , அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அன்புடன் அழைக்கின்றனர். 

பிரம்மபுத்திரா நதியில் 1979ம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வரப்பட்டிருக்கிறன. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால்தான் இந்நிலை எனப் புரிந்து கொண்டபோது இவரது வயது 16! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம் முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்... ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார்.

1980ம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் அங்கு வாழும் மக்கள் மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்றுவிட, இவர் மட்டும் மரக்கன்றுகளை பராமரித்துக் கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும் மற்றவர்களும் இதனை அப்படியே மறந்து விட்டனர். அந்த பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு:

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்... ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்புகளை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு வெகு விரைவில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்... இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள்!!

இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும்,உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008ம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என்று வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக ஆச்சர்யம்  அடைந்திருக்கின்றனர்.

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்துக் கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபடத் தயார்," என்கிறார் இந்தத் தன்னலமற்ற மாமனிதர்!!
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இதுவென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த, எந்தப் பெரும் படிப்பும் படிக்காத பாமரர் இவரை என்ன சொல்லி எந்த மொழியில் பாராட்ட?

மெத்தப் படித்தவர்கள் கேள்வி முறையின்றி மரங்களை வெட்டிச் சாய்த்து 'கான்க்ரீட் சிறை-நகரங்களை' உருவாக்கிக் கொண்டிருக்க, படிக்காத பாமர தெய்வங்கள் அழகிய வனங்களை இந்நாட்டில் சப்தமின்றி உருவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்! வெட்கப்பட வேண்டும் நாம்! 

ஜாதவ் போன்ற மனித தெய்வங்களை வணங்கி, அவரளவுக்கு இல்லாவிட்டாலும் நம் வாழ்வில் குறைந்தது பத்து மரங்களாவது நட்டு வளர்ப்போம்!

புவி வெப்ப மயமாவதை தடுத்து நமது வருங்கால சந்ததிகளுக்கு இந்த பூமியை ஒரு 'வாழும்-நிலையில்' நாம் விட்டுச் செல்லுவோமே!

- நன்றி: http://tamil.webdunia.com
                   http://www.huffingtonpost.com
                   http://www.treehugger.com
_________________________________
மேலதிக விவரங்களுக்கு: Jadav "Molai" Payeng
Go to Google and just type "Jadav Payeng" or 'Jadav "Molai" Payeng.

ஞாயிறு, 20 மே, 2012

Bad to Heaven & Good to Hell? சிடுமூஞ்சிக்கு சொர்க்கம்-சிரித்த முகத்துக்கு ஏன் நரகம் ?


ஒரு ஊரில் இரண்டு பாட்டிகள் இருந்தார்கள்.
ஒன்று சிடுமூஞ்சி, இன்னொன்று சிரித்த முகம்!


இரண்டு பேரும் அதே ஊரில் ரெண்டு தெருக்களில் இட்லி சுட்டு விற்று வந்தார்கள்! காலம் வருகையில் காலன் அழைக்க முன்பின்னாக மேலோகம் சென்றார்கள். 'சிரித்த முக' பாட்டிக்கு ஏனோ நரகம் சித்திக்க அவளுக்கு அப்போது 'சிடு மூஞ்சி' பாட்டியின் நினைவு வந்தது. நமக்கே இந்த கதி-அவளுக்கு என்ன கதியோ என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்! அவள் சித்திர குப்தனை அணுகி விசாரிக்க "ஒ ! அவர்களா..? அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்" என்றான் அவன்!

வந்ததே கோபம் சிரித்த முகப் பாட்டிக்கு! "அவள் போய் இங்கு -'அவர்களாமா'? தாம்-தூம் என்று எகிறிக் குதித்த சிரித்த முகப் பாட்டி, அப்போது இராட்சசி ஆனாள். "உங்கள் எமலோக அரசு, இந்திய அரசை விட படு மோசம்..நல்லவர்கள் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. கெட்டவர்களுக்கு சொர்க்கமும், நல்லவர்களுக்கு நரகமும் தருவதா எமதர்ம ராஜனின் தர்மம்.." அது இது என்று வசை பாடி வாய்க் கூசும் கெட்ட வார்த்தைகளில் பழி தூற்றினாள். எமபட்டணமே அங்கு வந்து குவிந்து இந்த சண்டையை வேடிக்கைப் பார்க்க, சித்திர குப்தனுக்கு அப்போது மஹா கோபம் வந்தது. அவன் தனது "தர்மப் பேரேட்டை" விரித்து அதற்கான காரணம் கணக்கு கூறலானான்!

சிரித்த முகப் பாட்டி:

அடுத்தவர்களுக்கு உதவியாய் இருந்த கால அளவு: 13,14,000 நிமிஷங்கள் 
பதிமூன்று இலட்சம் நிமிஷங்கள் என்க!
( ஒரு நாளைக்கு காலையில் மட்டும் நான்கு மணி நேரம் - பல நாட்கள் கோவில் குளம், 
நல்லது கெட்டது என்று சென்று வாயாடிக் கொண்டு 'கடை' திறப்பதே இல்லை.  
எனவே, சராசரி மூன்று மணி நேரம்- 25 வாடிக்கையாளர்கள், 
இருபது வருட உழைப்பு மட்டுமே!)
சுட்டுப் போட்ட இட்டிலிகள் 20x25x365x5 = 9,12,500
ஒன்பது இலட்சம் இட்லிகள்...
(ஒருவருக்கு சராசரி ஐந்து இட்லிகள் (கொஞ்சம் ருசியாய் இருக்கும்) வீதம்)

ஆக, இவளால் உலகுக்குப் பயன் குறைவு! நான் எதையாவது செய்தால் நூறு சதவிகிதம் அர்ப்பணிப்போடு செய்வேன்- இல்லையா வருஷக் கணக்கில் சோம்பேறியாய் இருப்பேன் என்று சொல்லும் ரகம் இவள்!

சிடு மூஞ்சிப் பாட்டி: 
அடுத்தவர்களுக்கு உதவியாய் இருந்த கால அளவு: 1,05,12,000 நிமிஷங்கள் 
ஒரு கோடி நிமிஷங்கள் என்க! (அம்மாடியோவ்...)
( ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வீதம் அறுபது 
வருட உழைப்பு மட்டும் சேர்க்க)
ஒரு நாளைக்கு காலை-மாலை என்று பயன் அடைந்தவர்கள் விகிதம் 
சராசரி 60 பேர்கள் 
சுட்டுப் போட்ட இட்டிலிகள் 60x60x365x4 = 52,56,000
ஐம்பத்தி இரண்டரை இலட்சம் இட்லிகள்..
(ஒருவருக்கு சராசரி நான்கு இட்லிகள் (கொஞ்சம் ருசி குறைவுதான்) வீதம்)

ஆக, இவள் ஒரு நிஷ்காம்ய கர்மி! நிறைய மக்களுக்கு தொண்டு செய்தவள். எண்ணற்ற வயிறுகள் பசியாற உதவியாய் இருந்தவள். தரத்தை விட, நேரம் தவறாமையும் தொடர்ந்த உழைப்பும் உடையவள்.

சித்திர குப்தன் தொடர்ந்தான்: 

"நீ நல்லவள், நல்ல தோற்றம் உடையவள், இனிய பேச்சு பேசுபவள் என்பதெல்லாம் உன்னை உயர்ந்தவளாக காட்டிக் கொள்ளும் கர்வம் தவிர வேறென்ன? உன்னால் இந்த உலகத்துக்கு என்ன பயன் என்பதை வைத்தே எங்களுடைய 'எமலோக-கணக்கு வழக்குகள் அமையும். 'நிஷ்காம்ய கர்மமே' உயர்ந்த தவம்; கர்ம யோகமே இறைவனை அடையும் பாதை! நீ அன்றைக்கு பூவுலகில் இனிய மொழி பேசி நல்லவளாக நடித்து இன்றைக்கு இழிந்த மொழி பேசுவதை சற்று நினைத்துப் பாரேன்! 
நீ, பொறுமை இழந்தவளாகவும், அடுத்தப் பெண்ணை ஒப்பிட்டுப் பார்க்கும் குயுக்தி மனப்பான்மை கொண்டவளாகவும், மேலும் உயர்ந்தவர்களையே சந்தேகப்படும் இயல்பு கொண்டவளாகவும் இருக்கின்றாயே! எங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்கும் முன்பாகவே நிதானம் தவறி நீ கொட்டிய வார்த்தைகளை மீண்டும் எப்படிப் பொறுக்கி எடுக்கப் போகிறாய்! அதற்கொரு நரகமும் எங்கள் பேரேடுகளில் தானாகவே (Akashic Records) எழுதப் பட்டு விட்டது", என்று அமைதியாய் சொல்லி முடித்தான்!

அதைக் கேட்ட சிரித்த முகப் பாட்டியின் கண்களில் கண்ணீர் வற்றாத ஆறாக ஓடிக் கொண்டிருந்தது! மேலும் கேள்வி கேட்க பயந்து அவள் மவுனமாய் நின்றாளே தவிர, 'சித்திரகுப்த' உண்மையை அவள் இன்னும் உணர்ந்த பாடில்லை!

திங்கள், 14 மே, 2012

"கணினி" கண்-நோய்- நீங்கள் ஜாக்கிரதை - Computer Vision Syndrome


"நவீன உலகில் இன்று நாம் அதிக நேரம் செலவிடும் கணினி, செல்பேசி, தொலைக் காட்சி மூலமாக நமது கண்களுக்குத்தான் அதிக வேலைத் துன்பம் தர ஆரம்பித்து விட்டோம். அத்தோடு தூரம்-வானம்-பறவை என்றெல்லாம் பார்க்க நேரமும் வாய்ப்புமின்றி மனிதக் கண்களுக்கு தூரம் பார்க்கிற திறமையும் மங்கி வருகிறது."



இப்பல்லாம் எனக்குத்தான் எத்தனை தொல்லை..???
அடப் பாவிங்களா!!


நவீன அறிவியல் நமக்கு பல வசதிகள் தந்துள்ளது.

அத்தோடு சில தீமைகளையும் தான்!

நவீன எந்திரங்கள் நமது கை-கால்களை- உடலை அதிகம் அசைக்கத் தேவை இல்லாத படி செய்து விட்டன. எல்லாமே விரல் அசைவில் கிடைக்கும் அளவுக்கு மனித வேலையை எந்திரங்கள் பலவும் செய்து தந்து விடுகின்றன.

அதனால், தற்காலத்தில் நமது கண்களுக்கு அதிக வேலை பளு உருவாகி விட்டது. சொல்லப் போனால்....(Contd....)

புதன், 9 மே, 2012

Visibility Road Splays: A must in Chennai !! நமது சென்னை சாலைகள் 'அப்படி' இருக்கிறதா?

ஒரு நீரோட்டம் எப்படி செல்கிறதோ அப்படியே வழி விட்டால்தான் எந்த ஒரு போக்குவரத்தும் தடையின்றி செல்ல இயலும்! சென்னையில் பெரும்பாலான இடங்களில் வாகன நெரிசலுக்குக் காரணம் வழி நெடுக காணப் படும் தடைகள்தாம்! 


                A Wrong Road without Splay


               A rightly 'splayed' Road

நீரோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! அது எப்போதுமே செங்குத்தான திசையில் திரும்புவதில்லை. சற்று வளைந்து, வளைகிற இடத்தில் கொஞ்சம் விசாலமான இடத்தை எடுத்துக் கொண்டே அது திரும்பி பயணம் செய்கிறது! 

ஒரு தண்ணீருக்கு இருக்கிற அறிவு நமது சாலை உருவாக்க பொறியாளர்களுக்கு (Road Construction Engineers) இருப்பதில்லை போலும்!! 
இங்கு, நமது தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களை நான் சொல்லவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளை காணும்போது, நானும் ஒரு பொறியாளர் என்னும் வகையில் சொல்வதானால், குறைந்தது 80-90% தர நிர்ணயம் அங்கு நிச்சயம் காணப் படுகிறது! 

ஆனால், சுதந்திரம் பெற்று சுமார் 65 வருடங்கள் ஆகும் நிலையிலும், சென்னை நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கிட்டதட்ட "L" வடிவத்தில் திரும்பும் தெருக்களை சாலைகளை நாம் இன்றும் பார்க்கலாம்! இதனால், எவ்வளவு மோசமான நெரிசல், வேகத்தடை, எரிபொருள் விரயம் ஏற்படுகிறது என்று எவரும் உணர்வதில்லை! சில நேரங்களில் காரணம் புரியாமல் மணிக்கணக்கில் சென்னையில் வாகனங்கள் நகரும். ஏதோ விபத்து போலும் என்று நாம் எல்லோரும் நினைப்பதுண்டு. ஆனால், குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் போது தான்...(Contd,,)

சனி, 5 மே, 2012

"I am-the God" Vulgarians!! தன்னையே கடவுளாக வரித்துக் கொள்ளும் 'ஈனப் பிறவிகளுக்கு 'ஒரு கேள்வி?


இன்று மாலை காலாற நடந்து செல்கையில் "பெரம்பூர் அன்ன தான சமாஜம்" அருகில் ஒரு மமதை மிக்க உபன்யாசக் குரல் கேட்டுக் கொண்டு இருந்தது! போகிற வழியில் ஒரு பார்வையில் மக்கள் சில நூறு பேர் அங்கு அமர்ந்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

அந்த உபன்யாசக் குரலில் ஒருவித எல்லாம் தெரிந்த பாவம், வாழ்க்கையைக் கரைத்துக் குடித்த அஹங்காரம், இளக்காரமான தொனியை உணர்ந்தேன். 

எனக்கு கருத்துக்களை விட கருத்தறிவிக்கும் கருவிகளே முக்கியமாகப் படும்! ஏனெனில், கருத்துக்கள் எப்போதுமே உலகில் இங்கு புதியனவல்ல; அது பலராலும் பல காலத்திலும் சொல்லப் பட்டுவந்தவைதான்

சுரேஷ் என்பவர் சொன்ன ஒரு கருத்தை ரமேஷ் என்பவர் கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் சொன்னால் அது ஒரு புத்தம் புதிய கருத்தாகிவிடுமா? ஆறுமுகம் இன்று நெய்த புடவை தான் உலகில் புத்தம் புதிதானதா? அல்லது அதில் தொங்க விடப் பட்ட குஞ்சலங்கள்தான் புதிய படைப்பா? அப்படி இருக்க, இந்த உபன்யாசிகளும், ஆன்மிக சொற்பொழிவாளர்களும், சாமியார்களும் தம்மை புத்தம் புது கருத்தாளர்களாக மமதையோடு கருதிக் கொள்வதும், கர்வத்தோடு பேசுவதும் அதற்கொப்ப நமது அப்பாவி மக்களும் குற்ற உணர்வோடும் பய பக்தியோடும், மெய் ஒடுங்கி அமர்ந்து கிடப்பதைப் பார்க்கும் போது எனக்கு பெருஞ் சிரிப்பு தான் வருகிறது! 

பத்து புத்தகங்களை படித்த ஒருவன் பதினோராவது புத்தகம் எழுதுவது போல, இந்த 'ஞான-வேஷம்' போடுபவர்கள் நிறைய புத்தகங்களைப் படித்துவிட்டு அப்படியே வாந்தி எடுப்பதை ....(Contd..)

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

The child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்!!



மலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்! அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். 

இவன் மட்டும் வழிமாறி எப்படியோ கல்லுடைக்கும் பணிக்கு வந்து சேர்ந்து விட்டான். கல்லுடைக்கும் பகல் நேரம் போக அவன், மலைகாடுகளில் இரவெல்லாம் அலைந்து திரிந்து அரியவகை மூலிகைகள், உலோக தாதுக்களை கொணர்ந்து வித விதமான நுட்பக் கருவிகள் செய்து வைத்துக் கொள்வான். அதைக் கொண்டு நினைத்த வண்ணம் அதிசயம் செய்வான். அதாவது கற்களைக் கவிதை பாடச் செய்யும் கலை! எந்த மலையானாலும் ஒரு சிறு குத்துக் கோட்டில் இரு கூறுகளாக்குவது, பல கூறானவற்றை மீண்டும் வடுக்களின்றி சேர்ப்பது, கிடைத்த கற்களில் உயிரோட்டமான அழகிய தெய்வச்சிலைகளை மிகசொற்ப நேரத்தில் உருவாக்குவது இன்ன பிற சாகசங்கள். இப்படியாக பல்லாயிரம் அழகிய உயிர்ச் சிலைகள் வடித்தவன் அவன்!

அதனால், அவனைத் தேடி வரும் எவரும் வெறும் கல்லுடைக்கும் வேலை போக, அவர்களுக்கு ஆதாயமான சிற்பங்களை, உருவங்களை செதுக்கித் தரும்படி கேட்டு அவ்வாறே சிலமணித் துளிகளில் வேலை முடித்து கொண்டு புறப்பட்டு விடுவர். பிறகு, சில மாதம் சில வருடம் கழித்து தனக்கு ஆதாயம் தரும் அல்லது தன் இரத்த பந்தம் உடைய பிறரை இவ்வாறே அழைத்து வந்து அவர்களுக்கும் குறைந்த கூலியில் ......( Contd...) 

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

Worst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் !



பைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். 

வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்துசேரும் பிற மாவட்டத்து/மாநிலத்து மக்கள் தொகை, பெருகி வரும் அடுக்ககங்கள் இதுதான் இன்றைய சென்னையில் நிலை. அதனால் இங்கு அடுத்தவர்கள் முகமோ முகவரியோ தெரியாத நிலையில் நல்லவன் கெட்டவனைப் பிரித்தறிந்து கவனமாய் இருக்க இயலாச் சூழலை காலம் கொண்டுவந்து சென்னையிடம் சேர்த்திருக்கிறது! இனி சென்னைக்கு கஷ்ட காலம்தான் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! முக்கியமாக காவல்துறைக்கு இனி சவாலான காலம் துவங்கிவிட்டது!

இரண்டு நாட்களுக்கு முன்பு கெல்லிஸ் சிக்னலைத் தாண்டும் போது ஒரு நிகழ்ச்சி. சிக்னல் முடியும் சமயம், காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் மார்வாடி இளைஞர்கள் இருவர் வளைத்தும் நெளித்தும் அபாயகரமாக திரும்ப, சப்தம் கேட்டு நிலை தடுமாறி ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டி-யில் இருந்து விழுந்து விட்டாள். காயம் பெரிதாய் ஏதும் இல்லை எனினும் இதைக் கண்ணுற்ற பலருக்கும் அந்த இளைஞர்கள் மீது பெருங்கோபம் ஏற்பட்டது. அவர்கள் போன வேகத்துக்குபோய் அவர்களைப் பிடிக்க முடியாது என்று தோன்றியது. அது போகட்டும் இது வொரு சின்ன சம்பவம் தான் ! இது போன்ற கதைகள் சென்னையில் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

ஆனால் இது போன்ற, இன்னும் இதைவிட அபாயகரமான மற்றும் அநாகரிகமான வாகன ஓட்டிகளை சென்னை போக்குவரத்து காவல் துறை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதுதான் இங்கு கேள்வி? 

முன்பெல்லாம், 80- களில் இருந்தது போல, தவறு நிகழும் இடத்திலேயே ஆளை மடக்கி காற்றைப் பிடுங்கி விடுவது, நாலு சாத்து சாத்துவது  அசிங்கமாக திட்டுவது போன்ற எதுவுமே செய்யாமல் (போலீசார் அப்படி செய்தால் உடனே நம்ம ஆட்கள் கேடுகெட்ட ஜென்மங்களுக்கு எல்லாம் மனித உரிமை பேசவந்து தொலைப்பார்கள்..) பொம்மை போல இருந்தால் அல்லது ஆளும் அரசுகள் அப்படி (வோட்டு வாங்குவதற்காக) கைகட்டி வாய் பொத்திக் கொண்டு  இருக்கும்படி காவல் துறைக்குச் சைகை செய்து வைத்தால் வீங்கிப் பெருகும் சென்னையில், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அந்தக் கடவுளாலும் முடியாதுடா சாமி ! 

அட இல்லையா? அநாகரிகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஓரிரு முறை மன்னிப்பு. அதனை அவர்களின் டிரைவிங் லைசென்சில் உடனே பதிந்து வைப்பது. அதன் பிறகு அவர்கள் அஞ்சி நடுங்கும் படியான அளவுக்கு குறைந்த பட்ச சிறைத் தண்டனையே ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை கடுங்காவல் சிறையில்....(Contd..)

புதன், 18 ஏப்ரல், 2012

students' suicidal stupidity & timidity: தன்னுயிர் மாய்க்கும் கோழைத்தனம் கற்பிக்கும் கல்விக் கூடங்கள்!

Ms. Thairiya Lakshmi
The suicide note left by Dhyriya Lakshmi.  .
Her suicidal note in Tamil 
தமிழகக் கல்விக் கூடங்கள் தற்கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன. இந்த கல்வி ஆண்டில் மட்டும் வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து வருவதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு ஆரம்ப பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை சரமாரியாக தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் மாணவர்களுக்கு எதார்த்தமான வாழ்வியல் சூழ்நிலையை பழக்காததே ஆகும். காதல் தோல்வியோ, தேர்வில் தோல்வியோ இதுபோன்ற எதையும் தாங்கிக்கொள்ள இயலாமல் மாணவர்கள் கோழைத்தனமாக தேர்ந்தெடுப்பது மரணத்தைதான்!

பணத்தை வாங்கிக் கொண்டு மார்க் வாங்குவது குறித்து கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடங்களில் தோல்வியை தைரியமாக எதிர்கொள்வது குறித்த வாழ்வின் எதார்த்தத்தை கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

2011 – 12 கல்வி ஆண்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 15 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்து ஒரு வாரத்திற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்பொழுதே கல்வித்துறை விழித்துக்கொண்டிருந்தால் நேற்றைய (17.4.2012) தைரியலட்சுமியின் தற்கொலை வரை மாணவர்களின் மரணம் நீண்டிருக்காது.

கல்வியின் நிலை:

2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதே ஐ.ஐ.டியில்...

சனி, 14 ஏப்ரல், 2012

Mobile Number Portability (MNP) - 7 Easy steps!

 


Do you want to change your service provider 
for some bitter reasons, 
keeping your same mobile number?

For e.g. you may like to migrate from Aritel to Vodafone or vise versa or any existing "X" to "Y" (new) mobile service provider as you like. Then what should you do? Many of us not aware how to port away from one provider to another one and we assume that it is an arduous job. 

No, it is not so and in fact it is a very easy process simplified by TRAI which any one can do for himself. I myself migrated few times and assisted many of my friends to change over to other good service providers!! 

My ambition here is, if many Indians are aware of these migrating possibilities and easy process in that, they will choose good companies and will migrate to them as and when required. It will create an impact in some of the mobile service providers and they in turn 'may' come down a little, will provide good services and may stop fraud billings to their poor Indian customers. 

However, until a parallel measuring device/server, set up by TRAI  to monitor all mobile services and billing methods, the persisting basic issues of the millions of mobile customers of India would not be solved ever!


OK. let us know the 7 easy steps: 


(MNP - step by step process  involved in porting/migrating)

First Step: Take your mobile and type 'PORT' leave one space and type your mobile number
(for e.g. PORT 9840042904) and send by sms to
1900....(Contd.)

புதன், 4 ஏப்ரல், 2012

Get a Patent & Fool those Ducks: அப்படி சொறியாதே...நான் காப்புரிமை வாங்கி இருக்கிறேன்!

       

(தாத்தா அங்கு தெருவோர திண்ணையில் அமர்ந்து வெற்றிலை குதப்பியபடி இருக்கிறார்..குண்டூஸ் அப்போது விளையாடிவிட்டு அங்கு வருகிறான்)

குண்டூஸ்: தாத்தா! நான் ஒன்னு கேப்பேன் பதில் சொல்றீங்களா?

தாத்தா: கேளு கண்ணா! ஆனா குண்டக்க மண்டக்க கேக்கக் கூடாது...ஜென்யுனான கேள்வியா இருந்தா பதில் சொல்வேன்.

குண்டூஸ்: இது நான் ரொம்ப நாளா கேட்கனும்னு இருந்தேன் தாத்தா; கிண்டல் கேள்வி எல்லாம் இல்ல!

தாத்தா: அப்பன்னா கேளு!

குண்டூஸ்: இந்த (patent right) 'பேடன்ட் ரைட்'-ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்ன தாத்தா?

தாத்தா: அதுவா..? அதாவது நான் ஒரு புதுமையான கருவியை ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சி மார்கட்டுல விற்பனைக்கு அனுப்புறேன். ஒருத்தன் அதே மாதிரி ஒன்னை காப்பி அடிச்சி என்னை விட குறைச்ச விலைக்கு வித்தா எனக்கு நஷ்டம் தானே? அப்போ, அதை தடுக்க நான் என் கருவிக்கு 'காப்புரிமை' வாங்கி வச்சிக்குவேன். அதுதான் 'பேடன்ட் ரைட்' கண்ணா!

குண்டூஸ்: அதாவது நீங்க கண்டுபிடிச்ச கருவியை நீங்க யானை விலை குதிரை விலை வச்சி விப்பீங்க! வேற எவனும் அதே மாதிரி கருவியை குறைஞ்ச விலைக்கு கூட விக்கக் கூடாது! அதை தடுக்க ஒரு குறுக்கு வழிதான் இந்த பேடன்ட் ரைட்...அப்படிதானே தாத்தா?

தாத்தா: டேய்! நீ ஏன்டா எப்பவும் தப்பு தப்பாவே யோசிக்கிற? நீயே நாளைக்கு தண்ணிய பெட்ரோலா மாத்துற மாதிரி ஒரு கருவி கண்டு பிடிச்சி அதுக்கு ஒரு பேடன்ட் ரைட் வாங்கி வச்சிட்டா உலகம் முழுசும் இருந்து உனக்கு கோடி கோடியா.....(Contd..)

வெள்ளி, 30 மார்ச், 2012

100 Ways to Raise Intelligent, Kind Children: உங்கள் குழந்தைகள் மேன்மையாய் வளர 100 வழிகள்!!



குண்டூஸ்: அங்கிள்! உங்க வீட்டு பின் பக்கம் இருக்கிற தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு. நான் உள்ள வந்து கொஞ்சம் சுத்திப் பாக்கலாமா?

பத்ரி: டேய் குண்டூஸ்! என்ன இளக்காரமா? என் வீட்டுப் பின்னாடி ஒரு ரெண்டடி இடம் இருக்கு. அதுல ஏதோ கொஞ்சம் செடி கொடி வளக்கிறோம். அது போயி உனக்குத் தோட்டமா? கொழுப்புதானே?

குண்டூஸ்: சாரி அங்கிள்! நெஜமாவே அது தோட்டம் மாதிரியே இருக்கு. அதுவும் அந்த பட்டு-ரோஸ்...வந்து....!

பத்ரி: சரி சரி! நீ எங்க வர்றேன்னு எனக்குத் தெரியுது! உனக்கு மறுபடியும் ஒரு பட்டு-ரோஸ் செடி வேணும்..அதக் கொண்டுபோய் உங்க வீட்டுத் தொட்டியிலே நட்டுவச்சிட்டு நாலு நாலு கழிச்சி காய்ஞ்சி போச்சின்னுட்டு திரும்ப வந்து...உங்க தோட்டம் நல்லா இருக்குன்னு எனக்கு ஐஸ் வைப்பே! உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?

குண்டூஸ்: அப்படி இல்லை அங்கிள்... நானும் என்னென்னமோ பண்ணி பாக்கிறேன்...எனக்கு மட்டும் வளர மாட்டேங்குது அங்கிள்! செம்மண்ணு, உரம், காத்து, தண்ணி, சூரிய வெளிச்சம் இப்படி எல்லாமே கவனமா பாத்தும் ஏன் வளர மாட்டேங்குதுன்னு தெரியல்ல. நான் நினைக்கிறேன்...தொட்டியில வளராதுன்னு...உங்கள மாதிரி பூமியில வளர வைக்கவும் இடம் இல்லியே..?

பத்ரி: அடேய்...குரங்கு குண்டூஸ்! ஏதோ நட்டோமா...அதுக்கு எல்லாம் தந்தோமா பாதுகாப்பு பன்னோமான்னுட்டு இல்லாம நீதான் அது பக்கத்துலேயே இருவத்து நாலு மணி நேரமும் நின்னுகிட்டு "வேவு" பாத்தபடியே இருக்கியே...அப்புறம் எப்படி செடி வளந்து பூ பூக்கும்? அதுல வேற ஒரு நாள் நீ பொறுமை இல்லாம செடி வேர் பிடிச்சி இருக்கான்னு மண்ணை தோண்டி பாத்தியாமே! எனக்கு தகவல் வந்துது. போடா முட்டாள்!

குண்டூஸ்: திட்டாதீங்க மாமா! நீங்கதானே எனக்கு மானசீக குரு...உங்க கிட்டத்தானே அத எல்லாமே கத்துக்கிட்டேன்!

பத்ரி: டேய் என்ன உளர்ற?

குண்டூஸ்: ஆமா மாமா! உங்க ரெண்டு குழந்தைகளையும் நீங்க அப்படித்தானே.....(Contd..)

புதன், 21 மார்ச், 2012

Chennai: Bullock-Cart Roads & Exploding Multitudes: சென்னை: கோச் வண்டி சாலைகள்-விரியும் நெரிசல்!



குண்டூஸ்: என்ன மாமா! வரவர சீக்கிரமா வீட்டிலே இருந்து கிளம்புறீங்க, ரொம்ப லேட்டா வீட்டுக்கு வர்றீங்க..போற போக்கே சரியில்லையே! அக்கா கிட்ட போட்டு கொடுக்கவா? 

மாமா: டேய் குரங்கு குண்டூஸ்! ஏற்கனவே நிலைமை சரியில்ல! நீ வேற எண்ணெய் ஊத்தாதே!
உனக்கு வேண்டியதெல்லாம் அப்பப்ப வாங்கி தர்றேன் இல்ல...என்னைய சொல்லணும்!

குண்டூஸ்: கோச்சிக்காதீங்க மாமா! உங்கள பாத்தா பாவமா இருக்கு! போறப்போ நல்லாத்தான் போறீங்க, ஆனா வரும்போது மழையில நனைஞ்ச கோழிக்குஞ்சு மாதிரி வீட்டுக்கு வறீங்களேன்னு வாஞ்சையா கேட்டா உங்களுக்கு அது தப்பாப் படுது!

மாமா: நீ சொல்றது சரிதாண்டா! வர வர இந்த சென்னை போற போக்கே சரியில்லை. முன்னெல்லாம் கால்மணி நேரத்துல போன ஊருக்கு இப்பல்லாம் ஒரு மணி நேரம் தேவைப் படுது. அவ்வளவு மோசமான டிராபிக் நெரிசல்! போலிஸ் காரங்க பாடு அதை விட திண்டாட்டம்! ஊர்ல இருக்கிற புகை-தூசு எல்லாமே அவங்க தான் எட்டுமணி நேரம் சுவாசிக்கிறாங்க! தெருக்களும் இப்ப வர வர மோசமாத்தான் ஆகிகிட்டு வருதே தவிர ஒரு புண்ணாக்கு முன்னேற்றமும் இல்ல. அதான் வீடு வர்றதுக்குள்ள ரொம்ப ரொம்ப சோர்வா ஆயிடுதுடா!

குண்டூஸ்: மாமா!  நீங்க டிராபிக் இல்லாத தெருவுக்குள்ள புகுந்து புகுந்து போக வேண்டியது தானே! எதுக்கு மெயின் ரோடாவே போகணும்? உங்களுக்கு ஷார்ட்-கட் தெரியல?



மாமா: போடா மாங்கா மடையா! அது எனக்குத் தெரியாதா? நாலு தலை முறை சென்னைவாசி நான்...எனக்கே நீ ஐடியா சொல்லித் தர்றியா? நான் போடற 'ஷார்ட்-கட்'..."குறுக்கு-வழிக் கணக்கை" வேற எவனும்....(Contd..)


செவ்வாய், 20 மார்ச், 2012

Can my Tamil-Culture & Morals be managed? கரை-உடையும் நம் தமிழ் கலாசாரம்: மீட்க என்ன வழி?

 
குண்டூஸ்: தாத்தா! நம்ம தமிழ் பேச்சாளர்கள் எல்லாம் கலாசாரம்...கலாச்சாரம்-ங்கறாங்களே. அப்பிடின்னா என்ன தாத்தா?

தாத்தா: கண்ணா...! அந்தந்த ஊர் மண்ணுக்குன்னு ஒரு குணம் இருக்கும் இல்லையா...தட்ப வெப்பம், சூழல் சார்ந்து சில பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் உருவாகும் இல்லையா? அதுக்குப் பேரு தான் கலாசாரம்ன்னு சொல்லுவாங்க! 

குண்டூஸ்: புரியல தாத்தா! விளக்கமாத்தான் சொல்லுங்களேன்!

தாத்தா: இப்பப் பாரேன்! காஷ்மீர் ரோஜா இங்க விளையாது..ஐரோப்பிய செர்ரி மரங்களும் இங்கே வளராது! அதே மாதிரிதான் நம்ம ஊர் பொன்னி நெல்லு மேல் நாடுகளில் விளையாது. அதே மாதிரி, ஐரோப்பிய குளிர் காலமும் அதற்க்கு அவங்க அணியும் உடைகளும் பற்றி நமக்குத் தெரியாது. அதே போல் இங்குள்ள சித்திரை வெயிலை வெள்ளையர்களால் தாக்குப் பிடிக்கவும் முடியாது. அந்த வெயிலுக்கு நாம போட்டுக்குற மெல்லிய பருத்தி-குறைந்த அளவான ஆடைகள்  பற்றியும் ....(Contd..)


வெள்ளி, 16 மார்ச், 2012

நம் அன்னைத் தமிழ் வளர முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்? What do we do to protect our Tamil Language?


முதியவர்: என்ன தம்பி! உங்கப்பா ஒரு நல்ல தமிழ் பேச்சாளர். நீ போயி ஃபிரெஞ்சு பாட மொழி எடுத்திருக்கே!

மாணவன்: போங்க "அங்கிள்"! உங்களுக்கு விவரம் பத்தாது! தமிழ்ல என்னதான் நல்லா எழுதினாலும் இந்தத் தமிழ் ஆசிரியர்களுக்கு மார்க்கு போடவே மனசு வராது. அது என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்து மாதிரி பாத்துப் பாத்துப் பிச்சை போடுவாங்க! அதுவே சான்ஸ்க்ரிட், பிரெஞ்சு, ஹிந்தி ஆசிரியர்கள் நல்லவர்கள், அவங்க மார்க்க அள்ளி விடுவாங்க! அதான் அங்கிள் நான் தமிழ எடுக்கல!

முதியவர்: என்ன இருந்தாலும் நம்ம தாய் மொழிய நாம மறக்கலாமா தம்பி?

மாணவன்: அங்கிள் 'டோடல் மார்க் குறைஞ்சா எனக்கு நல்ல காலேஜ்-நல்ல வேலை கெடைக்குமா அங்கிள்? அதுவும் பாக்கணும் இல்லியா? தமிழ் மட்டும் நல்லா இருந்து தமிழன் நல்லா இருக்கலன்னா அது பரவா இல்லியா உங்களுக்கு? தமிழன் இல்லாத இடத்தில் தமிழ் மட்டும் எப்படி வாழுமாம்?

முதியவர்: அது சரி! தமிழ்ல மாணவர்கள் உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்னை? ஏன் நல்ல மார்க் உங்களால...(Contd...)

சனி, 10 மார்ச், 2012

Tamil Poetry on Mosquitoes: வலிய முற்றுகை!

 

கலிரவு என்ற பேதமற்று

ஓயாத அவர்களின்

தொந்தரவும் சூழ்ச்சியுமே

சூழ்ந்த என்னுலகில்

ஆனவரை செய்தலுத்து

எஞ்சியதெல்லாம் வெறும்

கையறுநிலையின் மிச்சங்களே!


எல்லாவித எனதான நகர்வுகளையும்

அதிதீவிர போர்த்தந்திரங்களையும்

சகலவித போர்க்கருவிகளையும்

அவதானிக்கும் ஒரு

தேர்ந்த பகைமுனையில்

எவ்வித முன்னெச்சரிக்கையுமற்ற

போர்க்களச் சூழலில்

இழப்பின் வலியோடு

இடறித் தடுமாறியே

நகர்கிறது என் சுயம்!



உறக்கம் தொலைத்த இராத்திரிகளை

ஆங்கு அடிமைப்பட்ட கணங்களை

யாதொரு சிரமுமின்றி கச்சிதமாய்

நான் மறந்துவிடுகிறேன்...

எனக்கே உரித்தானதொரு

அசவுகர்ய காரணியால்

பிரதி நாளும் !



என் அதிதீவிர புரிதலில்

படர்ந்த நிம்மதி யாதெனின்..

அடியேன் ஒன்றும் தனியனில்லை-

என்னை யொப்பவே

இப்பூமி வெளிஎலாம்

வித்தகம் பேசும்

அறிவியல் மானுடர்

'விண்வெளி சென்று வீடுதிரும்பி

அணுவுலை மெச்சி

வாய்கிழித்த கையொடு

போர்வையில் சுருட்டிய

சவத்தைப் போன்றே

அடக்க-நித்திரை செய்கின்றார்கள்...

அந்தச் 'சின்னக் கொசுக்களின்'

முற்றுகைச் சிறையில்!



-யோஜென் பால்கி

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

Chennai! Will you ever Improve an iota? சென்னை! நீ எப்போத்தான் உருப்படப் போற?

தந்தை: என்னடா மார்க் இது? அசிங்கமா இல்ல உனக்கு? ஒவ்வொன்னுத்திலேயும் 20 மார்க் ,30 மார்க்- ன்னுட்டு ! LKG ஆரம்பிச்சி நீ இதே மாதிரி தான் இருக்கே. உனக்கு ரோஷமே இல்லியா? நல்ல பசங்களப் பாத்துக் கூட எதுவும் நீ கத்துக்க மாட்டியா?  நீ எப்போதான் ( minimum pass mark) மினிமம் பாஸ் மார்க் எடுக்கப் போற? 

மகன்: அப்பா! திட்டாதீங்கப்பா! நான் இப்போ எட்டாவது தானே படிக்கிறேன்! நான் இன்னும் பெரிசாகி காலேஜ் போகும் போது பாருங்க! எப்பிடி நூத்துக்கு நூறு எடுத்துக் காட்டப் போறேன் !

தந்தை: கிழிச்சே! விளையும் பயிர் முளையிலேன்னான் ஒருத்தன்! சின்ன சைஸா இருக்கும் போதே உருப்படாதது - கிழடாகும் போது உருப்பட்டுக் கிழிக்கப் போவுதா? சென்னையும் நீயும் எனக்கு ஒண்ணுதாண்டா!சிங்கப்பூர் ஆக்குறோம்ன்னு சொல்லாத ஆட்சி இங்கே உண்டா!  எள்ளளவும் இன்னைக்கே செய்யாதவன், என்னைக்காவது ஒருநாள் இமயத்த புரட்டுவேன்னா எப்படி? இதெல்லாம் பெத்தவங்க தலை எழுத்துப்பா!

(சென்னையைப் பற்றிய நாசூக்கான கிண்டல் இது)

-மோகன் பால்கி 

சனி, 28 ஜனவரி, 2012

Vitamin Deficiency Dis-eases: வைட்டமின்கள் குறைந்தால் ஏற்படும் நோய்கள் தெரியுமா?: Vitamin dificiency & dis-eases

 

வைட்டமின் A:  
இது, குறைந்தால் கண் பார்வை மங்கும். நோயெதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் A அதிகம்.



வைட்டமின் B:  
இது குறைந்தால் வயிற்று மந்தமும் அஜீரணமும் ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதமும் இதய பாதிப்பும் ஏற்பட சாத்தியக் கூறுகள் அதிகம். வாயில் புண் உண்டாகும்.
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகளில் வைட்டமின் B உண்டு.

வைட்டமின் C :  
இது குறைந்தவர்கள் மனஅமைதி இழப்பர். சிடுமூஞ்சியாக இருப்பர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக்காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் C வைட்டமின் அதிகம்.

வைட்டமின் D :  
வைட்டமின் ‘D’ இல்லாவிட்டால், எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் ‘D’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் ‘D தயாரித்துவிடும். முட்டை, மீன், வெண்ணெய், ஆகியவற்றிலும் D வைட்டமின் உள்ளது.

வைட்டமின் E :  
இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். E வைட்டமின் இல்லாவிட்டால் மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.
கோதுமை, கீரை, பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் E கிடைக்கும்.

புரோட்டீன் எளிதில் கிடைக்கும் உணவுகள்:

1. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.
2. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.
3. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.
4. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)
5. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.

வைட்டமின்கள்

1.மீன், மீன்எண்ணெய்: வைட்டமின் A,D கிடைக்கும். கருவரை, குழந்தை வளர, எலும்பு வளர பல் உறுதிபட.
2. முட்டை : A,B,D வைட்டமின்கள் கிடைக்கும். எலும்பு, பற்கள் உறுதியாக, குழந்தை வளர.
3. கீரை : E வைட்டமின் அதிகம் தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அமிலம் பெற.
4. முட்டைக் கோஸ்: A,B,E வைட்டமின் உள்ளன. கண் பார்வை கூடும். வாய்ப் புண், குடல் புண் சீராகும்.
5. ஆரஞ்சு, திராட்சை: C வைட்டமின் அதிகம். எலும்பு, பல் ஈறு பலம் பெரும்
பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.



1. ஆப்பிள்:ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.

2. ஆரஞ்சு: எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ஓரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

3. திராட்சை: சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "அவுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.

4. மாதுளை: இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.

5. அன்னாசி: "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

6. சப்போட்டா: - இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது. சப்போட்டாவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

7. பப்பாளி: - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்

- நல்ல தகவல்: இணையத்தில் எடுத்தது 

www.yozenmind.com